என் மலர்
நீங்கள் தேடியது "ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை"
- முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ், மலேசியாவை இந்தியா வீழ்த்தி இருந்தது.
- இலங்கைக்கு எதிராக இந்திய அணி தரப்பில் கோங்கடி த்ரிஷா 49 ரன்கள் எடுத்தார்.
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் இலங்கையுடன் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி, இலங்கையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அதிக பட்சமாக கோங்கடி த்ரிஷா 49 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 9 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடர்ந்து இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இலங்கை அணி 58 ரன்களுக்குள் அடங்கியது. இதனால் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த தொடரின் ஹாட்ரிக் வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது.
- முதலில் ஆடிய வங்கதேசம் 64 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 7.1 ஓவரில் 66 ரன்கள் எடுத்து வென்றது.
கோலாலம்பூர்:
ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சூப்பர் 6 சுற்றில் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் இன்று மோதியது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 64 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் சுமையா அக்தர் 21 ரன்னும், ஜன்னத்துல் மவுமா 14 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் வைஷ்ணவி சர்மா 3 விக்கெட் கைப்பற்றினார்.
அடுத்து ஆடிய இந்திய அணி 7.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 66 ரன் எடுத்து வெற்றி பெற்றது. திரிஷா 31 பந்தில் 40 ரன் விளாசினார்.
இதன்மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகி விருதை வைஷ்ணவி வென்றார்.
- முதலில் ஆடிய இந்தியா 208 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய ஸ்காட்லாந்து 58 ரன்களில் ஆல் அவுட்டானது.
கோலாலம்பூர்:
ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சூப்பர் 6 சுற்றிn 2வது ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் இன்று மோதியது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை கமாலினி அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க வீராங்கனை கோங்கடி திரிஷா அதிரடியில் மிரட்டினார். இவர் 59 பந்துகளில் 4 சிக்சர், 13 பவுண்டரி உள்பா 110 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 147 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஸ்காட்லாந்து களமிறங்கியது. இந்திய வீராங்கனைகள் துல்லியமாக பந்துவீசி அசத்தினர்.
இறுதியில் ஸ்காட்லாந்து அணி 14 ஓவரில் 58 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ஆயுஷி சுக்லா 4 விக்கெட்டும், வைஷ்ணவி சர்மா, கோங்கடி திரிஷா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகி விருதை கோங்கடி திரிஷா வென்றார்.
- இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகி விருதை கொங்கடி திரிஷா பெற்றார்.
- அவர் இறுதிப்போட்டியில் 44 ரன்னும், தொடரில் 7 ஆட்டத்தில் 309 ரன்னும் எடுத்தார்.
ஐதராபாத்:
இரண்டாவது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் மலேசியாவில் நடந்தது. இதில் கோலாலம்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி, 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்தது. இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி விருதை இந்தியாவின் தொடக்க வீராங்கனையான கொங்கடி திரிஷா பெற்றார். அவர் இறுதிப்போட்டியில் 44 ரன்களும், தொடரில் 7 ஆட்டத்தில் 309 ரன்களும் எடுத்து அசத்தினார்.
இந்நிலையில், ஜூனியர் டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தெலுங்கானாவை சேர்ந்த கொங்கடி திரிஷா தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை நேற்று சந்தித்துப் பேசினார்.
அப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொங்கடி திரிஷாவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.
மேலும், இந்திய அணியில் இடம்பிடித்திருந்த மற்றொரு தெலுங்கானா வீராங்கனை துருதி கேசரி, அணியின் தலைமை பயிற்சியாளர் நவுஷீன் மற்றும் பயிற்சியாளர் ஷாலினி ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.






