என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதல் 3 போட்டியில் வென்று ஆஸ்திரேலியா டி20 தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.
    • நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியது. 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்றது.

    இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    • யுனைடெட் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் வெற்றி பெற்றார்.

    சிட்னி:

    யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், அர்ஜெண்டினாவின் சோலோனா சியாரா உடன் மோதினார்.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார்.

    • மெல்போர்ன் டெஸ்ட் போட்டி இரு நாளுக்குள் முடிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் 3 டெஸ்டுகளில் ஆஸ்திரேலியாவும், 4-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    மெல்போர்னில் நடந்த முந்தைய டெஸ்டில் இரு நாளுக்குள் அடங்கியதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான ஆஸ்திரேலியா சரிவில் இருந்து வலிமையாக மீண்டு பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.

    அதேசமயம், மெல்போர்ன் டெஸ்டில் கிடைத்த வெற்றியால் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியினர் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த டெஸ்டிலும் வென்று தொடரை 2-3 என முடிக்க ஆர்வமாக உள்ளனர்.

    இன்று நடக்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • தென் ஆப்பிரிக்காவின் டிவால்ட் பிரெவிஸ் முதல் இடத்தில் உள்ளார்.
    • வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

    மும்பை:

    ஐ.சி.சி. சார்பில் கடந்த ஆண்டில் அனைத்து வித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தவர்கள் பட்டியலை வெளியிட்டது.

    இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, வங்கதேசம், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 12 அணிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் டிவால்ட் பிரெவிஸ் 32 இன்னிங்ஸில் 65 சிக்சர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார்.

    இந்திய வீரரான அபிஷேக் சர்மா 21 இன்னிங்சில் 54 சிக்சர்களை அடித்து இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் 50 இன்னிங்ஸில் 54 சிக்சர்களும், இங்கிலாந்தின் ஹாரி புரூக் 45 இன்னிங்ஸில் 50 சிக்சர்களும், பாகிஸ்தானின் சாஹிப்சாதா பர்ஹான் 26 இன்னிங்ஸில் 45 சிக்சர்களும் அடித்து 3,4 மற்றும் 5வது இடத்தில் உள்ளனர்.

    • வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதால் இரு நாடுகளுக்கு இடையில் பதற்றம்.
    • முஷ்தபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் விளையாட இந்துக்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப்பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

    வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

    வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியுள்ளது.

    இது தொடர்பாக பேசிய BCCI செயலாளர் தேவஜித் சைகியா, "சமீபத்தில் நாடு முழுவதும் நடந்து வரும் சம்பவங்கள் காரணமாக, வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிக்குமாறு கே.கே.ஆர். அணிக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவருக்கு பதிலாக மாற்று வீரர் யாரையாவது கேட்டால், அதை அனுமதிக்கும்" என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் பிசிசிஐ-யின் உத்தரவை ஏற்று, முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.

    முஷ்தபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் 60 ஆட்டத்தில் 65 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அவர் கடந்த காலங்களில் ஐதராபாத், மும்பை, ராஜஸ்தான், சென்னை அணிகளுக்காக ஆடி இருந்தார்.

    • முதலில் விளையாடிய குஜராத் அணி 318 ரன்கள் குவித்தது.
    • அக்சர் படேல் 111 பந்தில் 130 ரன்கள் குவித்தார்.

    விஜய் ஹசாரே டிராபியில் இன்று நடைபெற்ற போட்டி ஒன்றில் குஜராத்- ஆந்திரா அணிகள் மோதின. முதலில் விளையாடிய குஜராத் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் குவித்தது.

    ஒரு கட்டத்தில் அந்த அணி 99 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு அக்சர் படேல் உடன் விஷால் ஜெய்ஸ்வால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெய்ஸ்வால் 60 பந்தில் 70 ரன்கள் விளாசினார். அக்சர் படேல் 111 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் 130 ரன்கள் குவித்தார்.

    பின்னர் 319 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆந்திரா களம் இறங்கியது. தொடக்க வீரர் ஞானேஷ்வர் 125 பந்தில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சோனி பிரசாத் 26 பந்தில் 48 ரன்கள் விளாசினார்.

