என் மலர்
நீங்கள் தேடியது "அசாம்"
- அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்தார்.
- சுபின் கார்கின் இசைக்குழு உறுப்பினர் சேகர் ஜோதி கோஸ்வாமி மற்றும் சக பாடகர் அமிர்தபர்வ மஹந்தா உட்பட நான்கு பேரை அசாம் போலீசார் கைது செய்தனர்.
அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த சுபீன் கார்க்.
கடந்த செப்டம்பர் 19 அன்று சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் செய்யும்போது சுபின் உயிரிழந்தார். இருப்பினும் அவரின் இறப்பில் மர்மம் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக விசாரணை செய்ய அசாம் அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சுபின் கார்கின் இசைக்குழு உறுப்பினர் சேகர் ஜோதி கோஸ்வாமி மற்றும் சக பாடகர் அமிர்தபர்வ மஹந்தா உட்பட நான்கு பேரை அசாம் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே ஜூபீன் கார்க்கின் மரணம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி சட்டமன்றத்தில் தீர்மானத்தை தாக்கல் செய்தது.
அப்போது பேசிய அசாமில் ஆளும் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இது ஒரு தற்செயலான சம்பவம் அல்ல, மாறாக ஒரு கொலை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் சுபின் கார்க் மரணத்தில் சந்தேகம் இல்லை என சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- 12 மாநிலங்களுக்கு அறிவிக்கப்படும்போது அசாம் மாநிலத்திற்கு மட்டும் அறிவிக்கப்படவில்லை.
- தற்போது அசாமில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்பட 12 மாநிலங்களில் SIR மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஒரு மாதத்திற்குள் வாக்காளர்கள் SIR படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதேவேளையில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கும் அசாம் மாநிலத்தில் ஏன் SIR பணி மேற்கொள்ள உத்தரவிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் சிறப்பு திருத்தம் (Special Revision) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வீடு வீடாக சென்று நவம்பர் 22-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை வாக்காளர்கள் பெயர் சரிபார்க்கப்படும். டிசம்பர் 27-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 10-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.
- 33 ஆயிரம் நியாய விலைக்கடைகளில் இந்த திட்டம் தொடங்கியது.
- 2.45 கோடி பேர் இந்த திட்டத்தால் பயனடைவர்.
மானிய விலையில் பருப்பு, சர்க்கரை, உப்பு வழங்கும் திட்டத்தை அசாம் மாநில அரசு இன்று தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் "மைசூர் பருப்பு ஒரு கிலோ 68 ரூபாய், சர்க்கரை ஒரு கிலோ 38 ரூபாய், உப்பு ஒரு கிலோ 10 ரூபாய். இது சாத்தியமா? ஆம். அசாமில் இது சாத்தியம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இந்த விலை ஜனவரி மாதத்தில் இருந்து மேலும் குறையும் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்தியோதயா என்பது எங்களுடைய இலக்கு. நோக்கம். ரேசன் கார்டு வைத்திருப்பவர்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்காக நாங்கள் புதிய அளவு கோலை உருவாக்கியுள்ளோம். 100 ரூபாய்க்கு ஒரு கிலோ பருப்பு, சர்க்கரை, உப்பு கிடைக்கும். இவைகள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
33 ஆயிரம் நியாய விலைக்கடையில் இந்த திட்டம் தொடங்கியது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள் இந்த தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 2.45 கோடி பேர் இந்த திட்டத்தால் பயனடைவர் என அரசு தெரிவித்துள்ளது.
நவம்பர், டிசம்பர் மாதத்தில் ஒரு கிலோ மைசூர் பருப்பு ரூபாய் 69-க்கும், சர்க்கரை ரூபாய் 38-க்கும், உப்பு ரூபாய் 10-க்கும் வாங்கிக் கொள்ள முடியும். ஜனவரி மாதத்தில் இருந்து ஒரு கிலோ மைசூர் பருப்பு ரூபாய் 60-க்கும், சர்க்கரை ரூபாய் 30-க்கும், உப்பு ரூபாய் 10-க்கும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சமாதியில் பிரார்த்தனை செய்தாலும் அமைதி இருக்காது.
