என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • பாகிஸ்தான் அமைதியை நாடினாலும், தங்கள் தேசிய கௌரவத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கத் தயங்காது
    • பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அசிம் முனீர் தலைமையிலான இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கியது.

    பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீருக்கு ஃபீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.

    இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் மோதலில் முக்கிய முகமாக விளங்கிய அசிம் முனிர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

    பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவுடனான மோதலில் முன்மாதிரியான பங்கிற்காக முனீர் பதவி உயர்வு பெற்றதாக அரசு நடத்தும் தொலைக்காட்சி சேனல் பிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. ஃபீல்ட் மார்ஷல் என்பது ராணுவத்தின் உச்சபட்ச பதவியாக கருதப்படுகிறது. 

    பாகிஸ்தான் அமைதியை நாடினாலும், தங்கள் தேசிய கௌரவத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று அசிம் முனீர் முன்னர் தெரிவிருந்தார்.

    ராணுவ ஜெனரல் ஆவதற்கு முன்னர், முனீர் நாட்டின் உளவுத்துறை நிறுவனமான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI)-க்கு தலைமை தாங்கினார்.

    பிப்ரவரி 2019 இல் புல்வாமா தாக்குதலில் 40 CRPF வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்தன.

    நவம்பர் 2022 இல், ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவுக்குப் பதிலாக ஜெனரல் அசிம் முனீர் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.

    அசிம் முனீர் 2022 முதல் பாகிஸ்தானில் 11வது ராணுவத் தளபதியாகப் பணியாற்றி வருகிறார். நவம்பர் 2024 இல், ராணுவத் தளபதியாக அவரது பதவிக்காலம் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. சமீபத்தில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அசிம் முனீர் தலைமையிலான இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

    • பெண் தோழியை வீட்டிற்கு வரவழைத்து கற்பழித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
    • உயர்நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய நிலையில், உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

    திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த பெண் தோழியை கற்பழித்து கொடூரமாக தலையை துண்டித்து கொலை செய்த ஜாகிர் ஜாபரின் மரண தண்டனையை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளனர்.

    கடந்த 2021ஆம் ஆண்டு பாகிஸ்தான் அமெரிக்கரான ஜாகீர் ஜாபர், தனது பெண் தோழியான நூர் முகதமிடம் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். இதற்கு நூர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் பெண் தோழியை இஸ்லாமாபாத்தில் உள்ள வீட்டில் வைத்து கொடூரமாக தாக்கியதுடன் கற்பழித்துள்ளார். அதோடு விடாமல் பெண் தோழியின் கழுத்தை துண்டான வெட்டி கொலை செய்துள்ளார்.

    இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று, ஜாகிர் ஜாபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜாகிர் ஜாபர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.

    நூர் முன்னாள் தூதரின் மகள் ஆவார். ஜாகீர் ஜாபரின் பிடியில் இருந்து தொடரந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரது வீட்டில் வேலை செய்யும் இருவரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். பின்னர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது முன்கூட்டியே திட்டமிட்டது என விசாரணையின்போது ஜாகிர் ஜாபர் ஒப்புக்கொண்டார்.

    கற்பழிப்பு மற்றும் கொலை செய்த வழக்கில் ஜாபருக்கு கடந்த 2022ஆம் ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது. வீட்டு வேலைக்காரர்கள் இருவருக்கு தலா 10 வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

    • இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு தொகை விடுவிக்கப்பட்டது.
    • பாகிஸ்தானுக்கு கூடுதலாக 11 புதிய நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் விதித்தது.

    இஸ்லாமாபாத்:

    நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் கடன் வழங்க கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல் தவணையாக 110 கோடி டாலர் பாகிஸ்தானுக்கு ஏற்கனவே விடுவிக்கப்பட்டது.

    பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு 2வது தவணையாக 8,670 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக ஐ.எம்.எப். அறிவித்தது. இதற்கு நம் நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கும் முடிவை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.

