search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை தமிழர் பிரச்சினை"

    இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைக்க விரும்பவில்லை என்று பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவின் நடவடிக்கைக்கு அதிபர் சிறிசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #sirisena #RanilWickramasinghe
    கொழும்பு :

    இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி 2015-ம் ஆண்டு சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியுடன் சேர்ந்து அரசு அமைத்தது. இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார்.

    ஆனால் ராஜபக்சேவால் 2 முறை பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், மீண்டும் விக்ரமசிங்கேவையே பிரதமராக நியமிக்க வேண்டிய நிலைக்கு சிறிசேனா தள்ளப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட டிசம்பர் மாதத்தில் இருந்து விக்ரமசிங்கே தலைமையிலான அரசு தேவையான பெரும்பான்மை (113 உறுப்பினர்கள்) இல்லாமலேயே செயல்பட்டு வருகிறது.

    சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு ஜனவரி 5-ந் தேதி புதிதாக தேர்தலை நடத்த உத்தரவிட்டதையும் சுப்ரீம் கோர்ட்டு தடுத்துவிட்டது.

    இந்நிலையில் விக்ரமசிங்கே இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைக்க திட்டமிட்டார். இதற்காக இலங்கை முஸ்லிம் காங்கிரசின் ஒரே ஒரு உறுப்பினருடனும், சிறிசேனாவின் சுதந்திரா கட்சியை சேர்ந்த சிலருடன் ஒரு உடன்பாடு செய்துகொண்டார். இதன்மூலம் மட்டுமே 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கும்.

    இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டும். தற்போதைய அதிபர் சிறிசேனாவுடன் ஏற்பட்ட பிளவு காரணமாக விக்ரமசிங்கேவின் கட்சி மீண்டும் அவரை ஆதரிக்காது என்று ஏற்கனவே அறிவித்துவிட்டது.

    ராஜபக்சே 2 முறை அதிபர் பதவி வகித்துள்ளதால் அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. அவரது புதிய கட்சியான இலங்கை மக்கள் கட்சியும் சிறிசேனாவை ஆதரிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனவே இந்த ஆண்டு இலங்கை அரசியலில் மிகவும் சிக்கலான ஆண்டாகவே இருக்கும் என கருதப்படுகிறது.



    இதற்கிடையே பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கடந்த வெள்ளிக்கிழமை, தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கும்படி சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்தார். பிரதமரின் கோரிக்கைக்கு அதிபர் சிறிசேனா இலங்கை சுதந்திர தின விழா உரையில் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக நான் பத்திரிகைகளில் பார்த்தேன். இதனை நான் எதிர்க்கிறேன். தேசிய அரசாங்கம் அமைப்பது என்பது மந்திரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், மக்கள் பணத்தில் மந்திரிகளுக்கு சலுகைகள் வழங்குவதும் மட்டுமே. இது முறையற்றது. மந்திரிகள் 25 பேருக்குள் இருக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள்.

    தேர்தல் நடைபெற உள்ள இந்த ஆண்டில் சர்வதேச சக்திகள் இலங்கைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. சர்வதேச பிற்போக்கு சக்திகள் பல்வேறு உருவங்களில் இலங்கைக்குள் வந்துள்ளன.

    இலங்கை சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் ஆகியும் தமிழர்கள் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது என்பதே தேசிய அளவில் முக்கிய கேள்வியாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த வாரம் இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெளிப்படையாக சிறிசேனா எதிர்த்தது குறிப்பிடத்தக்கது. #sirisena #RanilWickramasinghe
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அரசு செலவில் எதிர்கட்சிகளை வசைபாடும் விழாவாகவே நடத்தப்பட்டுள்ளதாக திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar #MGRCentenaryFunction
    சென்னை:

    சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சிவாஜி கணேசன் படத்துக்கு மரியாதை செலுத்தினார். இதில் மூத்த தலைவர் குமரி அனந்தன், மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி, தணிகாசலம், சிரஞ்சீவி, முன்னாள் எம்.பி. ராணி, மாவட்ட தலைவர்கள் வீர பாண்டியன், சிவராஜசேகர் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார்கள்.

    பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலக அளவில் புகழ் பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிகச்சிறந்த தேசியவாதி. அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கும். அவருக்கு மரியாதை செலுத்துவதில் காங்கிரஸ் பெருமைப்படுகிறது.

