search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி மலை"

    • வனப்பகுதியில் இருந்து 14 காட்டு யானைகள் குளத்தில் தண்ணீர் குடிக்க வந்தன.
    • இரும்பு தடுப்பு வேலிகளை உடைத்து தள்ளி பூங்காவிற்குள் நுழைந்தன.

    திருப்பதி:

    திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீ வாரி பாடலா வனப்பகுதியில் சீலா தோரணம் பூங்கா உள்ளது. இதன் அருகில் வன விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக குளம் ஒன்று உள்ளது.

    வனப்பகுதியில் இருந்து 14 காட்டு யானைகள் குளத்தில் தண்ணீர் குடிக்க வந்தன. அப்போது அருகில் இருந்த சீலா தோரணத்திற்கு வந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு வேலிகளை உடைத்து தள்ளி பூங்காவிற்குள் நுழைந்தன.

    அங்கிருந்த மரங்கள் மற்றும் பூ தொட்டிகள், பூச்செடிகள் ஆகியவற்றை மிதித்து நாசம் செய்தன. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தொடர்ந்து சைரன் ஒலி எழுப்பி காட்டு யானைகளை விரட்டியடித்தனர்.

    • திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.
    • பிரபஞ்சசக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பலமடங்கு வேகத்துடன் செயல்படுகிறது.

    திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.

    இங்கு கோரகர் சித்தா ஜீவசமாதி அடைந்ததால்தான் இக்கோயில் பிரபலம் அடைந்தது என சொல்வோரும் உண்டு.

    ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் சிலர்.

    கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினைதோஷம் வறுமை போக்கும், சந்ததி விருத்தி உண்டாகும் என்கிறது.

    பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமம்மாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது.

    இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

    வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமாக மலைகள் உள்ளன.

    வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல் குவியும் என்று கௌரு திருப்பதி ரெட்டி தனது வாஸ்து நுலில் எழுதி உள்ளார்.

    உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான்.

    சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள்.

    அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

    சந்திரன் சக்தி மிகுந்த கோவில் என்பதால் மன நிம்மதி உண்டாகிறது.

    மூலிகைகள் அதிகம் இருப்பதால் அரோக்கியம் உண்டாகிறது.

    மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசி நிறைந்து காணப்படுகிறது.

    திருப்பதி சென்றால் திருப்பம் என்பது போல திருப்பதி சென்று வந்ததால் என் கடன் பிரச்சினை தீர்ந்து கல்யாணம் உடனே ஆனது என்ற கதைகள் உண்டு.

    இரண்டு தினங்களாவது அங்கு தங்கவேண்டும்.

    துக்கம் சந்தோசமாய் மாறும். சோதனைகளை, சாதனைகள் ஆகும்.

    திருப்பதி கோவில் மகாலட்சுமிக்கு உண்டான கோவில் என பார்க்கப்படுவதால் தான் இவ்வளவு கூட்டம்.

    பெருமாளின் சிரித்த ஆனந்தமான பார்வை அனைவரையும் ஆனந்தபடுத்தும்.

    அங்கு சென்று வந்தால் மனம், சிந்தனை, குடும்பம் அனைத்தும் அமைதி ஆவதை உணரலாம்.

    குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.

    நடந்து நாம் மலை ஏறினால், அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.

    நிமிர்ந்து மலை ஏறுவதால், நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன.

    • உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான்.
    • துக்கம் சந்தோசமாய் மாறும். சோதனைகளை, சாதனைகள் ஆகும்.

    லட்சுமி கடாட்சம் தரும் திருப்பதி

    திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.

    இங்கு கோரகர் சித்தா ஜீவசமாதி அடைந்ததால்தான் இக்கோயில் பிரபலம் அடைந்தது என சொல்வோரும் உண்டு.

    ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் சிலர்.

    கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினைதோஷம் வறுமை போக்கும், சந்ததி விருத்தி உண்டாகும் என்கிறது.

    பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது. இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

    வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமாக மலைகள் உள்ளன.

    வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல் குவியும் என்று கௌரு திருப்பதிரெட்டி தனது வாஸ்து நுலில் எழுதி உள்ளார்.

    உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான்.

    சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள்.

    அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

    சந்திரன்சக்தி மிகுந்த கோவில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

    மூலிகைகள் அதிகம் இருப்பதால் அரோக்கியம் உண்டாகிறது.

    மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசி நிறைந்து காணப்படுகிறது.

    திருப்பதி சென்றால் திருப்பம் என்பது போல திருப்பதி சென்று வந்ததால் கடன் பிரச்சினை தீர்ந்து கல்யாணம் உடனே ஆன கதைகள் உண்டு.

    இரண்டு தினங்களாவது அங்கு தங்கவேண்டும்.

    துக்கம் சந்தோசமாய் மாறும். சோதனைகளை, சாதனைகள் ஆகும்.

    திருப்பதி கோவில் மகாலட்சுமிக்கு உண்டான கோவில் என பார்க்கப்படுவதால்தான் இவ்வளவு கூட்டம்.

    செல்வம் உண்டியலில் அதிகம் குவிவதால், பணம், என்னும் காட்சி ஐ பார்த்தாலே பரவசம்தான்.

    ஜோதிடப்படி மிதுன லக்னம், ரிசப லக்னம், கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள்களுக்கு பல நன்மைகள் உண்டாகும்.

    அவர்கள் பெருமாள் வழி பாட்டில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். இவர்கள் நல்ல வசதிகளோடு இருக்கின்றனர்.

    வடநாட்டவர் பெருமாள் தங்கள் பார்ட்டனர் என்று சொல்கிறார்கள்.

    பெருமாள் சிரித்த ஆனந்தமான தனது பார்வைகள் அனைவரையும் ஆனந்தபடுத்தும்.

    அங்கு சென்று வந்தால் மனம், சிந்தனை, குடும்பம் அனைத்தும் அமைதி ஆவதை உணரலாம்.

    குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குலதெய்வமாக வணங்குகிறார்கள்.

    நடந்து நாம் மலை ஏறினால், அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவும். நிமிர்ந்து மலை ஏறுவதால், நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன.

    • அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய 2 நடைபாதை முழுவதும் இருபுறமும் முழு அளவில் வேலி அமைக்க வேண்டும்.
    • மலைப்பாதை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள சேஷாசலம் வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள், கரடிகள், யானைகள் போன்ற விலங்குகள் உள்ளன.

    இந்த விலங்குகள் இரவு நேரத்தில் உலாவுகின்றன. இவற்றுக்கான பாதைகளும் வனப்பகுதியில் உள்ளன. அவ்வப்போது இந்த விலங்குகள் இறை தேடி பக்தர்கள் செல்லும் மலை பாதை அருகே நடமாடுகிறது.

    சமீபத்தில் 3 வயது சிறுவனை சிறுத்தை கவ்வி சென்றது. ஆனால் அங்கே இருந்தவர்கள் விரட்டிச் சென்றதால் சிறுத்தை பயந்து போய் சிறுவனை வாயிலிருந்து கீழே போட்டுவிட்டு தப்பியது.

    திருப்பதி அடுத்த கர்நூல் மாவட்டத்தில் நல்ல மலை என்னும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் தான் முன்னாள் முதல் அமைச்சர் ஓய்.எஸ்.ஆர் ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அவர் இறந்தார். இங்கு ஏராளமான புலிகள் உள்ளன.

    நல்லமலை வனப்பகுதியில் இருந்து சேஷாசலம் பகுதிக்கு புலிகளுக்கான பாதை அமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நல்லமலையிலிருந்து புலிகள் சேஷாசலம் வனப்பகுதி வரை சுதந்திரமாக சுற்றி வரும் என வனத்துறை அதிகாரி மதுசூதன ரெட்டி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அரசுக்கு தெரியப்படுத்தி சேஷாசலம் பகுதி வரை புலிகள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

    இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள பகுதி வரை புலிகள் வர வாய்ப்புள்ளது.

    இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சிறுத்தைகள் குழந்தைகளை தாக்கும் சம்பவம் நடந்துள்ளது.

    பெரிய புலிகள் நடமாடினால் பக்தர்களின் கதி என்னாவது என்பதே பீதியாக உள்ளது. முதலில் அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய 2 நடைபாதை முழுவதும் இருபுறமும் முழு அளவில் வேலி அமைக்க வேண்டும். ஆங்காங்கே 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

    மலைப்பாதை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அப்போதுதான் பக்தர்கள் தைரியமாக திருப்பதி மலைக்கு நடந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும் என வலியுறுத்தியுள்ளனர்.

    ×