என் மலர்
நீங்கள் தேடியது "ADMK"
- தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது இன்றைய ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு.
- தமிழ்நாட்டின் அமைதி நிலை திரும்ப, இந்த திமுக ஆட்சியை முடிவுகட்ட வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழகத்தில் உள்ள திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 பயங்கரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
கொலை, கொள்ளை என்பதையெல்லாம் தாண்டி, பயங்கரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது இன்றைய ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு.
ஏற்கனவே 2022-ல் கோவையில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது, தமிழ்நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதை ஒப்புக்கொள்ளாமல், "சிலிண்டர் வெடிப்பு" என சமாளிக்கவே முயன்றது இந்த விடியா திமுக அரசு.
தொடர்ந்து பயங்கரவாதிகள் கைது என்பது தமிழகத்தில் மத்திய அரசின் NIA போன்ற அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இங்குள்ள மாநில அரசு இதனைத் தடுக்க என்ன செய்தது?
டெல்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை திமுக அரசின் ATS (Anti Terrorism Squad) என்ன செய்துகொண்டு இருந்தது?
இந்த கையாலாகாத ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியைத் தொடர விட்டால், 1998 போல மீண்டும் ஒரு கோரச் சம்பவத்திற்கு கூட வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் தான் மக்களிடையே இருக்கிறது.
எனவே, தமிழ்நாட்டின் அமைதி நிலை திரும்ப, இந்த திமுக ஆட்சியை முடிவுகட்ட வேண்டும்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அதிமுகவிற்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சி திமுகதான்.
- எங்களுக்கு எதிரி திமுக, இதுதான் கள நிலவரம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:-
தவெகவைப்பற்றி யாரும் கண்டுகொள்வது கிடையாது, களத்தில் அதிமுகதான்; எங்களுக்கு எதிரி திமுக, இதுதான் கள நிலவரம்.
அதிமுகவிற்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சி திமுகதான். எடப்பாடி பழனிசாமியிலான தலைமையிலான கூட்டணியும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியும் களத்தில் நிற்கும்;
தவெக என்பது பரிதாபத்திற்குரிய கட்சியாக இந்த தேர்தலோடு முடிந்து விடும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திமுக ஆட்சி பொறுப்பேற்று 5 ஆண்டு நிறைவு பெறுகிறது.
- இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கிய துரோகி ஸ்டாலின்.
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணத்தில் நேற்று 183வது தொகுதியாக அம்பத்தூரில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் முக ஸ்டாலின், மதுரையில் பேசியபோது எடப்பாடி பழனிசாமி துரோகி என்று கூறியுள்ளார். யார் துரோகி? ஸ்டாலின் தான் துரோகி. திமுக ஆட்சி பொறுப்பேற்று 5 ஆண்டு நிறைவு பெறுகிறது.
மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? 5 ஆண்டில் போதை பொருள் விற்பனை அதிகரிப்பு, மிக எளிதில் கிடைக்கும் கஞ்சா என பட்டியல் நீள்கிறது.
இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கிய துரோகி ஸ்டாலின். நம் பிள்ளைகளை சீரழித்தவர் ஸ்டாலின். போதைப் பொருள் விற்பதே திமுக தான்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மதுரையில் நடந்த திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியபோது,"மத்திய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை. கோரிக்கை வைக்க கூட முடியாத துணிச்சல் இல்லாத துரோகி இபிஎஸ்" என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசி உள்ளார்.
- அந்தந்த பகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தலை சந்திப்பதற்கு ஆயத்தமாகி உள்ளார். தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசி உள்ளார்.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளார்.
திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி, அம்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு சேர்த்து அம்பத்தூரில் இன்று மாலை 5 மணியளவில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாதவரத்தில் நாளை (22-ந்தேதி) மாலை 4 மணியளவில் பிரசாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி மாலை 5 மணி அளவில் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பேசுகிறார்.