    நேற்று அரசு சார்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு நடத்தப்பட்ட விழா அவருக்கு புகழ் சேர்க்கும் விழா அல்ல. ஒரு சம்பிரதாய சடங்காக நடத்தி இருக்கிறார்கள். எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டவர்கள் யாரும் அந்த விழாவுக்கு அழைக்கப்படவில்லை.

    எம்.ஜி.ஆர். புகழை அவர்கள் பரப்பவும் இல்லை. நந்தனம் திடலில் வெறும் 20 ஆயிரம் பேர்தான் அமர முடியும். அதற்கே அரசு பேருந்துகளை தவறாக பயன்படுத்தி உள்ளனர். என்றாலும், கூட்டம் சேர்க்க முடியவில்லை. இந்த விழா அரசு செலவில் எதிர்கட்சிகளை வசைபாடும் விழாவாகவே நடத்தப்பட்டுள்ளது.


    காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி பற்றி பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தது, விரக்தியின் வெளிப்பாடு. பா.ஜனதாவுடன் கூட்டணி சேர கட்சி கிடைக்காததால் புலம்புகிறார். தமிழகத்தில் பா.ஜனதா என்ற கட்சியே இல்லை.

    தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என்று 5 வருடத்துக்கு முன்பு நடந்த பழங்கதையை மீண்டும் ஏன் பேச வேண்டும். நாலரை ஆண்டுகளில் மோடி செய்தது என்ன? பா.ஜனதாவின் மோசமான ஆட்சியால் ஒட்டு மொத்த இந்திய மக்களும் வெறுப்பில் இருக்கிறார்கள். தேர்தல் வரும்போது பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் காங்கிரஸ் துணை தலைவி மைதிலிதேவி, கஜநாதன், டிராஸ்ளின் பிரகாஷ், சந்திரசேகர், ஓட்டேரி தமிழ் செல்வன் கராத்தே ரவி, அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அடையாறில் உள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சிவாஜி படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், ஸ்ரீராம், மாம்பலம் ராஜேந்திரன், சித்ரா கிருஷ்ணன், நாச்சிக்குளம் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Congress #Thirunavukkarasar #MGRCentenaryFunction
    இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் கட்சியுடன் மானம் உள்ளவர்கள் கைகோர்க்க மாட்டார்கள் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #BJP #PonRadhakrishnan #Congress
    கோவை:

    பாரதிய ஜனதா சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் கோவை சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு நாட்டில் எடுத்துக்காட்டாக விளங்கும் அரசாக விளங்குகிறது. மேலும் வங்கி கணக்கு தொடங்கியது. கியாஸ் இணைப்பு கொடுத்தது, கழிவறை கட்டியது, விபத்து காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை மத்திய அரசு செய்துள்ளது.

    பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தியிருக்க முடியும். எதிர்கட்சிகள் செய்து வைத்துள்ள பிரச்சனையை சரி செய்வதால் அதில் தாமதம் ஆகிறது. விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்.

    பாரதிய ஜனதா கட்சி மதவாத கட்சி என்று சிலர் குறிப்படுகின்றனர். நாங்கள் ஒரு போதும் மதவாதியாக செயல்பட்டதில்லை.

    தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பா.ஜ.க. காலூன்ற முடியாது என்று சொன்னார்கள். அடுத்த ஆண்டு பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் காலூன்ற போகிறது.

    கோப்புப்படம்

    ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது தி.மு.க. செய்தது பக்கா டிராமா. 1½ மணி நேரத்துக்குள் ஒரு உண்ணாவிரதத்தை நடத்தி காட்டியவர்கள் அவர்கள். இலங்கை தமிழர்களை கொன்றதுக்கு காங்கிரஸ் உதவியது என்று ராஜபக்சே கூறி உள்ளார். இதற்கு ஸ்டாலின் என்ன சொல்ல போகிறார்?

    இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் கட்சியுடன் மானம் உள்ளவர்கள் கைகோர்க்க மாட்டார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்தால் பச்சை துரோகி தி.மு.க.தான்.

