என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
    • 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி தீவிரம்.

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    பக்துன்க்வா மாகாணத்திற்கு சுற்றுலா வந்த குழுவின் ஒரு பகுதியினர் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர்), ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். கனமழை காரணமாக வெள்ளம் அதிகரித்ததால் இழுத்துச் செல்லப்பட்டனர். மீட்புப் படையினர் ஐந்து வெவ்வேறு இடங்களில் அவர்களை தேடிவருகின்றனர்.

    இந்த நிலையில் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. 18 பேரில் யாரும் பிழைக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகிறது. ஸ்வாட் ஆறு, பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வற்றாத நதிகளில் ஒன்றாகும்.

    • பாகிஸ்தான் ராணுவ மேஜர் அப்பாஸ் ஷா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
    • இவர் இந்திய ராணுவ வீரர் அபினந்தனை சிறை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்லாமாபாத்:

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் புல்வாமாவில் 2019-ம் ஆண்டு ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

    இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை விரட்டிச் சென்றபோது ராணுவ வீரர் அபினந்தன் வர்தமான் சென்ற மிக்-21 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது பாராசூட் மூலம் வெளியே குதித்த அபினந்தன், பாகிஸ்தான் எல்லைக்குள் தரையிறங்கினார். இதையடுத்து அவர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார்.

    மத்திய அரசின் கடும் எச்சரிக்கை மற்றும் அழுத்தத்தினால் சிறைபிடிக்கப்பட்ட 58 மணிநேரத்தில் அபினந்தன் விடுவிக்கப்பட்டார். அவர் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அடாரி-வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பினார்.

    அபினந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் தரையிறங்கியபோது அவரை சிறைபிடித்தவர் பாகிஸ்தான் மேஜர் மோய்ஷ் அப்பாஸ் ஷா என்பவர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வடமேற்கு பாகிஸ்தான் பகுதியான கைபர் பக்துன்கவா மாவட்டத்தில் தெஹ்ரிக் இ தலிபான்கள் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் மேஜர் மோய்ஷ் அப்பாஸ் ஷா உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகள் 11 பேர் கொல்லப்பட்டனர் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இந்தியா- பாகிஸ்தான் இடையே உள்ளன.
    • அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துக்கொள்ள பேச்சுவாத்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பாக அர்த்தமுளள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் எப்போதும் தயாராக இருக்கிறது என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

    சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உடன் ஷெபாஷ் ஷெரீப் டெலிபோனில் பேசியுள்ளார். அப்போது, "ஜம்மு-காஷ்மீர், தண்ணீர் பிரச்சினை, வர்த்தகம் மற்றும் பயங்கரவாதம் உள்பட நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பஹல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா மே 7ஆம் தேதி அதிகாலை ஆபசேரன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இதனைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. மே 10-ஆம் தேதி இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இதனால் தாக்குதல் நிறுத்தப்பட்டது.

    ஆனால் சிந்து நதி நீர் சஸ்பெண்ட் போன்றவை தொடரும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    • இந்தியாவுக்கு இரண்டு ஆப்சன் உள்ளது. ஒன்று நியாயமாக தண்ணீரை பகிர்வது.
    • அல்லது நாங்கள் அனைத்து ஆறுகளில் இருந்தும் தண்ணீரை திறந்து விடுவோம்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதற்கும் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. 4 நாட்களாக நீடித்த சண்டை போராக மாறும் சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை மூலம் சண்டை நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கும் சிந்து நதிநீர் (Indus Waters Treaty) ஒப்பந்தத்தை சஸ்பெண்ட் செய்தது இந்திய அரசு. சமீபத்தில் இந்திய உள்ளதுறை அமைச்சர் அமித் ஷா, சிந்து நீதி நீர் ஒப்பந்தம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது திரும்பப்பெற மாட்டாது எனத் தெரிவித்தார். இதற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான பிலாவல் பூட்டோ சர்தாரி, இந்தியா தண்ணீர் திறந்து விடவில்லை என்றால், பாகிஸ்தான் போரில் ஈடுபடும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிலாவல் பூட்டோ-சர்தாரி, "இந்தியாவுக்கு இரண்டு ஆப்சன் உள்ளது. ஒன்று நியாயமாக தண்ணீரை பகிர்வது. அல்லது நாங்கள் அனைத்து ஆறுகளில் (சிந்து நிதிப் படுகையில் உள்ள 5 ஆறுகள்) இருந்தும் தண்ணீரை திறந்து விடுவோம். சஸ்பெண்ட் முடிவை பின்பற்றுவோம் என இந்தியா மிரட்ட முடிவு செய்தால், நாங்கள் மீண்டும் போரை நடத்த வேண்டியிருக்கும். இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த மறுத்தால், பயங்கரவாதம் குறித்து ஒருங்கிணைப்பு இல்லாவிட்டால், இரு நாடுகளிலும் வன்முறை தீவிரமடையும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • இந்தியா- பாகிஸ்தான் சண்டையை நிறுத்த முக்கிய காரணமாக டிரம்ப் திகழந்ததாக பாகிஸ்தான் பாராட்டு.
    • அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசு பரிந்துரை கடிதம்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. எல்லைப் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கும் இந்தியா பதிலடி கொடுத்தது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

