என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது.
    • அரசுத் துறைகளுக்கு மானியக் கோரிக்கைகள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

    2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பதவி ஏற்ற இந்த ஆட்சியின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.

    தேர்தலுக்கு பிறகு மே மாதத்தில் அமையும் புதிய ஆட்சியில் மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்பட்டு, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அரசுத் துறைகளுக்கு மானியக் கோரிக்கைகள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    சட்டசபை தேர்தல் ஏப்ரல் 3-ம் வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட்டை ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

    இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் கடுமையான தேர்தல் போட்டி நிலவுவதால், மக்களை கவரும் புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.

    இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து முடித்ததும், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    • நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று காது குத்துவார்.
    • கடந்த 4.5 ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் வெகுவிமரிசையாக காது குத்தும் விழா.

    தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். 2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பதவி ஏற்ற இந்த ஆட்சியின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும்.

    சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.

    சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அ.தி.மு.க. நூதன முறையில் விமர்சனம் செய்துள்ளனர்.

    பட்ஜெட் என்ற பெயரில் 'மாபெரும் காது குத்தும் விழா' நடைபெற உள்ளது என பத்திரிகை அடித்து அ.தி.மு.க.வினர் விமர்சித்துள்ளனர்.

    நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று காது குத்துவார். கடந்த 4.5 ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் வெகுவிமரிசையாக காது குத்தும் விழா. விழாவில் கூவம் சுத்திகரிப்பிற்கு நிதி, சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நிதி என்று விதவிதமாக காது குத்தப்படும்.

    பின்குறிப்பு: சொத்துவரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல முறைகளில் மொய் வைக்கலாம் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • சட்டசபை தேர்தல் ஏப்ரல் 3-ம் வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • மக்களை கவரும் புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.

    தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார்.

    2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பதவி ஏற்ற இந்த ஆட்சியின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.

    தேர்தலுக்கு பிறகு மே மாதத்தில் அமையும் புதிய ஆட்சியில் மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்பட்டு, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அரசுத் துறைகளுக்கு மானியக் கோரிக்கைகள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    சட்டசபை தேர்தல் ஏப்ரல் 3-ம் வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட்டை ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

    இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் கடுமையான தேர்தல் போட்டி நிலவுவதால், மக்களை கவரும் புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.

    இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து முடித்ததும், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    இந்நிலையில் சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.

    • கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
    • கட்சி நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பங்கு பெறாமல் இருந்து வந்தார்.

    சென்னை:

    த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் சமீப காலமாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் த.வெ.க. தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து, தன்னை த.வெ.க.வில் இணைத்துக் கொண்டுள்ளார்.

    த.வெ.க.வில் இணைந்துள்ள மனோகரன் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார். அதனை தொடர்ந்து, கட்சி நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பங்கு பெறாமல் இருந்து வந்த மனோகரன் தற்போது த.வெ.க.வில் இணைந்துள்ளார்.

    அதேபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் த.வெ.க.வில் இணைந்தார். இவர் 2006- 2011 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 2011-2016 வரை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

    வரும் தேர்தலில் த.வெ.க. சார்பில் இவர்கள் அவரவர்கள் போட்டியிட்ட தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    • நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம்.
    • எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றால் திருப்பி அடிப்போம்.

    மதுரையில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், "எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் (திமுக) அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதுதான். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றால் திருப்பி அடிப்போம்" என்று தெரிவித்து இருந்தார்.

    மாணிக்கம் தாகூரின் பேச்சு தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    'அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்ப தில்லையே' என்ற பாரதியாரின் வரிகளை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

    கூட்டணிக்குள் ஏற்பட்ட சலசலப்பு குறித்து அறிக்கை வழங்கியதாக செல்வப்பெருந்தகை பேட்டி அளித்த நிலையில் மாணிக்கம் தாகூர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

    • தேர்தல் அறிக்கையை மக்கள் மத்தியில் வெளியிடுவதா? அல்லது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் வெளியிடுவதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
    • பொள்ளாச்சி, வேலூரில் அடுத்தடுத்து மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதையொட்டி தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணியில் தற்போது த.வெ.க. ஈடுபட்டுள்ளது. இதற்காக மாநில நிர்வாகிகளை கொண்ட குழுவும் அறிவிக்கப்பட்டது. பொது மக்கள் கருத்து தெரிவிக்க புதிய இணையதளமும் தொடங்கப்பட்டது.

    தேர்தல் அறிக்கை குழுவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இணையதளத்திலும் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த கருத்துகளை தேர்தல் அறிக்கையில் இணைக்கும் பணியை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் செய்து வருகின்றனர்.

    கடந்த கால தேர்தல்களிலும், தற்போதும், தி.மு.க., அ.தி.மு.க.. தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், த.வெ.க தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் இடம் பெறுமா? அல்லது இலவசங்கள் இல்லாத மாற்று திட்டங்கள் இடம் பெறுமா? என்பது மிகுந்த எதிர்பார்ப்புமிக்கதாக மாறியுள்ளது.

