என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • விராட் கோலி ஓய்வு பெற்றது கண்டிப்பாக இந்தியாவுக்கு இழப்பு.
    • வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா போன்ற மகத்தான வீரர்கள் 50 வயது வரை விளையாடியிருக்க வேண்டும்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை முன்னிட்டு புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இளம் அணியை உருவாக்க விரும்புவதாகவும் அதற்காக அவர் சீனியர் வீரர்களை கழற்றி விட பிசிசிஐக்கு பரிந்துரை செய்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியது.

    இந்நிலையில் 2011 உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் இதேபோல சீனியர் வீரர்களை கழற்றி விட்ட இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் 8 படுதோல்விகளை சந்தித்தது. அதே போல விராட் கோலி, ரோகித் சர்மாவை வீட்டுக்கு அனுப்பியுள்ள இந்திய அணி அடுத்த இங்கிலாந்து தொடரில் தோல்வியை சந்திக்கும் என்று முன்னாள் வீரரும் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    மிகப்பெரிய வீரரான விராட் கோலி ஓய்வு பெற்றது கண்டிப்பாக இந்தியாவுக்கு இழப்பு. 2011-ல் நிறைய சீனியர்கள் ஓய்வு பெற்றது, நீக்கப்பட்டது போன்ற விஷயங்களால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. ஏனெனில் பேக்-அப் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. விராட், ரோகித்திடம் இப்போதும் நிறைய கிரிக்கெட் எஞ்சியுள்ளதாக நான் கருதுகிறேன்.

    நீங்கள் முழுமையாக இளம் வீரர்களை மட்டுமே வைத்து அணியை உருவாக்கினால் அது எப்போதும் கீழே விழும். இனியும் சாதிக்க எதுவுமில்லை என்று கருதி விராட் கோலி ஓய்வு பெற்றிருக்கலாம். வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா போன்றவர்கள் முன்னதாகவே ஓய்வு பெற்று விட்டனர்.

    அவர்களைப் போன்ற மகத்தான வீரர்கள் 50 வயது வரை விளையாடியிருக்க வேண்டும். அவர்கள் ஓய்வு பெற்றதால் நான் சோகமடைந்துள்ளேன். ஏனெனில் தற்போது இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்த யாருமில்லை.

    என்று யோக்ராஜ் கூறினார்.

    • விராட் கோலி நீண்ட காலம் நம்முடைய கிரிக்கெட் விளையாட்டின் முகமாக இருந்தார்.
    • டெஸ்ட் போட்டிகள் மீது அவருடைய அன்பும் ஆர்வமும் அவர் அடித்த ரன்கள் போலவே அளப்பறியது.

    இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் அவர் ஏற்கனவே சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்தார். அந்த நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விராட் கோலி விடை பெற்றுள்ளது இந்திய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

    இவர் 68 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அவரது தலைமையில் இந்தியா 40 வெற்றிகளைப் பெற்று அசத்தியது. குறிப்பாக சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி தலைமையில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைத்தது. மொத்தத்தில் வெற்றிகரமான இந்திய மற்றும் ஆசிய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்துள்ள விராட் கோலி வரலாற்றின் மகத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவராக ஓய்வு பெற்றுள்ளார்.

    இந்நிலையில் விராட் கோலி ஓய்வு பெற்றுள்ளது இந்திய கிரிக்கெட்டை விட உலக கிரிக்கெட்டுக்கு பெரிய இழப்பு என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    விராட் கோலியை பலரும் மிஸ் செய்வார்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை விட அவரை யாரும் மிஸ் செய்யப் போவதில்லை. விராட் கோலி நீண்ட காலம் நம்முடைய கிரிக்கெட் விளையாட்டின் முகமாக இருந்தார். டெஸ்ட் போட்டிகள் மீது அவருடைய அன்பும் ஆர்வமும் அவர் அடித்த ரன்கள் போலவே அளப்பறியது. விராட் கோலி அனைத்து கேப்டனும் தங்களுடைய அணியில் இருக்க விரும்பக்கூடிய வீரர். டெஸ்ட் கிரிக்கெட் அவரை மிஸ் செய்யும்.

