search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது.
    • தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதை சமினா கொண்டாடியுள்ளார்.

    போபால்:

    மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. பா.ஜ.க.வின் வெற்றியை அக்கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

    இதற்கிடையே, அந்த மாநிலத்தின் சிஹோர் மாவட்டம் அகமத்பூர் பகுதியைச் சேர்ந்த சமினா (30). இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்.

    பா.ஜ.க. ஆதரவாளரான இவர், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அக்கட்சிக்கு வாக்களித்துள்ளார். பா.ஜ.க. வெற்றி பெற்றதையும் சமினா கொண்டாடியுள்ளார்.

    பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்ட சமினாவின் செய்கைகளை அவரது மைத்துனன் ஜாவித் கான் விரும்பவில்லை. இதனால் தகாத வார்த்தைகளால் திட்டிய ஜாவித் கான் சமினாவை சரமாரியாக தாக்கியுள்ளார். பா.ஜ.க.வுக்கு தொடர்ந்து ஆதரவாக வாக்களித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்த தன்னை சரமாரியாக தாக்கிய மைத்துனன் மீது சமினா போலீசில் புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு 71 ஆயிரத்து 219 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    • மழை காலங்களில் ஒழுகும் தன்மையுள்ள மண் குடிசையில் வசித்து வரும் கமலேஷ்வருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை.

    போபால்:

    மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் ஒழுகும் மண் குடிசை வீட்டில் வசிக்கும் தொழிலாளி சுயேட்சையாக நின்று எம்.எல்.ஏ.வாகி புதிய சாதனை படைத்துள்ளார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா அமோக வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி பிடித்துள்ளது. இங்குள்ள 230 சட்டமன்ற தொகுதிகளில் பெருவாரியான தொகுதிகளை பாரதிய ஜனதா வெற்றி பெற்றாலும், 2-வது இடத்தில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    இந்தநிலையில் இந்த மாநிலத்தில் ஒரே ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. என்ற அங்கீகாரத்தை பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த கமலேஷ்வர் டோடியார் பெற்றுள்ளார். 33 வயதான இவர் தனது பள்ளி பருவ காலத்திலேயே கல்வி கற்க கடுமையான போராட்டங்களை சந்தித்தவர். அவரது தாயார் கூலி வேலைக்கு சென்றும், கோழி வளர்ப்பில் கிடைத்த முட்டைகளை விற்றும் அதில் கிடைத்த பணத்தில் படிக்க வைத்தார்.

    ஆதிவாசி பழங்குடி இனத்தைச் சேர்ந்த கமலேஷ்வருக்கு மக்கள் பணியாற்ற வேண்டும், பிற்படுத்தப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள பழங்குடியின, தாழ்த்தப்பட்ட பல்வேறு மக்களுக்கு தன்னால் இயன்ற சேவைகளை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருந்தது. இதன் காரணமாக பொது சேவையில் ஆர்வத்துடன் பணியாற்றினார். இதனுடன் டிபன் டெலிவரி செய்யும் தொழிலையும் மனம் கூசாமல் செய்தார். டெல்லியில் சட்டப்படி பண்பை படித்த போதும் அங்கும் டிபன் டெலிவரி தொழிலாளியாகவே வலம் வந்தார் கமலேஷ்வர்.

    ஆனாலும் அவரது உழைப்பு மற்றும் மக்கள் சேவைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமலே இருந்தது. கடந்த இரண்டு முறை சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும் விடாமுயற்சியுடன் தனது சேவையை தொடர்ந்தார் கமலேஷ்வர் டோடியார்.

    இந்த நிலையில் தான் கடந்த செப்டம்பர் மாதம் உருவாக்கப்பட்ட பாரத் ஆதிவாசி இயக்கத்தின் சார்பில் ரத்லாம் மாவட்டத்தில் உள்ள சைலானா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார் கமலேஷ்வர் டோடியார். இந்த தொகுதியில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக செல்வாக்குடன் களத்தில் இறங்கி பணியாற்றினர். ஆனாலும் கமலேஷ்வர் மனம் தளராமல் தனது ஏழ்மையை எண்ணி ஒதுங்கி விடாமல் தேர்தலில் புதிய சரித்திர சாதனையை படைத்துள்ளார்.

    தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு 71 ஆயிரத்து 219 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு 66 ஆயிரத்து 601 ஓட்டுகளும், பாரதிய ஜனதா வேட்பாளருக்கு 41 ஆயிரத்து 584 ஓட்டுகளும் கிடைத்துள்ளன.

    இவர் சார்ந்துள்ள புதிய கட்சியான பாரத் ஆதிவாசி இயக்கம் ராஜஸ்தான் மாநிலத்தை மையமாக கொண்ட கட்சி. ஆனாலும் மத்திய பிரதேசத்தில் கமலேஷ்வரின் எளிமையான மக்கள் சேவையே அவரை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்துள்ளது.