    இந்தநிலையில் த.வெ.க. தேர்தல் அறிக்கை பொதுமக்கள் விரும்பும் வகையில் பல முக்கிய அம்சங்களுடன் வருகிற 27-ந்தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் அறிக்கையை மக்கள் மத்தியில் வெளியிடுவதா? அல்லது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் வெளியிடுவதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, பொள்ளாச்சி, வேலூரில் அடுத்தடுத்து மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக போலீஸ் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். 

    • 2-வது பொதுத்தேர்வு மே 15-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது.
    • முதலாவது பொதுத்தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம்.

    சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் 2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது.

    இதில் முதலாவது பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 2-வது பொதுத்தேர்வு மே 15-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. தங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்க விரும்புபவர்களுக்காக இரண்டாவது தேர்வு வசதி செய்யப்பட்டு உள்ளது.

    அதேநேரம் முதலாவது பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என சி.பி.எஸ்.இ. கூறியுள்ளது.

    இன்று 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடமும், 21-ந்தேதி ஆங்கிலமும், 25-ந்தேதி அறிவியலும், மார்ச் 2-ம் தேதி இந்தி தேர்வும், மார்ச் 7-ந்தேதி சமூக அறிவியல் பாட தேர்வும் நடைபெறுகிறது. சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று உடற்கல்வி தேர்வு, 20-ந் தேதி இயற்பியல், 28-ந்தேதி வேதியியல், மார்ச் 9-ந்தேதி கணிதம் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள்.

    இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    முதலாவது பொதுத்தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம். இதில் வெற்றி பெறும், தகுதி வாய்ந்த மாணவர்கள் தங்கள் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் மொழிப்பா டம் என ஏதாவது 3 பாடங்களில் 2-வது தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

    முதலாவது பொதுத்தேர்வில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை எழுதாத மாணவர்கள், 2-வது பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    அவர்கள் 'மீண்டும் கட்டாயம்' என்ற பிரிவுக்கு தள்ளப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் பிரதான (முதலாவது பொதுத்தேர்வு) தேர்வில்தான் பங்கேற்க முடியும்.

    இவ்வாறு சன்யம் பரத்வாஜ் கூறினார்.

    • 2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பதவி ஏற்ற இந்த ஆட்சியின் கடைசி கூட் டத்தொடர் இதுவாகும்.
    • வேளாண் பட்ஜெட்டு இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

    தமிழ்நாடு சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் உரையாற்றுவதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி அழைக்கப்பட்டு இருந்தார். ஆனால் அவையில் அவர் உரையில் இல்லாதவற்றை பேசிவிட்டு வெளியேறினார். அவரது பேச்சு எதுவும் அவைக்குறிப்பில் பதிவாகவில்லை.

    கவர்னருக்கு தரப்பட்ட உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். சட்டசபையில் கவர்னர் உரை என்ற நடைமுறை தேவையில்லை என்பதற்கான அரசியல் சாசன திருத்தத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 22, 23-ந் தேதிகளில் எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களின் விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 24-ந் தேதி பதிலளித்து பேசினார்.

    அதன்பின்னர் சட்டசபை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கும் தீர்மானத்தை அமைச்சர் எ.வ.வேலு முன்மொழிய, அது நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவை மறுபடி கூடும் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

    இந்தநிலையில் சட்டசபையின் அடுத்த கூட்டத்தை இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் அப்பாவு கூட்டியுள்ளார். காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட், அவைக்கு அளிக்கப்படும். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட் ஜெட் உரையை படிப்பார்.

    இதே நிதியாண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை மற்றும் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியவை வருகிற 20-ந் தேதி அவைக்கு அளிக்கப்பட உள்ளது.

    இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவையின் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். அதன்பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும். சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்? என்பதற்கான முடிவுகள், அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும்.

    இந்த கூட்டத்தொடர் 4 நாட்கள் (அதாவது 20-ந் தேதி வரை) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்தளிக்கும் இடைக்கால பட்ஜெட் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதிப்பார்கள். அந்த விவாதங்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசுவார்.

    2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பதவி ஏற்ற இந்த ஆட்சியின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.

    தேர்தலுக்கு பிறகு மே மாதத்தில் அமையும் புதிய ஆட்சியில் மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்பட்டு, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அரசுத் துறைகளுக்கு மானியக் கோரிக்கைகள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    சட்டசபை தேர்தல் ஏப்ரல் 3-ம் வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட்டை ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

    இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் கடுமையான தேர்தல் போட்டி நிலவுவதால், மக்களை கவரும் புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

    சமீபத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், மகளிர் உரிமைத்தொகை, சிறப்புத்தொகை என ரூ.5 ஆயிரத்தை பெண்களுக்கு அனுப்புவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதற்கான நிதி ஆதாரங்களை கேட்டு அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அவையில் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது.