    இந்நிலையில், அடுத்த தவணையை விடுவிக்க பாகிஸ்தானுக்கு கூடுதலாக 11 புதிய நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியானது. இவற்றையும் சேர்த்து மொத்த நிபந்தனைகள் 50 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த 11 நிபந்தனைகளில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான நிபந்தனை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த மே 10 ஆம் தேதி ஒப்பந்தம் மூலம் மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
    • பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காம்ரா விமானப்படை தளத்தில் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் உரையாடினார்.

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. கடந்த மே 10 ஆம் தேதி ஒப்பந்தம் மூலம் மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

    இந்நிலையில் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்  அறிவித்தார்.

    இருப்பினும், இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு காஷ்மீர் பிரச்சினையும் ஒரு நிபந்தனையாக இருக்கும் என்பதை அவர் தெரிவித்தார். பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காம்ரா விமானப்படை தளத்தில் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் உரையாடும் போது ஷெபாஸ் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்

    ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அவற்றை ஒருபோதும் பிரிக்க முடியாது என்றும் இந்தியா ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் அணுஆயுதம் குறித்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சி மேற்பார்வையிட வேண்டும்- ராஜ்நாத் சிங்.
    • பாகிஸ்தானின் திறம்பட்ட பாதுகாப்பின் விரக்தியில் இதுபோன்ற பொறுப்பற்ற கருத்தை தெரிவித்துள்ளார்- பாகிஸ்தான்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டு பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது. அத்துடன் பாகிஸ்தானுக்கு பதிலடியும் கொடுத்தது.

    பின்னர் அமெரிக்கா மத்தியஸ்தராக செயல்பட இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடரந்து பாகிஸ்தான் எல்லையில் உள்ள பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

    இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சென்றார். அங்குள்ள பாதுகாப்பு குறித்த ஆய்வு செய்தார். அப்போது மோசமான நாட்டில் அணுஆயுதம் பாதுகாப்பானதாக இருக்காது. இதனால் பாகிஸ்தானின் அணுஆயுதங்களை சர்வதேச அணுசக்தி ஏஜென்சி மேற்பார்வையிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இந்த கருத்தை பாகிஸ்தான் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் ஷஃப்காத் அலி கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பாகிஸ்தானின் திறம்பட்ட பாதுகாப்பின் விரக்தியில் இதுபோன்ற பொறுப்பற்ற கருத்தை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இந்தியா சுயமாக கூறும் "அணுஆயுத மிரட்டல்" இல்லாமலேயே, அவர்களை தடுப்பதற்கான போதுமான திறன் பாகிஸ்தானிடம் உள்ளது. அணு ஆயுதம் குறித்த கருத்து, சர்வதேச அணுசக்தி ஏஜென்சி உள்ளிட்ட ஐ.நா. சிறப்பு அமைப்புகளின் ஆணை மற்றும் பொறுப்புகள் பற்றிய அவரது அறியாமையை காட்டுகிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • உயிரிழந்த ஹபீஸ் அப்துல் ரவூஃப் என்பவர் ஒரு சாதார மனிதர்
    • ஹபீஸ் அப்துல் ரவூஃப் தொடர்பான விவரங்களை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது.

    காஷ்மீரின் பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ் தானுக்குள் புகுந்து அங்கிருந்த 9 தீவிரவாத முகாம்களை அழித்தது. இதில் தீவிரவாதிகள் யூசுப் அஸ்ஹார், அப்துல் மாலிக் ரவூப், முதாசீர் அகமது உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இவர்களது இறுதி சடங்கு பாகிஸ்தானில் உள்ள முரிட்கே பகுதியில் நடைபெற்றது. இந்த இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தின் லெப்டி னன்ட் ஜெனரல் பயாஸ் ஹூசைன், மேஜர் ஜெனரல் ராவ் இம்ரான், பிரிக்கே டியர் முகமது புர்கான், பஞ்சாப் மாகாண காவல்துறை ஆய்வாளர் ஜெனரல் உஸ்மான் அன்வர் மற்றும் மாலிக் சோஹைப் அகமது ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    இந்த இறுதி சடங்கில் அமெரிக்காவின் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப் பட்ட ஹபீஸ் அப்துல் ரவூப் தலைமையில் பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட குவாரி அப்துல் மாலிக், காலித், முதாசீர் ஆகியோர் ஜமாஅத்-உத்-தவா தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களாகவும், முரிட்கேயில் உள்ள மசூதியின் காப்பாளர்களாகவும் பணியாற்றியவர்கள் என கூறப்படுகிறது.