    என்று விராட் கோலி கூறினார். 

    • இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் ஐபிஎல் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டது.
    • ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

    மும்பை:

    18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதனையடுத்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூருவில் மோதுகின்றன. அடுத்த மாதம் 3-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    இந்நிலையில் டெல்லி அணியின் இடம்பெற்றிருந்த ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார். மீதமுள்ள ஐபிஎல் 2025 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதிலாக வங்க தேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார்.

    ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஆறு போட்டிகளில் விளையாடி, 9.17 என்ற மோசமான சராசரியில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தீவிரவாத தாக்குதலில் சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளனர்.
    • ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்குகிறது.

    பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என அறிவித்துள்ளது. ஐ.பி.எல். தொடர் மீண்டும் தொடங்குவதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த எஞ்சியுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் டி.ஜே. இசை மற்றும் சியர் லீடர்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது அவற்றில் பாடல்கள், DJ, பெண்கள் நடனம் என எதுவும் இருக்கக் கூடாது என விரும்புகிறேன். தீவிரவாத தாக்குதலில் சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளனர். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஐபிஎல் போட்டிகளில் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

    என கவாஸ்கர் கூறினார்.

    • கோலி, ரோகித் டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டனர்.
    • இருவரும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறார்கள்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் முன்னணி வீரர்கள் என்பதால் அவர்களுக்கு ஏ+ கிரேடில் ரூ.7 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.

    ஆனால் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் அவர்கள் ஓய்வு பெற்று விட்டதால் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறார்கள். இதனால் அவர்களின் ஒப்பந்தத்தை பி.சி.சி.ஐ. மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும், இதன் காரணமாக இருவரும் ரூ. 5 கோடி சம்பளம் உள்ள ஏ அல்லது ரூ.3 கோடி சம்பளம் உள்ள பி கிரேடுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்நிலையில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவர்களின் A+ கிரேடு ஒப்பந்தம் தொடரும் என பிசிசிஐ-யின் செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவர்களின் A+ கிரேடு ஒப்பந்தம் தொடரும். அவர்கள் இன்னும் இந்திய கிரிக்கெட்டின் ஒரு பகுதியாகவே உள்ளனர், அவர்களுக்கு A+ கிரேடு வசதிகள் அனைத்தும் கிடைக்கும்.

    இவ்வாறு பிசிசிஐ செயலாளர் கூறியுள்ளார்.

    • விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
    • விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் கே.எல்.ராகுல் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.

    ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கோலியின் ஓய்வு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20-ந்தேதி இந்த டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

    இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் 4 ஆம் இடத்தில் யார் களமிறங்குவார் என்று கேள்வி எழுந்துள்ளது. விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் கே.எல்.ராகுல் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், விராட் கோலிக்கு மாற்று வீரராக கருண் நாயரை விளையாட வைக்கலாம் என்று முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளே ஆலோசனை வழங்கியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "முதல் தர கிரிக்கெட்டில் ரன்களை குவித்திருக்கும் கருண் நாயர், இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற தகுதியானவர். அவரால் விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்" என்று தெரிவித்தார்.

    அண்மையில் நடந்து முடிந்த சையத் முஸ்தாக் அலி டிராபி தொடரில் கருண் நாயர் தான் அதிக ரன்கள் குவித்தார்.இதனை தொடர்ந்து நடைபெற்ற ரஞ்சி டிராபியில் 54 சராசரியுடன் 863 ரன்கள் குவித்தார். இதில் 4 சதம், 2 அரைசதம் அடங்கும்.

    • விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
    • ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார்.

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.

    ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கோலியின் ஓய்வு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனிடையே ரோகித், கோலியை தொடர்ந்து முகமது ஷமியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்று தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக வெளியான செய்திகளை முகமது ஷமி மறுத்துள்ளார்.

