என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சமீபத்தில் படத்தின் பூஜை நடைபெற்றது.
    • படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

    யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். யூடியூப்-ஐ தாண்டி வெள்ளித்திரையில் திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டு வந்தனர். அதன்படி பொது மக்களிடம் பணம் வசூலித்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டனர். இருவரின் முயற்சிக்கு அதிக தொகை கிடைத்த போதிலும், அந்தப் படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகவில்லை.

    இந்த நிலையில், கோபி சுதாகரின் பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படத்தின் தலைப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.

     

    முன்னதாக இந்தப் படம் துவங்கியதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்தப் படத்தின் அப்டேட் வெளியாகி உள்ள நிலையில், அடுத்தடுத்த தகவவல்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரான பின்னர் அதிமுகவிற்கு கிடைத்த 11-வது தோல்வி இது.
    • வெற்றிப்பாதையில் அதிமுகவை அழைத்து செல்ல எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை என்பது நிரூபணம்.

    சென்னை:

    அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * ஈரோடு கிழக்கு தேர்தலில் அதிமுகவினர் திமுகவிற்கு வாக்கு செலுத்தியுள்ளனர்.

    * அதிமுகவினர் திமுகவிற்கு மனமுவந்து வாக்கு செலுத்தியது தான் எங்களுக்கு கிடைத்த வெற்றி.

    * பல்வேறு புதிய திட்டஙகளை திமுக அரசு கொண்டுவந்துள்ளது.

    * எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரான பின்னர் அதிமுகவிற்கு கிடைத்த 11-வது தோல்வி இது.

    * வெற்றிப்பாதையில் அதிமுகவை அழைத்து செல்ல எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை என்பது நிரூபணம்.

    * அதிமுக எடப்பாடி கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதே கேள்விக்குறி. கட்சியை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.

    * பாஜக கொண்டு வரும் திட்டங்களை வெளிப்படையாக எதிர்க்கும் எடப்படி பழனிசாமி மறைமுகமாக ஆதரிப்பார்.

    * சீமான் கைது செய்யப்படாவிட்டாலும் நீதிமன்றத்தில் அவர் வழக்கை சந்தித்தாக வேண்டும்.

    * சீமான் மீதான அனைத்து புகார்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • பெரியார் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறி வந்தார்.
    • சீமான் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது. இவரது பேச்சுக்கு திராவிடர் கழகம், பெரியாரிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும் தமிழ் நாடு முழுக்க போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    இந்த விவகாரம் தொடர்பாக சீமானுக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. மேலும், சீமான் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. இந்த நிலையில், பெரியார் குறித்து அவதூறு பேசிய சீமானுக்கு காவல் துறை நோட்டீஸ் அளித்துள்ளது.

    அதன்படி வருகிற வெள்ளிக்கிழமை வடலூர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். திராவிடர் கழகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லத்திற்கு சென்று காவல் துறையினர் சம்மன் அளித்தனர்.  

    • கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
    • 13,020 சதுர அடி கொண்ட இந்த கட்டிடம் தரைத்தளம், முதல் மாடி, 2-வது மாடி, 3-வது மாடி என 4 தளங்களைக் கொண்டு பொலிவுடன் திகழ்கிறது.

    சென்னை:

    டெல்லியில் அ.தி.மு.க. கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் புதுடெல்லி, எம்.பி. ரோடு, இன்ஸ்டிட்யூ ஷனல் ஏரியா, புஷ்ப் விஹார், செக்டார்- 6, பிளாட் எண்கள். 15 மற்றும் 22'' என்ற முகவரியில் அமைந்துள்ளது.

    புதிதாகக் கட்டப்பட்ட புதுடெல்லி அ.தி.மு.க. அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். - புரட்சித் தலைவி அம்மா மாளிகையை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

    ஜெயலலிதாவால் புதுடெல்லியில் அ.தி.மு.க. அலுவலகம் அமைப்பதற்காக 21.2.2012 அன்று 10,850 சதுர அடி கொண்ட இடம் மத்திய அரசிடமிருந்து ஒப்பந்தம் மூலம் பெறப்பட்டது. ஜெயலலிதாவால் 5.10.2015 அன்று அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

    சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டிலான 13,020 சதுர அடி கொண்ட இந்த கட்டிடம் தரைத்தளம், முதல் மாடி, 2-வது மாடி, 3-வது மாடி என 4 தளங்களைக் கொண்டு பொலிவுடன் திகழ்கிறது.

