search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயற்குழு கூட்டம்"

    • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், துரைமஸ்தான், மாவட்ட பொருளாளர் ஏவி.சாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி கலந்து கொண்டு, இளைஞரணி மாநாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என பேசினார்.

    கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி வருகிற 17-ந் தேதி சேலத்தில் திமுக இளைஞர் அணி மாநாடு, இளைஞர் அணி செயலாளரும்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. மாநாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் வெள்ளை சீருடை அணிந்து கலந்து கெள்ள வேண்டும் என்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி உள்பட செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பா ளர்கள், உள்ளாட்சி, கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் குமுதா நன்றி கூறினார்.

    • ராணிப்பேட்டையில் நாளை நடக்கிறது
    • அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை

    ராணிப்பேட்டை: 

    ராணிப்பேட்டையில் நாளை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

    இது தொடர்பாக மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாளை மாலை 4 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமையில் ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    கூட்டத்தில் வருகிற டிசம்பர் 17-ந் தேதி சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு குறித்தும், வாக்குச்சாவடி,பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் வாக்காளர்களின் விவரங்கள் சேகரித்தல் குறித்தும், கட்சிவளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

    எனவே கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், நகர ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • உதயநிதி பிறந்தநாளையொட்டி மாதம் முழுவதும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானம்
    • செயற்குழு கூட்டத்துக்கு அவைத்தலைவர் கணபதி ராஜ்குமார் தலைமை தாங்கினார்

    கோவை, நவ.

    கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு அவைத்த லைவர் கணபதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் சிறப்புரை யாற்றினார். இதில் வருகிற டிசம்பர் 2-ந் தேதி மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் இளைஞர்கள் அணி கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    எனவே இந்த கூட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்க வேண்டும். இதுவரை இல்லாத அளவில் கூட்டத்தை நடத்த வேண்டும். இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாதம் முழுவதும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர் பொங்கலூர் பழனிசாமி, மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், தள பதி இளங்கோ, மு.மா.முருகன், நா.பாபு, நோயல் செல்வம், கோவை லோகு, இளைஞர் அணி அமைப்பாளர் தனபால் மற்றும் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • பள்ளி ஆண்டு தேர்வில் மாணவர்களுக்கு உடற்கல்விக்கு தனிதேர்வு வைக்க வேண்டும்.
    • புதிதாக பணி நியமனம் தமிழக அரசால் செய்யப்பட வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி பெஸ்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்திற்கு மாநில பொதுசெயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி யினுடைய உடற்கல்வி இயக்குனர் எஸ்.முரளிதரன் வரவேற்றார்.

    உடற்கல்வி இயக்குனர்கள் சம்பந்தம் ,செல்வ கணேசன், எஸ்.ரவிச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியர் டி.ஆர்.செந்தில் குமார் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக பெஸ்ட் கல்வி குழுமத்தின் தாளாளர் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் சிறப்புரையாற்றினார்.

    நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆண்டு தோறும் நடைபெறக்கூடிய ஆண்டு தேர்வில் மாணவர்களுக்கு உடற்கல்விக்கு என தேர்வு தனியாக வைக்கப்பட வேண்டும்.

    தமிழகம் முழுவதும் உள்ள தொகுப்புகுதிய அடிப்படையில் பணியாற்றக்கூடிய உடற்கல்வி ஆசிரியர்கள் நிரந்தர பணி அளிக்க வேண்டும்.

    ஆண்டுதோறும் 200 உடற்கல்வி துறை ஆசிரியர்களை புதிதாக பணி நியமனம் தமிழக அரசால் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றி தமிழக அரசின் கவனத்திற்கு அனுப்பிவைத்திட முடிவு செய்யப்பட்டது.

    ஏற்பா டுகளை திருவெண்காடு சு.சு.தி ஆண்கள் பள்ளியினுடைய உடற்கல்வி ஆசிரியர் எஸ்.செல்லதுரை செய்திருந்தார்.

    முடிவில் உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

    • பல்வேறு ஆலோசனைகளை வழங்கப்பட்டது
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் மத்திய ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் வி.என். உலகநாதன் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் பசுபதி முன்னிலை வகித்தார்.

    ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சருமான ஆர்.காந்தி, ஆற்காடு ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம..எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    அரக்கோணம் ஒன்றிய தலைவர் நிர்மலா சௌந்தர், மாவட்ட கவுன்சிலர் அம்பிகா பாபு, கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.தமிழ்ச்செல்வன், ஒன்றிய துணை செயலாளர்கள் வில்சன், அன்பழகன்,கீதா, நகர கழக செயலாளர் வி.எல்.ஜோதி, செயற்குழு உறுப்பினர் கண்ணையன், தக்கோலம் பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி மன்றத் தலைவருமான எஸ்.நாகராஜன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மத்திய ஒன்றிய பொருளாளர் ஜி.டில்லிபாபு நன்றி கூறினார்.

    • பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
    • அலங்கை ஒன்றிய பெருந்தலைவர் சண்முகவேல் நன்றி கூறினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங் காநல்லூர் அருகே முடுவார் பட்டி ஊராட்சியில் பாட் டாளி மக்கள் கட்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட தலை வர் செல்லம்பட்டி முருகன், மாவட்ட துணைத் தலைவர் ராஜா, அலங்கை ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் செந் தில்குமார், பொருளாளர் ரேவதி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    மாநில செயற்குழு உறுப் பினர் செல்வம், ஸ்டாலின் வரவேற்றார். செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஈஸ்வ ரன் சிறப்புரையாற்றி னார். இந்த கூட்டத்தில் மது ஒழிப்பு மற்றும் தடை செய் யப்பட்ட போதை பொருட் கள் விநியோகத்தை கட்டுப்ப டுத்த வலியுறுத்தி தீர்மா னங் கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் அலங்கை ஒன் றிய பெருந்தலைவர் சண் முகவேல் நன்றி கூறினார்.