    2014-ம் ஆண்டு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி குறித்தும், அவர்களின் துரோகம் கூறித்தும் ஒவ்வொரு மேடையிலும், என்னை அருகில் வைத்துக் கொண்டே பேசியவர் வைகோ. ஆனால் அவரே இப்போது தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கிறார். பிரதமரை பற்றி அவதூறாக பேசுவதற்கு எவருக்காவது யோக்கியம் இருக்கிறதா?

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். #BJP #PonRadhakrishnan #Congress
    சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரை தாக்க விடுதலைப் புலிகள் முன்னர் திட்டமிட்டதாக இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்துள்ளார். #LTTE #planefromChennai #MaithripalaSirisena
    கொழும்பு:

    ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றிருந்த இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அங்கு வாழும் சிங்களத்தவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரை தாக்க விடுதலைப் புலிகள்  திட்டமிட்டதாக அப்போது மைத்ரிபாலா சிறிசேனா குறிப்பிட்டார்.

    அந்த காலகட்டத்தில் இலங்கையின் அந்நாள் அதிபர், பிரதமர், பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் ராணுவ தளபதி அனைவருமே வெளிநாடுகளுக்கு சென்றிருந்தனர். தற்காலிக ராணுவ மந்திரியாக அப்போது நான் பொறுப்பேற்றிருந்தேன்.


    சென்னையில் இருந்தோ, வேறேதாவது காட்டுப் பகுதியில் இருந்தோ கொழும்பு நகரில் உள்ள சில முக்கிய பகுதிகளில் விடுதலைப் புலிகள் வான்வழியாக வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப் போவதாக உளவுத்துறை மூலம் தகவல் வந்தது. இதை தொடர்ந்து அனைவரும் வெளியேறி விட்டனர்.

    தாக்குதலுக்கு பயந்து நானும் கொழும்புவை விட்டு வெளியேறி வெவ்வேறு பகுதிகளில் அப்போது தங்கி இருந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 2007 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் கொழும்பு நகரின்மீது இருமுறை விமான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #LTTE #planefromChennai #MaithripalaSirisena
    இலங்கை இறுதிக்கட்ட போரில் தமிழ் பெண்கள் மீது நடத்தப்பட்ட கோர தாக்குதலுக்கு, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அரசு தான் காரணம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார்.
    கோவை:

    இலங்கையில் ராஜபக்சேவுக்கு உதவிய தி.மு.க-காங்கிரஸ் கட்சியினரை போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

    கடந்த வாரம் இந்தியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இலங்கையில் நடைபெற்ற போருக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்த உதவிகளை கூறியிருந்தார். மேலும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசின் பொருளாதார உதவிகளால் தான் சிங்கள ராணுவம் தமிழர் பகுதிகளை சூறையாடியது என்பதும், பல லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதும், தமிழ் பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர் கற்பழித்து படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதும் ராஜபக்சே வாயிலாக வெளிவந்து விட்டது. இந்த கொடூர தாக்குதலை மனிதாபிமானமற்ற செயல் என ஐ.நா. சபை மற்றும் பல நாடுகள் கண்டித்தது.

    ஈழத்தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்திய கொடூர படுகொலைகளுக்கும், தமிழ் பெண்கள் மீது நடத்தப்பட்ட கோரத்தாக்குதலுக்கும், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அரசு தான் காரணம். அதற்கு உதவியிருப்பதால் தி.மு.க.-காங்கிரசை போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த குற்றத்திற்காக காங்கிரஸ் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்.

    மத்தியில் மந்திரி பதவிக்காகவும், 2006-ல் அமைந்த மைனாரிட்டி தி.மு.க. அரசை காப்பாற்றி கொள்ளவும், ஈழத்தமிழர்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசின் துரோக நடவடிக்கைக்கு தி.மு.க. துணை நின்றதை மறக்க முடியுமா?. அன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் என்று அறிவித்து ஒரு மணி நேரம் நாடகம் நடத்தினார். அந்த நாடகத்தை முடித்து இலங்கை தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, போர் நின்று போனது என்று அறிவித்த பின்னர் பதுங்கு குழியில் இருந்த நம்முடைய அப்பாவி தமிழர்கள், தமிழ் சொந்தங்கள் 50 ஆயிரம் பேர் வெளியே வந்தனர். அவர்களை குண்டு போட்டு அழித்தனர். இதற்கெல்லாம் கருணாநிதியும் அப்போதைய துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், காங்கிரசும் தான் காரணம்.

