search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "30 பேர் பலி"

    இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற சாலை விபத்துக்களில் 30 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #SrilankaAccidents
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 14-ம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்நாட்டு அரசு உள்ளூர் விடுமுறை விட்டது.

    இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துக்களில் 30 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர். குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக சுமார் ஆயிரத்து 270 பேர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 34 ஆயிரம் வாகன ஓட்டுனர்கள் மீது சாலை விதிகளை மீறியதாக புகார் பதிவாகி உள்ளது என தெரிவித்துள்ளனர்.

    இதேபோல், கொழும்பு தேசிய மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற பல்வேறுரு சாலை விபத்துக்களில் இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர் என்றும், சுமார் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். #SrilankaAccidents
    வங்கி லாக்கரில் 1.14 கிலோ ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த இலங்கை தொழிலதிபருக்கு 30 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #HeroinSeizure #ChennaiCourt #HeroinCase
    சென்னை:

    சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 2002ம் ஆண்டு சென்னையில் 44.8 கிலோ போதைப்பொருளை கைப்பற்றினர். இதில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த அசோக் குமார் 2009-ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு 11 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    அதேசமயம், 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அசோக் குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வங்கி லாக்கரில் வைத்திருந்த 1.14 கிலோ ஹெராயின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது சென்னையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அய்யப்பன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, அசோக் குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 30 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.  #HeroinSeizure #ChennaiCourt #HeroinCase
    கொளத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    மாதவரம்:

    கொளத்தூர், ஜெயராமன் நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் தயாளன். சோழிங்கநல்லூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் மாலையில் திரும்பி வந்த போது, வீட்டு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 30 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருந்தனர். இது குறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    30 ஆண்டுகளுக்கு பிறகு 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. #Oscars2019
    வாஷிங்டன்:

    ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கும் 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா வருகிற 24-ந் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது.



    யாரெல்லாம் ஆஸ்கார் விருது வாங்குகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பை போல், இந்த விழாவை தொகுத்து வழங்குவது யார் என்பதும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறும். அந்த வகையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை இந்தியாவை சேர்ந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கினார். இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை பிரபல நடிகர் கெவின் ஹார்ட் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ஓரின சேர்க்கையாளர் தொடர்பாக அவர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், தான் ஆஸ்கார் விருதுகளை தொகுத்து வழங்கப்போவதில்லை என கெவின் ஹார்ட் அறிவித்தார்.

    இந்த நிலையில், 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை ஒளிபரப்பும் ‘ஏபிசி’ நிறுவனம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #Oscars2019 
    நீலகிரி மாவட்டத்தில் 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,084 பேரை போலீசார் கைது செய்தனர். #JactoGeo
    ஊட்டி:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இருக்கும் நிலையில் அரசு பணியில் காலி இடங்களை நிரப்ப மறுப்பதோடு, சேர்க்கப்படும் பணியிடம் கூட ஒப்பந்த நியமனமாக, வெளிமுகமை நியமனமாக மாற்ற வழிவகுக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த 22-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

    நீலகிரியில் கடந்த 2 நாட்களாக ஊட்டி ஏ.டி.சி. திடல், மத்திய பஸ் நிலையம், கூடலூர் ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 4-வது நாளாக பணிக்கு செல்லாமல் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் ஒன்று கூடினர். பின்னர் நூற்றுக்கணக்கானோர் முக்கிய சாலையான ஊட்டி-குன்னூர் சாலை சந்திப்பு பகுதியில் திரண்டனர். இதனால் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

    அதனை தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். ஜாக்டோ-ஜியோ நிர்வாகி தினகரன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். போராட்டத்தை சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஆல்தொரை தொடங்கி வைத்தார்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 365 பெண்கள் உள்பட 640 பேரை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால், ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மட்டும் வந்திருந்தனர்.

    ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கியது. இப்பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்கள் தாங்களாகவே பாடங்களை படித்துக்கொண்டு இருந்தனர். பிளஸ்-2 மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து பாடங்களை படித்தனர். இதனால் வகுப்பறைகள் வெறிச்சோடி இருந்தது. ஊட்டி தலையாட்டுமந்து நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வராத காரணத்தால், 4-வது நாளாக நேற்றும் மூடப்பட்டு இருந்ததை காண முடிந்தது. சில பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்கள் சக மாணவர்களுக்கு பாடம் நடத்தினர்.

    ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 730 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நிர்வாகிகள் 58 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 143-ன் படி சட்ட விரோதமாக கூடுதல், 341-ன் படி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 4-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர்(ஜாக்டோ-ஜியோ) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, புதிய பஸ் நிலையம் வந்தனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 444 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வாறு ஊட்டி, கூடலூரில் மொத்தம் 1,084 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. #JactoGeo
    கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 18 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #JactoGeo
    கடலூர்:

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    கடலூர் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் பெருஞ்சித்திரன்(வயது 55), விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் அறிவழகன்(35), அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் நல்லூர் ஒன்றிய செய்தி தொடர்பாளர் சாஸ்தா(38), தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட பொருளாளர் தாமோதரன்(38), அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன்(52), தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் கார்த்திகேயன்(44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களை திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் போராட்டத்தை முன்னின்று நடத்தியதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகிகள் சண்முகசாமி, ஏழுமலை உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். #JactoGeo
    சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #JactoGeo
    சேலம்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    போராட்டத்தில் 4-வது நாளான நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார் நேரு கலையரங்கில் அடைத்து வைத்தனர்.

    மாலை 6 மணிக்கு மேல், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முக்கிய நபர்களை மட்டும் கைது செய்து சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்ற ஊழியர்கள் தங்களையும் கைது செய்யுமாறு கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் ஆசிரியர்களின் உறவினர்களும் கலையரங்கம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    பின்னர் இன்று அதிகாலை 1 மணியளவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகளான கோவிந்தன், சிங்கராயன், உதயகுமார், பாரி, ராஜேந்திரன், சந்திரசேகர், முத்துக்குமாரன், சுரேஷ், ராஜேஷ், ஸ்ரீராம், லெனின், லோகு உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    பின்னர் அவர்களை சேலம் ஜே.எம்.1 கோர்ட் மாஜிஸ்திரேட் செந்தில்குமார் வீட்டில் இன்று காலை ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிடுவாரா, அல்லது விடுவிப்பாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல நாமக்கல்லில் பூங்கா சாலையில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் 72 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை மாஜிஸ்திரேட் வருகிற 1-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்கள். #JactoGeo
    வடகிழக்கு சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பலியாகினர் என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. #Syria
    டமாஸ்கஸ்:

    வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப் படையினர் உதவி செய்தனர். இன்னும் சில பகுதிகளில் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஐ.எஸ். குழுவினர் மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுப்பதற்காக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், சிரியா நாட்டின் வடபகுதியில் உள்ள அலெப்போ மாகாணத்தின் மன்பிஜ் பகுதியில் பயங்கரவாதிகள் இன்று வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பரிதாபமாக பலியாகினர் என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், படுகாயம் அடைந்த பலரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    வடக்கு சிரியாவில் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் குர்து போராளிகள் வசித்து வரும் பகுதி மன்பிஜ் என்பது குறிப்பிடத்தக்கது. #Syria
    ராமேசுவரத்தில் புனரமைக்கப்பட்ட மேலும் 30 தீர்த்தங்களை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று அர்ப்பணித்தார். #TNGovernor #BanwarilalPurohit
    ராமேசுவரம்:

    புனித தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்ய நாடு முழுவதும் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் கோவிலில் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன. இங்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு அதன் பின்னர் கோவிலுக்குள் உள்ள புனித தீர்த்த கிணறுகளில் நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் ராமேசுவரத்தில் இன்னும் பல தீர்த்தங்கள் இருந்ததாக வரலாறுகள் உள்ளன. இதன் அடிப்படையில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரம் ஆராய்ச்சியில் இறங்கியது.

