என் மலர்
நீங்கள் தேடியது "killedபலி"
நெல்லையை அடுத்த வேப்பங்குளம் மணி நகரை சேர்ந்தவர் பெருமாள். அதே பகுதியை சேர்ந்தவர் சப்பாணி.
இவர்களது 9 ஆடுகள் மற்றும் சத்திரம் புதுகுளத்தை சேர்ந்த சந்தனராஜ் என்பவருக்கு சொந்தமான 6 மாடுகள் ஆகியவை சத்திரம் புதுக்குளம் பகுதியில் உள்ள கோபால்(65) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.
இந்நிலையில் அவை அனைத்தும் திடீரென வாயில் நுரை தள்ளி அடுத்தடுத்து மயங்கி விழுந்தன. இதில் 9 ஆடுகளும் இறந்துவிட்டன. 6 மாடுகள் மயக்கம் அடைந்தன.
அதனை கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவை விஷம் கலந்த செடிகளை தின்றது தெரியவந்தது. இதுதொடர்பாக கால்நடைகளின் உரிமையாளர்கள் தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலிடம் விசாரித்தனர். அதில், வயலில் உளுந்து சாகுபடி செய்திருந்ததை கால்நடைகள் அவ்வப்போது புகுந்து நாசமாக்கியதால் அரிசியுடன் குருனை மருந்தை கலக்கி செடிகளில் தெளித்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
- அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
- இதுகுறித்து அம்மாபேட்டை போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் அடுத்துள்ள சாணத்திகல்மேட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி சிவகாமி (50). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். சிவகாமி இரவு தனது வீட்டின் அருகே ரோட்டை கடந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் எதிர்பாராத விதமாக சிவகாமி மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. அருகில் இருந்தவர்கள் சிவகாமியை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவகாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மின்சாரம் தாக்கி டாஸ்மாக் ஊழியர் பலியானார்.
- இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே வையத்தான் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு தர்மலிங்கம் (வயது45).இவர் சோழவந்தான் அருகே நகரி டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை தனது விவசாய தோட்டத்தில் மின்மோட்டரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த விக்கிரமங்கலம் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பலியான அன்பு தர்மலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலியான டாஸ்மாக் ஊழியருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், சசிதரன், ராகவி என்ற குழந்தைகளும் உள்ளனர்.
- பெருந்துறை அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் தலையில் பலத்த அடிபட்டு பலியானார்.
- இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
சித்தோடு ராயபாளையம்புதூர் கோர்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 52). இவர் நேற்று மாலை பெருந்துறை வந்துவிட்டு சித்தோடு செல்வதற்காக தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
பவானி ரோடு எருகாட்டுவலசு அருகே சென்று கொண்டிருந்த போது மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூச்சு பேச்சின்றி கிடந்தார்.
உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- நகைக்காக 2 ெபண்கள் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
- சுமார் 6 பவுன் நகைகளை காணவில்லை
அரியலூர்
நகைக்காக பெண்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஜெயங்கொண்டம் அருகே மலர்விழி, கண்ணகி என 2 பெண்கள் கொலை செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலை செய்யப்பட்ட மலர்விழி மற்றும் கண்ணகி ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 பவுன் நகைகளை காணவில்லை என்பது தெரியவந்தது. இதனால் நகைகளுக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- கல் குவாரி எந்திரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்
- துண்டு சிக்கியதால் நடந்த சம்பவம்
கரூர்
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் சிங் (வயது 30) இவர், கரூர் மாவட்டம், தென்னிலையில் தங்கி, அதே பகு தியில் உள்ள, தனியார் கல் குவாரியில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று கல் குவாரியில் உள்ள, இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ஜஸ்டின் சிங் போட்டிருந்த துண்டு எந்திரத்தில் சிக்கி, அவரையும் சேர்த்து இழுத்தது. இதில், தலையில் பலத்த காய மடைந்த ஜஸ்டின் சிங், சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென் னிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பைக் மோதி பெண் பலியானார்
- நடந்து சென்றபோது விபரீதம்
கரூர்
கரூர் மாவட்டம், முத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி பேச்சியம்மாள், (வயது50). கூலி தொழி லாளியான இவர், கரூர் உழவர் சந்தை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர், காத்தப்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (27) என்பவர் ஓட்டி வந்த, பைக், பேச்சியம்மாள் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த பேச்சியம்மாளை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பேச்சியம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாரி மோதி விவசாயி பலியானார்
- இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து
அரியலூர்:
அரியலூர் அருகேயுள்ள காட்டுப்பிரிங்கியம், அய்யா நகரை சேர்ந்தவர் ராஜாங்கம்(65). விவசாயியான இவர், தனது இரண்டாவது மனைவி பச்சையம்மாளை, இரு சக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு , பாலக்கரை அருகேயுள்ள கடலை கொல்லைக்கு சென்றார். அங்கு பணியை முடித்துவிட்டு அன்றிரவு இருவரும் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது பெரியநாகலூர், பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, பின்னால் சுண்ணாம்புக் கல் ஏற்றி வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இதில் ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதையறிந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள், லாரி கண்ணாடிகளை உடைத்து, தீவைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு கயர்லாபாத் போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முற்பட்டனர். ஆனால் பொதுமக்கள் உடலை கொடுக்காமல் , லாரிகளை இவ்வழியே இயக்கக் கூடாது என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