    இன்று ஒரு பேப்பரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துறையில் கொடுத்து முதல்-அமைச்சர், துணை முதல்- அமைச்சர் மீது கொடுத்தீர்கள். மூன்றாவதாக தான் என் மீது புகார் கொடுத்தீர்கள். அந்த அளவிற்கு என் மீது பயம். என்னையும், அமைச்சர் தங்கமணி மீதும் ஏன் புகார் சொல்கிறீர்கள் என்று அனைவருக்கும் தெரியும். இன்றைக்கு இந்த கட்சி ஏதோ சூழ்நிலையில் இரண்டாக பிரிந்தது.

    நானும், தங்கமணியும் இரு சகோதரர்கள் போன்று செயல்பட்டு இந்த கட்சி சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கிறோம். இந்த ஆட்சியை எப்படியாவது கலைத்து விட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். இந்த ஆட்சி 10 நாளில் போய் விடும். ஒரு மாதத்தில், 2 மாதத்தில் போய்விடும் என்று சொன்னார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒரு ஆண்டை தாண்டி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டல விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அவர் ஒன்றும் வாரிசு அடிப்படையில் முதல்-அமைச்சர் ஆகிவிடவில்லை. சாதாரண அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து மேலே வந்தவர். டி.டி.வி. தினகரன் போன்று புறவாசல் வழியாக வரவில்லை.

    மத்தியில் தி.மு.க. ஆட்சியில் இருந்த போது தமிழகத்துக்காக என்ன செய்தீர்கள். கோவை மாவட்டம் 50 ஆண்டு கால வளர்ச்சியை கண்டுள்ளது. கோவை மாவட்டத்திற்காக என்ன திட்டங்கள் கேட்டாலும் முதல்- அமைச்சர் செய்து கொடுக்கிறார். நான் அமைச்சர், அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன். மு.க.ஸ்டாலின் உங்கள் எதிர்க்கட்சி தலைவர் பதவி, தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுங்கள். நீங்கள் சொன்ன குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் என்று சொன்னேன். ஆனால் அதற்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்லவில்லை.

    தி.மு.க. ஆட்சியில் தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு. அப்போது தமிழகத்தில் தொழில்கள் முடங்கின. தமிழகத்தில் உள்ள தொழில் அதிபர்களுக்கு தி.மு.க. கொடுத்தது மின்வெட்டு மட்டும் தான். ஆனால் மின்வெட்டை சரி செய்தது ஜெயலலிதா அரசு.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நெத்தியடி நாகையன், எம்.பி.க்கள் ஏ.கே.செல்வராஜ், மகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம் உள்பட கட்சி நிர்வாகிள் பலர் கலந்து கொண்டனர்.
    ஈழத்தமிழர் படுகொலைக்கு துணை போன தி.மு.க.வுக்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது என்று அமைச்சர் உதயகுமார் பேசினார்.
    மதுரை:

    இலங்கையில் நடந்த போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் மதுரையில் நடந்தது.

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஜெயலலிதா பேரவை செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றினார்.

    அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தபோது எல்லாம் மக்கள் விரோத ஆட்சி நடத்துவது தி.மு.க. தமிழகத்தை சூறையாடிய இந்த கட்சியை மக்களும் புறக்கணித்து எம்.ஜி.ஆரை முதல்வராக்கினார்கள். எம்.ஜி.ஆர். இருக்கும் வரை கருணாநிதியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

    இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிளுக்கு பல்வேறு உதவிகளை செய்தார் எம்.ஜி.ஆர்.

    ஆனால் கருணாநிதி விடுதலைப்புலிகளை காட்டிக் கொடுத்தார். இறுதிக்கட்ட போரில் உண்ணாவிரத நாடகம் நடத்தி பல ஆயிரம் அப்பாவி மக்கள், குழந்தைகள் படுகொலைக்கு காரணமாக இருந்த கட்சி தி.மு.க.

    இப்போது உத்தமர் வேடம் போடுகிறார்கள். மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தளபதியாக இருக்கிறார். அவர் அ.தி.மு.க. அரசை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார். புலியாக இருந்த கருணாநிதியாலேயே முடியவில்லை. பூனையாக இருக்கும் ஸ்டாலினால் அ.திமு.க.வை ஒன்றும் செய்ய முடியாது.