    புதுடெல்லியில், "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். - புரட்சித் தலைவி அம்மா மாளிகை'' கழக அலுவலகத் திறப்பு விழா நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், எம்.பிக்கள், முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் புதுடெல்லி மாநிலக் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

    • மசோதா மீது கவர்னர் எடுக்கும் முடிவு மாநில அரசுக்கு வெளிப்படையாக ஏன் தெரிவிக்கப்படவில்லை?
    • அப்படி அதிகாரம் வேந்தருக்கு உள்ளது என்றால், எதற்காக கவர்னர் அரசிடம் விளக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    தமிழக சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக கவர்னர் ஆர்.என். ரவிக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும், தமிழகத்தின் 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் கவர்னர் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்குகளைத் தொடுத்து உள்ளது.

    இந்த விவகாரத்தில் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக கவர்னர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும், பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும் தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் கடந்த 2023-ல் தாக்கல் செய்திருந்தது.

    இந்த வழக்குகள் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வாரம் முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.

    அதன்படி, இன்றும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. அப்போது இருதரப்பினரிடமும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதன் விவரம் வருமாறு:-

    துணை வேந்தர் நியமனத்துக்கு அதிகாரம் யாருக்கு உள்ளது? என்று நீதிபதிகள் வினவ, துணைவேந்தர் நியமனம் பல்கலைக்கழக வேந்தரான கவனர்ருக்கு அதிகாரம் உள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, அப்படி அதிகாரம் வேந்தருக்கு உள்ளது என்றால், எதற்காக கவர்னர் அரசிடம் விளக்க வேண்டும். யுஜிசி விதிமுறைகளை அமல்படுத்தாமல் குழு அமைத்தது தொடர்பாக கேள்வி எழுப்ப வேந்தருக்கு அதிகாரம் உள்ளதே? கவர்னர் கேள்வி எழுப்பியதில் தவறு எங்கு உள்ளது எனவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதனிடையே, மசோதா மீது கவர்னர் எடுக்கும் முடிவு மாநில அரசுக்கு வெளிப்படையாக ஏன் தெரிவிக்கப்படவில்லை? கவர்னரின் மனதில் என்ன உள்ளது என்பதை தெரிவிக்காமல் மறுஆய்வு செய்யுமாறு திருப்பி அனுப்புவது எப்படி? கவர்னர் தெரிவிக்காத நிலையில் தற்போது சட்டசபை மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பி உள்ளதே? மசோதாவை சட்டமன்றம் மறுநிறைவேற்றம் செய்து அனுப்பிய போதும் கவர்னர் ஒப்புதல் தராது கிடப்பில் போட்டதை என்னவென்று கூறுவது? என்று நீதிபதிகள் சொல்ல...

    மசோதாவில் சில விஷயங்கள் சரியாக இல்லாது முரண்படுகிறது என கருதியதால் தான் கவர்னர் முடிவெடுக்கவில்லை என்று கவர்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதன்பின்னர், மறுபரிசீலனை செய்ய திருப்பி அனுப்பாது கிடப்பில் போட்டுவிட்டு பின்னர் ஜனாதிபதி முடிவுக்கு அனுப்புவது என்ன நடைமுறை? என்று நீதிபதிகள் கேட்டனர்.

    • மூத்த மகளின் மகன் ஸ்ரீகிருஷ்ணாவை வெல்ஜன் குழுமத்தின் இயக்குநராக நியமித்தார்.
    • சிறுவயதிலிருந்தே தாத்தா தன்னை புறக்கணித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

    ஐதராபாத்தில் சொத்துப் பிரச்சனையில் 28 வயது பேரன் தனது தொழிலதிபர் தாத்தாவை 73 முறை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஹைட்ராலிக்ஸ் உபகரணங்கள், கப்பல் கட்டுதல், எரிசக்தி மற்றும் தொழில்துறை பயன்பாடுகளில் ஈடுபட்டுள்ள 460 கோடி மதிப்புள்ள வெல்ஜன் குழும நிறுவனங்களின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் வி.சி. ஜனார்தன் ராவ் (86 வயது) இருந்தார்.

    இந்நிலையில் அவரை கொலை செய்த குற்றச்சாட்டில் 28 வயது பேரன் பேரன் கீர்த்தி தேஜா கைது செய்யப்பட்டார்.

    முதுகலைப் படிப்புக்குப் பிறகு சமீபத்தில் கீர்த்தி தேஜா அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியிருந்தார்.

    ஜனார்தன் ராவ் சமீபத்தில் தனது மூத்த மகளின் மகன் ஸ்ரீகிருஷ்ணாவை வெல்ஜன் குழுமத்தின் இயக்குநராக நியமித்தார். அவர் தனது இரண்டாவது மகள் சரோஜினி தேவியின் மகன் கீர்த்தி தேஜாவுக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள பங்குகளை தந்தார்.

    இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு, அவரும் அவரது தாயார் சரோஜினி தேவியும் தனது தாத்தாவின் வீட்டிற்குச் சென்றனர். தேஜா தனது தாத்தாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது தாயார் தேநீர் தயாரிக்க சமையலறைக்குச் சென்றார்.பேரனுக்கும் தாத்தாவுக்கும் நிறுவனத்தில் இயக்குநர் பதவி தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதத்தின் போது, தன்னை நியாயமற்ற முறையில் நடத்தியதாக தாத்தாவை  தேஜா குற்றம் சாட்டினார். சிறுவயதிலிருந்தே தாத்தா தன்னை புறக்கணித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

    ஒரு கட்டத்தில், தேஜா பொறுமை இழந்து, தான் கொண்டு வந்த கத்தியால் தனது தாத்தாவை குத்தியதாகக் கூறப்படுகிறது. தாத்தாவை தேஜா 73 முறை குத்தியதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தாத்தாவின் உடலில் பல கத்திக் காயங்கள் இருப்பதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவத்தின்போது தேஜாவை தடுக்க அவரது தாயார் சமயலறையில் இருந்து விரைந்தார். ஆனால் தேஜா தனது தாயையும் கத்தியால் குத்தினார்.

    கொலைக்குப் பிறகு, தேஜா கொலையை நேரில் பார்த்த செக்யூரிட்டியை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். நான்கு கத்திக்குத்து காயங்களுடன் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜனார்தன் ராவ் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    தப்பியோடிய பேரன் தேஜா கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். தேஜாவுக்கு போதைப்பழக்கம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உயிரிழந்த ஜனார்தன் ராவ் பல்வேறு நன்கொடைகளை செய்து வந்தவர். ஏலூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கும் பெரும் நன்கொடைகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பலரும் சீமானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் பலர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகினர்.

    தமிழ் நாட்டின் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சமீபத்தில் தான் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முன்னதாக இடைத்தேர்தல் குறித்த அறிவப்பு வெளியான சமயத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பார் சீமான் பெரியார் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தார். இதனால் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள், பொது மக்கள் என பலரும் சீமானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனிடையே சீமான் பெரியர் குறித்து தொடர்ச்சியாக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்தது, நாம் தமிழர் கட்சியினர் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால், தமிழ் நாடு முழுக்க நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் பலர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகினர். சிலர் மற்ற கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியில் இருந்து பலர் விலகி வருவதை அடுத்து, பெரியாரை ஏற்றுக் கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகி செல்லலாம் என்று சீமான் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "பெரியாரை தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனே ஏற்றுக் கொண்டாலும் நான் ஏற்க முடியாது. பெரியாரை ஏற்றுக் கொள்ளக்கூடிய தம்பிகள் என்னைவிட்டும், நாம் தமிழர் கட்சியை விட்டும் வெளியேறலாம்," என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
    • சுமார் 20 ஆண்களும் பெண்களும் என்ஜின் பெட்டியை ஆக்கிரமித்திருப்பது கேமராவில் பதிவாகி உள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.

    மகா சிவராத்திரி நாளான பிப்ரவரி 26 ஆம் தேதி வரை இந்த நிகழ்வு நடைபெற இருக்கிறது. எனவே பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதற்காக பிரயாக்ராஜுக்கு சிறப்பு ரெயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில் மகா கும்பமேளாவுக்கு கிளம்பிய பக்தர்கள், ரெயில் பெட்டிகளில் இடம் கிடைக்காமல் ரெயில் என்ஜின் பெட்டிக்குள் பக்தர்கள் ஏறி அமர்ந்துள்ளனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி கான்ட் ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 8) அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வாரணாசியில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கிச் செல்லும் ரெயில் இரண்டாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தபோது, இருக்கைகள் கிடைக்காத சில பயணிகள் ரயில் என்ஜினுக்குள் நுழைந்து கதவை உள்ளே இருந்து மூடினர். சுமார் 20 ஆண்களும் பெண்களும் என்ஜின் பெட்டியை ஆக்கிரமித்திருப்பது கேமராவில் பதிவாகி உள்ளது.

     ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். முக்கியமான செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் இருப்பதால், என்ஜின் பெட்டியில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது என்று அதிகாரிகள் அவர்களுக்கு விளக்கினர்.  

    முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எல்லா கட்சியை சேர்ந்த விவசாயிகள் நடத்திய பாராட்டு விழா.
    • விவசாய கூட்டமைப்பினர் நடத்திய நிகழ்வில் அரசியல் கலப்பு இருக்கக்கூடாது.

    சென்னை:

    எடப்பாடி பழனிசாமியை பாராட்டி கோவையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதுகுறித்து இன்று காலை அவர் விளக்கம் அளித்தார். அப்போது செங்கோட்டையன் கூறும்போது, திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று கூறினார்.

    இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அத்திக்கடவு-அவிநாசி திட்டம் எடப்பாடி ஆட்சிக்காலத்தில் தான் நிறைவுபெற்றது. எல்லா கட்சியை சேர்ந்த விவசாயிகள் நடத்திய பாராட்டு விழா. விவசாய கூட்டமைப்பினர் நடத்திய நிகழ்வில் அரசியல் கலப்பு இருக்கக்கூடாது.

    அரசியல் கலப்பு இருக்க கூடாது என்பதற்காகவே தலைவர்களின் படங்கள் வைக்கப்படவில்லை. பாராட்டு விழாவை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. கோகுல இந்திரா பொதுவெளியில் அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை என்றார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
    • இந்தப் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

    திரையுலகில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, எழுத்து என பல பரிணாமங்களை கொண்டவர் தனுஷ். இவர் ராயன் படத்தைத் தொடர்ந்து 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் இம்மாதம் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன.

    இந்த நிலையில், 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் கதை இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வண்டர்பார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிட்டெட் சார்பில் கஸ்தூரி ராஜா மற்றும் விஜயலக்ஷமி கஸ்தூரி ராஜா தயாரித்துள்ளனர்.

    இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை லியோன் பிரிட்டோ மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஜி.கே. பிரசன்னா மேற்கொண்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.



    • முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
    • நாளை சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4-ம் திருநாளான 5-ந்தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவின் 8-ம் நாளான நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 5 மணிக்கு வந்தார்.

    பின்னர் அதிகாலை காலை 5 மணிமுதல் 5.45 மணிவரை ரதரோஹணம் (மகர லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.15 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் நான்கு உத்திர வீதிகளின் வழியாக காலை 9.20 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.

    நாளை (11-ந்தேதி) சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 12-ந்தேதி மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைகிறார்.

    வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார்.

    இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவதோடு தைத்தேர் திருவிழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அற நிலையத்துறை கோவில் இணை ஆணையர் மாரி யப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிமுகவில் ஒற்றுமை இல்லை.
    • யாருக்கும் எந்த நிர்பந்தமும் வேண்டாம்.

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு இன்னும் ஓராண்டிற்குள் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் அடிமட்ட அளவில் உள்ள நிர்வாகிகளுடன் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி, சென்னை அண்ணா நகரில் அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், கோகுல இந்திரா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசியதாவது:-

    அதிமுகவில் ஒற்றுமை இல்லை. எனக்காக இல்லை... என் செல்வாக்குக்காக இல்லை... பொதுச்செயலாளர் அறிவித்த ஆர்ப்பாட்டம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக... அதுதான் நோக்கமே தவிர... எல்லாரையும் தான் கூப்பிட்டோம். அதனால என்னை பார்த்து பேசுறதுக்கோ, என்னை பார்த்து கும்பிடறதுக்கோ, என்னை பார்த்து பயப்படறதுக்கோ... யாருக்கும் அச்சம் வேண்டாம். யாருக்கும் எந்த நிர்பந்தமும் வேண்டாம். என்ன ஒண்ணு நானும் தம்பியும் தானே சுத்துக்கிட்டு இருக்கோம். எங்களோட போட்டோவ போஸ்டரில் போட்டா சந்தோஷம் இருக்காதா... மகிழ்ச்சி இருக்காதா...

    எப்படி உங்களால என்னை மறக்க முடிகின்றது... என்ன நிர்பந்தம்... எந்த சுயநலம் என்பதை கேட்கிறேன். இருப்பினும் தொகுதியில் யார் நின்றாலும் அ.தி.மு.க. இங்கு வெற்றி பெறுவதற்கு நான் நிச்சயமாக உறுதியாக பணியாற்றுவேன் என்பதை இந்த நேரத்தில் சொல்லி யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்பது அல்ல. தேர்தல் நேரத்தில் இந்த ஒரு குருப்பிஷமும் இந்த விஷயமும் நடைபெறக்கூடாது என்பதற்காக இதை தெரிவிக்கிறேன்.

    முன்னாள் அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை என்பதை அறிந்தும், மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றார். 

    ×