search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க மோதிரம்"

    • கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் தனது நண்பர்களுடன் குளிக்கவந்தார்.
    • வனத்துறையினரை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இது மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.

    வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்தத்தால் அருவிக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. இதனால் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் குளித்து செல்கின்றனர். நேற்று கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் தனது நண்பர்களுடன் குளிக்கவந்தார்.

    அருவியில் குளித்து கொண்டிருந்தபோது அவர் கையில் வந்திருந்த 6.5 கிராம் தங்க மோதிரத்தை தண்ணீரில் தவறவிட்டார். இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறை அலுவலர்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து தாமோதரன் தவறவிட்ட மோதிரத்தை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட்ராஜா சுற்றுலா பயணியான தாமோதரனை வரவழைத்து அவருடைய தங்க மோதிரத்தை ஒப்படைத்தார்.

    மோதிரம் காணாமல் போன ஒரேநாளில் அதனை மீட்டு கொடுத்த வனத்துறையினரை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    • இங்கு பிரசவமாகும் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிப்பதாக அறிவித்திருந்தார்.
    • 2-வது பிரசவத்துக்காக பெரியக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே உள்ள பெரியக்கோ ட்டையில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பிரசவம் நடை பெறாததாலும் பொதுமக்க ளுக்கு இருக்கும் அச்சத்தை போக்கும் விதமா கவும் அங்கே மருத்துவராக பணிபு ரியும் மணவழகன் இங்கு பிரசவமாகும் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவி ப்பதாக அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சொக்கனாவூர் மேலதெருவை சேர்ந்த தர்மராஜ் மனைவி சுமித்ரா (வயது 23) இரண்டாவது பிரசவத்துக்காக இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு இரவு நேரத்திலும் பெண் மருத்துவர் பூர்வி சிகிச்சை அளித்தார்.

    அவருக்கு உறுதுணையாக செவிலியர்கள் வினோதா, கலா, சூசைஅந்தோனி, ஆயா செல்வி இருந்தனர்.

    சுகப்பிரசவம் செய்ததில் சுமித்ராவுக்கு பென் குழந்தை பிறந்தது.

    இதையடுத்து டாக்டர் மணவழகன் ஏற்கனவே கூறியது போல பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தை சொக்கனாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இளங்கோ மூலமாக அணிவித்தார்.

    • ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடை பெற்றது.
    • குழந்தைகளின் தாய்க்கு பழத்தட்டுடன் புடவையும் பரிசாக வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நாங்குநேரி ஓசன்னா அன்பு இல்லம், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று ராகுல் காந்தி பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடை பெற்றது.

    தொடர்ந்து, மறுவாழ்வு மையத்தில் இருக்கும் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அனைவருக்கும் உணவு பரிமாறினார். அதைப்பார்த்ததும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

    அதனைத்தொடர்ந்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தங்க மோதிரம் அணிவித்தார். குழந்தைகளின் தாய்க்கு பழத்தட்டுடன் புடவையும் பரிசாக வழங்கினார்.

    மேலும் அதே மருத்துவ மனைகளில் அதற்கு முன் தேதிகளில் பிறந்த குழந்தை களுக்கும் பரிசு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், கிராம கமிட்டி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க பொதுச்செயலாளர் பிறந்த நாளையொட்டி தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பிறந்த நாளையொட்டி திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஏற்பாட்டின் பேரில் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கினார். அவைத் தலைவர் பழனிச்சாமி .முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., என்.எஸ்.என்.நடராஜன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, இணைச் செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பகுதி செயலாளர் கே. பி.ஜி.மகேஷ்ராம், அம்மா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், திருப்பூர் மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என். பழனிச்சாமி, இணைச் செயலாளர் விவேகானந்தன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், இணைச் செயலாளர் ஆண்டவர் பழனிசாமி உள்படநிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாலை 4 மணிக்கு திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜகா கார்டன் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
    • திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க இன்று வியாழக்கிழமை திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதி,ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதிகளில் உள்ள வார்டு மற்றும் கிளை பகுதிகளில் பூத் கமிட்டி, இளைஞர்-இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும்கழக தலைமை நிலையச் செயலாளரும், சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.,வேலுமணிதலை மையிலும்எனது முன்னிலையிலும் கீழ்கண்ட இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    அதன்படி காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் காலை 10:30 மணிக்கு என்.எஸ்.என்.திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.அதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளையொட்டி திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜகா கார்டன் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதன் பின்னர் திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் மாலை 6 மணிக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    அதுசமயம் திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட அமைப்புச் செயலாளர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள்,மாநில நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, பகுதி,ஒன்றிய,பேரூராட்சி,ஊராட்சி, வார்டு மற்றும் கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்,மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், பூத் ஏஜெண்டுகள் மற்றும் உறுப்பினர்கள்,மகளிரணி நிர்வாகிகள், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள், தலைமை கழக பேச்சாளர்கள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள்,பாசறை நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்கத்தினர்,கழக முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • அதிகளவு உறுப்பினர்கள் சேர்க்கும் நிர்வாகிகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்.
    • ராமநாதபுரம் தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தி.மு.க. மாவட்டசெயல்வீரர்கள் கூட்டம் அவைத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடந்தது.

