வைகை ஆற்றில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணியுங்கள்..! சென்னை ஐகோர்ட் உத்தரவு

தூய்மையாக வைத்திருக்க, மதுரை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வைகை ஆற்றில் வாகனங்கள், பைக்குகளை நிறுத்தி கழுவி சுத்தம் செய்கின்றனர்.
வைகை ஆற்றில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணியுங்கள்..! சென்னை ஐகோர்ட் உத்தரவு
Published on

ஆதனூர் கண்மாய்க்கு நீர் நிரம்பி விவசாயத்தை பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது, குடிநீருக்கு பயன்படும் வைகை ஆற்று நீரை மாசு படாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா ? என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், வைகை ஆற்றில் வாகனங்கள், பைக்குகளை நிறுத்தி கழுவி சுத்தம் செய்கின்றனர்.

குப்பை கொட்டுகின்றனர். இதை நானே நேரில் பார்த்தேன். வைகை ஆற்றில் குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க, மதுரை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நகர் பகுதியில் வைகை ஆற்றில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com