search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூப்பர் மார்க்கெட்"

    • ஹனுமான் நாயக் சேக் பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடைக்குச் சென்றார்.
    • இதனைக் கண்டு சூப்பர் மார்க்கெட் மேலாளர் அதிர்ச்சி அடைந்தார்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சேக் பேட்டையை சேர்ந்தவர் ஹனுமான் நாயக் (வயது 22). இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி வருகிறார்.

    இந்த நிலையில் ஹனுமான் நாயக் சேக் பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடைக்குச் சென்றார்.

    அங்கிருந்து மாட்டிக்கொள்ளாமல் சாக்லேட் திருடி சாப்பிடுவது எப்படி என்று பேசியபடி ஒரு சாக்லேட்டை நைசாக திருடி சாப்பிட்டார். இதனை அவரது நண்பர் ஒருவர் வீடியோ எடுத்தார்.

    அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். இதனைக் கண்டு சூப்பர் மார்க்கெட் மேலாளர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சாக்லேட் திருடியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அனுமான் நாயக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வாடிக்கையாளர்கள் சூப்பர் மார்க்கெட் ஊழியர்களிடம் கேட்டனர்.
    • குழந்தைகள் சாப்பிடும் இதுபோன்ற உணவுப் பொருட்கள் காலாவதி ஆகிவிட்டதா என்று பார்க்க வேண்டும்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பெரிய கடை வீதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்காக ஆரணியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றார்.

    குழந்தைகளுக்கு பிடித்தமான முந்திரி, திராட்சை, பாதாம், பேரிச்சம் அடங்கிய பாக்கெட்டை வாங்கினார்.

    அப்போது அந்த பாக்கெட்டில் உயிருடன் பூச்சி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் மற்ற வாடிக்கையாளர்களிடம் காண்பித்தார்.

    வாடிக்கையாளர்கள் சூப்பர் மார்க்கெட் ஊழியர்களிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் சரிவர பதில் அளிக்காமல் வேறு பாக்கெட் மாற்றி எடுத்து செல்லுமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் அளித்தார். குழந்தைகள் சாப்பிடும் இதுபோன்ற உணவுப் பொருட்கள் காலாவதி ஆகிவிட்டதா என்று பார்க்க வேண்டும்.

    இதனை சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், வாடிக்கையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • காயம் அடைந்த பிரபாகர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • புகாரின் பேரில் ரவிக்குமார், ராபர்ட் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழி அருகே ஆவரைகுளம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 51). இவர் குமாரபுரம் சந்திப்பில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று பிரபாகர் சூப்பர் மார்க்கெட்டில் இருந்தார். அப்போது ஆவரை குளத்தை சேர்ந்த ரவிக்குமார் (45), ராபர்ட் (40) ஆகிய இருவரும் பொருட்கள் வாங்க வந்தனர். அப்போது பிரபாகரிடம் இருவரும் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் ரவிக்குமார், ராபர்ட் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இந்நிலையில் பிரபாகர் கடையை பூட்டிவிட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குமாரபுரம்- கன்னியாகுமரி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ரவிக்குமார், ராபர்ட் இருவரும் பிரபாகர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார்கள்.

    பின்னர் அவரிடம் தகராறு செய்ததுடன் மோட்டார் சைக்கிளை காலால் மிதித்து கீழே தள்ளியதுடன் பிரபாகரை கையால் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். காயம் அடைந்த பிரபாகர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து பிரபாகர் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ரவிக்குமார், ராபர்ட் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 341, 294(பி), 329, 506(2) ஐ.பி.சி. ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவிக்குமார் திசையன்விளை போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து அரிசி, மளிகை பொருட்கள் வாங்கினார்.
    • கடைக்கு வந்த நபர் தன்னை ஏமாற்றி விட்டு சென்றதாக அக்கம்பக்கத்தினர்களிடம் கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் கிராமத்தில் ஒரு சிறிய சூப்பர் மார்க்கெட்டை வாசுதேவனூர் கிராமத்தை சேர்ந்த மங்கையர்கரசி (வயது31) என்பவர் நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட்டிற்க்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து அரிசி, மளிகை பொருட்கள் வாங்குவது போல் பொருட்களின் விலையை கேட்டு, சில வகை பொருட்களை எடுத்து வைக்கக் கூறியுள்ளார். பின்பு கடை உரிமையாளர் மங்கையர்க்கரசி அந்த நபர் கூறிய அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துள்ளார்.