    • திருப்பத்தூரில் நாளை சிவகங்கை மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
    • இந்த தகவலை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாரும், அமைச்சருமான பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூரில் நாளை (3-ந் தேதி) சிவகங்கை மாவட்ட தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் கணேசன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கல், சேர்த்தல் தொடர்பான பணிகள், கழக வளர்ச்சி பணிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாக்குச்சாவடி முகவர்கள் பணிகள் குறித்து பேசினார்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வேலூர்:

    வேலூர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அவை தலைவர் முகமது சகி தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட செயலாளர் ஏ. பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் பணிகள் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் நரசிம்மன், வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.அமலு விஜயன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுஜாதா ,துணை மேயர் சுனில் குமார், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தி.மு.க. வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் வருகிற 22-ந்தேதி திருவண்ணாமலையில் நடக்கிறது.

    இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடி முகவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    தி.மு.க. மகளிர் அணி மாநாட்டை சிறப்பாக நடத்திய முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, மகளிர் உரிமை மாநாடு வெற்றி பெற மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்த கனிமொழி எம்.பி.க்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிப்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணிக்குழுக்களின் செயற்குழு கூட்டம்
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணிக்குழு


    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள சு.ஆடுதுறையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேப்பூர் வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாநில பொறுப்பாளர் தங்கதுரை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கட்சி தோழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தலைவர் தொல்.திருமாவ ளவனின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று பேசினார்.அப்போது சனாதானத்தை முழுமையாக எதிர்ப்பது உள்பட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு விடுதலை செழியன், அரியலூர் ,பெரம்பலூர் மண்டல செயலாளர் அன்பானந்தம், மாவட்ட செயலாளர் (கி) கலையரசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் உதயகுமார், மண்டல துணை செயலாளர் லெனின், ஸ்டாலின்,முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம், மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பிரேம்குமார், தமிழ் குமரன், அண்ணாதுரை, தங்கதுரை , என 100-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.




    • தேன்கனிக்கோட்டையில் தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில் மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர் கோணப்பன், மேற்கு மாவட்ட தலைவர் சித்தலிங்கப்பா, கிழக்கு மாவட்ட தலைவர் ராஜி, துணை செயலாளர் ஜம்புலிங்கேஸ்வரன் மாநில செயற்குழு உறுப்பினர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் விஜயகாந்த் வரவேற்று பேசினார். மாநில அமைப்பாளர் பழனிவேல் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.

    கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது. கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும்.

    கிருஷ்ணகிரி தருமபுரி மாவட்டங்களில் வறண்ட பகுதிகளுக்கு காவிரி உபரி நீரை பம்பிங் மூலம் நீரேற்றம் செய்து ஏரி குளங்களுக்கு நிரப்பி நிலத்தடி நீரை உயர்த்த வேன்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் சப்பானிப்பட்டி நெடுக் கல் பகுதிகளில் புற காவல்நிலையம் அமைக்க வேண்டும்.

    தருமபுரி மாவட்டம் காரிமங் கலம் காவல்நிலையத்தை பிரித்து பெரியாம்பட்டி அனுமந்தபுரம் பகுதிகளில் புற காவல்நிலையம் அமைக்க வேன்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி வருகிற செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் அன்று மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார்.

    அதன்படி அன்று ராணிப்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2ஆயிரத்து 500 பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இதில் உள்ளாட்சி பிரதிநிகள் கலந்து கொள்ள வேண்டும்.

    வருகிற 17-ந்தேதி கந்தனேரியில் நடைபெறும் நடைபெறும் முப்பெரும் விழாவில் நிர்வாகிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார். கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவ ட்டத்தில் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது.

    வேலூர் மாவட்டம், பள்ளி கொண்டா அருகே கந்தனேரியில் தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் முப்பெரும் விழாவில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொள்வது.

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராணி ப்பேட்டை மாவட்டத்தில் விழா நடைபெறாத பகுதிகளிலும் சிறப்பாக நடத்திட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி, தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய , நகர,பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் கோபி பழனியப்பன் தலைமை தாங்கினார்.
    • பல்லடத்தில் கொலை செய்யப்பட்ட 4பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும் என கூறினர்.

    அவினாசி:

    திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் அவினாசியில் உள்ள ஒரு அரங்கில் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் கோபி பழனியப்பன் தலைமை தாங்கினார். மேற்கு வட்டார தலைவர் கொங்கு தங்கமுத்து, வடக்கு வட்டாரத்தலைவர் லட்சுமணசாமி, கிழக்கு வட்டாரத்தலைவர் குமாரசாமி, அவினாசி நகர தலைவர் பொண்ணு குட்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மகாலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத்கமிட்டி புதுப்பிப்பது, வட்டாரத்தலைவர்கள் நகரத்தலைவர்கள் இல்லத்திலேயே காங்கிரஸ் பேரியக்க மூவர்ணக்கொடிகளை பறக்க விடுவது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் விதமாக அனைத்து வட்டார நகர தலைவர்களும் தங்களது கமிட்டிகளை உடனடியாக அமைப்பது.

    அந்தந்த வட்டாரத்திற்குட்பட்ட கூட்டுறவு சங்கங்களில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்த்து தேர்தலில் போட்டியிட முயற்சித்தல், வட்டார, நகரத்திற்குட்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியின் அசையா சொத்துக்கள் இருப்பின் அதை மீட்டெடுக்க மாவட்ட கமிட்டிக்கு தகவல் தெரிவித்தல், தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களில் இறைப்பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்பித்தல், பல்லடத்தில் கொலை செய்யப்பட்ட 4பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×