    ஊழல் செய்து ஆசியாவில் முதல் பணக்காரர் இடத்தை பிடித்தது யார்? என்று தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே ஊழல் பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. யார் ஊழல்வாதி என்று நிரூபிக்க ஒரே மேடையில் விவாதிக்க தயார்.

    எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். தினகரன் எங்களுக்கு எதிரி கிடையாது. இதனை வருகிற இடைத்தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    தமிழகம் முழுவதும் தி.மு.க.-காங்கிரஸ் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தை தோலுரித்துக் காட்டும் வகையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    கருணாநிதி நடத்திய உண்ணாவிரத நாடகத்தில் அப்பாவி குழந்தைகள் கூட இலங்கையில் கொல்லப்பட்டனர்.

    அப்பாவி தமிழர்கள் கொலைக்கு தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அரசு முழு உதவி செய்தது என்று இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறி உள்ளார்.

    எனவே தான் போர் குற்றவாளிகளாக நிறுத்தி இந்த கட்சியினரை தண்டிக்க வேண்டும் என்று கூறுகிறோம்.

    அ.தி.மு.க. அரசை வீழ்த்திவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவர் கூறும் குற்றங்களுக்கு எந்த முகாந்தரமும் இருக்கிறதா? என்றால் இல்லை.

    தமிழக மக்களை ஏமாற்றி பலகோடி சொத்துக்களை குவித்தது யார்? என்பது எல்லாருக்கும் தெரியும். எனவே உத்தமர் வேடம் போடுவதை தி.மு.க. நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    ஊழல் பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஈழத்தமிழர் படுகொலைக்கு துணை போன தி.மு.க.வை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். மன்னிப்பே கிடையாது.

    இதற்கு ஒரு வாய்ப்பாக திருப்பரங்குன்றம் மக்கள் விரைவில் தி.மு.க.வுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம். எல்.ஏ. பேசியதாவது:-

    ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினரை தண்டிக்க வேண்டும் என்பது தான் உலகத் தமிழர்களின் கோரிக்கையாகும்.

    தி.மு.க. வீழ்கிற கட்சி. இனி அது ஒருபோதும் மக்கள் மன்றத்தில் வெற்றி பெற முடியாது. கட்சி தொண்டர்கள் எல்லாம் முதல்வராகி விட வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அது போல நம்மை விட்டு பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கிய ஒருவர் ஆர்.கே.நகரில் சுயேட்சையாக வெற்றி பெற்றார். இதனால் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று கனவு காண்கிறார். அது ஒருபோதும் நடக்காது.

    எத்தனை பேர் கட்சி தொடங்கினாலும் அவர்கள் நிலைமை எப்படி முடிந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

    அது போல தான் புதிதாக கட்சி தொடங்கியவர்களையும் மக்கள் புறக்கணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் துரைப் பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எல்.ஏ.க்கள் சரவணன், பெரிய புள்ளான், நீதிபதி, மாணிக்கம், கோபால கிருஷ்ணன் எம்.பி., திரவியம், எம்.எஸ்.பாண்டியன், சாலைமுத்து, வெற்றிவேல், பரவை ராஜா, சோலைராஜா, புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், நிர்வாகிகள் மாரிச்சாமி, கருப்புசாமி, கே.வி.கே. கண்ணன், பிரிட்டோ முத்துவேல், ஏ.பி.பாலசுப்பிரமணி, முத்துக்குமார், முனியாண்டி, முத்து ராமலிங்கம், கலைச் செல்வம், அபுதாகீர், ஐ.பி. எஸ்.பாலமுருகன், திருநகர் குமார், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    எங்களை சீண்டிப் பார்த்தால் தி.மு.க.வின் ஊழல்களை வெளிப்படுத்துவோம் என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். #TNMinister #RajendraBalaji #ADMK #DMK
    விருதுநகர்:

    இலங்கை தமிழர் படுகொலையில் கூட்டணி அரசாக இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரசை தண்டிக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக விருதுநகரில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி, திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், ராதாகிருஷ்ணன் எம்பி, சந்திரபிரபா எம்.எல்.ஏ. தலைமை கழக பேச்சாளர் முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    அமைச்சர் கே.டி.ராஜேந் திர பாலாஜி பேசியதாவது:-

    இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க., காங்கிரஸ் செய்த துரோகங்களை நாங்கள் பட்டியலிட்டு பிட் நோட்டீஸ் அடித்து பொதுமக்களுக்கு வழங்கியுள்ளோம். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சி இருக்காது இயங்காது என்று எண்ணியவர்களின் கனவு நிறைவேறவில்லை.