    அப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர் என அறிவித்தார்.

    இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு டொனால்டு டிரம்பின் "தீர்க்கமான இராஜதந்திர தலையீடு மற்றும் முக்கிய தலைமை" காரணம் என பாகிஸ்தான் பாராட்டியதோடு, அமைதிக்கான நோபல் பரிசு டிரம்பிற்கு வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசு நோபல் பரிசு வழங்கும் கமிட்டிக்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தில் பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் பரிந்துரை கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தார்.

    இதற்கிடையே இஸ்ரேல்- ஈரான் இடையிலான சண்டையில் ஈரான் அணுஉலை நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் அரசு வெளிப்படையாக அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அரசியல் கட்சித் தலைவர்கள், டொனால்டு டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.

    டிரம்ப்பிடம் நோபல் பரிசு பற்றி கேட்கப்பட்டபோது, "இந்தியா மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தில் தனது பணி, மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும் ருவாண்டாவுக்கும் இடையிலான பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு ஒப்பந்தத்தை திங்கள்கிழமை கையெழுத்திட ஏற்பாடு செய்தது உட்பட பல காரணங்களுக்காக தனக்கு அது வழங்கப்பட வேண்டும்.

    நான் நான்கு அல்லது ஐந்து முறை அதைப் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் எனக்கு நோபல் அமைதிப் பரிசு கொடுக்க மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் அதை தாராளவாதிகளுக்கு மட்டுமே கொடுக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

    • சுற்றுலா பயணிகள் அங்கு படகு சவாரி மேற்கொண்டனர்.
    • அப்போது திடீரென அந்தப் படகு ஆற்றில் கவிழ்ந்தது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணம் ஸ்வாட் நகரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. அங்குள்ள ஆற்றில் படகு சவாரி மேற்கொள்வதற்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    அந்தவகையில், சுற்றுலா பயணிகள் அங்கு படகு சவாரி மேற்கொண்டனர். அப்போது திடீரென அந்தப் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

    தகவலறிந்த மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது தண்ணீரில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. எனினும் இந்தச் சம்பவத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

    மாயமான சுற்றுலா பயணிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, அந்தப் பகுதியில் படகு சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

    • அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம்.
    • அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம்.

    அமெரிக்க ராணுவம் (இந்திய நேரப்படி இன்று அதிகாலை), ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகத் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.

    இந்நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் அனைத்து சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது. தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள ஈரானுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது" என தெரிவித்துள்ளது.

    அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நேற்று பாகிஸ்தான் பரிந்துரை செய்திருந்த நிலையில், தற்போது அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

    • ஜாகோபாபாத்தில் உள்ள கால்நடை சந்தை அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
    • ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

    பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஜாகோபாபாத் மாவட்டத்தில், பலூசிஸ்தானை ஒட்டியுள்ள பகுதியில், நேற்று (புதன்கிழமை) ரெயில்வே தண்டவாளம் அருகே குண்டுவெடித்ததில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

    ஜாகோபாபாத்தில் உள்ள கால்நடை சந்தை அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதனால் குவெட்டாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரெயிலின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்து, வெடிவிபத்தின் தன்மை மற்றும் குற்றவாளிகளைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமீப மாதங்களில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். கடந்த மார்ச் மாதம், குவெட்டாவிலிருந்து பெஷாவருக்குச் சென்று கொண்டிருந்தபோது, பலூசிஸ்தான் மாகாணத்தின் போலன் மாவட்டத்தில் இந்த ரெயில் தாக்கப்பட்டு கடத்தப்பட்டது. அந்த சம்பவத்திற்கு பலூசிஸ்ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.தான் விடுதலை இராணுவம் (BLA) பொறுப்பேற்றது. பின்னர் ராணுவ நடவடிக்கை மூலம் ரெயில் மீட்கப்பட்டது. 