    மேலும் தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகள், போராட்டங்கள் பற்றி அவையில் பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி மேற்கொள்ளும். இதில் வெளிநடப்பு, வெளியேற்றம் போன்ற சம்பவங்கள் நேரிடவும் வாய்ப்புள்ளது.

    அரசியல் ரீதியாக கவனித்தால், தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளிடையே இன்னும் ஏற்படாத கூட்டணி உறவும் இந்த கூட்டத்தொடரில் எதிரொலிக்கக்கூடும்.

    வேளாண் பட்ஜெட்டும் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து முடித்ததும், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை அவையில் படிப்பார்.

    • இருவரும் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
    • நயினார் நாகேந்திரன் உடன் மத்திய அமைச்சர் எல். முருகனும் உடன் சென்றிருந்தார்.

    தமிழக சட்டசபை தேர்தலுக்காக பாஜக- அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பா.ம.க. உள்பட பல கட்சிகள் இடம் பிடித்துள்ளன.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்திற்கு சென்று தமிழக காங்கிரஸ் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அமைச்சர் எல். முருகனும் உடன் சென்றிருந்தார்.

    இந்த சந்திப்பு குறித்த கேள்விக்கு "எடப்பாடி பழனிசாமியுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு" என வேறேதும் கூறாமல் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    அடுத்த மாதம் தொடக்கத்தில் பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழகம் வருகிறார். அதற்கு முன்பாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நிறைவு செய்ய பாஜக விரும்புவதாக தெரிகிறது. இதனால் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    • தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை ரூ.213 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
    • மு.க. ஸ்டாலின் 21-ந்தேதி திறந்து வைக்க இருக்கிறார்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நீண்ட பாலங்களை அமைத்து சாதனை படைத்துவரும் நமது #DravidianModel-இல், அடுத்து மதுரையில் அமைகிறது 1.3 கிலோ மீட்டர் நீளமுள்ள "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்"!

    தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு, இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தனக்கெனப் பாதையை உருவாக்கி, நம் தென்மாவட்ட மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய வீரத்தின் அடையாளமான #NetajiSubashChandraBose அவர்களின் பெயரைச் சூட்டிப் பெருமிதம் கொள்கிறேன்.

    ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை வரும் 21-ஆம் நாள் என்னுடைய மதுரைப் பயணத்தில் திறந்து வைக்கிறேன்.

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • விரைவில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • முதல்முறையாக தவெக தேர்தலை சந்திக்கிறது.

    தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதனையொட்டி தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுளையும் ஒருங்கிணைக்க, அம்மாநிலத்திற்கென புதியதாக நிர்வாகக் குழு நியமிக்கப்படுகிறது.

    இந்தக் குழு பற்றிய விவரம் வருமாறு

    1. திரு. A. சையத் முகமது காசிம்

    2. திரு.K.புதியவன்

    3. திரு. V.சாமிநாதன் Ex MLA

    4. திரு. K.A.U.அசனா Ex. MLA

    5. திரு. பெரியசாமி Ex.MLA

    6. திரு. VJ.சந்திரன் Ril, 10,

    7. திரு. AG.வலந்தன

    8. திரு. R. நிரேஷ் குமார்

    9. திரு. V.ராமு

    10. திரு. N.மணிபாலன்

    11. திரு. V.பிரதீபன்

    12. திரு.S.பிரபு

    13. திரு. 5.ராஜசேகர்

    14. திரு. N.சந்திரசேகரன்

    15. திருமதி. M.K.சத்யா

    16. திரு. K.செந்தில் குமார்

    17. திரு. N.வசந்தராஜா

    18. திரு. M.சரவணன்

    19. திரு. A.சந்திரபாலன்

    20. திரு. B.யூசப்

    21. திரு. P.வேல்முருகன்

    22. திரு. N.விஜி

    23. திரு. T.சுகுமார்

    24. திரு. K.பாரதிதாசன்

    25. திரு.S.பிரான்சிஸ்

    26. திரு. 1.கிளார் பேட்ரிக்

    27. திரு. M.மணிகண்டன்

    28. திரு. G.குமரவேல்

    29. திரு. B.பாலாசுதாகர்

    30. திரு. M.பிரிஜேஷ்

    எனது உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி, பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்களுடன் இணைந்து இயங்கும் இந்தப் புதிய நிர்வாகக் குழுவிற்குக் கழக நிர்வாகிகள். தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த நேரத்தில் உங்களுடன் இன்னொரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நமது தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தேர்தல் ஆணையம் வெற்றிச் சின்னமான விசில் சின்னத்தை ஒதுக்கியிருப்பதை அனைவரும் அறிவீர்கள். தற்போது புதுச்சேரி மாநிலத்திற்கும் அதே விசில் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியிருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!" என்று தெரிவித்துள்ளார்.

    ×