அதன்பிறகு வருகிற 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் திருவள்ளூர் மத்திய மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
25-ந்தேதி (புதன்கிழமை) மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய தொகுதிகளுக்கும் சேர்த்து மதுரவாயல் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டப வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
26-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம், பல்லாவரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மாலை 4.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இப்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 8 சட்டமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வதையடுத்து மேற்கண்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. அந்தந்த பகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
- பாஜக மீதான விசுவாசம் எடப்பாடி பழனிசாமி அவர்களை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது.
- இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி உடை தரித்த வள்ளுவர் படத்துடன் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பாஜக மீதான விசுவாசம் எடப்பாடி பழனிசாமி அவர்களை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது. இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார் என்று கூறியுள்ளார்.
- தி.மு.க.வை பொறுத்தவரை இந்த முறை ஜெயிக்கப்போவதில்லை என்பது தெரிந்துவிட்டது.
- அ.தி.மு.க.- பா.ஜ.க. அலையில் சிக்கி தி.மு.க. காணாமல் போகும்.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது பற்றி பா.ஜ.க. நிர்வாகி நடிகை குஷ்பு கூறியதாவது:-
கேப்டன் விஜயகாந்த் தன் வாழ்நாளில் அறிவாலய வாசலை கூட மிதிக்காதவர். யாராவது அழைக்கமாட்டார்களா என்று காத்திருந்து வேறு வழியில்லாமல் பிரேமலதா தி.மு.க.வுடன் இணைந்துள்ளார். அவரது இந்த முடிவை கேப்டனின் ஆன்மா மன்னிக்காது.
தி.மு.க.வை பொறுத்தவரை இந்த முறை ஜெயிக்கப்போவதில்லை என்பது தெரிந்துவிட்டது. எனவே யார் வந்தாலும் சேர்த்து கொண்டு கரையேற முயற்சிக்கிறது.
ஆனால் இந்த முறை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அ.தி.மு.க.- பா.ஜ.க. அலையில் சிக்கி தி.மு.க. காணாமல் போகும்.
அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வெளியே போய்விட்டால் என்ன செய்வது என்ற தவிப்பில் தே.மு.தி.க.வையும் இழுத்து போட்டுள்ளார்கள்.
காங்கிரசுக்கு சூடு, சொரணை, மானம் இருந்தால் தி.மு.க. கூட்டணியை விட்டு எப்போதோ வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு அது கிடையாது.
காமராஜர் காலத்துக்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலக் கட்டத்திலும் தனியாக நிற்க முயற்சி எடுத்தது கிடையாது. கரைந்து போன அந்த கட்சி இனி எந்த காலத்திலும் கரைதேறாது என்றார்.
- தேர்தலில் போட்டியிடமாட்டோம்.
- எங்களது கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்போம்.
சென்னை:
முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஒருபுறம் அடையாள அரசியலும், மற்றொரு புறம் கொள்கை அரசியலும் சூறாவளி போல் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஒரு புதிய இயக்கத்தை நாங்கள் தொடங்குகிறோம்.
எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளோம். சாதி சமயம் மதத்தை தவிர்த்து புதிய சமுதாயத்தை அமைப்பது இந்த இயக்கத்தின் குறிக்கோள் ஆகும்.
திறமை இருந்தும் சிலருக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விடக்கூடாது என்பதற்காக, யாரும் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த இயக்கம் செயல்படும்.
சமத்துவம் சம வாய்ப்பு ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டு அறநிலை அரசியலை நாங்கள் முன்னெடுத்து செல்வோம். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது எங்களது நோக்கம் அல்ல. தேர்தலில் போட்டியிடமாட்டோம். ஆனால் எங்களது கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்போம். மக்களைத் தொடர்ந்து சந்திப்போம். சுற்றுப்பயணம் செய்வோம். விஜய்க்கு கூட்டம் கூடுவது அவரது உழைப்பும் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையும் தான்.
ஆனால் அவர் எம்.ஜி.ஆர். போல வர முடியுமா செயல்பட முடியுமா என்பதெல்லாம் இப்போது சொல்ல முடியாது. இந்தத் தேர்தலில் தி.மு.க.வுக்கும், விஜய்க்கும் தான் போட்டி. வருகின்ற 23-ந்தேதி காஞ்சிபுரத்தில் புதிய கட்சி தொடக்க விழா நடைபெறும் என்றார்.
