பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: அசிஸ்டண்ட் கமிஷனர் உள்பட 5 பேர் பலி

குண்டு வெடிப்பில் அசிஸ்டண்ட் கமிஷனர் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: அசிஸ்டண்ட் கமிஷனர் உள்பட 5 பேர் பலி
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மேளா மைதானத்தில் இன்று திடீரென குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் அசிஸ்டண்ட் கமிஷனர் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், 11 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குண்டு வெடிப்பில் பலியானோருக்கு அம்மாகாண முதல் மந்திரி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குண்டு வெடிப்புக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com