search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் திறப்பு
    X

    பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட்டை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

    பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் திறப்பு

    • மானாமதுரையில் பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டது.
    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் குத்துவிளக்கு ஏற்றினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கீழமேல்குடி சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு சூப்பர் மார்கெட்டை திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

    பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் உரிமையாளரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவருமான எஸ்.பாலகுருசாமி வரவேற்றார். இதில் பேரமைப்பின் மாநிலபொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு மாநில, மண்டல, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் வணிகர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை நகரில் மிகபெரிய சூப்பர் மார்க்கெட் இதுவாகும். இங்கு அனைத்து மளிகை பொருட்கள் முதல் வீட்டு உபயோகபொருட்கள் முழுவதும் ஒரேஇடத்தில் வாங்கிச்செல்ல முடியும். மதுரையில் இருந்து தினமும் காய்கறிகள் வரவழைக்கப்பட்டு தரமான பொருட்கள் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என்று சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் எஸ்.பாலகுருசாமி தெரிவித்தார்.

    Next Story
    ×