பேட்டியின் போது பொதுச்செயலாளர் ஆர்.வி.ரஞ்சித் குமார், பிரேமலதா ரஞ்சித் குமார், ஜோதி ராமன், ஜோதி அம்மாள் உடன் இருந்தனர்.
- ஏதாவது ஒரு புதிய சாதனைத் திட்டத்தை ஸ்டாலின் கொடுத்தாரா? இல்லை!
- போட்டோ எடுத்துக் கொண்டது மட்டுமே இந்த பொம்மை முதல்வரின் ஒரே பங்களிப்பு.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில் திமுக அரசை விமர்ச்சி "தோல்வி அடைய வாழ்த்துகள்" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இபிஎஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என்ன தான் ஆச்சு இந்த பொம்மை முதல்வருக்கு?
ஆட்சிக்கு வந்து எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, திறந்ததெல்லாம் அதிமுக திட்டங்கள் மீதான ஸ்டிக்கர்கள் மட்டுமே!
இது போதாது என்று, தேர்தல் நெருங்குவதும் ஸ்டிக்கர் பித்து அதிகரித்ததோ என்னவோ, அஇஅதிமுக-வின் வரலாற்றுச் சாதனைகள் மீது ஏறி சவாரி செய்ய ஆசைப்படுகிறார் திரு. மு.க.ஸ்டாலின்.
ஏற்கனவே 7.5% திட்டம் குறித்து ஒரு வரலாற்றுப் பொய்யை நாக் கூசாமல் மருத்துவத்துறை அமைச்சர் வாயிலாக பேசியதை, நேற்று சட்டமன்றத்திலேயே தோலுரித்தேன்.
நேற்று மாலை, தனது தொடர் "ஆடியோ லாஞ்ச் மேடை அரசியலின்" அங்கமாக விளையாட்டு துறை சார்ந்த விழா ஒன்றில் மேடையேறிய பொம்மை முதல்வர், "விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீடு" திட்டத்தின் பலன்கள் மீது தனது பெயரை எழுதிக் கொள்ள முனைந்தது வேடிக்கையாக இருந்தது.
விளையாட்டு வீரர்களுக்கான அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு என்பது, 2018-ல் எனது தலைமையிலான
அதிமுக அரசு 2%-ஆக அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து விளையாட்டு வீரர்கள் அளித்த விழாவில், இந்த இட ஒதுக்கீட்டை 3%-ஆக உயர்த்தி நான் அறிவித்தேன்.
அதன் பிறகு, 2020-ல் கொரோனா பெருந்தொற்றுக் காலம், 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.
இதில் ஸ்டாலின் செய்தது என என்ன இருக்கிறது? பணி ஆணைகள் கொடுப்பது போல் போட்டோ எடுத்துக் கொண்டது மட்டுமே இந்த பொம்மை முதல்வரின் ஒரே பங்களிப்பு.
7.5% மருத்துவ உள் இடஒதுக்கீடு ஆகட்டும், 3% விளையாட்டு வீரர்களுக்கான ஆகட்டும்- நான் அரசுப்பள்ளியில் படித்தவன், விளையாட்டு வீரர்களின் உணர்வுகளைப் புரிந்தவன் என்ற முறையில், அவர்களுக்காக பார்த்துப் பார்த்துச் செய்த சாதனைத் திட்டங்கள். இதெல்லாம் ஸ்டாலின் போன்றோருக்கு எப்படி புரியும்? இப்படி ஏதாவது ஒரு புதிய சாதனைத் திட்டத்தை ஸ்டாலின் கொடுத்தாரா? இல்லை!
அதனால், இப்படி வெட்கமின்றி எங்கள் திட்டத்தின் மீது சவாரி செய்யும் எண்ணத்தை எல்லாம் கைவிட்டு, உங்கள் ஆட்சியின் சாதனைகளைக் கூறிப் பிரச்சாரம் செய்யப் பாருங்கள்.... மு.க.ஸ்டாலின்
(ஓஹ்ஹ்.. அப்படி எதுவுமே இல்லையோ..??!! சரி, தோல்வி அடைய வாழ்த்துகள்!)
