என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • பாகிஸ்தானில் 27 பேரின் யூ டியூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
    • வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் சமீப காலமாக அரசாங்கத்தின் கொள்கைகளை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, அரசு அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் பதிவுகளை பதிவிட்டனர்.

    இதனால் அரசின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. எனவே அந்த சேனல்களை தடைசெய்ய வேண்டும் என கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இதனையடுத்து முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பத்திரிகையாளர்கள் உள்பட 27 பேரின் யூ டியூப் சேனல்களுக்கு இடைக்கால தடை விதித்து இஸ்லாமாபாத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    இதனை மீறி அரசினை விமர்சித்தால் அந்த யூடியூப் சேனல்கள் நிரந்தரமாக முடக்கப்படும் எனவும் கோர்ட்டு தெரிவித்துள்ளது. இதனையடுத்து வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

    யூ டியூப் சேனல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடையால் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. இது கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே இதனை எதிர்த்து அவர்கள் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர்.

    முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் யூடியூப் சேனல் முடக்கப்பட்ட விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 1971 ஆம் ஆண்டு முன்னாள் சோவியத் யூனியனின் உதவியுடன் பாகிஸ்தான் எஃகு ஆலை முதலில் கட்டப்பட்டது.
    • 2008ஆம் ஆண்டு இந்த ஆலை சரிவை சந்தித்தது.

    பாகிஸ்தான் எஃகு ஆலையை மீண்டும் தொடங்கவும், நவீனப்படுத்தவும் பாகிஸ்தான்- ரஷியா இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    சோவியத் யூனியன் உதவியுடன கட்டப்பட்ட பாகிஸ்தான் எஃகு ஆலை ஒப்பந்தத்திற்காக சீனாவும் போட்டியிட்டது. ஆனால் மாஸ்கோவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பாகிஸ்தான்- ரஷியா இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    இந்தத் திட்டம் எஃகு உற்பத்தியை மீண்டும் தொடங்கி விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகவும், இது இருதரப்பு ஒத்துழைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

    1971 ஆம் ஆண்டு முன்னாள் சோவியத் யூனியனின் உதவியுடன் பாகிஸ்தான் எஃகு ஆலை முதலில் கட்டப்பட்டது. பின்னர் 2008ஆம் ஆண்டு இந்த ஆலை சரிவை சந்தித்தது.

    • இரு வாரத்துக்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
    • அவரது உடல் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

    கராச்சி:

    பாகிஸ்தானைச் சேர்ந்த புகழ்பெற்ற நடிகை ஹுமைரா அஸ்கர் அலி (32). கராச்சியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். சமீப காலமாக அவர் வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் இன்று அங்கு சென்றுபார்த்தபோது ஹுமைரா இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ந்தார்.

    தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். உடற்கூராய்வுக்கு பின் இறப்புக்கான காரணம் தெரியவரும். இரு வாரங்களுக்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    பாகிஸ்தானின் பிரபல நடிகை வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • இடிபாட்டில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுவதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • விபத்தில் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பாகிஸ்தான் கராச்சியில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

    கராச்சியில் உள்ள லியாரி பாக்தாதி என்ற இடத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

    கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இந்த விபத்தில் சிக்கி 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 8 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.

    மேலும், இன்னும் ஏராளமானோர் கட்டிட இடிபாட்டில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுவதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    அதன்படி, விபத்தில் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளர்வர்களை் மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.

    • சிங்கத்தை வளர்த்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • பாகிஸ்தானில் சிங்கங்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது கவுரமாக பார்க்கப்படுகிறது

    பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகளை வளர்ப்பு சிங்கம் ஒன்று தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோவில், ஒரு கட்டடத்தின் சுவர் மீது ஏறி வீதியில் குதித்த சிங்கம் அவ்வழியே வந்து கொண்டிருந்த பெண் மீது பாய்ந்து தாக்கியது பதிவாகியுள்ளது. தனது 2 குழந்தைகளையும் இந்த சிங்கம் தாக்கியதாக தந்தை ஒருவர் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக சிங்கத்தை வளர்த்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். லாகூரில் மக்களைத் தாக்கிய 11 மாத சிங்கம், போலீசாரால் கைப்பற்றப்பட்டு வனவிலங்கு பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் சிங்கங்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது கவுரமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2023 ஆம் ஆண்டிடுக்குப்பின் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
    • இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள அலுவலகத்தை மூடியுள்ளது.

    உலகளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது. 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது 9100 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள அலுவலகத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மூடியுள்ளது. உலகளாவிய மறுசீரமைப்பு, கிளவுட்-பேஸ்டு மாற்றம் (cloud-based) போன்ற காரணத்திற்காக இந்த நவட்டிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவம் தெரிவித்துள்ளது.

    மைக்ரோசாஃப்ட்டின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அந்நாட்டு வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    • 5 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து.
    • 20-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    பாகிஸ்தான் கராச்சியில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    கராச்சியில் உள்ள லியாரி பாக்தாதி என்ற இடத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இன்னும் ஏராளமானோர் கட்டிட இடிபாட்டில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. குறைந்தது 25 பேராவது சிக்கியிருக்கலாம் என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இந்த மோதலின்போது பாகிஸ்தான் மீது இந்தியா சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைகளை ஏவியது.
    • ராவல்பிண்டியின் சக்லாலாவில் அமைந்துள்ள நூர் கான், பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய தளமாகும்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து ஒரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இந்த மோதலின்போது பாகிஸ்தான் மீது இந்தியா சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைகளை ஏவியது.

    இந்நிலையில் சமீபத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் ராணா சனாவுல்லா இந்த தாக்குதல்கள் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார்.

    இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் போது தனது நாடு அணு ஆயுதப் போரின் விளிம்பிற்குச் சென்றதாக சனாவுல்லா ஒப்புக்கொண்டார்.

