என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Under 19 Womens T20 World Cup 2025"

    • முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ், மலேசியாவை இந்தியா வீழ்த்தி இருந்தது.
    • இலங்கைக்கு எதிராக இந்திய அணி தரப்பில் கோங்கடி த்ரிஷா 49 ரன்கள் எடுத்தார்.

    ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் இலங்கையுடன் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி, இலங்கையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அதிக பட்சமாக கோங்கடி த்ரிஷா 49 ரன்கள் எடுத்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 9 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடர்ந்து இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இலங்கை அணி 58 ரன்களுக்குள் அடங்கியது. இதனால் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த தொடரின் ஹாட்ரிக் வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது.

    • இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகி விருதை கொங்கடி திரிஷா பெற்றார்.
    • அவர் இறுதிப்போட்டியில் 44 ரன்னும், தொடரில் 7 ஆட்டத்தில் 309 ரன்னும் எடுத்தார்.

    ஐதராபாத்:

    இரண்டாவது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் மலேசியாவில் நடந்தது. இதில் கோலாலம்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி, 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

    சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்தது. இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி விருதை இந்தியாவின் தொடக்க வீராங்கனையான கொங்கடி திரிஷா பெற்றார். அவர் இறுதிப்போட்டியில் 44 ரன்களும், தொடரில் 7 ஆட்டத்தில் 309 ரன்களும் எடுத்து அசத்தினார்.

    இந்நிலையில், ஜூனியர் டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தெலுங்கானாவை சேர்ந்த கொங்கடி திரிஷா தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை நேற்று சந்தித்துப் பேசினார்.

    அப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொங்கடி திரிஷாவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.

    மேலும், இந்திய அணியில் இடம்பிடித்திருந்த மற்றொரு தெலுங்கானா வீராங்கனை துருதி கேசரி, அணியின் தலைமை பயிற்சியாளர் நவுஷீன் மற்றும் பயிற்சியாளர் ஷாலினி ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.

    ×