என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- ஐசிசி விருதை வென்ற முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை ஓமர்சாய் படைத்துள்ளார்.
- ஐபிஎல் ஏலத்தில் ஓமர்சாயை ரூ.2.4 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த ஆண்கள் ஒருநாள் வீரராக ஆப்கானிஸ்தான் அணியின் ஓமர்சாயை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது. இதன்மூலம் ஐசிசி விருதை வென்ற முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை ஓமர்சாய் படைத்துள்ளார்.
அவர் கடந்த ஆண்டில் 14 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஒரு சதம் 3 அரைசதத்துடன் 417 ரன்கள் குவித்துள்ளார். பந்து வீச்சில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் ஓமர்சாயை ரூ.2.4 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஆண்டில் மந்தனா, 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 747 ரன்கள் குவித்துள்ளார்.
- மந்தனா 2018-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த ஆண்டுக்கான ஐசிசி விருதை வென்றுள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த மகளிர் ஒருநாள் வீராங்கனையாக இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அவர் கடந்த ஆண்டில் இந்தியாவுக்காக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 747 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்களும் மூன்று அரைசதங்களும் அடங்கும். மேலும் பந்து வீச்சில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
மந்தனா 2018-ம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருது வென்றவர்கள்
ஸ்டாஃபானி டெய்லர் (வெஸ்ட் இண்டீஸ்) - 2012
சுசி பேட்ஸ் (நியூசிலாந்து) - 2013
சாரா டெய்லர் (இங்கிலாந்து) - 2014
மெக் லானிங் (ஆஸ்திரேலியா) - 2015
சுசி பேட்ஸ் (நியூசிலாந்து) - 2016
ஏமி சாட்டர்த்வைட் (நியூசிலாந்து) - 2017
ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 2018
எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா) - 2019
லிசெல் லீ (தென்னாப்பிரிக்கா) - 2021
நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் (இங்கிலாந்து) - 2022
சாமரி அதபத்து (இலங்கை) - 2023
ஸ்மிருதி மந்தனா (இந்தியா) - 2024
- முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
- ஏபி டி வில்லியர்ஸ் 2021-ம் ஆண்டு ஓய்வை அறிவித்தார்.
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நிறைய தவறுகளை செய்துவிட்டார் என்று இந்திய அணி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி வந்த ஏபி டி வில்லியர்ஸ் தவறான அணிகளில் விளையாடி விட்டார். 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடரில் களமிறங்கிய ஏபி டி வில்லியர்ஸ் முதலில் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ்) அணிக்காக விளையாடினார்.
மூன்று சீசன்கள் டெல்லி அணியில் விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ் 2011 ஐ.பி.எல். மெகா ஏலத்திற்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைந்தார். ஆர்.சி.பி. அணிக்காக 11 சீசன்களில் விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ் 2021-ம் ஆண்டு ஓய்வை அறிவித்தார்.
இந்த நிலையில், ஏபி டி வில்லியர்ஸ்-இன் மிஸ்டர் 360 நிலையை சூர்யகுமார் அடைந்துவிட்டாரா என்ற கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் பதில் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், "அவர் போட்டியில் வெற்றி பெறும் தாக்கத்தை பொருத்து ஆம் என்று தான் கூறுவேன்."
"ஏபி டி வில்லியர்ஸ் சிறப்பாக இருந்தார். இவரின் டெஸ்ட் கிரிக்கெட் சராசரி 50 ஆக இருந்தது. ஒரு நாள் போட்டிகளிலும் அவர் தலைசிறந்த வீரர். ஆனால் டி20 கிரிக்கெட்டை மட்டும் பார்த்தால், நான் அதிகம் பார்த்திருக்கிறேன்."
"ஐ.பி.எல். தொடரில் ஏபி டி வில்லியர்ஸ் அவரின் உண்மையான திறமைக்கு ஏற்ப சரியாக பயன்படுத்தப்படவில்லை. இது கூறுவதற்கு மன்னிக்கவும், அவர் தவறான அணிகளில் விளையாடி விட்டார். அவர் வேறு அணியில் விளையாடி இருந்தால், ஏபி டி வில்லியர்ஸ்-இன் மற்றொரு முகத்தை பார்த்திருக்கலாம்," என்று தெரிவித்தார்.
- பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் பொட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி.
- முன்னதாக 1990ல் பைசாலாபாத்தில் நடந்த டெஸ்டில் பாகிஸ்தானை வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தியிருந்தது.
பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது.