- சட்டவிரோத மியாக்கள் நான் முதல்வராக இருக்கும்வரை பதற்றத்தை கொண்டிருக்க வேண்டும்.
அசாம் மாநில முதல்வராக இருக்கும் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, மாநிலம் முழுவதும் ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தும் பணி தொடரும், நான் முதல்வராக இருக்கும் வரை மியாக்கள் நிம்மதியாக இருக்க முடியாது.
இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில் "வெளியேற்றுதல் தொடரும். இன்று கூட பிஸ்வானாத் மாவட்டத்தில் உள்ள பெஹாலி பகுதியில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நான் முதல்வராக இருக்கும் வரை, சட்டவிரோத மியாக்கள் அமைதியாக இருக்க முடியாது.
சமாதியில் பிரார்த்தனை செய்தாலும் அமைதி இருக்காது. சட்டவிரோத மியாக்கள் நான் முதல்வராக இருக்கும்வரை பதற்றத்தில் இருக்க வேண்டும். நான் அங்கு இல்லையென்றால், அது வேறு விஷயம்.
நவம்பர் 25ஆம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரின்போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்வது தடை என்ற புதிய சட்டசம் கொண்டு வரப்பட இருக்கிறது. யாராவது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தால் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்" என்றார்.
மியா என்பது அசாமில் பெங்கால் மொழி பேசும் முஸ்லிம்களை அழைக்கும் இழிவான சொல். பெங்காலி பேசாத முஸ்லிம்கள் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியர்கள் என பொதுவாக அடையாளம் காணப்படுகின்றன.
- செப்டம்பர் 19 அன்று சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் செய்யும்போது சுபின் உயிரிழந்தார்.
- இந்தப் படத்தின் கதயநாயனான சுபீன், பார்வையற்றவராக நடித்துள்ளார்.
மறைந்த அசாம் பாடகரும் இசையமைப்பாளருமான சுபீன் கார்க் நடித்த கடைசி படமான 'ராய் ராய் பியன்னாலே' வெளியாகியுள்ளது.
அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் சுபீன் கார்க்.
இந்நிலையில் அவர் கடைசியாக நடித்த 'ராய் ராய் பியன்னாலே' படம் நேற்று வெளியாகிய நிலையில் முதல் நாளிலேயே அசாமிய பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஏற்கனவே ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாகவும் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் படம் திரையிடப்பட்டு வருவதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தின் கதயநாயனான சுபீன், பார்வையற்றவராக நடித்துள்ளார். இந்த படத்திற்கு அவரே இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் ரூ.50 கோடி வரை வசூல் செய்யும் என்று சினிமா வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. அசாமில் இதற்கு முன்பு வெற்றி பெற்ற பைமோன் டா, ரகுபதி மற்றும் பிதுர்பாய் போன்ற படங்கள் சுமார் ரூ.13 கோடி மட்டுமே வசூலித்துள்ளன.
செப்டம்பர் 19 அன்று சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் செய்யும்போது சுபின் உயிரிழந்தார். இருப்பினும் அவரின் இறப்பில் மர்மம் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக விசாரணை செய்ய அசாம் அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.
- நன்கு நீச்சல் தெரிந்த ஜூபின் கார்க் நீரில் மூழ்கி இறந்தது சாத்தியமில்லை என்று குற்றம் சாட்டினார்
- நெருங்கிய உறவினரான சந்தீபன் கார்க்கை அசாம் காவல்துறை கைது செய்து விசாரித்து வந்தது.
பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்த போது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.
கவுஹாத்தி அருகே கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது. மறுபுறம் கார்க்கின் மரணம் விபத்து தானா என்பது குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியும் இசைக்குழு உறுப்பினருமான சேகர் ஜோதி கோஸ்வாமி, நன்கு நீச்சல் தெரிந்த ஜூபின் கார்க் நீரில் மூழ்கி இறந்தது சாத்தியமில்லை என்று குற்றம் சாட்டினார்.