    பிறகு அந்த நபர் 1400 ரூபாய் விலையில் ஒரு அரிசி சிப்பத்தை எடுத்துக்கொண்டு, உரிமையாளர் மங்கை யர்க்கரசியிடமே ரூ. 2000 பணம் கேட்டுள்ளார். மங்கையர்க்கரசி 2000 ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொடுத்துள்ளார். இதன் பிறகு அந்த நபர் ஒரு சிப்பம் அரிசி ரூ. 2000 பணம் ஆகியவற்றுடன் தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தபோது கடையின் உரிமையாளர் மங்கையர்க்கரசி தனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என கூறியிருக்கிறார்.

    வெகுநேரம் கழித்து மங்கை யர்க்கரசிக்கு சுயநினைவு வந்ததாகவும் அதன் பிறகே கடைக்கு வந்த நபர் தன்னை ஏமாற்றி விட்டு சென்றதாக அக்கம்பக்கத்தினர்களிடம் கூறியுள்ளார். இதன்பிறகு மங்கையர்க்கரசி அருகில் உள்ள கீழ்குப்பம் ேபாலீஸ் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். மங்கையர்க்கரசியின் சூப்பர் மார்க்கெட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் வந்து போன சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவான நிலையில் அந்த காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தண்டனை காலத்தை சிறைச்சாலைகளில் கழித்து வரும் கைதிகள் அங்கு பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.
    • கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள சிறைச் சாலைகளில் தண்டனை கைதிகளாக இருப்பவர்கள் திருந்தி நல்ல மனிதர்களாக வெளியில் வருவதற்கான அனைத்து நடவடிக்கை களையும் தமிழக அரசு செய்து வருகிறது.

    கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதான குற்றவாளிகள் பலர் வழக்கு விசாரணை முடிந்து சிறையில் தண்டனை காலத்தை கழித்து வருகிறார்கள்.

    இதுபோன்று தண்டனை காலத்தை சிறைச்சாலைகளில் கழித்து வரும் கைதிகள் அங்கு பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.

    சிறைகளில் உள்ள தோட்டங்களில் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணை வித்துக்களை பயிரிட்டு அறுவடை செய்வது, இந்த நிலக்கடலையை சிறையிலேயே செக்கு எண்ணையாக தயாரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் கைதிகள் பல்வேறு பொருட்களையும் உற்பத்தி செய்து வருகிறார்கள்.

    இந்த பொருட்கள் சந்தை படுத்தப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது. சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ் புஜாரி மேற் பார்வையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டுள்ளன.

    எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள சூப்பர் மார்க்கெட் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மதுரையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் தினமும் ரூ.1 லட்சம் அளவுக்கு பொருட்கள் விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன.

    இப்படி சிறைச்சாலை அருகில் உள்ள சந்தைகள் பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் வர வேற்பை பெற்றுள்ளதால் சிறைகளில் உற்பத்தி அளவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தாங்கள் செய்யும் வேலையை மிகுந்த ஆர்வத்தோடு செய்ய சிறை கைதிகள் மாதம் ரூ.10 ஆயிரம் வரையில் சம்பாதிக்கிறார்கள்.

    கைதிகள் செய்யும் வேலைக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படுவதால் ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரம் என சம்பாதிக்கப்பவர்களும் உண்டு. சிறையில் தரமான சாப்பாடு உள்ளிட்டவைகள் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருவதால் இந்த சம்பளம் கைதிகளுக்கு மிச்சமாகி விடுகிறது.

    கைதிகள் சம்பாதிக்கும் இந்த பணம் அவர்களிடம் நேரடியாக வழங்கப்படுவது இல்லை. இதுபோன்ற சம்பள பணத்தை கையாள்வதற்கே கணக்கர் ஒருவர் சிறைச்சாலைகளில் உள்ளார். அவர் கைதிகள் சம்பள பணத்தை பத்திரமாக வைத்திருந்து குடும்பத்தினர் பார்க்க வரும்போது அவர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்.

