என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தி.மு.க. ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், ஏன் மூதாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை.
- கரூரில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறுகிறார்கள்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாணார்பாளையம் பகுதியில் நேற்று இரவு திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அது வெற்று கூட்டணி. ஆனால் நமது கூட்டணி வெற்றி கூட்டணி. வெல்லுகிற கூட்டணி நம் தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி. அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும்.
(த.வெ.க.) கொடி பறக்குது... பிள்ளையார் சுழி போட்டாங்க... எழுச்சி ஆரவாரம்... இந்த கூட்டத்தின் ஆரவாரம் மு.க.ஸ்டாலின் செவியை துளைத்துக்கொண்டு போகப்போகிறது. உங்களுடைய திட்டம் நிறைவேறாது. ஆகாயத்தில் கோட்டை கட்டி கனவு கண்டு கொண்டு இருக்கிறார். அவர் தங்களது கூட்டணியை நம்பி இருக்கிறார். மீண்டும் ஆட்சியை அமைத்துவிடலாம் என்று கனவு காண்கிறார். அவரது கனவு கானல் நீராக போகும். தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்கள் எவ்வளவு துன்பத்தையும், துயரத்தையும் அனுபவித்து வருகிறார்கள்.
தி.மு.க. ஆட்சியில் பெண்கள், குழந்தைகள், ஏன் மூதாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் எப்போது எல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ? அப்போது எல்லாம் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருக்கும். தற்போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாக இருக்கிறார்கள். அதனை கட்டுப்படுத்தக்கோரி சட்டசபையிலும், பல்வேறு போராட்டங்கள் வாயிலாகவும் வலியுறுத்தினோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடத்தப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் சட்டம் சந்தி சிரிக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் வறுமையால் உடல் உறுப்புகளை மக்கள் விற்பனை செய்யக்கூடிய அவலம் இருந்து வருகிறது. தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான ஒரு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு கிட்னி எடுக்கப்பட்டது. ஆனால் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கிட்னி முறைகேட்டை மதுரை ஐகோர்ட்டு கடுமையாக கண்டித்து உரிய விசாரணை நடத்தவும் அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால் தனியாக சிறப்பு விசாரணை நடத்தப்படவில்லை.
கரூர் சம்பவத்தில் 41 பேரின் உயிர்கள் பலியாகி இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவோடு, இரவாக அங்கு சென்றுள்ளார். உடனடியாக ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்று அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?. அதிகாரிகளை வைத்து அங்கு என்ன நடந்தது? என்பது பற்றி அதிகாரிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளும் கூறுகிறார்கள்.
அரசியல்வாதிகள் அரசியல் பேசலாம். ஆனால் அதிகாரிகள் அரசியல் பேசலாமா?. இதில் இருந்து கரூரில் திட்டமிட்டு சதி நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. இதனால் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை தேவை என வலியுறுத்தி வருகிறோம்.
கரூரில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறுகிறார்கள். இதனால் காவல்துறை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும். எனவே, மக்களுக்கு நியாயம், உண்மை தெரிய வேண்டும் என்றால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். அப்போது தான் இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்ற உண்மை வெளிவரும்.