    மழை காலங்களில் ஒழுகும் தன்மையுள்ள மண் குடிசையில் வசித்து வரும் கமலேஷ்வருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை. தேர்தலின் போது மோட்டார் சைக்கிளிலேயே தனது ஆதரவாளர்களுடன் சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். பணம் இல்லாததால் சாப்பிடாமல் பசித்த வயிற்றுடனே பிரசாரம் செய்து மக்களை சந்தித்துள்ளார்.

    மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கூட கார் வசதி இல்லாததால் சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சட்டமன்ற செயலகத்திற்கு ஆவணங்களை சமர்ப்பிக்க மோட்டார் சைக்கிளிலேயே சென்றுள்ளார் கமலேஷ்வர் டோடியார். பழங்குடியின சமூக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதுடன் அதற்கு தேவையான அர்ப்பணிப்புடன் பணியாற்ற இருப்பதாக கமலேஷ்வர் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் சார்ந்துள்ள பாரத் ஆதிவாசி இயக்கம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களை பொருளாதார ரீதியில் உயர்த்தவும், சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட போவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் நமது இயற்கை உலகத்தை பாதுகாக்கவும், தூய்மையான ஆற்றலை ஊக்குவிக்கவும் மாசுபாட்டை குறைக்கும் கொள்கைகளை எங்கள் இயக்கம் ஆதரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    தேர்தல் என்றாலே கோடிக்கணக்கில் பணம் கொட்டும் இந்த காலத்தில் கமலேஷ்வர் டோடியார் தனது ஏழ்மையையே மூலதனமாகக் கொண்டு சாதித்துள்ளார். ஆனால் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பணக்கார எம்.எல்.ஏ.வாக ஸ்பெக்ட்ரம் என்பவர் உள்ளார். அவருக்கு 223 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் எளிய சாமானியராக, எவ்வித பணபலமும் இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டு பிரதான அரசியல் கட்சிகளை வீழ்த்தி அம்மாநிலத்தில் ஒரே சுயேட்சை எம்.எல்.ஏ. என்ற அந்தஸ்தை எட்டிப்பிடித் துள்ளார் கமலேஷ்வர் டோடியார்.

    இவரது எளிமையான வாழ்க்கை, அவர் அரசியலில் சாதித்த வெற்றி, ஏழ்மையிலும் மக்கள் பணியாற்றினால் உரிய அங்கீகாரம் தேடி வரும் என்பதற்கு முக்கிய உதாரணமாக பேசப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜ.க. 150 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.
    • இரட்டை என்ஜின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையால் கிடைத்த வெற்றி என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் கடந்த 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடந்து வருகிறது.

    அதில், மொத்தமுள்ள 199 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 160 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.

    இந்நிலையில், இரட்டை என்ஜின் மீது மக்கள் நம்பிக்கை வைத்ததால் கிடைத்த வெற்றி இது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இது மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். பா.ஜ.க. அரசு வேலை செய்துள்ளது. இரட்டை என்ஜின் அரசு, பிரதமர் மோடியின் தலைமை மற்றும் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் செயல்பாடு ஆகியவற்றின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். வெற்றி பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமலாக்கத்துறையின் தற்போதைய நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கிறது.
    • ரூ.400 ஆக இருந்த சிலிண்டர் விலை 10 வருடத்தில் ரூ.1100 வரை உயர்ந்துள்ளது.

    திண்டுக்கல்:

    ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

    லஞ்சம், ஊழலை ஒழிக்கவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவை உருவாக்கப்பட்டது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் அமலாக்கத்துறையை பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் தற்போது திண்டுக்கல்லில் டாக்டரை மிரட்டி பணம் பறித்த அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். அமலாக்கத்துறையின் தற்போதைய நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசியல்வாதிகளுக்கு முதிர்ச்சியில்லை என கூறுகிறார். மத சாயம் பூசி தவறான தகவல்களை தெரிவிப்பதுதான் முதிர்ச்சியா என்பதை அவர் விளக்க வேண்டும்.

    மேலும் தற்போது கவர்னர்கள் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பர்ஷித் ஆகியவற்றின் கொள்கை பரப்பு செயலாளர்கள் போல் செயல்படுகின்றனர். மத்திய பிரதேச தேர்தலில் வெற்றிபெற ரூ.12 ஆயிரம் கோடி வரை பா.ஜனதாவினர் செலவழித்துள்ளனர். தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதற்கு அடிப்படை காரணமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வாகும். தேர்தல் நேரங்களில் மட்டும் டீசல், பெட்ரோல், சிலிண்டர்களின் விலையை குறைக்கின்றனர். ரூ.400 ஆக இருந்த சிலிண்டர் விலை 10 வருடத்தில் ரூ.1100 வரை உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • ரூ.19,620 கோடிக்கு வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்
    • எதிர்கட்சிகளிடம் வளர்ச்சி திட்டம் எதுவும் இல்லை என்றார் மோடி

    மத்திய பிரதேச மாநிலத்தின் 230 இடங்களை கொண்ட சட்டசபைக்கு அடுத்த மாத இறுதிக்குள் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அங்கு பா.ஜ.க.வின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க.வை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியமைக்க தீவிரமாக போராடி வருகிறது.