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த 2016 சட்டமன்ற தேர்தல், 2019 பாராளுமன்ற தேர்தல்களில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வுக்கு எதிராக தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
- உங்கள் விருப்பப்படி எந்த கட்சியிலும் இணைந்து அரசியல் செய்யுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
மதுரை:
தி.மு.கவின் தென்மண்டல அமைப்பு செயலாளராகவும், மத்திய மந்திரியாகவும் இருந்தவர் மு.க.அழகிரி. இவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய தி.மு.க. தலைவரும், அவரது தந்தையுமான மு.கருணாநிதியால் நீக்கப்பட்டார்.
இதையடுத்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ. கவுஷ்பாட்சா, முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், முன்னாள் மண்டல தலைவர் சின்னான், முன்னாள் மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன் மற்றும் நிர்வாகிகள் எம்.எல்ராஜ், முபாரக் மந்திரி, உதயகுமார், எஸ்.ஆர்.கோபி உள்ளிட்ட 12 பேர் நீக்கப்பட்டனர். இதையடுத்து மதுரை தி.மு.க.வில் மு.க.அழகிரியின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தல், 2019 பாராளுமன்ற தேர்தல்களில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வுக்கு எதிராக தேர்தல் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் இவர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் தி.மு.க. தலைமை கட்சியில் சேர்க்க தொடர்ந்து மவுனம் சாதித்தது.
இந்த நிலையில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் கட்சி தலைமைக்கு மன்னிப்பு கடிதமும் அனுப்பினர். மேலும் தலைமை கழக நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்தும் தங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தனர். ஆனாலும் இவர்களை மீண்டும் தி.மு.க.வில் சேர்க்க முட்டுக்கட்டை நீடித்து வந்தது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க. வுக்கு எதிரான நிலைப்பாட்டை நிறுத்தி வைத்தனர். எந்த கட்சிக்கும் அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவில்லை.
இதையடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனாலும் அவர்களது ஆசை நிராசையாகவே இருந்து வந்தது. தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இனியும் பொறுமை காப்பது தங்களது அரசியல் வாழ்வுக்கு பாதகமாக அமைந்து விடும் என கருதிய அவர்கள் மு.க.அழகிரியிடம் இதுதொடர்பாக விவாதித்ததாக கூறப்படுகிறது.
நானும் உங்களை தி.மு.க. தலைமை கட்சியில் சேர்த்து கொள்ளும் என நினைத்தேன். ஆனால் நடக்கவில்லை. எனவே உங்கள் விருப்பப்படி எந்த கட்சியிலும் இணைந்து அரசியல் செய்யுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்த 17-ந்தேதி சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க. வில் இணைந்தனர்.
அப்போது பேசிய பி.எம்.மன்னன், மதுரையில் அதிருப்தியில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் விரைவில் அ.தி.மு.க.வில் சேருவார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும் வகையில் தேர்தல் பணியாற்றுவோம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து மதுரை மாவட்டத்தில் உள்ள மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மற்றும் அதிருப்தி தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோரை அ.தி.மு.கவில் சேர்க்க கட்சி தலைமை புதிய வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.
பி.எம்.மன்னனை தொடர்ந்து முன்னாள் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், மாவட்ட துணை செயலாளருமான எஸ்.ஆர்.கோபி இன்று அ.தி.மு.க.வில் இணைய இருப்பதாக தெரியவந்து உள்ளது. அவருடன் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேருகிறார்கள்.
மேலும் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தி.மு.க. அதிருப்தி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் ஆகியோரையும் திரட்டி அ.தி.மு.க.வில் சேர்க்க திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மு.க.அழகிரி ஆதரவாளர்களில் சிலர் மட்டுமே அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ள நிலையில் மீதமுள்ள நபர்களையும் தங்கள் பக்கம் இழுக்க அ.தி.மு.க. தலைமை வலை விரித்துள்ளது.