    இவர்களின் உடல்கள் பாகிஸ்தான் தேசியக் கொடியால் சுற்றப்பட்டு பாகிஸ்தான் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இந்த இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவம், காவல்துறையின் மூத்த அதிகாரிகள் மட்டு மின்றி பாகிஸ்தானின் பஞ்சாப் முதல்-மந்திரி மரியம் நவாஸ், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மருமகள் ஆகியோர் கலந்து கொண்டு, கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்தனர்.

    இதுதொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் பாகிஸ்தானின் தீவிரவாதத்துக்கு எதிரான நிலைபாடு குறித்து பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    இந்த வீடியோ மூலம் சர்வதேச தீவிரவாதியான ஹபீஸ் அப்துல் ரவூப் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பது அம்பலமாகி இருக்கிறது. ஹபீஸ் அப்துல் ரவூப் 1999-ம் ஆண்டு முதல் லஸ்கர் இ தொய்பா அமைப்பின் உறுப்பினராகவும், தடை செய்யப்பட்ட பலா-இ-இன்சானியத் அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடை பெற்ற தீவிரவாதிகள் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஹபீஸ் அப்துல் ரவூப்பை 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் கொண்ட சாதாரண மனிதர் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பாகிஸ்தானில் பொதுச்சேவைகள், பொது உறவுகள் அமைப்பின் அதிகாரியான அகமது செரீப் சவுத்திரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஹபீஸ் அப்துல் ரவூப் 1973-ம் ஆண்டு பிறந்தார். அவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவரது குடும்ப விவரங்கள் அனைத்தையும் நீங்கள் காணலாம்" என காட்டினார்.

    இதற்கிடையே, ஆபரே ஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவம், காவல்துறையின் அதிகாரிகள் பங்கேற்ற புகைப்படத்தை இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி வெளியிட்டு பாகிஸ்தானை கடுமையாக விமர்சனம் செய்தார். இது பாகிஸ்தான் ராணுவத்துக்கும், தீவிரவாத குழுக்களுக்கும் இடையேயான நேரடி தொடர்பை காட்டுவதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.

    • பாகிஸ்தானில் நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன மற்றும் அழிவுகரமானவை.
    • இன்று பிற்பகல் 1.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் இன்று பிற்பகஙல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளது.

    இன்று பிற்பகலில் 1.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட அதிர்வால், ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.

    உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும். இது பல பெரிய பிளவுகளால் கடக்கப்படுவதன் விளைவாக, பாகிஸ்தானில் நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன மற்றும் அழிவுகரமானவை. 

    • இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
    • மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் அரசு ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் வான்வெளியை மூடியது. பாகிஸ்தான் நாட்டு விமானங்கள் உள்பட அனைத்து விமானங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு வான்வெளியை பாகிஸ்தான் மீண்டும் திறந்தது. இதனையடுத்து பாகிஸ்தானில் விமான போக்குவரத்து தொடங்கவுள்ளது.

    • இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இரவு முழுவதும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

    இதனையடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் துணை பிரதமர் இசாக் தார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டது. பாகிஸ்தான் எப்போதும் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறது" என்று பதிவிட்டுள்ளார் 

    • இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
    • நேற்று முதன்முறயைாக பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தியுள்ளது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா "ஆபரேசன் சிந்தூர் (Operation Sindoor)" என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதில் முக்கிய பயங்கரவாத குழுவின் தளபதி கொல்லப்பட்டார். 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் ஏவுகணை, டிரோன்கள் மூலம் இந்தியாவில் உள்ள பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை இந்தியா முறியடித்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்றிரவு முதன்முறையாக பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஃபட்டா-1 மற்றும் ஃபட்டா-2 ஆகிய இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணை வைத்துள்ளது. இந்த இரண்டு ஏவுகணைகளும் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இந்த பாகிஸ்தான் நாட்டின் உள்தயாரிப்பு ஏவுகணையாகும்.