தி.மு.க. ஆட்சி அமைந்து 53 மாதங்கள் முடிந்துவிட்டன. இன்னும் உங்களுக்கு 7 மாதங்கள் தான் ஆயுட்காலம். விரைவில் தி.மு.க. ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- தேவி ஈஸ்வரி நகர், விவேகானந்த நகர், தென்றல் நகர், ஜோதி நகர், ஸ்ரீ சக்தி நகர், செந்தில் நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (10.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
மயிலாப்பூர்: டிடிகே சாலை, பீமன்னா முதலி 1வது மற்றும் 2வது தெரு, சிபி ராமசாமி தெரு, பீமன்னா கார்டன் சாலை, பாவா சாலை, ஆனந்தா சாலை, சிவி ராமன் சாலை, டாக்டர் ரெங்கார்ட், ஆனந்தபுரம், ஸ்ரீ லப்தி காலனி, சுந்தரராஜன் தெரு, லம்பேத் அவென்யூ, அசோகா தெரு, சுப்பிரமணியன் சல்லம் தெரு, மேரிஸ் சாலை, ஆர்.ஏ.புரம், விசாலாட்சி தோட்டம், வி.கே.அய்யர் சாலை, ஸ்ரீனிவாசா சாலை, வாரன் சாலை, வெங்கடேச அக்ரஹாரம், ஜெத் நகர் 1 முதல் 3 தெரு, டிவி பேட்டை தெரு, விநாயகம் தெரு, வி.சி கார்டன் 1 முதல் 3 தெரு, தெற்கு மாட தெரு, ஜே.ஜே. சாலை, டிரஸ்ட்பாக்கம் வடக்கு மற்றும் தெற்கு, ஸ்ரீநிவாஸ் சாலை, ஸ்ரீநிவாசாரா கோலோன், சீதம்மாள் பகுதி ஸ்ரீனிவாஸ் கோலன் கார்டன் தெரு, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை பிரதான தெரு, பெருமாள் கோவில் தெரு.
பெசன்ட் நகர்: 4வது அவென்யூ, ஊரூர் ஆல்காட் குப்பம், தாமோதரபுரம், கற்பகம் கார்டன், ஜீவரத்தினம் நகர், வெங்கரத்தினம் நகர், பெசன்ட் அவென்யூ, அருணாச்சலபுரம், வசந்தா பிரஸ் ரோடு, பிரிட்ஜ் ரோடு.
திருமுல்லைவாயல்: போண்டேஸ்வரம் மாகரல், தாமரை பாக்கம், கரணி, சரஸ்வதி நகர் சிடிஎச் சாலை, ஆர்த்தி நகர், கொம்மாகும்பேடு, தேவி ஈஸ்வரி நகர், விவேகானந்த நகர், தென்றல் நகர், ஜோதி நகர், ஸ்ரீ சக்தி நகர், செந்தில் நகர், ஜேபி நகர், பவர் லைன் சாலை.
ஆவடி: காந்தி நகர், ஆவடி பேருந்து நிலையம் மற்றும் டிப்போ, எச்விஎஃப் சாலை, பிவி புரம், ஓசிஎஃப் சாலை.
திருமங்கலம்: அண்ணா நகர் மேற்கு மற்றும் விரிவாக்கம், W-பிளாக், B, C மற்றும் D பிரிவு, 11வது முதல் 20வது பிரதான சாலை, பேஸ் பில்டர்ஸ் பிளாட்கள், மெட்ரோசோன் பிளாட்கள், NVN நகர், திருவள்ளீஸ்வரர் நகர், CPWD குவார்ட்டர்ஸ், பாடிகுப்பம் சாலை, எமரால்டு பிளாட்கள், கிளாசிக் அபார்ட்மென்ட்கள் சத்யசி நகர், வெல்கம் காலனி பிளாக் 1 முதல் 49A வரை, பென் பவுண்டேஷன்ஸ், டிவி நகர், ஜேஎன் சாலை, ஆசியாட், ரோகிணி, பயனியர் காலனி, சிந்து அபார்ட்மென்ட், ஜவஹர் காலனி, சக்தி காலனி, பழைய L, Z பிளாக், AL பிளாக், 4வது அவென்யூ, பழைய திருமங்கலம், மங்கலம் காலனி, 12வது மெயின் ரோடு AF பிளாக், 2வது அவென்யூ C பிளாக், நேரு நகர், 15வது மெயின் ரோடு 11வது மெயின் ரோடு, AE பிளாக்.
- 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு பின்பு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதித் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்.
- காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 4½ ஆண்டுகளாக அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர்களின் சார்பாக ஜாக்டோ-ஜியோ முன்வைத்த கோரிக்கைகளில் சரண் விடுப்பு ஒப்படைப்பு தவிர வேறு எந்தவித கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. எனவே, 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு பின்பு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதித் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதம் குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வருகிற 16-ந்தேதி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே வழங்கிட வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்த அனைத்து தாலுகாவிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதேபோல, வரும் நவம்பர் 18-ந்தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.
- வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வீட்டிற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் வீட்டில் இன்று அதிகாலை வெடிகுண்டு வெடிக்கப்போவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- சுங்குவார்சத்திரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் அவரை, மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் மோசமடைவதும் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தில் மட்டும் நேற்றுவரை 20 குழந்தைகள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 5 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
கோல்ட்ரிப் மருந்து, தமிழகத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட்டில்கள் சில்லறை மற்றும் மொத்த விற்பனையகங்களில் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அந்த மருந்துகளை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், அவற்றை பறிமுதல் செய்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இறப்புகளுக்குக் காரணமான சிரப் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. சிந்த்வாராவைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழு, கோல்ட்ரிப் இருமல் சிரப்பை தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரைக் கைது செய்ய தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில், கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்குவார்சத்திரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் அவரை, மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.
சென்னை போலீசார் உதவியுடன் கைது செய்யப்பட்ட ரங்கநாதனை சுங்குவார்சத்திரம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து விஜய் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.
- பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவியும் அறிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்த போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக போலீசார் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்திவு செய்துள்ளனர்.
இருவரும் முன் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த வாரம் விஜய் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவியும் அறிவித்தார். பலியானோர் குடும்பத்தை விரைவில் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல வருவதாகவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விரைவில் நேரில் சந்திக்க இருக்கும் நிலையில் கடந்த 6-ந்தேதி மாலை 4.30 மணியளவில் பலியானோர் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்தார்.
கூட்ட நெரிசலில் பலியான தனுஷ்குமார் அம்மா, தங்கை ஹர்ஷினியுடன் வீடியோ காலில் பேசிய விஜய், "நடக்க கூடாத நிகழ்வு நடந்து விட்டது. எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு. எப்போதும் உங்கள் குடும்பத்துக்கு துணை நிற்பேன். விரைவில் உங்களை சந்திப்பேன்" என தனுஷ்குமார் தாயார் மற்றும் உறவினர்களிடம் சுமார் 20 நிமிடங்கள் விஜய் பேசியுள்ளார்.
தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பலியானோர் குடும்பத்துடன் வீடியோ காலில் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் 2-வது நாளாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பேசியுள்ளார்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடுபத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய், விரைவில் நேரில் வந்து சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க காவல்துறை அனுமதி கிடைத்ததும் விரைவில் நேரில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
- எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
- 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரையும், நேற்று 30 பேரையும் என கடந்த 2 நாட்களில் மட்டும் 47 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.
இச்சம்பவம் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைதாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் புறப்பாடு.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-23 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திருதியை பின்னிரவு 3.02 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : பரணி நள்ளிரவு 12.30 மணி வரை பிறகு கிருத்திகை
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம்
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திரரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நற்செயல்
ரிஷபம்-இன்பம்
மிதுனம்-போட்டி
கடகம்-சுபம்
சிம்மம்-ஆதரவு
கன்னி-அமைதி
துலாம்- புகழ்
விருச்சிகம்-நன்மை
தனுசு- தனம்
மகரம்-நிறைவு
கும்பம்-சிறப்பு
மீனம்-உறுதி
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பிரச்சனைகள் தீரும் நாள். புதிய தொழில் முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
ரிஷபம்
நன்மைகள் நடைபெறும் நாள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.
மிதுனம்
வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்தியதற்கு ஆதாயம் உண்டு. குழப்பங்கள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
கடகம்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
சிம்மம்
நினைத்தது நிறைவேறும் நாள். மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்து மகிழ்வீர்கள். வீடு மாற்றங்கள் உறுதியாகலாம். இல்லத்தாருடன் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.
கன்னி
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதிரிகளின் பலம் கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாது. வீண் விரயங்கள் உண்டு.
துலாம்
வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள். சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
விருச்சிகம்
திட்டமிட்ட காரியம் சிறப்பாக நடைபெறும் நாள். பேச்சுத் திறமையால் பிரபலஸ்தர்களிடம் காரியமொன்றை சாதித்துக் கொள்வீர்கள். விட்டுப் போன வரன்கள் மீண்டும் வரலாம்.