ஆனால் அவர்களில் சிலர் மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர்கள் மட்டுமின்றி தி.மு.க. தலைமை மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.வின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. ஆனாலும் அவர்களது அரசியல் எதிர்காலம் குறித்து தி.மு.க. தலைமை விரைவில் பரிசீலிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், அண்ணன் அழகிரி என்ன சொன்னாலும் நாங்கள் அவரது கண் அசைவுக்கு கட்டுப்படுவோம். அவர் யாரையும் மாற்றுக்கட்சியில் சேருங்கள் என்று சொல்லவில்லை. ஆனாலும் சிலர் தங்களது சுயதேவைகளுக்காக வேறு கட்சிகளில் சேருகிறார்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று மதுரை மக்களுக்கு நன்றாக தெரியும்.
அண்ணன் அழகிரி மீது முழுமையான நம்பிக்கை கொண்ட எங்களை போன்றோர் எந்த நிலையிலும் வேறு கட்சிக்கு செல்லமாட்டோம் என்று தெரிவித்தார்.
மு.க.அழகிரி ஆதரவாளர்களின் இருவேறு நிலைபாடுகள் காரணமாக மதுரை அரசியல் களத்தில் விறுவிறுப்பான அரங்கேற்றங்கள் நடந்து வருகின்றன.
- இலவச மடிக்கணினி, 7.5% இடஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி.
- நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு என்ன சாதித்தது.
சட்டசபையில் இலவச மடிக்கணினி, 7.5% இடஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக அவர் பேசுகையில்,
* நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு என்ன சாதித்தது.
* நீட் தேர்வை ரத்து செய்தீர்களா?
* நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
- ஆளுநர் மாளிகைக்கு முன்பாக எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. நடத்திய போராட்டத்தால் 7.5% இடஒதுக்கீடு சட்டமானது.
- 7.5% இடஒதுக்கீட்டிற்காக நாங்கள் பேசினோம் என்ற ஆதாரத்தை காட்ட சொல்லுங்கள்.
சட்டசபையில் 7.5% இடஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க. - அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அவையில் கே.பி.முனுசாமி பேசுகையில், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் சேர 7.5% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆளுநர் மாளிகைக்கு முன்பாக எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. நடத்திய போராட்டத்தால் 7.5% இடஒதுக்கீடு சட்டமானது என்று கூறினார்.
தளவாய் சுந்தரம், விஜயபாஸ்கர் உங்களுடைய இடத்திற்கு செல்லுங்கள் இல்லையென்றால் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
நடவடிக்கை எடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் உண்மைக்கு புறம்பான கருத்தை அமைச்சர் சொல்கிறார்.
7.5% இடஒதுக்கீட்டிற்காக நாங்கள் பேசினோம் என்ற ஆதாரத்தை காட்ட சொல்லுங்கள், அமைச்சர் தவறான கருத்தை பதிவு செய்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- அடிப்படை உரிமைகளை கூட மறுத்து, தாக்குதல் நடத்தியுள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
- மாற்றுத்திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நள்ளிரவில் கைது நடவடிக்கை என்ற பெயரில் திமுக அரசின் காவல்துறை மாற்றுதிறனாளிகள் என்றும் பாராமல், சென்னை முழுவதும் அலைகழித்து, வன்முறைத் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
காவல்துறையின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவரும், திமுக கூட்டணி கட்சியான
சி.பி.ஐ.எம். தமிழ்நாடு மூத்த தலைவர் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களின் மனைவியுமான திருமதி. பா. ஜான்சிராணி அவர்கள் படுகாயமைடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று, மு.க.ஸ்டாலினின் அரசு அனைத்து விதமான "கோரிக்கைக் குரல்களை" ஒடுக்க நினைப்பதுதான் திமுக-வினுடைய Fascist mentality-க்கான Proof!
ஜனநாயக விரோத, பாசிசப் போக்கைக் கொள்கையாகக் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் மீது கருணையின்றி நள்ளிரவு முழுவதும் அலைகழித்து, அடிப்படை உரிமைகளை கூட மறுத்து, தாக்குதல் நடத்தியுள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மாற்றுத்திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.