    அ.தி.மு.க.வில் பிளவு என்பது போல் ஒரு மாயத்தோற்றத்தை தி.மு.க.வினர் பேசி வருகின்றனர். ஆனால் தி.மு.க. வில்தான் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    எங்கள் மீது வீண் பழியை சுமத்தினால் நாங்கள் எப்படி சும்மா இருப்போம். நாங்கள் விசிலடித்து கட்சிக்கு வந்தவர்கள். எங்களை சீண்டி பார்த்தால் உங்கள் ஊழல், துரோகங்களை கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களிடம் எடுத்து சொல்வோம்.

    2 லட்சம் இலங்கை தமிழர்களை சுட்டுக்கொன்றது இலங்கை ராணுவம். அதற்கு உதவி செய்த அரசு அன்றைக்கு இருந்த காங்கிரஸ், தி.மு.க. அரசு. கருணாநிதி நினைத்திருந்தால் இலங்கை தமிழர்களை காப்பாற்றி இருக்க முடியும். காங்கிரஸ் ஆட்சிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று கருணாநிதி கூறியிருந்தால் ஈழத்தில் தமிழர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள்.

    தி.மு.க.வின் தமிழின துரோகத்தை தலைமுறைக்கும் தமிழக மக்கள் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டார்கள். இதனை மறைக்கும் விதமாக அ.தி.மு.க. ஆட்சி மீது ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு கூறிவருகிறார்.

    எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்ல தி.மு.க.விற்கு எந்த யோக்கியதையும் கிடையாது.

    இந்திய வரலாற்றில் ஊழலுக்கு ஆட்சி கலைக்கப்பட்டது என்று சொன்னால் அது தி.மு.க. ஆட்சிதான் என்பது அனைவருக்கும் தெரியும். இதை யாராலும் மறுக்க முடியுமா? எங்களை விமர்சனம் செய்ய ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது.

    ஆர்.கே.நகர் போன்று திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் நாங்கள் ஏமாற மாட்டோம். ஏமாற்ற விடவும் மாட்டோம். திருப்பரங்குன்றம், திருவாரூரில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

    அ.தி.மு.க.வின் பேஸ் மட்டம் வெயிட்டாக உள்ளது. பில்டிங்கில் ஒரு கிராஸ் அடிக்கும். அதை நாங்கள் சரி செய்து விடுவோம். தி.மு.க.வில் பில்டிங் நன்றாக இருந்தாலும் பேஸ்மட்டம் மிகவும் வீக்காக உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது என்பது எங்களுக்கு கைவந்த கலை. மக்கள் எங்களுக்கு ஓட்டுப்போட தயாராக உள்ளனர். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை கூட்டிய போதிலும் தமிழகத்தில் விலைவாசி கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது.

    தமிழக முதல்வரிடம் கோயம்பேடு மார்க்கெட்டில் கருணாஸ் கடை கேட்டார். ஏலத்தில்தான் எடுக்க முடியும் என்று முதல்வர் கூறியதால் கோபப்பட்டு ஆட்சிக்கு எதிராக பேச ஆரம்பித்து விட்டார். தமிழக மக்கள் என்றும் அ.தி.மு.க. அரசிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #RajendraBalaji #ADMK #DMK
    இலங்கை தமிழர்களின் படுகொலைக்கு காரணமான தி.மு.க-காங்கிரஸ் சர்வதேச குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #ADMK #Jayakumar
    சென்னை:

    இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமாக இருந்த திமுக, காங்கிரசை கண்டித்து நடந்த சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொளத்தூரில் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜயகுமார் எம்.பி. ஜெய வர்த்தன் எம்.பி., நட்ராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

    அமைச்சர் ஜெயக்குமார், கோகுல இந்திரா, மருது அழகு ராம், நடிகர் அஜய் ரத்தினம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    வங்ககடலில் இருந்து ஒரு சொம்பு நீர் எடுத்தால் வற்றிவிடுமா? அ.தி.மு.க. என்றுமே பிளவுபடாது.

