என் மலர்
விளையாட்டு
- முதல் ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்துடன் இந்திய வீராங்கனைகள் வரிந்து கட்டுவார்கள்.
- இலங்கை அணி சரிவில் இருந்து மீண்டு பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.
இந்தியாவுக்கு வந்துள்ள சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடியது. இதில் முதலில் ஆடிய இலங்கையை 121 ரன்னில் மடக்கிய இந்தியா அந்த இலக்கை ஜெமிமா ரோட்ரிக்சின் அரைசதத்தால் (69 ரன்) 14.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்துடன் இந்திய வீராங்கனைகள் வரிந்து கட்டுவார்கள். பீல்டிங் தான் சற்று மந்தமாக இருந்தது. 4 கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டனர். அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். தொடக்க ஆட்டத்தில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி ஷர்மா அறிமுக வீராங்கனையாக அடியெடுத்து வைத்தார். விக்கெட் எடுக்காவிட்டாலும் 4 ஓவர்களில் 16 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து இலங்கை பேட்டர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.
இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்ற தனது நனவு நனவான உற்சாகத்தில் உள்ள 20 வயதான வைஷ்ணவியின் செயல்பாடு 2-வது ஆட்டத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் இலங்கை அணி சரிவில் இருந்து மீண்டு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து இகோர் ஸ்டிமாக் நீக்கப்பட்டார்.
- ஆசிய கோப்பையில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.
இந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து போட்டிகளின் முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த செய்தியின் மூலம் காணலாம்..
இந்திய ரசிகர்களின் கனவு தகர்ந்தது
2026-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஆசிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் இந்திய அணி தோல்வி கண்டு உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இதனால் கால்பந்து உலகக்கோப்பையில் இந்திய அணியை காண நினைத்த ரசிகர்களின் கனவு தகர்ந்து போனது.
இதைத்தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து இகோர் ஸ்டிமாக்கை நீக்கி இந்திய கால்பந்து சம்மேளனம் அதிரடி நடவடிக்கை எடுத்தது.

ஆசிய கோப்பையில் தோல்வி
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. இதில் இந்தியா 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, சிரியா மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றது.
ஆஸ்திரேலியா, சிரியா, உஸ்பெகிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக ஆடிய இந்தியா அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இந்த போட்டிகளிலும் இந்திய வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது.
சுனில் சேத்ரி ஓய்வு:
இந்தியாவில் கால்பந்தாட்டம் என்றால் அதன் ஹீரோவாக கருதப்பட்டவர் பைசுங் பூட்டியா. அவருக்கு பின்பு பலராலும் பெரிதும் அறியப்படுபவர் சுனில் சேத்ரி. இந்திய கால்பந்தாட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் சென்றதும், தன்னுடைய தனிப்பட்ட சாதனையாலும் தேசத்துக்கு பெருமை சேர்த்தவர் சுனில் சேத்ரி.

உலக அளவில் அதிக கோல் அடித்த நடப்பு வீரர்கள் பட்டியலில் போர்சுகல் நாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ மற்றும் அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்தபடியாக, சுனில் சேத்ரி 83 கோல்களுடன் 3 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 150 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர், அணிக்காக 94 கோல்களை அடித்துள்ளார். தனது அபார திறமையால் கால்பந்து உலகில் தனக்கென தனி இடம் பிடித்த சுனில் சேத்ரி, இந்த ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தார் .
- ஜேக்கப் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தமாக 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகளை ஜேக்கப் கைப்பற்றி உள்ளார்.
நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்றது.
இந்த போட்டியிலும் நியூசிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் தொடர் நாயகன் விருதை நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி தட்டி சென்றார். இந்த தொடரில் 23 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார்.
இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை ஜேக்கப் டஃபி (81 விக்கெட்டுகள்) படைத்துள்ளார். இதற்கு முன்பு சர் ரிச்சர்ட் ஜான் ஹட்லி 1985-ம் ஆண்டில் 79 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அவரது நீண்டகால சாதனையை ஜேக்கப் முறியடித்துள்ளார். இதன் மூலம் 48 ஆண்டு கால சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
ஜேக்கப் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தமாக 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 4 டெஸ்ட் போட்டியில் விளையாடி 25 விக்கெட்டுகளும் 20 டி20 போட்டியில் விளையாடி 35 விக்கெட்டுகளும் 11 ஒருநாள் போட்டியில் விளையாடி 21 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
மொத்தமாக ஒரு ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் பட்டியலில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முதல் 2 இடங்களில் உள்ளார். அவர் 2001-ம் ஆண்டில் 136 விக்கெட்டுகளும் 2006-ம் ஆண்டில் 128 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 1994-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே 120 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். 119 விக்கெட்டுகளுடன் 4-வது இடத்தில் மெக்ராத் (1999-ம் ஆண்டு) உள்ளார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்றது.
இந்த போட்டியிலும் நியூசிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணி மொத்தமாக 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி 1 டிராவுடன் 77.78 சதவீதம் பெற்றுள்ளது. 100 சதவீததுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் தொடர்கிறது.
3 முதல் 9 இடங்கள் முறையே தென் ஆப்பிரிக்கா, இலங்கை பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் உள்ளது.
- 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகிறது.
- முதலில் நடந்த 3 டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
இந்த தோல்வியின் மூலமாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக 16 தோல்விகளை இங்கிலாந்து அணி சந்தித்துள்ளது.
'பாஸ்பால்' என்ற இங்கிலாந்து வீரர்களின் அதிரடி பேட்டிங் ஸ்டைல் ஆஸ்திரேலிய மண்ணில் எடுபடவில்லை. மூன்று டெஸ்டிலும் இங்கிலாந்தை ஆஸ்திரேலிய பவுலர்கள் புரட்டியெடுத்து விட்டனர். இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக விளையாடிய 18 டெஸ்டுகளில் ஒன்றில் கூட ஜெயிக்கவில்லை. 16-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது.
நியூசிலாந்து அணி 1985-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 18 டெஸ்டுகளில் ஜெயித்ததில்லை. அது தான் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு அணியின் வெற்றில்லா நீண்ட பயணமாக இருந்தது. அந்த மோசமான சாதனையை இங்கிலாந்து இப்போது சமன் செய்துள்ளது.
- U19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
- இந்த போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது.
துபாயில் நடந்த U19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 347 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 156 ரன்களில் சுருண்டு 191 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்தியா அணி பேட்டிங் செய்த போது 5-வது ஓவரை பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அலி ராசா வீசினார். அந்த ஓவரில் வைபவ் சூர்யவன்ஷி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர் என பறக்கவிட்டார். ஆனால், அதே ஓவரில் வைபவ் 26 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
விக்கெட் விழுந்த உற்சாகத்தில் பந்துவீச்சாளர் அலி ராசா, வைபவ் சூர்யவன்ஷிக்கு மிக அருகில் சென்று, அவர் முகத்திற்கு நேராக ஆக்ரோஷமாக கத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது வைபவ்விற்கு கோபத்தை ஏற்படுத்தியது.
பெவிலியன் திரும்பும் போது கடுப்பான வைபவ் சூர்யவன்ஷி, அலி ராசாவை பார்த்து முறைத்தபடியே, திடீரென தனது காலை கையால் சுட்டிக்காட்டி ஏதோ சைகை செய்தார். "நீ என் காலில் இருக்கும் ஷூ.." என்பது போல அவர் சைகை செய்தார்.
மைதானத்தில் அவுட் ஆகி வெளியேறும் போது, எதிரணி வீரரை பார்த்து ஷூவை சுட்டிக்காட்டி வம்பிழுத்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பி உள்ளது. வெறும் 14 வயதான வைபவ் களத்தில் இப்படியா நடந்து கொள்வது? என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனது ஓவரில் 3 சிக்சர் அடித்த பேட்டரின் விக்கெட்டை வீழ்த்தும் போது எந்தவொரு பந்து வீச்சாளரும் ஆக்ரோஷமாக கொண்டாடுவார்கள் அதைதான் அவரும் செய்திருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
- இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி வருகை தந்தார்.
- நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சதத்ரு தத்தாவை போலீசார் கைது செய்தனர்.
கொல்கத்தா:
இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக வருகை தந்த அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி கொல்கத்தா, ஐதராபாத், மும்பை, டெல்லியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் உற்சாகமாக கலந்து கொண்டார். இதில் கொல்கத்தா சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சியில் மட்டும் பெரும் குளறுபடி ஏற்பட்டு விட்டது.
ரூ.15 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தி ஸ்டேடியத்தில் குழுமியிருந்த ரசிகர்கள், 10-15 நிமிடங்களிலேயே மெஸ்ஸி அங்கிருந்து கிளம்பியதால் அவரை சரியாக பார்க்க முடியாத ஆத்திரத்தில் மைதானத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பல மணிநேரம் போராடி போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நடந்த சம்பவத்துக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டார்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சதத்ரு தத்தாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'மைானத்துக்குள் மெஸ்ஸியை சூழ்ந்து கொண்டு அவரை தொடுவதும், கட்டியணைப்பதும் அவருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது. மெஸ்ஸியின் வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரித்தும் அதையும் மீறி பலர் அவ்வாறு நடந்து கொண்டனர். மேலும் மைதானத்தில் 150 பேருக்கு மட்டுமே 'பாஸ்' வழங்கப்பட்ட நிலையில், செல்வாக்கு மிக்க நபரின் தலையீட்டால் அதை மூன்று மடங்கு உயர்த்த வேண்டியதாகி விட்டது. அதன் பிறகே பாதுகாப்பும் சீர்குலைந்து போனது. இதனால் தான் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே மெஸ்ஸி வெளியேறினார்.
இந்திய பயணத்துக்காக மெஸ்ஸிக்கு ரூ.89 கோடி வழங்கப்பட்டது. மேலும் ரூ.11 கோடி அரசுக்கு வரியாக செலுத்தப்பட்டது. இவற்றில் கணிசமான தொகை ஸ்பான்சர்ஷிப் மற்றும் டிக்கெட் கட்டணம் மூலம் வசூலிக்கப்பட்டது' என தத்தா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் தத்தாவின் வங்கி கணக்கில் இருந்த ரூ.20 கோடி முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 138 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
- 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.
நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்றது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்களான கான்வே இரட்டை சதமும் (227 ரன்), கேப்டன் டாம் லாதம் சதமும் (137) அடித்தனர். ரச்சின் ரவீந்திரா 72 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் ஷீல்ஸ் , ஆண்டர்சன் பிலிப், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 420 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 156 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து 462 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் அடித்தது.
கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மிகவும் பொறுமையுடன் விளையாடிய இந்த தொடக்க ஜோடியை ஜேக்கப் டஃபி பிரித்தார். பிரெண்டன் கிங் 67 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து ஜான் கேம்பல் 105 பந்துகளை சந்தித்து 16 ரன்னில் அவுட் ஆனார்.
அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 138 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 87 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த 51 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
- இறுதிப் போட்டி தோல்வியால் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர்.
- இனி விளையாட விரும்பாமல் ஓய்வு பெற நினைத்தேன்.
புதுடெல்லி:
இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. 3 வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாக பணியாற்றிய அவர் டெஸ்ட், 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்.
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த உலக கோப்பையை கைப்பற்றிய பிறகு ரோகித் சர்மா 20 ஓவர் போட்டியில் இருந்து விடை பெற்றார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து பயணத்துக்கு முன்பு டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
மற்றொரு சீனியர் வீரரான விராட் கோலியும் இதே பாணியில் 20 ஓவர், டெஸ்ட்டில் விடை பெற்று இருந்தார். இருவரும் தற்போது ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்கள். 2027 உலக கோப்பையில் விளையாடுவதை இருவரும் இலக்காக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் 2023 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற பிறகு ஓய்வு பெற முடிவு செய்ததாக ரோகித் சர்மா புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
ரோகித் கூறியதாவது:-
2023 உலக கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு நான் முற்றிலும் மனமுடைந்து போனேன். இந்த விளையாட்டு என்னடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டதால் இனி விளையாட விரும்பாமல் ஓய்வு பெற நினைத்தேன். என்னிடம் எதுவும் மிச்சமில்லை என்று தோன்றியது. அதில் இருந்து மீள சிறிது காலம் ஆனது.