    இந்நிலையில், ம.பி.யில் உள்ள குவாலியர் நகருக்கு இன்று வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரூ.19,260 கோடிக்கான வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்து பொது மக்களிடையே உரையாற்றினார்.

    அக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:

    மத்திய அரசிலும் மாநில அரசிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதை "இரட்டை எஞ்சின்" (double engine) என எதிர் கட்சியினர் கிண்டல் செய்கின்றனர். "இரட்டை எஞ்சின்" நல்லதுதான். இதன் மூலம் மாநிலம் "இரட்டை வளர்ச்சி" காண முடிகிறது.

    பா.ஜ.க.வின் ஆட்சியில் பல்வேறு துறைகளில் நாடு முன்னேறி வருவதை எதிர்கட்சிகளுக்கு காண சகிக்கவில்லை. அவர்களிடம் வளர்ச்சி திட்டமோ அல்லது நாட்டின் வளர்ச்சி குறித்த தொலைநோக்கு பார்வையோ எதுவும் கிடையாது. உலகளாவிய மன்றங்களில் இந்தியா இப்போது பாராட்டப்படுவதை அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. உலகம் முழுவதும் இந்தியாவை புகழும் போது, இங்குள்ள எதிர்கட்சிகளுக்கு தங்கள் நாற்காலியை தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை. அதனால், இந்தியாவிற்கு கிடைக்கும் பாராட்டை காண பிடிக்காமல் வயிற்றெரிச்சலில் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.

    எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கொலை மற்றும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

    பின் தங்கிய நிலையில் இருந்த ம.பி. மாநிலம் இன்று வளர்ச்சி பட்டியலில் 10-ஆம் இடத்தில் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகள் ம.பி.யின் வளர்ச்சிக்கு முக்கியமான ஆண்டுகள். ம.பி.யை நாட்டின் முதன்மையான முதல் 3 மாநிலங்களில் ஒன்றாக நாம் மாற்ற வேண்டும். உங்களின் ஒரு ஓட்டு ம.பி.யை முதல் நிலைக்கு கொண்டு செல்லும்.

    இவ்வாறு மோடி தெரிவித்தார்.

    ம.பி.யில் 2003 ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 3 முறை சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வென்றது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த மூன்று ஐந்து வருடங்களாக என்னுடைய வேதனையை முதல்வர் கேட்கவில்லை
    • தனது தொகுதியில் புதிதாக சேர்ந்தவர்களால் ஓரம் கட்டப்படுகிறேன்

    மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இன்னும் மூன்று மாதங்களுக்கு குறைவாக இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க சிவராஜ் சிங் சவுகான் வியூகம் வகுத்து வருகிறார். பா.ஜனதாவும் பிரசாரத்தை தொடங்கிவிட்டன.

    இந்த நிலையில், அதிருப்தியில் இருந்து வந்த எம்.எல்.ஏ. ஒருவர் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

    மத்திய பிரதேசம் ஷிவ்புர் மாவட்டத்தில் உள்ள கோலாரஸ் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., வீரேந்திர ரகுவான்ஷிதான் பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் விஷ்னு தத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    மேலும், தான் கடந்த மூன்று- ஐந்தாண்டுகளாக சந்தித்து வந்த வேதனை குறித்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு தெரிவித்திருந்தேன். அவர் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குவாலியர்- சம்பல் பகுதியில் என்னைப் போன்ற கட்சியினர், புதிதாக பா.ஜனதா கட்சிக்கு வந்தவர்களால் ஓரம் கட்டப்படுகிறோம். நாங்கள் 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றிக்காக உழைத்தவர்கள்.