    இலங்கையில் இனப் படுகொலை நடைபெற்ற போது ஆட்சியில் இருந்தது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தான், தி.மு.க. தலைவர் கருணாநிதி குடும்பம் வளம் பெறும் துறைகளை பெற்று ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரக் குடும்பமாக உள்ளது.

    ஒவ்வொரு தமிழர்களும் அழுது, வேதனையை சொல்ல முடியாமல் தவித்தது. அப்போது ஸ்டண்ட் அடித்தது தி.மு.க. வித்தைகள் காட்டுவதிலும் சிறந்தது உலகிலேயே தி.மு.க. தான், பச்சோந்தி போல அவ்வப்போது நிறத்தை மாற்றிக்கொள்ளும் கட்சி தி.மு.க.


    கருணாநிதி அன்றைக்கு முதல்வராக இருந்த போது தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி ஏன் என்று கேட்கவில்லை. குடும்பத்திற்காக இலாகாக்களை பேசினார்கள் தமிழினத்தினை காக்கவில்லை.

    டெல்லியில் ராஜபக்சே பேட்டியில் தெளிவாக சொல்லிவிட்டார். இனப் படுகொலையை இந்திய அரசின் துணையோடு நடத்தியதாக கூறிவிட்டார். இதற்கு அன்று ஆட்சியில் இருந்த தி.மு.க-காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டும்.

    தி.மு.க.-காங்கிரஸ் சர்வதேச குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #Jayakumar #DMK #Congress #Karunanidhi
    டி.டி.வி. தினகரனுக்கு துணிவு இருந்தால் சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டையில் நின்று வென்று காட்டட்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார். #ADMK #TNMinister #Vijayabaskar #TTVDhinakaran
    புதுக்கோட்டை:

    இலங்கை தமிழர் படுகொலையில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பங்கேற்று பேசியதாவது:-

    இலங்கையில் இறுதி கட்ட போரின் போது அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்க அப்போதைய காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி மத்திய அரசு உதவி செய்ததாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். எனவே ஐ.நா. சபை தி.மு.க- காங்கிரஸ் கட்சிகளை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்.

    மேலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இருந்தே விலகவேண்டும்.

    டி.டி.வி.தினகரன் பணத்தை கொண்டு எதையும் வாங்கி விடலாம் என்று நினைக்கிறார். பணத்தை கொடுத்து தான் கூட்டங்களை கூட்டி வருகிறார். தினகரனுக்கு துணிவு இருந்தால் சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டையில் நின்று பார்க்கட்டும். நானும் நிற்கிறேன். என்னை வென்று காட்டட்டும்.

    பதவி வெறியில் தினகரன் உள்ளார். இரட்டை இலை இருக்கும் இடத்தில்தான் அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டன் இருப்பான். ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டவர் தினகரன். அவர் சசிகலாவின் விசுவாசி அல்ல. சசிகலா புஷ்பாவின் உண்மையான விசுவாசியாக உள்ளார்.


    ஆர்.கே.நகர் தேர்தலில் சசிகலா படத்தை போட வேண்டாம் என்று கூறியவர் அவர்தான். ஆர்.கே.நகர் தேர்தலில் அவருக்கு வேலை செய்ததால்தான் எனக்கு இவ்வளவு பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது. நான் பிரச்சனைகளை கண்டு பயப்படவில்லை. அதை எதிர் கொண்டு வெற்றி பெறுவேன்.

    அ.தி.மு.க.வை விமர்சனம் செய்வதற்கு தகுதி வேண்டும். அது தி.மு.க.விற்கு கிடையாது. தி.மு.க.வோடு நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார். யார் ஆட்சியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று நான் விவாதிக்க தயார். 10 ஆண்டு காலம் பதுங்கு குழியில் இருந்தவர் தான் தினகரன். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பார்க்கிறார். தினகரன் வைத்துள்ள வி‌ஷமே அவருக்கு வினையாக முடியும்.

    அ.தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் தி.மு.க.வாக இருந்தாலும் சரி, தினகரனாக இருந்தாலும் சரி. நெல்லிக்காய் மூட்டையை போன்று சிதறி ஓடி விடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Vijayabaskar #TTVDhinakaran
    ×