இப்போட்டியில் முதலில் பிட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 154 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து, 9 ரன்கள் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனை அடுத்து, 254 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 120 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் வெற்றியை பதிவு வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 1990ல் பைசாலாபாத்தில் நடந்த டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றுள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தில் பும்ரா காயமடைந்தார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசி ஆட்டத்தில் பும்ரா காயமடைந்தார். இதனால் பும்ரா உடற்தகுதியுடன் இருந்தால் தான் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது நியூசிலாந்தை சேர்ந்த மருத்துவர் ரோவன் ஸ்கௌடன் உதவியுடன் பும்ரா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னாள் பும்ரா 100% உடற்தகுதியுடன் இருந்தால் அது ஒரு அதிசயம் என்று பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
பும்ராவின் மருத்துவ அறிக்கைககள் மருத்துவர் ரோவன் ஸ்கௌடனிடம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதனை பொறுத்து சிகிச்சைக்காக பும்ராவை நியூசிலாந்திற்கு அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக பும்ரா உடற்தகுதி பெறாவிட்டால் ஹர்ஷித் ராணா அல்லது சிராஜ் ஆகியோரில் யாராவது ஒருவர் அணியில் இடம்பெறுவர் என்று சொல்லப்படுகிறது.
- தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
- பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்தினர்.
நாட்டின் 76வது குடியரசு தினத்தை ஒட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்தது. கடந்த சனிக்கிழமை இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில், தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தப் பட்டியலில் முன்னாள் இந்திய வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்ததை அடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வரிசையில், நடிகர் தனுஷ் ரவிச்சந்திரன் அஸ்வினை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இந்தப் பதிவில், "பத்மஸ்ரீ விருது வென்ற முதல் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டு இருந்தார். இதுதவிர பத்ம விருது வென்ற நடிகர் அஜித் குமார் மற்றும் அனைவருக்கும் நடிகர் தனுஷ் தனது பதிவில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
எக்ஸ் தளத்தில் தனக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்-க்கு ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்து கமென்ட் செய்தார். இவரது பதிவுக்கு ஒருவர் இந்தி மொழியில் பதில் அளித்து இருந்தார். அதில், நன்றி சொல்வதாக இருந்தால் ரோகித் சர்மாவுக்கு சொல்லுங்க என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த அஸ்வின், "டேய் பைத்தியம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய முகமது ஷமி முதல் 2 ஆட்டத்திலும் இடம்பெறவில்லை.
- இங்கிலாந்துக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் தொடரில் 2 போட்டி முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், சென்னையில் நடைபெற்ற 2-வது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை நடக்கிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் இங்கிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. முதல் ஆட்டத்தில் எளிதில் வெற்றி கிடைத்தது. ஆனால் சேப்பாக்கத்தில் கடும் போராட்டத்துக்கு பிறகே திலக் வர்மாவின் ஆட்டத்தால் தோற்கடிக்க முடிந்தது.
நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷிவம் துபேக்கு வாய்ப்பு வழங்கப்படும். காயத்தால் விலகிய நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக அவர் இடம் பெறலாம். துருவ் ஜூரல் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டார். வாஷிங்டன் சுந்தரின் செயல்பாடு சிறப்பாக இருந்ததால் 11 பேர் கொண்ட அணியில் நீடிப்பார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய முகமது ஷமி முதல் 2 ஆட்டத்திலும் இடம்பெறவில்லை. 3-வது போட்டியிலாவது வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்துக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. ஏனென்றால் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.
கடந்த போட்டியில் இங்கிலாந்து கடுமையான சவாலை கொடுத்தது. கேப்டன் பட்லர் ஒருவரே நிலையாக ஆடி வருகிறார். ஹேரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜேமி சுமித் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 27-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 26 ஆட்டத்தில் இந்தியா 15-ல், இங்கிலாந்து 11-ல் வெற்றி பெற்றுள்ளன.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணிவீரர்கள் விவரம்:-
இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்ஷர் படேல் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்குசிங், ஷிவம் துபே, அர்ஷ் தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி. துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஹர்சித் ராணா, முகமது ஷமி, ரமன்தீப்சிங்.
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பில்சால்ட், பென் டக்கெட், ஹேரி புரூக், லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெதல், ஒவர்டன், அட்கின்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க்வுட், ஜேமி சுமித், பிரைடன் கார்ஸ்,ரெகான் அகமது, சகீப் மகமூத்.
- 2வது டி20 போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
- இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் 60 ரன்களை வாரி வழங்கினார்.
சென்னை:
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் 3-வது வரிசையில் இறங்கிய திலக் வர்மா நிலைத்து நின்று இந்திய அணியை கரைசேர்த்தார். திலக் வர்மா 72 ரன்கள் அடித்து தனி ஆளாகப் போராடி வெற்றி பெற்றுக் கொடுத்தார்.
