search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராபர்ட் வதேரா"

    • அதானியின் விமானத்தில் நமது பிரதமர் அமர்ந்திருக்கும் படம் எங்களிடம் உள்ளது.
    • மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் உரிமைகளுக்காக டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி பாராளுமன்றத்துக்கு செல்ல முழு தகுதியுடையவர் என அவரது கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும், பிரபல தொழிலதிபருமான ராபர்ட் வதேரா டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர், "பிரியங்கா காந்தி கண்டிப்பாக மக்களவையில் இருக்க வேண்டும். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உண்டு. அவர் பாராளுமன்றத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுவார். அங்கிருக்க தகுதியானவர். காங்கிரஸ் கட்சி அவரை ஏற்று சிறப்பாக திட்டமிடும் என நம்புகிறேன்" என கூறினார்.

    அதாவது, அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை ராபர்ட் வதேரா சூசகமாக தெரிவித்துள்ளார்.

    இதனிடையே ராபர்ட் வதேரா தனது பேட்டியில், பாராளுமன்றத்தில் பேசும் போது தொழில் அதிபர் கவுதம் அதானியுடன் தனது பெயரை இணைத்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசியதை கடுமையாக விமர்சித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன். ஆனால் என் பெயருக்காக போராட நான் பேசுவேன், ஏனென்றால் அவர்கள் ஏதாவது சொன்னால் அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும்.

    நான் அதானியுடன் செய்ததை எனக்கு காட்டுங்கள் என்று அவர்களுக்கு சவால் விடுகிறேன். ஏதேனும் தவறு நடந்தால், நான் எதிர்கொள்வேன். இல்லையென்றால், அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    அதானியின் விமானத்தில் நமது பிரதமர் அமர்ந்திருக்கும் படம் எங்களிடம் உள்ளது. அதுபற்றி ராகுல் காந்தி கேட்டதற்கு ஏன் பதில் இல்லை.

    மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் உரிமைகளுக்காக டெல்லியில் போராட்டம் நடத்தினர். ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான மத்திய மந்திரி என்ற முறையில் இரானி அவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்க ஒருபோதும் செல்லவில்லை.

    மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது. அதுபற்றி பேசாமல், பாராளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத என்னைப்பற்றி ஒருவித எதிர்மறையான விஷயத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக பேசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வங்கி ஆவணங்கள் அழிந்த விவகாரம் மற்றும் தாசில்தாரின் அறிக்கை சிறப்பு புலனாய்வுக்குழுவின் மேற்பார்வைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
    • நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் வழக்கை அரியானா மாநில பா.ஜ.க. அரசு எந்தவகையில் கையாளப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    சண்டிகர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா. இவர் அரியானா மாநிலத்தில் ஸ்கைலைட் ஆஸ்பிடாலிட்டி, ஸ்கைலைட் ரியாலிட்டி என்ற பெயர்களில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த 2008 முதல் 2012 வரை நிலங்களை வாங்கி விற்பனை செய்ததில் பல்வேறு மோசடிகள் நடந்துள்ளதாக புகார்கள் வெளியானது.

    இந்த மோசடிக்கு அப்போது அரியானா மாநில முதல்-அமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடாவும் உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டது. இந்த ரியல் எஸ்டேட் நிதி மோசடி விவகாரம் கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க. சார்பில் காங்கிரசுக்கு எதிராக பிரசார ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.

    பின்னர் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த அரியானா மாநில அரசு சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்த புகார் தொடர்பாக சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மற்றும் ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் மீது கெர்கி தௌலா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ராபர்ட் வதேரா இயக்குனராக பதவி வகித்த ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி மற்றும் ஸ்கைலைட் ரியாலிட்டி நிறுவனங்களின் கணக்குகளில் உள்ள நிதி வரவு தொடர்பான ஆவணங்களை குர்கானில் உள்ள யூனியன் வங்கி கிளையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

    சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் விசாரணைக்கு உதவியாக சிறப்பு புலனாய்வுக்குழு சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு நோட்டீஸ் அனுப்பியது. கடந்த மே மாதம் அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு வங்கி நிர்வாகம் பதில் அனுப்பியது. அதில் கடந்த 2008 முதல் 2012 வரையிலான ராபர்ட் வதேராவின் ரியல் எஸ்டேட் தொடர்பான நிதி நிர்வாகம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அப்போது ஏற்பட்ட வெள்ளத்தால் அழிந்துவிட்டதாக கூறியுள்ளது.