    இதில் 1964-ம் ஆண்டு 62 தீர்த்தங்கள் ராமேசுவரம் பகுதியில் இருந்ததாக தகவல்கள் கிடைத்தன. அதில் 30 தீர்த்தங்கள் ஜடாமகுட தீர்த்தம், தங்கச்சிமடம், மண்டபம், உப்பூர், வடகார் உள்பட பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

    இந்த 30 தீர்த்தங்களும் கடந்த சில ஆண்டுகளாக புனரமைப்பு செய்யப்பட்டு வந்தன. இந்த பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன.

    30 தீர்த்தங்கள் அடங்கிய குடத்தின் நீரை மங்களதீர்த்த தெப்பத்தில் விட்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழிபட்டார். அருகில் கலெக்டர் வீரராகவராவ் உள்ளார்.

    இதனை தொடர்ந்து 30 தீர்த்தங்களும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் வைபவம் இன்று நடைபெற்றது. தங்கச்சி மடம் அருகே உள்ள மங்கள தீர்த்தம் பகுதியில் இதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதில் பங்கேற்றார். 30 தீர்த்தங்களும் தனித்தனி குடங்களில் வைக்கப்பட்டு இருந்தன. மற்றொரு குடத்தில் 30 தீர்த்தங்களும் சேர்த்து வைக்கப்பட்டு இருந்தன. இந்த குடங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து காலை 8.10 மணிக்கு 30 தீர்த்தங்கள் அடங்கிய குடத்தின் நீரை மங்கள தீர்த்த தெப்பத்தில் கவர்னர் ஊற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் வீரராகவராவ் மற்றும் அதிகாரிகள், அறநிலையத்துறையினர், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.  #TNGovernor #BanwarilalPurohit
    வெனிசுலா அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் எதிர்க்கட்சி எம்பி மீதான குற்றம் நிரூபணமானால் அவருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது. #NicolasMaduro #JuanRequesens
    கராகஸ்:

    வெனிசுலா தலைநகர் கராகசில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி ராணுவம் மற்றும் தேசிய படைகளின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் அதிபர் நிகோலஸ் மதுரோ பங்கேற்று உரையாற்றியபோது அவரை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

    வெடிகுண்டுகளுடன் வந்த 2 ஆளில்லா விமானங்கள் வெடித்து சிதறியபோது, பாதுகாப்பு படை வீரர்கள் அதிபரை சூழந்து கொண்டு அவரை பாதுகாத்தனர். இதனால் அதிபர் மதுரோ அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். பல வீரர்கள் காயமடைந்தனர்.

    இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய சபையின் துணைத்தலைவரும், ஜஸ்டிஸ் பர்ஸ்ட் கட்சி எம்பியுமான ஜுவான் ரிகொசன்ஸ் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 20 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


    இவ்வழக்கு வரும் 18ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தாய்நாட்டைக் காட்டிக்கொடுத்தல், குற்ற சதி, பயங்கரவாதம் உள்ளிட்ட  6 பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் இந்த குற்றங்கள் நிரூபணமானால் ஜுவான் ரிகொசன்சுக்கு அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது. இத்தகவலை அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். #Venezuela #NicolasMaduro #JuanRequesens
    சிரியா நாட்டில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். #Syria #IS
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.எஸ். குழுவினரும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். இவர்களை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    சிரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற அரசு படைகள் ஆகியவையும் போரில் இறங்கி உள்ளன. சிரியாவில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் குண்டுகளுக்கு இரையாகி உள்ளனர்.
     
    இந்நிலையில், ஈராக் எல்லை அருகே டெயிர் அல் சோர் மாகாணத்தில் வசித்து வந்தவர்கள் மீது அமெரிக்க கூட்டுப் படையினர் இன்று வான்வழி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 30 பேர் பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து அங்கு மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #Syria #IS
    மேலூர் அருகே பட்டப்பகலில் ரேசன் கடை ஊழியர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 30 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.
    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 57). இவர் வெள்ளளூரில் உள்ள கூட்டுறவு சங்க ரேசன் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று காலை சாமிநாதன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் குலதெய்வ கோவிலுக்கு சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் பட்டப்பகலில் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 30 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

    கோவிலுக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய சாமிநாதன் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசு வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    ×