search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இரட்டை என்ஜின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையால் கிடைத்த வெற்றி: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இரட்டை என்ஜின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையால் கிடைத்த வெற்றி: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

    • பா.ஜ.க. 150 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.
    • இரட்டை என்ஜின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையால் கிடைத்த வெற்றி என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் கடந்த 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடந்து வருகிறது.

    அதில், மொத்தமுள்ள 199 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 160 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.

    இந்நிலையில், இரட்டை என்ஜின் மீது மக்கள் நம்பிக்கை வைத்ததால் கிடைத்த வெற்றி இது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இது மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். பா.ஜ.க. அரசு வேலை செய்துள்ளது. இரட்டை என்ஜின் அரசு, பிரதமர் மோடியின் தலைமை மற்றும் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் செயல்பாடு ஆகியவற்றின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். வெற்றி பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×