    இது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும், மாநில அரசு இந்த மோசடி வழக்கில் விரைந்து விசாரணை நடத்த தேவையான மேல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மீண்டும் அந்த வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பி தேவையான முக்கிய ஆவணங்களை பெற நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதற்காக கூடுதலாக ஐ.ஏ.எஸ். அதிகாரி முகுல் குமார் மற்றும் முன்னாள் முதன்மை நகரமைப்பு அதிகாரி தில்பக் சிங் மற்றும் சட்ட ஆலோசகர்களை முதல்-அமைச்சர் மனோகர்லால் கட்டார் நியமித்துள்ளார். ராபர்ட் வதேராவின் ரியல் எஸ்டேட் நிறுவனம் குர்கான் பகுதியில் 3.5 ஏக்கர் நிலத்தை வேறொரு நிறுவனத்திடம் இருந்து ரூ.7.5 கோடிக்கு வாங்கி ரூ.58 கோடிக்கு மற்றொரு நிறுவனத்திற்கு கைமாற்றியதுதான் இந்த மோசடியின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது.

    அதே நேரத்தில் முன்னாள் முதல்வர் ஹூடா இந்த நில பேரத்திற்கு கைமாறாக 350 ஏக்கர் நிலத்தை தாரை வார்த்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த புகார்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் விசாரணை நடந்துமுடிந்த நிலையில் வங்கியின் பதில் விசாரணை குழுவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில் ராபர்ட் வதேராவின் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் 3.5 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ததில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்றும், விதிகள் மீறப்படவில்லை என்றும் அந்த பகுதி தாசில்தார் தெரிவித்துள்ளார்.

    வங்கி ஆவணங்கள் அழிந்த விவகாரம் மற்றும் தாசில்தாரின் அறிக்கை சிறப்பு புலனாய்வுக்குழுவின் மேற்பார்வைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த வழக்கை அரியானா மாநில பா.ஜ.க. அரசு எந்தவகையில் கையாளப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    அரியானா மாநிலத்தில் நில மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது அம்மாநில காவல் நிலையத்தில் இன்று எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. #RobertVadra
    சண்டிகர் :

    அரியானா மாநிலத்தில் 2005 முதல் 2014 வரை பூபிந்தர்சிங் ஹுடா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அந்தக் கால கட்டத்தில் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா உள்ளிட்டவர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் விதிமீறல் இருப்பதாக புகார் கூறப்பட்டது. சிஹி, சிக்கந்தர் பூர்படா, சிகோபூர் ஆகிய கிராமங்களில் நிலங்களுக்கு பட்டா வழங்கியதிலும், வீட்டு பயன்பாட்டு உரிமம், வர்த்தக உரிமம் வழங்கப்பட்டதிலும் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்டது.

    வதேராவுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், , அரசு நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்று முறைகேடு செய்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதையடுத்து வதேரா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிக்க அரியானா முதல்வர் கட்டார் கடந்த 2015-ம் ஆண்டு விசாரணை கமிஷன் அமைத்தார்.

    இந்நிலையில், நில முறைகேடு தொடர்பாக ராபர்ட் வதேரா, அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹுடா, ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிடி மற்றும் டி.எல்.எப் ஆகிய நிறுவனங்களின் இயக்குனர்களின் மீது இன்று எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரியான இணை காவல் ஆணையர் ராஜேஷ் குமார் ஊடகங்களிடம் கூறுகையில், ’ நில மோசடி நடைபெற்றது தொடர்பாக சுரிந்தர் சர்மா எனும் நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வதேரா மற்றும் ஹுடா உள்ளிட்டோர் மீது கெர்கி தவுலா காவல் நிலையத்தில் இன்று எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.

    ஆனால், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராபர்ட் வதேரா ‘ பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. இப்போது தேர்தல் நேரம் என்பதால் மக்களின் பிரச்சனைகளை திசை திருப்ப 10 ஆண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்ட விஷயத்தில் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்’ என அவர் தெரிவித்துள்ளார். #RobertVadra
    ×