அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ., வழங்குகிறார்

மாலை 4 மணிக்கு திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜகா கார்டன் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.
அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ., வழங்குகிறார்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க இன்று வியாழக்கிழமை திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதி,ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதிகளில் உள்ள வார்டு மற்றும் கிளை பகுதிகளில் பூத் கமிட்டி, இளைஞர்-இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும்கழக தலைமை நிலையச் செயலாளரும், சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.,வேலுமணிதலை மையிலும்எனது முன்னிலையிலும் கீழ்கண்ட இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

அதன்படி காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் காலை 10:30 மணிக்கு என்.எஸ்.என்.திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.அதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளையொட்டி திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜகா கார்டன் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதன் பின்னர் திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் மாலை 6 மணிக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

அதுசமயம் திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட அமைப்புச் செயலாளர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள்,மாநில நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, பகுதி,ஒன்றிய,பேரூராட்சி,ஊராட்சி, வார்டு மற்றும் கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்,மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், பூத் ஏஜெண்டுகள் மற்றும் உறுப்பினர்கள்,மகளிரணி நிர்வாகிகள், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள், தலைமை கழக பேச்சாளர்கள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள்,பாசறை நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்கத்தினர்,கழக முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com