search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உளவாளி"

    பிரமோஸ் ஏவுகணை தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க உளவுத்துறைக்கு அனுப்பியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பின் (DRDO) எஞ்சினீயர் கைது செய்யப்பட்டுள்ளார். #BrahMos #DRDO
    மும்பை:

    ரஷியா மற்றும் இந்தியா இணைந்து கூட்டு தொழில்நுட்பத்தில் பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்த ஏவுகணையை தயாரிக்கும் மையம் உள்ளது. 

    இந்நிலையில், ஏவுகணை தொழில்நுட்பட்தை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு அனுப்பியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பில் பணியாற்றும் (DRDO) எஞ்சினீயர் நிஷாந்த் அகர்வால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நிஷாந்த் அகர்வால் தற்போது விசாரணையில் உள்ளதாகவும், எந்த அளவு தகவல்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை விசாரித்து வருவதாக ராணுவ புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    உத்தரகாண்ட் மாநிலத்தில், பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்ட இந்தியர் கைது செய்யப்பட்டார். அவர் இந்திய தூதரக அதிகாரி வீட்டில் வேலை செய்து கொண்டு உளவு வேலை பார்த்தது அம்பலத்துக்கு வந்து உள்ளது. #Pakistan #Spy #IndianCookHelped
    லக்னோ:

    உத்தரகாண்ட் மாநிலம், பித்தோரகார் பகுதியில் உள்ள திதிஹாட் என்ற இடத்தை சேர்ந்தவர், ரமேஷ் சிங் கன்யால். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் தனது சகோதரர் மூலமாக பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவரது வீட்டில் சமையல்காரராக வேலைக்கு சேர்ந்தார்.

    2015-17-ம் ஆண்டுகளில் அங்கு வேலை செய்த அவர், பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.யின் ஏஜெண்டாக இருந்து, உளவு வேலை பார்த்தது அம்பலத்துக்கு வந்து உள்ளது.

    குறிப்பாக இந்திய தூதரக அதிகாரியின் வீட்டை வேவு பார்த்து உள்ளார், அவரது ‘லேப்-டாப்’பில் இருந்து ரகசிய தகவல்களை திருடி உள்ளார், தொலைபேசியை ஒட்டு கேட்டு உள்ளார். பின்னர் அந்த தகவல்களை ஐ.எஸ்.ஐ.யிடம் கொடுத்து பணம் பெற்று உள்ளார்.

    அங்கு இருந்து பின்னர் சொந்த ஊருக்கு திரும்பிய பிறகும் அவர் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டாக செயல்பட்டு வந்து உள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள ராணுவ தளங்கள் பற்றிய ரகசிய தகவல்களை சேகரித்து உள்ளார். இதற்காக அவருக்கு ஐ.எஸ்.ஐ. ஒரு செல்போனை தந்து உள்ளது.

    இதையடுத்து அவர் மீது லக்னோ போலீஸ், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 121-ஏ (நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தல்), அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் பிரிவுகள் 3, 4, 5, 9 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    அதைத் தொடர்ந்து உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு போலீஸ் படையினர், உத்தரகாண்ட் போலீஸ் படை மற்றும் ராணுவ உளவு அமைப்பினர் கூட்டு நடவடிக்கையில், நேற்று முன்தினம் திதிஹாட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பாகிஸ்தான் செல்போன் கைப்பற்றப்பட்டது. அவர் லக்னோவுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இதுகுறித்த தகவல்களை உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆனந்த் குமார் நேற்று நிருபர்களிடம் வெளியிட்டார்.

    ரமேஷ் சிங் கன்யால், நிறைய கடன்கள் வாங்கி உள்ளதால் பணத்துக்கு ஆசைப்பட்டு, இந்த செயலில் ஈடுபட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், பணத்துக்காகத்தான் அவர் இப்படி உளவு வேலை பார்த்தாரா, வேறு ஏதாவது காரணங்கள் உண்டா என்பது அவரிடம் மேல் விசாரணை நடத்தினால் தெரிய வரும் எனவும் அவர் குறிப்பிட்டார். 
    ×