இறுதிப் போட்டி தோல்வியால் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். என்ன நடந்தது என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் கடினமான நேரமாக இருந்தது. ஏனென்றால் அந்த உலக கோப்பைக்காக நான் 2 ,3 மாதங்களுக்கு முன்பு மட்டு மல்ல 2022-ல் கேப்டன் பதவியை ஏற்றதில் இருந்தே எல்லாவற்றையும் அர்ப்பணித்து இருந்தேன்,
20 ஓவர் உலககோப்பையாக இருந்தாலும் சரி, 2023 உலக கோப்பையாக இருந்தாலும் சரி, உலக கோப்பையை வெல்வது மட்டுமே எனது ஒரே இலக்காக இருந்தது. அது நடக்காத போது நான் முற்றிலும் நிலைகுலைந்து போனேன். எனது உடலில் எந்த சக்தியும் இல்லை. அதில் இருந்து மீண்டு பழைய நிலைக்குத் திரும்ப 2 மாதங்கள் ஆனது.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
2023 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அவரது தலைமையில் 2024-ல் 20 ஓவர் உலக கோப்பை கிடைத்தது. ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவர் அதில் மட்டும் தற்போது ஆடி வருகிறார்.
- ஷர்துல் தாகூர் வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் வேலையாடவுள்ளார்.
- ஷர்துல் தாகூரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2 கோடி கொடுத்து வாங்கியது.
இந்திய கிரிக்கெட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவிக்கும் ஷர்துல் தாகூர் வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் வேலையாடவுள்ளார்.
ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாக லக்னோ வீரர் ஷர்துல் தாகூரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2 கோடி கொடுத்து வாங்கியது.
ஷர்துல் தாகூர் 2022 ஆண்டு தன் நீண்ட நாள் காதலியான மிதாலியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஷர்துல் தாகூர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அறிவித்துள்ளார். இதனையடுத்து பலரும் வருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
- சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா 4,000 ரன்கள் எடுத்தார்.
விசாகப்பட்டினம்:
இந்தியா, இலங்கை பெண்கள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஸ்மிருதி மந்தனா 153 போட்டிகளில் விளையாடி 4,000 ரன்கள் எடுத்துள்ளார்.
இதன்மூலம், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4,000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீராங்கனை என்ற உலக சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
சர்வதேச அளவில் 2வது வீராங்கனை ஆவார். இதற்கு முன் நியூசிலாந்தைச் சேர்ந்த சுசி பேட்ஸ் மட்டுமே 4000 ரன்களைக் கடந்துள்ளார்.
மேலும், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள் அடித்த முதல் ஆசிய வீராங்கனை என்ற வரலாற்றையும் ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
- இப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட் வீழ்த்தினார்.
- ஸ்டார்க் இந்தத் தொடரில் இதுவரை 22 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.
அடிலெய்டு:
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3வது போட்டி அடிலெய்டில் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அத்துடன் ஆஷஸ் டெஸ்ட் தொடரையும் மீண்டும் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டும், 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் வீழ்த்தினார். இந்தத் தொடரில் இதுவரை 22 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.
இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 750 விக்கெட் வீழ்த்திய 3வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 424 விக்கெட்டும், ஒருநாள் போட்டிகளில் 247 விக்கெட்டும், டி20 போட்டிகளில் 79 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
இந்தப் பட்டியலில் ஷேன் வார்ன் 999 விக்கெட்டும், கிளென் மெக்ராத் 948 விக்கெட்டுகளும் வீழ்த்தி முதல் இரு இடங்களில் உள்ளனர்.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