    இந்தியா ஏவிய பிரம்மோஸ் ஏவுகணை அணு ஆயுதத்தை ஏந்தியிருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்க தங்கள் ராணுவத்திற்கு 30 முதல் 45 வினாடிகள் மட்டுமே இருந்ததாகவும், அதுதான் அவர்களின் தலைவிதியை தீர்மானித்ததாகவும் அவர் பாகிஸ்தான் செய்தி சேனலிடம் கூறினார்.

    "இந்தியா நூர் கான் விமானப்படை தளத்தில் பிரமோஸ் ஏவுகணையை ஏவியபோது, அதை பகுப்பாய்வு செய்ய நமது ராணுவத்திற்கு 30-45 வினாடிகள் மட்டுமே இருந்தன. இவ்வளவு குறுகிய காலத்தில் எடுக்கப்படும் எந்த முடிவும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும்.

    அவர்கள் நம் தரப்பை தவறாகப் புரிந்துகொண்டிருந்தால், அது உலகளாவிய அணு ஆயுதப் போருக்கு வழிவகுத்திருக்கும்" என்று சனாவுல்லா தெரிவித்தார்.

    ராவல்பிண்டியின் சக்லாலாவில் அமைந்துள்ள நூர் கான், பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய தளமாகும்.

    • குண்டு வெடிப்பில் அசிஸ்டண்ட் கமிஷனர் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
    • இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மேளா மைதானத்தில் இன்று திடீரென குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் அசிஸ்டண்ட் கமிஷனர் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும், 11 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    குண்டு வெடிப்பில் பலியானோருக்கு அம்மாகாண முதல் மந்திரி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த குண்டு வெடிப்புக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    • காஷ்மீர் மக்களின் விருப்பத்தை நசுக்கி, மோதலைத் தீர்ப்பதற்குப் பதிலாகத் தீவிரப்படுத்துகிறது.
    • காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும்

    ஜம்மு காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதம் ஒரு சட்டபூர்வமான போராட்டம் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் தெரிவித்துள்ளார்.

    கராச்சியில் உள்ள கடற்படை அகாடமியில் நடந்த விழாவில் பேசிய முனீர் "இந்தியா பயங்கரவாதம் என்று அழைப்பது உண்மையில் ஒரு சட்டபூர்வமான சுதந்திரப் போராட்டமாகும்.

    சர்வதேச சட்டம் அதை அங்கீகரிக்கிறது. காஷ்மீர் மக்களின் விருப்பத்தை நசுக்கி, மோதலைத் தீர்ப்பதற்குப் பதிலாகத் தீவிரப்படுத்தும் முயற்சிகள் இந்த இயக்கத்தை மேலும் முக்கியத்துவப்படுத்த மட்டுமே உதவும்" என்று கூறினார்.

    காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும் என்றும் முனீர் கூறினார். இந்திய இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்ப்பதன் மூலம் பாகிஸ்தான் தன்னை நிரூபித்துள்ளதாகவும் முனீர் தனது உரையில் கூறினார்.

    புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு 2019 பாலகோட் தாக்குதலையும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆபரேஷன் சிந்தூரையும் முனீர் குறிப்பிட்டார்.

    • பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • கைபர் பக்துன்க்வா, பஞ்சாப், சிந்து பகுதிகளில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

    பாகிஸ்தானில் கனமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்தள்ளது. பலுசிஸ்தானில் 4 பேரும், கைபர்-பக்துன்க்வாவில் இரண்டு பேரும், பஞ்சாபில் ஒருவரும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர்.

    பருவமழைக்கு முந்தைய மழை கடந்த 26ஆம் தேதியில் இருந்து பெய்து வரும் நிலையில் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வடமேற்கு மாகாணமாக கைபர் பக்துன்க்வா மிகவும் மோகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாபில் 13 பேரும், சிந்துவில் ஏழு பேரும், பலுசிஸ்தான் மாகாணத்தில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    பஞ்சாபில் 39 பேர் காயம் அடைந்தனர். சிந்துவில் 16 பேரும், கைபர் பக்துன்க்வாவில் 11 பேரும், பலுசிஸ்தானில் 2 பேரும் காயம் அடைந்தனர்.

    50 வீடுகளில் முற்றிலும் சேதடைந்துள்ளனர். 39 வீடுகள் லேசான சேதம் அடைந்துள்ளது. 

    • பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டு அவமதிப்பிற்குரியது என்று கூறி நிராகரித்தார்.
    • ஆயுதக் குழுக்களால் சுமார் 290 பேர், பெரும்பாலும் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வட வசிரிஸ்தான் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரு தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்தது.

    வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனம் ராணுவ கான்வாய் மீது மோதியதில் 16 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உட்பட பலர் காயமடைந்தனர். இரண்டு வீடுகளின் கூரைகளும் இடிந்து விழுந்ததில் ஆறு குழந்தைகள் காயமடைந்தனர்.

    இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபானின் ஒரு பிரிவான ஹபீஸ் குல் பகதூர் ஆயுதக் குழுவின் தற்கொலைப்படைப் பிரிவு பொறுப்பேற்றுள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்தத் தாக்குதலுக்கு இந்தியா ஆதரவளித்த பயங்கரவாதிகள்தான் காரணம் என்று பாகிஸ்தான் ராணுவம் குற்றஞ்சாட்டியது.

    ஆனால், இந்தக் குற்றச்சாட்டை இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டு அவமதிப்பிற்குரியது என்று கூறி நிராகரித்தார்.

    2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் வன்முறை அதிகரித்துள்ளது.

    இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய இரு மாகாணங்களிலும் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் ஆயுதக் குழுக்களால் சுமார் 290 பேர், பெரும்பாலும் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

    ×