    கோலாரஸ் பகுதிகளில் ஊழல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, என்னால் கொண்டு வந்த வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. என்னையும், என்னுடன் பணியாற்றுபவர்களும் துன்புறுத்தப்படுகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜனதாவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, 2020-ல் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த போது, விவசாயிகளுக்கான 2 லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றார். ஆனால், பா.ஜனதா ஆட்சி அமைத்த பிறகு விவசாய கடன் தள்ளுபடி பற்றி பேசவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • சட்டசபை தேர்தல் நடைபெற 3 மாதங்கள் இருக்கும் நிலையில் மந்திரி சபை விரிவாக்கம்
    • தற்போது மந்திரி சபையில் 34 பேர் இடம் பிடித்துள்ளனர்

    மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வருகிற நவம்பர் மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

    பிரதமர் மோடி சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம் சென்று நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்ததோடு, பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் சூழ்நிலை வரை கட்சிகள் சென்றுள்ளன.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில மந்திரி சபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், தனது மந்திரி சபையில் புதிதாக மூன்று பா.ஜனதா எம்.எல்.ஏ.-வுக்கு வாய்ப்ப வழங்கியுள்ளார். இதனால் மந்திரிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று காலை 9 மணிக்கு கவர்னர் மங்குபாய் பட்டேல் மூன்று பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மந்திரிகளாக பதவி ஏற்ற ராஜேந்திர சுக்லா முன்னாள் மந்திரியாவார். இவர் நான்கு முறை ரெவா பகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    கவுரிசங்கர் பிசேன் ஏழு முறை பாலகாட் தொகுதியில் இருந்து ஏழு முறை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராகுல் லோதி கார்காபூரில் இருந்து முதல்முறையாக உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.

    • மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக இருந்து வருகிறார்
    • பிரசாரத்தில் பிரதமர் மோடிதான் முன்னிலை படுத்தப்படுவார் என அமித்ஷா சூசக தகவல்

    மத்திய பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இன்னும் நாட்கள் இருக்கும் நிலையில், பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் தலைமையிலான மாநில ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இதனால் மீண்டும் சிவராஜ் சவுகான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தல் பா.ஜனதா எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக தொடருவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தேர்தல் முடிவுக்கு பின்னர்தான், முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார் என அமித்ஷா பதில் அளித்துள்ளார்.

    மேலும், ''சிவராஜ் சவுகான் முதலமைச்சராக இருக்கிறார். இது எங்கள் கட்சியின் வேலை. நாங்கள் முடிவு செய்வோம். அவர் முதலமைச்சர். நாங்கள் தேர்தலில் இருக்கிறோம். பிரதமர் மோடி மற்றும் சவுகான் தலைமையிலான ஆட்சியில் நாம் செய்த பணிகளை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். ஆகவே, வளர்ச்சி தேர்தல் நிகழ்ச்சி நிரலாக அமைக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். பிரதமர் மோடி, பிரசாரத்தின்போது முன்னிலைப் படுத்தப்படுவார்'' என்றார்.

    பா.ஜனதா எப்போதுமே, தேர்தலுக்கு முன்னதாக முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை. மீண்டும் ஆட்சியை பிடித்தால், ஏற்கனவே முதல்வராக இருக்கும் நபருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இருந்தாலும், பா.ஜனதாவின் பாராளுமன்ற குழுதான் இறுதி முடிவு எடுக்கும்.

    மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் 80 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட அனுமதி அளிப்பது இல்லை என்று பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. #BJP #MadhyaPradeshelection

    போபால்:

    230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப்பிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற நவம்பர் 28-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

    கடந்த 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி சவுகான் தலைமையில் மத்தியப்பிர தேசத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்து வருகிறது.அங்கு மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது.

    மறுபுறம் காங்கிரசும் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக நிலவும் அதிருப்தி அலையை காங்கிரஸ் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில் பிரசார வியூகம் அமைத்து செயல்படுகிறது.

    தற்போது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. இந்த தேர்தலில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 80 பேருக்கு மீண்டும் தேர்தல் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என தெரிய வருகிறது.


    எம்.எல்.ஏ.க்கள் பற்றி பா.ஜனதா ரகசிய கருத்து கணிப்பு நடத்தியது. இதே போல் பிரதமர் மோடியின் ‘நமோ ஆப்’ செயலிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பற்றி ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் புகாருக்கு ஆளாக எம்.எல்.ஏ.க்களுக்கும், மக்கள் மத்தியில் அதிருப்திக்கு ஆளான எம்.எல்.ஏ.க்களுக் கும் மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிப்பது இல்லை என்று பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி மொத்தம் 80 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதே போல சில அமைச்சர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சம்பந்தப்பட்ட எம்.எல். ஏ.க்கள் மீது மக்களிடையே அதிருப்தி நிலவுவதால் அவர்களை மீண்டும் வேட்பாளர்களாக களம் இறக்கினால் தேர்தல் வெற்றி பாதிக்கப்படும் என்றும் அதன் காரணமாகவே இந்த முடிவுக்கு பா.ஜனதா வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இம்முறை புதுமுகங்களை வேட்பாளர்களாக களம் இறக்கலாம் என முதல்- மந்திரி சிவராஜ்சிங் சவுகான் முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. #BJP #MadhyaPradeshelection

    ×