search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிசிடிவி கேமரா"

    • சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு .
    • தவறினால் மருந்தக உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

    சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று (05.03.2024) முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் -1940 மற்றும் 1945 அட்டவணை "X மற்றும் "H". "H1" Drugs குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் -1973 பிரிவு 133-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (05.03.2024) நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

    தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள், ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • காவல்துறைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள்.
    • ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    உ.பி மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உத்தரப் பிரதேச காவல்துறை ஆளில்லா விமானங்கள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

    அங்கீகரிக்கப்படாத ட்ரோனைக் கட்டுப்படுத்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக எஸ்பி செக்யூரிட்டி கவுரவ் வான்ஸ்வால் தெரிவித்தார். 

    மேலும், அயோத்தி மாவட்டத்தில் 10,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக டிஜி (சட்டம் ஒழுங்கு) பிரசாந்த் குமார் தெரிவித்தார். இது தவிர, காவல்துறைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

    மேலும், கோவில் நகரத்திற்கு செல்லும் சாலைகள் சுத்தப்படுத்தப்பட்டு வருவதாக டிஜி தெரிவித்தார். ஜனவரி 17 அல்லது 18 முதல் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது. அதற்காக அவ்வப்போது போக்குவரத்து அறிவுரைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.

    • அவிநாசி நகரப்பகுதியில் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் வணிக நிறுவனங்களில் நடைபெறுகிறது.
    • சாலையோரங்களில் நடைபெறும் திருட்டை தடுக்கவும், குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா்களை கண்டுபிடிக்கவும் உதவும்.

    அவிநாசி

    அவிநாசி காவல் துறை சாா்பில் குற்றச்சம்பவங்களைத் தடுப்பது தொடா்பான வணிக நிறுவனங்களுடனான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, காவல் ஆய்வாளா் ராஜவேல் தலைமை வகித்தாா்.

    அவிநாசி நகரப்பகுதியில் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் வணிக நிறுவனங்களில் நடைபெறுகிறது. குறிப்பாக பெண்கள் இருக்கும் நிறுவனங்களைப் பாா்த்து, பொருள்களை வாங்குவது போலவும், முகவரி கேட்பது போலவும் அவா்களிடம் நூதன முறையில் நகைப் பறிப்பில் ஈடுபடுகின்றனா்.

    மேலும் சாலையோரங்களில் நடைபெறும் திருட்டை தடுக்கவும், குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா்களை அடையாளம் காணவும் வணிக நிறுவனத்தினா் சிசிடிவி/. கேமரா பொருத்தி காவல் துறைக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    • தமிழ்நாடு போலீசாருக்கு சமீப காலமாக சி.சி.டி.வி.-க்கள் கை கொடுக்கின்றன.
    • குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஒரு கோவிலில், அங்கு பணி செய்த அர்ச்சகரே உண்டியல் பணத்தை திருடுவதை போலீசார் கண்டறிந்தனர்.

    மந்தாரக்குப்பம்:

    குற்றவாளிகளை பிடிக்க ஒவ்வொரு காலக்கட்டத்திலும். ஒவ்வொரு வழிமுறையை தமிழ்நாடு போலீஸ் துறையினர் பின்பற்றி வருகின்றனர். 1980-களில் குற்றவாளிகள் விட்டுச் செல்லும் பொருட்களை வைத்து துப்பு துலக்கினர். பின்னர் 1990-களில் மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். அதனைத் தொடர்ந்து 2000-ம் ஆண்டுகளில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    மொபைல் போன்களின் பயன்பாடு 2010-களில் அதிகரித்தது. குற்றச் சம்பவங்கள் நடந்த நேரத்தில் அந்த இடத்தில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடித்தனர்.

    ஆனால், சமீப காலங்களில் இந்த முறைகள் ஏதும் போலீசாருக்கு பயன்படவில்லை. இதனால் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

    இந்நிலையில் தமிழ்நாடு போலீசாருக்கு சமீப காலமாக சி.சி.டி.வி.-க்கள் கை கொடுக்கின்றன. குறிப்பாக 2020-க்கு பின்னர் முக்கிய சாலைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்கள், திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள், வீடுகளின் வாசல்கள் போன்ற இடங்களில் சி.சி.டி.வி. அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு நடந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் எளிதில் அடையாளம் காண்கின்றனர்.

    அதன்படி, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஒரு கோவிலில், அங்கு பணி செய்த அர்ச்சகரே உண்டியல் பணத்தை திருடுவதை போலீசார் கண்டறிந்தனர். மேலும், சில தினங்களுக்கு முன்னர் ஸ்டூடியோ உரிமையாளர் குறிஞ்சிப்பாடியில் மர்மக் கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. மூலமாகவே, கூலிப்படையை குறிஞ்சிப்பாடி போலீசார் கைது செய்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா, சி.சி.டி.வி.-க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மேலும், அவர் கூறுகையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் இவ்வாறு செய்கிறேன். அனைவரும் அவரவர் வீடுகளின் வாசல்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும். இதன் மூலம் குற்றச் சம்பவங்களை தடுக்க முடியும். குற்றவாளிகளையும் எளிதில் கண்டறிய முடியும் என்றார்.

    குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சி.சி.டி.வி.-க்கு மாலை அணிவித்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடனும், ஆர்வமுடனும் பார்த்து சென்றனர்.

    • பாதுகாப்பை உறுதிப டுத்தவும், திருடர்களை கண்காணிக்கவும், பாலியல் சீண்டல்களை கண்காணிக்கவும், போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
    • குற்ற வாளிகளை கண்காணி க்கவும், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை குறைப்பதற்கு நகர் முழுவதும் 20 இடங்களில் 40 கேமராக்கள் பொருத்தப்படும்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    பொம்மிடியில் குற்ற செயல்களை தடுப்பதற்காக காவல்துறை, வணிகர் சங்கம் மூலமாக முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் 200-க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடை, மளிகை கடை, நகைக்கடை, ஹாட்டுவேர்ஸ், இரும்பு கடை, எலக்ரீக்கல் மற்றும் சிறு,பெரு வணிக வளாகங்கள் உள்ளது.

    பத்துக்கு மேற்பட்ட வங்கிகள், திருமண மண்டபங்கள், ெரயில் நிலையம், பேருந்து நிலையம் என முக்கிய இடங்கள் உள்ளது. இந்த பகுதிகளில் தினமும் பல ஆயிரம் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    பாதுகாப்பை உறுதிப டுத்தவும், திருடர்களை கண்காணிக்கவும், பாலியல் சீண்டல்களை கண்காணிக்கவும், போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

    மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டிபன் யேசுபாதம் உத்தரவின் பேரில் அரூர் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் அறிவுறுத்தலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் வணிகர் சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    இதில் வணிகர் சங்க தலைவர் ஆசான்கான், செயலாளர் குமார், பொருளாளர் பிரசாத் மற்றும் 20-க்கும் மேற்பட்ட வணிகர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது விழாக்காலம் சில தினங்களில் இருப்பதால் கூட்ட நெரிசல், முக்கிய கடைவீதி பகுதிகளான ெரயில் நிலையம், ஓமலூர் சாலை, மசூதி தெரு, சேலம் மெயின் ரோடு, தருமபுரி மெயின் ரோடு, பேருந்து நிலையம் போன்ற இடங்களில் பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கான துணி, மளிகை பொருட்கள், நகைகள் வாங்குவதற்காக பெருமளவு கூடுவார்கள்.

    அப்போது குற்ற வாளிகளை கண்காணி க்கவும், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை குறை ப்பதற்கும், கூட்ட நெரிசலை கண்காணிப்பதற்கும் நகர் முழுவதும் 20 இடங்களில் 40 கேமராக்கள் பொருத்துவது எனவும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சாலையை விட்டு வாகன ங்களை உள்ளே தள்ளி நிறுத்தவும், கடைகளை போக்குவ ரத்துக்கு இடையூறு இல்லாமல் அமைத்துக் கொள்ளவும் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக வணிகர் சங்கத்தின் சார்பில் உறுதி வழங்கப்பட்டது.

    சமீபத்தில் பொம்மிடி பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடித்ததற்காக காவல் துறையினருக்கு வணிகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • அரசுப்பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என 2019-ம் ஆண்டு அரசு அறிவித்தது.
    • இந்த திட்டமானது கல்வித்துறையின் மூளையாக உள்ளது.

    புதுடெல்லி :

    டெல்லியில் உள்ள அரசுப்பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என கடந்த 2019-ம் ஆண்டு அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கான பணியை பொதுப்பணித்துறை செய்து வருகிறது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், டெல்லியில் புதிதாக பள்ளிகள் மற்றும் வகுப்பறைகள் கட்டும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது.

    மேலும், வகுப்பறைகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டம் உள்ளது. வகுப்பறையின் நேரடி காட்சிகளை பெற்றோர் தங்கள் வீடுகளில் இருந்தபடியே செல்போன் மற்றும் கணினி வழியாக பார்க்கும் வசதி ஏற்படுத்தப்படும். இந்த திட்டமானது கல்வித்துறையின் மூளையாக உள்ளது. எனவே இதனை செயல்படுத்துகிறோம்.

    இந்த நடவடிக்கையின் மூலம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு கற்பித்தல் முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தங்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்ள முடியும். இதற்காக பெற்றோர்களுக்கு தனிப்பட்ட ஐடி மற்றும் அதற்கான கடவுச்சொலுடன் கூடிய உள்நுழைவு சான்று வழங்கப்படும்.

    இதற்கான ஒப்புதல் பெற்றோரிடமிருந்து பெறப்படும். மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு, பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர்களின் விவரங்களை பொதுப்பணித்துறைக்கு சமர்பிக்க வேண்டும். அதன்பின் தகவல்கள் மென்பொருளில் பதிவேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×