இந்தப் போட்டியில் திலக் வர்மா இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சரின் பந்துவீச்சில் மட்டும் 4 சிக்சரை பறக்க விட்டார். இதில் 4 ஓவர் வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 60 ரன்களை வாரி வழங்கி, டி20 கிரிக்கெட்டில் மோசமான பந்துவீச்சையும் பதிவு செய்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து பவுலர் ஆர்ச்சர் ஓவரை அடித்து நொறுக்கியது ஏன் என திலக் வர்மா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, திலக் வர்மா கூறுகையில், அவர்களின் சிறந்த பவுலரை நான் டார்கெட் செய்ய விரும்பினேன். அவர்களுடைய சிறந்த பவுலரை அட்டாக் செய்தால் மற்ற பவுலர்கள் அழுத்தத்திற்குள் தள்ளப்படுவார்கள். எனவே மறுபுறம் விக்கெட் விழும்போது நான் எதிரணியின் சிறந்த பவுலரை எதிர்கொள்ள விரும்பினேன்.
அதனால் ஆர்ச்சருக்கு எதிராக அதிரடியாக விளையாட முயற்சித்தேன். அவருக்கு எதிராக நான் வெளிப்படுத்திய ஷாட்டுகள் வலைப் பயிற்சியில் வேலை செய்ததாகும். அதற்கு நான் மனதளவில் தயாராக இருந்தேன். அவ்வாறு செய்தது எனக்கு நல்ல முடிவை கொடுத்தது. எது நடந்தாலும் களத்தில் கடைசி வரை நின்று போட்டியை முடிக்கவேண்டும் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் என தெரிவித்தார்.
- தமிழக அணி 2-வது இன்னிங்சில் 305 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
- சண்டிகர் 2வது இன்னிங்சில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சேலம்:
90-வது ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
இதில் டி பிரிவில் இடம்பெற்ற தமிழக அணி தனது 6-வது லீக் ஆட்டத்தில் சண்டிகர் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற சண்டிகர் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தமிழகம் முதல் இன்னிங்சில் 301 ரன்கள் எடுத்தது. ஆண்ட்ரே சித்தார்த் சதமடித்து 106 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய சண்டிகர் முதல் இன்னிங்சில் 204 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஷிவம் பாம்ப்ரி 108 ரன்கள் எடுத்தார்.
97 ரன்கள் முன்னிலை பெற்ற தமிழகம் 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. தமிழக அணி 5 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர் 150 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 403 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சண்டிகர் அணி களமிறங்கியது. அந்த அணி 50 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் தமிழக அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மனன் வோரா சதம் வீணானது.
தமிழகம் சார்பில் சாய் கிஷோர், அஜித் ராம் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது விஜய் சங்கருக்கு வழங்கப்பட்டது.
- வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 244 ரன்களில் ஆல் அவுட் ஆனது.;
- பாகிஸ்தான் சார்பில் சஜித் கான், நோமன் அலி தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
முல்தான்:
பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.
முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. குடகேஷ் மோட்டி அரை சதம் கடந்து 55 ரன் எடுத்தார். வாரிகன் 36 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 6 விக்கெட்டும், சஜித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 154 ரன்களுக்கு சுருண்டது. ரிஸ்வான் 49 ரன்னும், சவுது ஷகீல் 32 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் வாரிகன் 4 விக்கெட்டும், குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டும், கீமர் ரோச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 9 ரன்கள் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 66.1 ஓவரில் 2-வது இன்னிங்சில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் பிராத்வெய்ட் 52 ரன்கள் அடித்தார்.
பாகிஸ்தான் சார்பில் சஜித் கான், நோமன் அலி தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து, 254 ரன்களை இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் வெற்றி பெற இன்னும் 178 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 6 விக்கெட்டுகள் தேவை என்பதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- முதலில் ஆடிய வங்கதேசம் 64 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 7.1 ஓவரில் 66 ரன்கள் எடுத்து வென்றது.
கோலாலம்பூர்:
ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சூப்பர் 6 சுற்றில் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் இன்று மோதியது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 64 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் சுமையா அக்தர் 21 ரன்னும், ஜன்னத்துல் மவுமா 14 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் வைஷ்ணவி சர்மா 3 விக்கெட் கைப்பற்றினார்.
அடுத்து ஆடிய இந்திய அணி 7.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 66 ரன் எடுத்து வெற்றி பெற்றது. திரிஷா 31 பந்தில் 40 ரன் விளாசினார்.
இதன்மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகி விருதை வைஷ்ணவி வென்றார்.
- தொடர்ச்சியாக 3 ஆவது ஆண்டாக இவ்விருதை ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (61) வென்றுள்ளார்.
- முன்னதாக 2019,2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் இவ்விருதை அவர் வென்றுள்ளார்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த நடுவருக்கான விருதை இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் வென்றுள்ளார்.
தொடர்ச்சியாக 3 ஆவது ஆண்டாக இவ்விருதை ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (61) வென்றுள்ளார். முன்னதாக 2019, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் இவ்விருதை அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