    இதில் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாடுவது, வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்/

    தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், அதிகளவில் உறுப்பினர்கள் சேர்க்கும் நிர்வாகிகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தொகுதி பொறுப்பாளர்கள் முத்துராமலிங்கம், குழந்தை வேலு, ஜூடு, பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மாவட்ட துணைச்செயலாளர் கருப்பையா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • சிவபத்மநாதன் ஏற்பாட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    ஆலங்குளம்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஊத்துமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்ச் 1-ந் தேதி பிறந்த 2 குழந்தைகளுக்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஏற்பாட்டில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். நிகழ்ச்சியில் ஆலங்குளம் ஒன்றிய குழு துணைத்தலைவர் ஒன்றிய குழு உறுப்பினர்கள், வீராணம் கிளை செயலாளர்கள் மற்றும் ஊத்துமலை கிளை செயலாளர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.

    ராஜபாளையம்,

    முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கடந்த 1-ந் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தென்காசி எம்.பி. தனுஷ்குமார், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் ராஜா ஆகியோர் தங்க மோதிரங்களை அணிவித்தனர்.

    மேலும் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களையும் வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவர்கள் உமா, மாரியப்பன், தி.மு.க. நகர செயலாளர்(தெற்கு) ராமமூர்த்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், துணைத்த லைவர் கல்பனா குழந்தை வேலு, மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பா ளர் ஆனந்த், 42-வது வார்டு கவுன்சிலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அதனைத்தொடர்ந்து ராஜபாளையம் 42-வது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.

    • கண்டக்டர் எடுத்து அதிகாரியிடம் ஒப்படைத்தார்
    • தங்க மோதிரத்தை தவற விட்டவர்கள் அதற்கான அடையாளங்களை கூறி தங்க மோதிரத்தை பெற்றுக் கொள்ளலாம்

    நாகர்கோவில்:

    கருங்கல்லில் இருந்து நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திற்கு நேற்று மாலை அரசு பஸ் வந்தது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

    பஸ் நிலையத்திற்கு வந்ததும் பஸ்சை விட்டு இறங்கி பயணிகள் சென்றனர். அப்போது கண்டக்டர் பஸ்ஸை விட்டு இறங்கிய போது பஸ்சுக்குள் தங்க மோதிரம் ஒன்று கிடந்தது.பஸ்சில் கிடந்த ஒரு பவுன் தங்க மோதிரத்தை எடுத்த கண்டக்டர் இது குறித்து அந்த பகுதியில் நின்ற பயணிகளிடம் கேட்டார்.

    அப்போது தங்க மோதிரம் யாருடையது என்பது தெரியவில்லை. இதையடுத்து கண்டக்டர் போக்குவரத்து கழக அதிகாரியிடம் தங்க மோதிரத்தை ஒப்படைத்தார்.

    தங்க மோதிரத்தை தவற விட்டவர்கள் அதற்கான அடையாளங்களை கூறி தங்க மோதிரத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

    பஸ்ஸில் கிடந்த ஒரு பவுன் தங்க மோதிரத்தை எடுத்து ஒப்படைத்த கண்டக்டரின் நேர்மையை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.

    • அமைச்சர் கீதாஜீவன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்
    • அரசு மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரம் வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. ஏற்பாட்டின்படி மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. 45-வது பிறந்தநாளையொட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை தாங்கினார்.

    கேக் வெட்டினார்

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.

    விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் சுபேந்திரன், பிரதீப், பார்வதி, நலம்ராஜேந்திரன், சீனிவாசன், அந்தோணிகண்ணன், மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், ஜெயக்கனி, முருகஇசக்கி, டேனியல், தேவதாஸ், பிரபு, வக்கீல் கிறிஸ்டோபர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் துரை, நிர்வாகிகள் பிரபு, ராஜகுரு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தங்க மோதிரம்

    பின்னர் அரசு மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், ஹார்லிக்ஸ் ஆகியவற்றை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். அப்போது மருத்துவகல்லூரி டீன் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி ஆகியோர் உடனிருந்தனர்.

    • பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா.
    • தங்க மோதிரங்களை திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மங்களம் ரவி வழங்கினார்.

    உடுமலை :

    உடுமலையில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை நகர பா.ஜ.க. சார்பில் உடுமலை அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மங்களம் ரவி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் உடுமலை நகர பா.ஜ.க. தலைவர் கண்ணாயிரம், நகர பொதுசெயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் , திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன் , திருப்பூர் தெற்கு மாவட்ட மருத்துவர் அணி தலைவர் விஜய கண்ணன், நகர சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சிங்கம்புணரியில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கோட்டைவேங்கைபட்டி அமைந்துள்ள சமத்துவபுரம் வீடுகளை வருகிற 8-ந்தேதி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    இதற்கான முன்னேற்பாடு கள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா சமத்துவபுரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்,

    அதனைத்தொடர்ந்து தமிழக வனத்துறை சார்பில் சமத்துவபுரம் முன்பகுதியில் மரக்கன்றுகளை அமுதா நட்டார். இந்தஆய்வின்போது அமைச்சர் பெரிய கருப்பன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

    அதனைத்தொடர்ந்து சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த 2 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அமைச்சர் பெரியகருப்பன் அணிவித்தார். மேலும் அங்கு உள்ள உள்நோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் உணவு பொருட்களையும் அமைச்சர் வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து பேரூராட்சி முன்பு கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு 199 தென்னங்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி தூய்மை பாரதம் திட்டத்தை வலியுறுத்தி நடந்த சைக்கிள் பேரணியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    இதில் சிங்கம்புணரி நகர்மன்ற சேர்மன் அம்பலமுத்து, துணைச் சேர்மன் செந்தில்குமார், செயல் அலுவலர் ஜான்முகமது ஞானிசெந்தில் மற்றும் ஒன்றிய செயலாளர் பூமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×