search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illegal assets"

    சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா நாளை ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது நில மோசடி வழக்கு உள்ளது.

    குர்கான், பீகானிரில் நிலம் வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக அவர் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

    இதேபோல லண்டனில் ரூ.19 கோடி மதிப்புடைய சொத்துக்களை சட்ட விரோதமாக வாங்கியதிலும் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு வதேரா மீது உள்ளது.

    இந்த வழக்குகளில் கைதாகாமல் இருக்க அவர் ஏற்கனவே முன் ஜாமீன் பெற்று இருந்தார். வதேராவுக்கு ஏற்கனவே பல முறை அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் ஆஜராகாமல் இருந்தார்.


    இந்த நிலையில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மனை இன்று அனுப்பியது.

    நாளை காலை10.30 மணிக்கு இணைப்பு விசாரணைக்கு ஆஜராகுமறு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
    ×