    நேற்று பாகிஸ்தான் ஃபட்டா பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி டெல்லியை தாக்க முயற்சித்துள்ளது. இதை இந்தியா வெற்றிகரமாக இடைமறித்து அளித்துள்ளது.

    இந்த நிலையில் நேற்றைய தாக்குதல் மூலம் பாகிஸ்தான் "ஆபரேஷன் பன்யன்-அல்-மர்சூஸ்" நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக பாகிஸ்தானில் உள்ள செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    பன்யன் அல்-மர்சூஸ் (Bunyan al-Marsoos) அல்லது பன்யன் அல் மர்சூஸ் (Bunyan Ul Marsoos) அல்லது பன்யன்-அன்-மர்சூஸ் (Bunyan-un-Marsoos) அல்லது பன்யனுன் மர்சூஸ் (Bunyanun Marsoos) என அழைக்கப்படுகிறது.

    இதற்கு ஈயத்தால் ஆன சுவர் என்பது பொருள் எனவும், கட்டிடம் போல் தனது பாதையில் அணிவகுப்பது என்பது போல் பொருள்படும் எனவும் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

    இந்தப் பெயருடன் பாகிஸ்தான் தன்னை ஒரு அசைக்க முடியாத சுவராகவோ அல்லது கட்டமைப்பாகவோ சித்தரிக்க விரும்புகிறது எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    பட்டா-2 ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். ஈது 400 கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன்கொண்டது. எதிரி நாடுகளின் மிகவும் உள்பகுதிகள், ராணுவ தளங்கள், தகவல்தொடர்பு அமைப்புகள் போன்றவற்றை தாக்கக்கூடியதாகும்.

    ஆபரேஷன் சிந்தூர் பெயர் காரணம்

    'ஆபரேஷன் சிந்தூர்' பெயருக்குப் பின்னால் ஒரு ஆழமான அர்த்தம் உள்ளது. சிந்தூர் என்ற பெயருக்கு இன்னொரு அர்த்தம் 'திலகம்' எனப் பொருள். அதாவது இந்து கலாச் சாரத்தில் திருமணமான பெண்கள் குங்குமம் போன்ற திலகங்களை சூடுவர்.

    பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இந்துக்களை குறிவைத்து குறிப்பாக இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களின் திலகங்களை அழிக்கும் விதமாக அவர்களின் கணவர்களை கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயரிடப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1.44 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

    • பாகிஸ்தானிடம் இருந்து தனி நாடு கோரும் பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
    • இந்த உள்நாட்டு எழுச்சி பாகிஸ்தானின் அதிகரித்து வரும் நெருக்கடியை மேலும் அதிகரிக்கிறது.

    பாகிஸ்தான் கிழக்கில் இந்தியாவின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் சூழலில் மேற்கில் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.

    பாகிஸ்தானிடம் இருந்து தனி நாடு கோரும் பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தியாவின் தாக்குதலை சாதகமாகப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

    பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டா உட்பட பலுசிஸ்தான் முழுவதும் பல மூலோபாய இராணுவ நிலைகளை கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) கூறியுள்ளது.

    இந்த உள்நாட்டு எழுச்சி பாகிஸ்தானின் அதிகரித்து வரும் நெருக்கடியை மேலும் அதிகரிக்கிறது.

    BLA செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலோச்சின் கூற்றுப்படி, அவர்களின் போராளிகள் கெச், மஸ்துங் மற்றும் கச்சி மாவட்டங்களில் ஆறு இடங்களில் ரிமோட் கண்ட்ரோல் செய்யப்பட்ட IEDகள், தானியங்கி ஆயுதங்கள் மற்றும் கையெறி ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தினர்.

    இந்தத் தாக்குதல்கள்களில் குறிப்பாக பாகிஸ்தான் படைகள், அவர்களின் விநியோகத் சங்கிலிகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு குறிவைக்கப்பட்டன. 

    ×