    இதன்மூலம் சிறையில் இருந்தாலும் கைதிகள் தங்கள் குடும்பத்துக்காக பணம் சம்பாதித்து கொடுக்கும் நிலையில் இருந்து வேலைகளை செய்து வருவது அவர்களை மனதளவில் நல்ல மனிதர்களாக மாற்றுவதற்கு உந்து சக்தியாகவே இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சாலை தெரு பகுதியில் தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது.
    • சூப்பர் மார்க்கெட்டில் 3 பெண்கள் திருடி சென்றது குறித்து சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சாலை தெரு பகுதியில் தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பூஜை பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் போன்ற அனைத்து விதமான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு வாடிக்கையாளர்கள் தாங்களாகவே தேவையான பொருட்களை சுயசேவையாக எடுத்து கடைசியில் பில் போட்டு அதற்கான பணம் செலுத்தி பின்னர் பொருட்களை அதற்கான கவுண்டரில் பெற்று செல்வர்.

    இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மாலை கடைக்கு வந்த 3 பெண்கள் பொருட்கள் வாங்குவதாக சொல்லிவிட்டு பொருட்களை எடுத்து வைக்க தேவையான கூடையை எடுத்து சென்று மளிகை பொருட்கள், பூஜை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகளுக்கு பொருட்கள் என்று 1 மணிநேரத்திற்கும் மேலாக எடுத்துள்ளனர்.

    ஆனால் கவுண்டர் வரும்போது குறைந்த அளவிலான பொருட்கள் மட்டுமே இருந்தது. அவற்றிற்கு மட்டுமே பில் போட்டனர். ஒரு பெண் ஸ்பூன் உள்ளிட்ட ஒரு சில பொருட்களுக்கு 80 ரூபாயும், மற்றொரு பெண் குளிர்பானம் உள்ளிட்ட பொருட்கள் என 70 ரூபாயும் என மொத்திலேயே 150 ரூபாய்க்கே பணம் செலுத்தி விட்டு பொருட்களை பெற்று கொண்டு சென்றுள்ளனர்.

    இதனால் சந்தேகமடைந்த சூப்பர் மார்க்கெட்டின் உரிமையாளர் ஸ்ரீராம் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வுசெய்து பார்த்தபோது அந்த பெண்கள் பொருட்கள் எடுத்துகொண்டு அவற்றை ஆளில்லா இடத்திற்கு வந்து தங்களது சேலைக்குள் ஒரு பையை கட்டி கொண்டு வந்து மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களையெல்லாம் அதில் போட்டு கொண்டு சென்றது தெரிய வந்தது.

    சுமார் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை அவர்கள் திருடி சென்று உள்ளனர். இதுகுறித்து சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அந்த சூப்பர் மார்க்கெட்டில் 3 பெண்கள் திருடி சென்றது குறித்து சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளது.

    • மானாமதுரையில் பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டது.
    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் குத்துவிளக்கு ஏற்றினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கீழமேல்குடி சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு சூப்பர் மார்கெட்டை திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

    பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் உரிமையாளரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவருமான எஸ்.பாலகுருசாமி வரவேற்றார். இதில் பேரமைப்பின் மாநிலபொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு மாநில, மண்டல, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் வணிகர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை நகரில் மிகபெரிய சூப்பர் மார்க்கெட் இதுவாகும். இங்கு அனைத்து மளிகை பொருட்கள் முதல் வீட்டு உபயோகபொருட்கள் முழுவதும் ஒரேஇடத்தில் வாங்கிச்செல்ல முடியும். மதுரையில் இருந்து தினமும் காய்கறிகள் வரவழைக்கப்பட்டு தரமான பொருட்கள் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என்று சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் எஸ்.பாலகுருசாமி தெரிவித்தார்.

    • மானாமதுரையில் பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா நாளை நடக்கிறது.
    • பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தரமான முறையில் கிடைக்கும்.



