லைஃப்ஸ்டைல் (Health)

சத்து நிறைந்த சிறுதானிய பெசரட்டு

Published On 2017-04-08 05:00 GMT   |   Update On 2017-04-08 05:00 GMT
தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று சிறுதானியங்களை வைத்து பெசரட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்  :

முழு பாசிபயறு - 1/2 கப்
சோளம், தினை, குதிரைவாலி, வரகு கலந்து - 1/2 கப்
பச்சைமிளகாய் -  2
இஞ்சி  - சிறிய துண்டு
வெங்காயம் - 1
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
பெருங்காயம் - விரும்பினால் சேர்க்கலாம்



செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிறுதானியங்களுடன், பாசிபயறு சேர்த்து நாலு மணி நேரம் ஊறவிடவும்.

* நன்றாக ஊறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் இஞ்சி, சீரகம், பச்சை மிளகாயுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து உப்பு, வெங்காயம் சேர்த்து கலந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பிபோட்டு எடுக்கவும். அடை போல வார்க்கலாம்.

சத்து நிறைந்த சிறுதானிய பெசரட்டு ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News