ஜூபின் கார்க் மரண வழக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி எம். பி. குப்தா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அசாம் முதல்வர் ஹிமந்த பிச்வவா சர்மா அமைத்திருந்தார்.
ஜூபின் கார்க் இசைக்குழுவை சேர்ந்த டிரம்மர் மற்றும் அவரின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மற்றும் நெருங்கிய உறவினரான சந்தீபன் கார்க்கை அசாம் காவல்துறை கைது செய்து விசாரித்து வந்தது.
ஜூபின் இசை நிகழ்ச்சியை நடத்த சிங்கப்பூர் சென்றபோது சந்தீபன் அவருடன் இருந்தார். அவர் உயிரிழந்த சமயத்திலும் சந்தீபனும் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜூபின் கார்க் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ஜூபின் கார்க் அவர்களின் மரணச் சூழல் குறித்து இணையத்தில் பரவி வரும் ஊகங்கள் மற்றும் தவறான தகவல்கள் குறித்து சிங்கப்பூர் காவல் படைக்கு (SPF) தெரியவந்துள்ளது. கார்க் மரண வழக்கு தற்போது சிங்கப்பூர் காவல்துறையின் விசாரணையில் உள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில், அவரது மரணத்தில் எந்தவிதமான சந்தேகப்படும்படியான சதி எதுவும் இல்லை என்று காவல்துறை கருதுகிறது. காவல்துறையின் முழுமையான விசாரணை முடிய மேலும் மூன்று மாதங்கள் வரை ஆகலாம். விசாரணை முடிந்ததும், அதன் முடிவுகள் பொதுவெளியில் வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளது.
- திருமலை திருப்பதி தேவஸ்தானபோர்டு சேர்மன் தலைமையிலான குழு அசாம் சென்றிருந்தது.
- கவுகாத்தியில் கோவில் கட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானபோர்டு சேர்மன் பி.ஆர். நாயுடு தலைமையிலான குழு நேற்று அசாம் சென்று, அம்மாநில முதல்வரான ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கட்டுவது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாக, முதலமைச்சர் அலுவலகம் செய்து வெளியிட்டுள்ளது.
- சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
- கார்க்கின் மரணம் விபத்து தானா என்பது குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.
பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்த போது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.
கவுஹாத்தி அருகே கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது. மறுபுறம் கார்க்கின் மரணம் விபத்து தானா என்பது குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.
ஜூபின் கார்க் மரண வழக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி எம். பி. குப்தா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அசாம் முதல்வர் ஹிமந்த பிச்வவா சர்மா அமைத்திருந்தார்.
இந்நிலையில், ஜுபின் கார்க்கின் மர்ம மரணம் குறித்து கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சைகியா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.
ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் அல்லது வீடியோக்கள் எவரிடமேனும் இருந்தால், அதனை அவர்கள் ஆணையத்தின் முன் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
- அசாம் முதல்வர் ஹிமந்த பிச்வவா சர்மா அமைத்திருந்தார்.
பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.
கவுஹாத்தி அருகே கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது.
மறுபுறம் கார்க்கின் மரணம் விபத்து தானா என்பது குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.
ஜூபின் கார்க் மரண வழக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி எம். பி. குப்தா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அசாம் முதல்வர் ஹிமந்த பிச்வவா சர்மா அமைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஜூபினின் நண்பரும் இசைக்கலைஞருமான சேகர் ஜோதி கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். ஜுபீனின் இசைக்குழுவில் டிரம்மராக சேகர் இருந்து வந்தார்.
சிங்கப்பூரில் ஜுபீனின் yacht படகு பயணத்தின்போது சேகர் அவருடன் இருந்தார். விசாரணைக்காக அழைக்கப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக விசாரணைக் குழு சிங்கப்பூரில் ஜூபின் பங்கேற்ற விழா ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா மற்றும் சுபீனின் மேலாளர் சித்தார்த் சர்மா ஆகியோரின் வீடுகளில் ஆய்வு செய்தது.
