என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actress Jacqueline Fernandez"

    • பெர்ணான்டஸ் பெயரை குற்றவாளிகள் பெயருடன் அமலாக்கத்துறை இணைத்தது.
    • இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

    அவருடன் தொடர்பு டைய இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசை அமலாக்கத்துறை குறைந்த பட்சம் 5 முறை விசாரித்து இருந்தது. குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்ணான்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் அமலாக்கத்துறை இணைத்தது.

    சுதேஷ் சந்திரசேகரிடம் இருந்து ஜாக்குலின் விலை உயர்ந்த பரிசுகள், நகைகளை பெற்றதாகவும், அவர் குற்றவாளி என தெரிந்தே பழகினார் என்றும், இதற்கு பணத்தின் மீதான மோகமே காரணம் என்றும் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டு இருந்தது.

    இதை ஜாக்குலின் மறுத்து தான் நிரபராதி என்றும், சுகேஷின் குற்ற செயல்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறி வருகிறார்.

    இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் பெர்ணான்ட சுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஜாக்குலின் பெர்ணான்டசிடம் ஏற்கனவே பல முறை விசாரணை நடத்தி இருந்தும் தற்போது மீண்டும் விசாரணை நடத்த இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் சிறையில் இருந்து காதல் கடிதங்கள் எழுதி வருகிறார்.

    பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் டெல்லி சிலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சுகேஷ் சந்திரசேகர் பல கோடி ரூபாயுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் பல இடங்களுக்கு தனிமையில் சென்று வந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், சுகேஷ் சந்திரசேகருடன் காதல் இல்லை என்று ஜாக்குலின் மறுத்து வருகிறார்.

    இதனிடையே சிறையில் இருந்துகொண்டே ஜாக்குலினுக்கு சுகேஷ் எழுதிய காதல் கடிதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    சிறையில் இருந்து கொண்டே ஜாக்குலினுக்கு ரூ.10 கோடி வரை பரிசு பொருட்களை சுகேஷ் வாங்கிக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு சுகேஷ் நடிகை ஜாக்குலினுக்கு ஜெட் விமானத்தை பரிசாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரிசாக கொடுத்த ஜெட் விமானத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குறிக்கும் விதமாக ஆங்கிலத்தில் ஜேஎஃப் என்று விமானத்தில் எழுதப்பட்டுள்ளது

    இது தொடர்பாக ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் காதல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "ஜெட் விமானத்தை எனது காதலி ஜாக்குலினுக்கு அனுப்புகிறேன். இந்த விமானம் குற்றச்செயல்களால் கிடைத்த பணத்தைக் கொண்டு வாங்கவில்லை.

    அடுத்த பிறவி என்று எனக்கு இருந்தால், அதில் நான் ஜாக்குலின் உடைய இதயமாகப் பிறக்க விரும்புகிறேன். அவருக்குள் நான் "துடித்துக் கொண்டே இருக்க" விரும்புகிறேன். நீ என் காதலியாக இருப்பதால் இந்த உலகின் மிகவும் அதிர்ஷ்டசாலியான மனிதன் நான்தான். ஜாக்குலின் போன்ற மிகவும் அழகான மற்றும் அற்புதமான பெண் காதலியாக கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

    பேபி, நீ எப்போதும் வேலை மற்றும் படப்பிடிப்பிற்காக உலகம் முழுவதும் பறந்து கொண்டிருப்பாய். இப்போது இந்த ஜெட் விமானத்துடன், உன் பயணம் உன் விருப்பப்படி மிகவும் எளிதாகவும் வசதியாகவும் இருக்கும்" என்று கூறியுள்ளார். 

    ×