தனுசு
மனக்குழப்பம் அகலும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.
மகரம்
பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும் நாள். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். நேற்று சந்தித்தவர்களால் சில நன்மைகள் உண்டு.
கும்பம்
புகழ்கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.
மீனம்
தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். வருமானம் திருப்தியளிக்கும்.
- காசாவுக்கு கப்பல் மூலம் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்டுசென்றார்.
- அவருடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் சென்றனர்.
வாஷிங்டன்:
சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் (22).
உலக நாடுகளுக்கு சுற்றி வந்து சுற்றுச்சூழல் பாதிப்பு, மாசுபாடு, புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, இஸ்ரேல் தாக்குதலால் சின்னாபின்னமான காசாவுக்கு கப்பல் மூலமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு சென்றார். அவருடன் பல நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் சென்றனர்.
அப்போது இஸ்ரேல் ராணுவத்தால் இடைமறித்து சிறைவைக்கப்பட்டு சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டார்.
இதுதொடர்பாக கிரெட்டா தன்பெர்க் சுவீடனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இஸ்ரேல் ராணுவம் தங்களை மிகவும் மோசமாக நடத்தியது என தெரிவித்தார். இதனை இஸ்ரேல் ராணுவம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இந்நிலையில் கிரெட்டாவின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். அவர், "கிரெட்டா தன்பெர்க் ஒரு பைத்தியம்போல செயல்படுகிறார். எப்போதும் மூர்க்கமாக உள்ளார். அவர் நல்ல ஒரு மனநல டாக்டரை பார்க்க வேண்டும்" என பரிந்துரைத்துள்ளார்.
- தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார்.
- மேலும் வெந்த புண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூரம் டெல்லியில் நடந்துள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் மதங்கிர் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் (28). தினேசுக்கு திருமணமாகி 8 ஆண்டு ஆகிறது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது. 2 ஆண்டுக்கு முன் தினேஷ்மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். அப்போது போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, தினேஷுக்கும், அவரது மனைவிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், அதிகாலை 3 மணி அளவில் ஊரே இரவின் அமைதியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தபோது, 'அய்யோ, அம்மா' என்ற ஆணின் கதறல் சத்தம் அக்கம்பக்கத்தினர் தூக்கத்தைக் கலைத்தது.
பலரும் எழுந்து ஓடிவந்தனர். வலியில் கதறித் துடிப்பது தினேஷ் என தெரிந்தது. வீடு உள்புறம் பூட்டப்பட்டிருக்க தினேஷ் கதறிக் கொண்டிருக்க, பலரும் கதவைத் தட்டினர்.
சிறிது நேரத்துக்குப் பின் கதவு திறக்கப்பட்டது. தினேஷ் உடல் வெந்த நிலையில் கதறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
சில நாள் சிகிச்சைக்குப் பின், பேசும் நிலைக்கு வந்த தினேஷ் அளித்த வாக்குமூலம் அவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
'அன்று நானும், என் மகளும் தூங்கிக் கொண்டிருந்தோம். திடீரென்று என் உடல் முழுவதும் கடுமையான எரிச்சலான வலியை உணர்ந்து திடுக்கிட்டு கண்விழித்தேன். அருகில் என் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் என் உடலின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருந்தாள். அத்துடன் நிறுத்தாமல் அந்த தீக்காயத்தில் மிளகாய் பொடியையும் அள்ளித் தூவினாள்.
நான் வலி பொறுக்க முடியாமல் கதறினேன். 'வேண்டாம் வேண்டாம்' என்று கதறியபோது என் மனைவி, நீங்கள் கத்தினால் நான் இன்னும் எண்ணெய் ஊற்றுவேன் என்று மிரட்டினாள்' என்றார் தினேஷ்.
மருத்துவமனை படுக்கையில் கிடந்தபடியே தன் மனைவி மீது போலீசில் புகார் அளித்தார் அவர். தினேஷின், மார்பு, முகம் மற்றும் கைகளில் ஆழமான தீக்காயங்கள் இருந்தது. தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் உடல்நலம் தேறி வருகிறார். தினேஷ் மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