- 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.
- கமர்குச்சி கிராமத்தில் கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது.
பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.
கவுஹாத்தி அருகேயுள்ள கமர்குச்சி கிராமத்தில் கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது.
மறுபுறம் கார்க்கின் மரணம் விபத்து தானா என்பது குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், ஜூபின் கார்க் மரண வழக்கை விசாரிக்க உருவக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுக்கு ஐபிஎஸ் அதிகாரி எம். பி. குப்தா தலைமை வகிப்பார் என்றும், 10 அதிகாரிகள் கொண்ட இந்த குழு விரிவன விசாரணை நடத்தி அறிக்கையை அஸ்ஸாம் அரசிடம் விரைவில் தாக்கல் செய்யும் என்று அம்மநில முதல்வர் ஹிமந்த பிச்வவா சர்மா தெரிவித்தார்.
- அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்துள்ளார்.
- ஸுபீனின் உடலுக்கு 4 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.
அவரது உடல் சொந்த மாநிலமான அசாமுக்கு கொண்டுவரப்பட்டு தலைநகர் கவுகாத்தியில் இன்று இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவருக்கு இறுதி மரியாதை செலுத்த ஏராளமான மக்கள் அங்கு திரண்டு வருகின்றனர். ஸுபீனின் உடலுக்கு 4 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறுபுறம் கார்க்கின் மரணம் குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன. இதனால் ஜூபின் கார்க்கின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று தெரிவித்தார்.
மேலும் அவரது உடலுக்கு 2 வது முறையாக பிரேத பரிசோதனை நடத்தவும் அவர் உத்தரவிட்டார்.
சிங்கப்பூரில் நடந்த முதல் பிரேதப் பரிசோதனையில், அவர் நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, இரண்டாவது பிரேதப் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவர்களால் இந்த பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஹிமாந்தா தெரிவித்தார்.
கார்க்கின் உடல், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 முதல் 10 மணிக்குள் சருசஜாய் மைதானத்தில் இருந்து இறுதிப் பயணத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
மத்திய அரசு சார்பில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இறுதிச் சடங்கில் பங்கேற்பார்.
சிஐடி போலீசார் கார்க்கின் மரணம் குறித்து விசாரிக்கும். இச்சம்பவம் தொடர்பாக, நிகழ்ச்சியின் முக்கிய ஏற்பாட்டாளர் ஷியாம்கானு மஹந்தா மற்றும் கார்க்கின் மேலாளர் சித்தார்த் சர்மா ஆகியோர் மீது ஏற்கனவே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அசாமில் பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.
- ஏஐ வீடியோவை பாஜக கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அசாமில் பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அசாமில் பாஜக ஆட்சி இல்லையென்றால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று ஒரு ஏஐ வீடியோவை அம்மாநில பாஜக கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், அசாமில் பாஜக ஆட்சி இல்லையென்றால் மாட்டுக்கறி உணவு சட்டபூர்வமாக மாறும். பாகிஸ்தானுடன் தொடபுடைய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும். டீ எஸ்டேட் முழுவதும் முஸ்லிம்கள் இருப்பார்கள். கவுகாத்தி விமான நிலையம் கிரிக்கெட் மைதானத்தில் முஸ்லிம்கள் நிறைந்திருப்பார்கள். சட்டவிரோத முஸ்லிம் குடியேறிகள் நம் மாநிலத்தின் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பார்கள். அசாம் 90% இஸ்லாமிய மக்கள் கொண்ட மாநிலமாக மாறிவிடும்" என்று முஸ்லிம்கள் மீது வெறுப்பு பரப்பும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிதளவும் தயக்கமின்றி மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தும் செயலில் பாஜக ஈடுபடுவதாக அசாம் மாநில அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த கண்டனங்களை பாஜக சிறிதும் பொருட்படுத்தவில்லை. அதன் விளைவாக அசாம் மாநில பாஜக அமைச்சர் அந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