    பாலகுருசாமி

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகர் வர்த்தக சங்க தலைவரும், சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் பாலகுருசாமி. இவர் மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகில் கீழமேல்குடி ரோட்டில் பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் அமைத்துள்ளார்.

    இதன் திறப்பு விழா நாளை (9-ந்தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழ்நாடு வர்த்தக சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா குத்து விளக்கேற்றி திறந்து வைக்கிறார்.

    இதில் வர்த்தக சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், மானாமதுரை நகர் வர்த்தகர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை வர்த்தக சங்க தலைவர், சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் பாலகுருசாமி செய்து வருகிறார்.

    புதிதாக திறக்கப்பட உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தரமான முறையில் கிடைக்கும்.

    • அதிகாரிகள் மீட்டு சீல் வைத்தனர்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசியில் தனியார் நிதி நிறுவனம் தீபாவளி மற்றும் பொங்கல் சீட்டு நடத்தி மளிகை பொருட்கள், தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், சீர்வரிசை சாமான்கள் உள்ளிட்டவை கவர்ச்சிகரமான பொருட்கள் தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி பல பேரிடம் கோடி கணக்கில் பணம் வசூல் செய்துள்ளனர்.

    இந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் வந்தவாசி ஆரணி சாலையில் சூப்பர் மார்க்கெட் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகை வருவதால் அதற்குண்டான பொருட்களை வாங்குவதற்காக நிதி நிறுவனத்திற்கு பொது மக்கள் சென்றுள்ளனர்.

    அப்போது அதன் உரிமையாளர் அங்கு இல்லாததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் செல்போன் மூலமும் அக்கம் பக்கம் தேடியும் கிடைக்காததால் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

    இது குறித்து பாதிக்க ப்பட்டவர்கள் திருவண்ணா மலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது சம்பந்தமாக போலீசார் வந்தவாசி ஆரணி சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடையை பூட்டி சீல் வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று சிலர் சூப்பர் மார்க்கெட்டின் பக்கவாட்டில் உள்ள இரும்பு ஷட்டரை உடைத்து உள்ளே இருக்கும் மளிகை பொருட்கள் சாமான்கள் உள்ளிட்டவைகளை திருடிக் கொண்டிருந்தனர்.

    அங்கு வந்த போலீசாரை கண்டதும் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது அருகிலுள்ள கடைகளில் மளிகை பொருட்கள், பித்தளை சாமான்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட வை பதுக்கி வைத்தி ருந்தது தெரியவந்தது.

    இதை யடுத்து தாசில்தார் முருகானந்தம் தலைமையில் போலீசார் பூட்டை உடைத்து பதுக்கி வைத்திருந்த பொருட்களை மீட்டு மீண்டும் சூப்பர் மார்க்கெ ட்டில் வைத்து சீல் வைத்தனர்.

    சூப்பர் மார்க்கெட் கடைக்குள் புகுந்து கொ ள்ளைய டித்தவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அன்னபூரணி தாய் பிச்சையம்மாளுடன் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
    • பிச்சையம்மாள் மகள் அன்னபூரணி வேலை முடிந்து வீடு திரும்பவில்லை.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே சாராயமேட்டுப் பகுதியைச் சேர்ந்தவர் குமார் இவரது மனைவி பிச்சையம்மாள் (வயது 47). அவரது மகள் அன்னபூரணி. ( 22). இவருக்கு செல்வகணபதி என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் அன்னபூரணி தாய் பிச்சையம்மாளுடன் திருவெண்ணைநல்லூர் அருகே ஆலங்குப்பம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பிச்சையம்மாள் மகள் அன்னபூரணி வேலை முடிந்து வீடு திரும்பவில்லை. இதனால் மனைவி மற்றும் மகளை காணவில்லை என்று குமார் இவர்கள் வேலை பார்க்கும் ஆலங்குப்பம் சூப்பர் மார்க்கெட் சென்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் வேலை முடிந்து சென்று விட்டனர். வேறு எங்கு சென்றனர் என்று தெரியாது என்று கூறினர். மேலும் மனைவி மற்றும் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து குமார் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்கு பதிவு செய்து அவர்கள் என்னானார்கள் எங்கு சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×