    தான் ஓய்வு பெறுவதாக வெளியான கட்டுரையின் ஸ்கிரீன் ஷாட்டை முகமது ஷமி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டார். அந்த ஸ்டோரியில், "ரொம்ப நல்லா இருக்கு மஹாராஜ். உங்க வேலை நாட்களையும் எண்ணிப் பாருங்க, இன்னும் எத்தனை நாளுக்கு உங்கள் வேலை இருக்கும். இது போன்ற கதைகளால் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை பாழாக்கிவிட்டீர்கள்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

    ஜூன் 20-ந்தேதி இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாட முகமது ஷமி தயாராக உள்ளார் என்பதை அவர் இதன்மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

    • தென்னாப்பிரிக்காவுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.
    • இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.

    இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தைத் தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி ஐபிஎல் போட்டிகள் மீண்டும் வரும் 17 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று தொடங்குகின்றன. ஜூன் 3 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகளுக்கு இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் பலரும் இருக்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    தென்னாப்பிரிக்காவுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும், இங்கிலாந்து அணிக்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் இருப்பதாலும் இரு அணிகளை சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் மார்கோ ஜான்சன் (பஞ்சாப்), மார்க்ரம் (லக்னோ), ரியான் ரிக்கல்டன் (மும்பை), வில் ஜாக்ஸ் (மும்பை), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (டெல்லி), ஜோஃப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான் ராயல்ஸ்), ஜேக்கப் பெத்தேல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு), ஜோஸ் பட்லர் (குஜராத் டைட்டன்ஸ்) ஆகியோர் ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

    • பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஏழு பேர் விண்ணப்பித்திருந்தனர்.
    • வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் இருந்து இவர் தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.

    பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தைச் சேர்ந்த மைக் ஹெஸன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு நான்கு வெளிநாட்டினர் உட்பட மொத்தம் ஏழு பேர் விண்ணப்பித்திருந்தனர். ஹெசன் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (பிஏஎல்) நடப்பு சாம்பியனான இஸ்லாமாபாத் யுனைடெட்டின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

    50 வயதான இவர் ஏற்கனவே நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்துள்ளார். அத்துடன் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

    எதிர்வரும் வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் இருந்து இவர் தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நக்வி கூறியதாவது:-

    பாகிஸ்தானின் வெள்ளை பந்து கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவரது நிபுணத்துவத்தையும் தலைமையையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம் என்று நக்வி கூறினார்.

    பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளராக முன்பு நியமிக்கப்பட்ட கேரி கிர்ஸ்டன், கில்லஸ்பி உள்ளிட்டோர் சில நாட்களிலேயே பதவியில் இருந்து விலகிய நிலையில், இடைக்கால பயிற்சியாளராக ஆகிப் ஜாவித் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
    • இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11-ந் தேதி தொடங்க உள்ளது.

    2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று காலையும் தென் ஆப்பிரிக்கா அணி தற்போதும் அறிவித்தனர்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சேனுரான் முத்துசாமி இடம் பிடித்துள்ளார்

    நாகையை பூர்வீகமாகக் கொண்ட இவர், 2019ல் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி இதுவரை 4 டெஸ்டில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11-ந் தேதி தொடங்க உள்ளது.
    • இந்த போட்டிக்கான இரு அணிகளும் தங்களது அணிகளை அறிவித்துள்ளது.

    2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3 - 1 என வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    மறுபுறம், தென்னாப்பிரிக்காவும் அதிக வெற்றிகளை பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11 அன்று தொடங்க உள்ளது.

    இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று காலை அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் இடம் பெற்ற டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்டார்க், ஹசில்வுட் ஆகியோர் இந்த டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் டெஸ்ட் தொடருக்காக ஐபிஎல் தொடரில் விலக வாய்ப்பு உள்ளது.

    ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:-

    உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட், நாதன் லியோன், மேத்யூ குஹ்னெமன், பிரெண்டன் டாகெட் (டிராவலிங் ரிசர்வ்)

    இந்நிலையில் டெம்பா பவுமா தலைமையிலான 16 பேர் கொண்ட டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஐபிஎல் தொடரில் முக்கிய பங்கு வகிக்கும் ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன் ஆகியோர் உள்ளனர். இது ஐபிஎல் அணிகளுக்கு பின்னடைவாக இருக்கும்.

    டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி, கார்பின் போஷ், கைல் வெர்ரைன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், செனுரன் பட்டுசாமி, டேன் பட்டுசாமி.

    • ஓய்வு குறித்து விராட் கோலி முன்னதாகவே பி.சி.சி.ஐ.யிடம் தெரிவித்து இருந்தார்.
    • 14 ஆண்டு கால அவரது டெஸ்ட் பயணம் முடிவுக்கு வந்தது.

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திடீரென அறிவித்தார்.

    ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கோலியின் ஓய்வு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    அதைதொடர்ந்து ரோகித் சர்மாவும், விராட் கோலியும் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றனர்.

    தற்போது 1 வாரத்துக்குள் இருவருமே டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஒருநாள் போட்டியில் மட்டுமே இனி விளையாடுவார்கள்.

    இந்திய அணி அடுத்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டில் விளையாடுகிறது.

    இந்த தொடரில் விளையாட கோலி விரும்பி இருந்தார். ஆனால் முன்னதாகவே தனது ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

    முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் சரண்தீப் சிங் கூறும்போது, 'இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய 'ஏ' அணி அங்கு செல்கிறது. இந்த அணியில் விளையாடி 3 முதல் 4 சதங்கள் அடிக்க கோலி விரும்பினார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஆர்வத்தில் அவர் இருந்தார்' என்றார்.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பிறகு கோலி ரஞ்சி டிராபியில் ஆடினார். இதனால் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக ஆர்வத்துடன் தான் இருந்தார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) மீது அவருக்கு இருந்த அதிருப்தி, ரோகித்சர்மாவின் ஓய்வு போன்றவற்றால் கோலி முன்னதாகவே ஓய்வு முடிவை அறிவித்து விட்டார்.

    ஆஸ்திரேலிய பயணத்தில் ஏற்பட்ட மோசமான தோல்வியால் இந்திய வீரர்கள் குடும்பத்தினரை அழைத்து செல்ல கடும்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இங்கிலாந்து பயணத்தின் போதும் இதே கட்டுப்பாடு இருக்கும். இதனால் பி.சி.சி.ஐ. மீது அவர் அதிருப்தியில் இருந்தார்.

    மேலும் ரோகித் சர்மா ஓய்வு பெற்று விட்டதால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சீனியர் வீரராக விராட் கோலி மட்டுமே இருப்பார். இந்த டெஸ்ட் தொடருக்கு சுப்மன்கில் அல்லது ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்படலாம். இளம் வீரரின் கீழ் விளையாட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கருதினார். இதன் காரணமாகவே அவர் தனது ஓய்வு முடிவை எடுத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு மட்டும் தன்னை மீண்டும் கேப்டனாக நியமிக்குமாறு விராட் கோலி கேட்டுக் கொண்டதாகவும், அதை பி.சி.சி.ஐ. நிராகரித்ததாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

    ஓய்வு குறித்து விராட் கோலி முன்னதாகவே பி.சி.சி.ஐ.யிடம் தெரிவித்து இருந்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி அவரிடம் ஓய்வு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு பி.சி.சி.ஐ. கேட்டுக்கொண்டது. ஆனால் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் பி.சி.சி.ஐ. வேண்டுகோளை நிராகரித்து டெஸ்டில் இருந்து நேற்று விடைபெற்றார்.

    14 ஆண்டு கால அவரது டெஸ்ட் பயணம் முடிவுக்கு வந்தது. பல்வேறு சாதனைகளை புரிந்து சாதித்து இருந்தார்.

    ×