    • பாகிஸ்தான் சட்டமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாகி வருகின்றன.
    • மின்சாரத்தால் இயங்கும் விளக்குகளை எப்படி ஹேக் செய்வது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், சமீபத்தில் பாகிஸ்தான் சட்டமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாகி வருகின்றன.

    "பாகிஸ்தானின் சைபர் வீரர்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஐபிஎல் போட்டிகளின்போது மின்விளக்குகளை ஹேக் செய்து அணைத்ததுடன், இந்திய அணைக் கதவுகளையும் ஹேக் செய்து தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்" என்று அவர் கூறினார்.

    இக்கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், நெட்டிசன்கள் அமைச்சரின் பேச்சு குறித்து கிண்டல் செய்து வருகின்றனர்.

    "மின்சாரத்தால் இயங்கும் விளக்குகளை எப்படி ஹேக் செய்வது?", "அறிவியல் புரிதல் இல்லாமல் பேசுகிறாரா?" போன்ற கேள்விகளுடன் பலரும் அமைச்சரை விமர்சித்துள்ளனர்.

    • பாபர் அசாம் 2022-ல் ஐசிசி சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற விருதினை வென்றார்.
    • 2021, 2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் தட்டிச்சென்றார்.

    லாகூர்:

    பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணியில் பாகிஸ்தானின் சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    பாபர் அசாம் 2022-ல் ஐசிசி சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற விருதினை வென்றார். அதேபோல் 2021, 2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் தட்டிச்சென்றார்.

    பாபர் அசாம் ஏற்கனவே பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் உள்ளிட்ட தொடர்களில் ஆடி வருகிறார்.

    இதுதொடர்பாக, பாபர் அசாம் கூறுகையில், சிட்னி சிக்சர்ஸ் அணியுடன் இணைவதில் பெருமை கொள்கிறேன். உலகின் சிறந்த டி20 அணிகளில் ஒன்றான சிட்னி சிக்சர்ஸ் உடன் இணைவது உற்சாகம் அளிக்கிறது. அணியின் வெற்றிக்குப் பங்களிப்பதை எதிர்நோக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
    • விமான விழுந்த பகுதிகளில் சேதம் அடைந்துள்ள நிலையில், சிலர் உயிரிழந்துள்ளனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 (போயிங் 787-8) விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் மேகானிநகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. கீழே விழுந்த விமானம் மருத்துவமனை ஹாஸ்டலில் பயங்கரமாக மோதியுள்ளது. இதில் ஹாஸ்டலில் பயிற்சி மருத்துவர்கள் சாப்பிடும் இடம் சேதம் அடைந்துள்ளது.

    இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர். இரண்டு விமானிகள் உள்பட 12 விமான ஊழியர்கள் இதில் அடங்குவர். விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

    இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் இரங்கல் தெரிவித்த்துள்ளனர்.

    ஷெபாஸ் ஷெரீப் தனது இரங்கல் செய்தியில் "இன்று அகமதாபாத் அருகே நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்ததும் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த மிகப்பெரிய இழப்பால் துயரமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.

    நவாஸ் ஷெரீப் "அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பேரழிவு இழப்பு எல்லைகளைக் கடந்து, நமது பகிரப்பட்ட மனிதநேயத்தை நினைவூட்டுகிறது. பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    • இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 2.12 லட்சம் கோடி ரூபாயை விட அதிகம்.
    • நாட்டின் பலவீனமான பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும்.

    இந்தியாவுடனான எல்லை பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அரசு 2025-26 நிதியாண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட்டில் 20% அதிகரிப்பை அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், இராணுவ செலவினங்களுக்கு 2.55 லட்சம் கோடி பாகிஸ்தான் ரூபாய் (சுமார் 9 பில்லியன் டாலர்) ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 2.12 லட்சம் கோடி ரூபாயை விட அதிகம்.

    நிதியமைச்சர் ஔரங்கசீப், தேசிய பாதுகாப்புக்கு அரசு முதலிடம் அளிக்கும் என்று கூறினார். அதே சமயம், மொத்த பொதுச் செலவினத்தில் 7% குறைப்பு, பாதுகாப்பு செலவினங்களில் அதிகரிப்பு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

    கல்வி, விவசாயம் ஆகியவற்றை விட பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதற்காக பாகிஸ்தான் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

    எதிர்க்கட்சிகள் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து, இது நாட்டின் பலவீனமான பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என்றும், முக்கியமான சிவில் துறைகளுக்கு நிதி கிடைக்காமல் போகும் என்றும் குற்றம் சாட்டியுள்ளன.

    ×