என் மலர்
நீங்கள் தேடியது "சட்டவிரோத பண பரிவர்த்தனை"
- 2017 பிப்ரவரியில் சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் அமலாக்கத்துறை வழக்குப் பதிந்தது.
- வெளிநாடு செல்ல வேண்டி இருப்பதால் சம்மனை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இங்கிலாந்தை சேர்ந்த ஆயுத இடைத்தரகர் சஞ்சய் பண்டாரி. இவர் காங்கிரசின் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராபர்ட் வதேரா ஆகியோருக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார்.
2015-ல் இந்தியாவில் வசித்த அவர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. அவர் தொடர்புடைய இடங்களில் வருமானத் துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, 2016-ல் லண்டனுக்கு தப்பிச் சென்றார். இந்த விவகாரத்தில், அவர் மீது, 2017 பிப்ரவரியில் சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் அமலாக்கத்துறை வழக்குப் பதிந்தது.
இதற்கிடையே சஞ்சய் பண்டாரி மீதான சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்காவின் கணவரும், தொழில் அதிபருமான ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை கடந்த மாதம் சம்மன் அனுப்பி இருந்தது.
ஆனால் வெளிநாடு செல்ல வேண்டி இருப்பதால் சம்மனை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதை தொடர்ந்து அவருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. இந்தநிலையில் சஞ்சய் பண்டாரி வழக்கில் ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு இன்று ஆஜரானார்.
அவரிடம் இந்த வழக்கு உள்பட 3 வெவ்வேறு சட்டவிரோத பணபரி வர்த்தனை வழக்குகள் தொடர்பாக அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே நில மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
- பெர்ணான்டஸ் பெயரை குற்றவாளிகள் பெயருடன் அமலாக்கத்துறை இணைத்தது.
- இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.
அவருடன் தொடர்பு டைய இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசை அமலாக்கத்துறை குறைந்த பட்சம் 5 முறை விசாரித்து இருந்தது. குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்ணான்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் அமலாக்கத்துறை இணைத்தது.

சுதேஷ் சந்திரசேகரிடம் இருந்து ஜாக்குலின் விலை உயர்ந்த பரிசுகள், நகைகளை பெற்றதாகவும், அவர் குற்றவாளி என தெரிந்தே பழகினார் என்றும், இதற்கு பணத்தின் மீதான மோகமே காரணம் என்றும் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டு இருந்தது.
இதை ஜாக்குலின் மறுத்து தான் நிரபராதி என்றும், சுகேஷின் குற்ற செயல்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் பெர்ணான்ட சுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜாக்குலின் பெர்ணான்டசிடம் ஏற்கனவே பல முறை விசாரணை நடத்தி இருந்தும் தற்போது மீண்டும் விசாரணை நடத்த இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