    இருந்தபோதிலும், ஆந்திராவால் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆந்திரா 311 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது. கேப்டன் நிதிஷ் குமார் ரெட்டி 27 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    • ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தொடரில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறாதது ஏன் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 டி20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.

    இதில் முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி தொடங்க உள்ளது. ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

    இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    துணை கேப்டன் ஷ்ரேயஸ் விளையாடுவாரா? இல்லையா? என அவரது உடற்தகுதியை பொறுத்து பின்னர் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தொடரில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறாதது ஏன் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் 10 ஓவர்கள் பந்து வீசுவதற்கான உடற் தகுதிச் சான்றை இன்னும் ஹர்திக் பாண்ட்யா பெறாததால், அவரை நியூசிலாந்துக்கு எதிரான ODI தொடரில் தேர்வு செய்யவில்லை என பிசிசிஐ இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

    மேலும் டி20 உலக கோப்பை அணியிலும் அவர் உள்ளதால் வேலைப் பளு அதிகரித்து விடக் கூடாது என்ற நோக்கத்திலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி நடக்கவுள்ளது.
    • ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 டி20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.

    இதில் முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி தொடங்க உள்ளது. ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

    இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    துணை கேப்டன் ஷ்ரேயஸ் விளையாடுவாரா? இல்லையா? என அவரது உடற்தகுதியை பொறுத்து பின்னர் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வீரர்கள் விவரம்:-

    சுப்மன் கில் (C), ரோகித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் , ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட் , நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்

    • ஒயிட்பால் கிரிக்கெட்டில் பேட்டிற்கும், பந்திற்கும் இடையிலான பேலன்ஸ் சமநிலையாக இருக்க வேண்டும்.
    • டி20 கிரிக்கெட்டில் ஒரேயொரு பந்து வீச்சாளர் 5 ஓவர் வீசப்படுவதை பார்க்க விரும்புகிறேன்.

    கிரிக்கெட்டில் பேட்டிற்கும், பந்திற்கும் இடையிலான பேலன்ஸை சமநிலைப்படுத்த பல்வேறு விதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. என்றாலும் பேட்டர்களின் ஆதிக்கம்தான் கையோங்கியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களும் அதைத்தான் விரும்புகின்றனர்.

    டி20 கிரிக்கெட்டில் ஒரு பந்து வீச்சாளர் 4 ஓவர்கள் மட்டுமே வீச முடியும். குறைந்தபட்சம் 5 பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நிலையில், ஒரேயொரு பந்து வீச்சாளர் 5 ஓவர்கள் வீச அனுமதிக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரபல நடுவர் சைமன் டபெல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சைமன் டபெல் கூறியதாவது:-

    நான் சில டி20 லீக்குகளுக்கு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளேன். ஆனால், இன்னும் அவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால், ஒயிட்பால் கிரிக்கெட்டில் பேட்டிற்கும், பந்திற்கும் இடையிலான பேலன்ஸ் சமநிலையாக இருக்க வேண்டும். இதை பார்க்க விரும்புகிறேன்.

    டி20 கிரிக்கெட்டில் ஒரேயொரு பந்து வீச்சாளர் 5 ஓவர் வீசப்படுவதை பார்க்க விரும்புகிறேன். அனைத்து பந்து வீச்சாளர்களையும் 4 ஓவர்களில் கட்டுப்படுத்துவதால் பேட்ஸ்மேன் ஒருவர் முதல் பந்தில் இருந்து கடைசி வரை களத்தில் இருந்து 100 ரன்கள் அடிக்கக் கூடிய நிலை ஏற்படுகிறது.

    ஒரு ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மேனுக்கு எதிராக ஒரு ஆதிக்கம் செலுத்தும் பந்து வீச்சாளரால் சமநிலை செய்வதற்கு, அந்த பந்து வீச்சாளருக்கு 5 ஓவர்கள் வழங்க முடியுமா?. இந்த மாதிரியான விஷயங்கள் உங்களுக்கு தெரியும். நம்மால் எப்படி இந்த நிலையைச் சற்றே சமநிலைப்படுத்த முடியும் என்பதை நான் பார்க்க விரும்புகிறேன்.

    ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி உள்ளது. ஐஎல்டி20-யில் சூப்பர் சப் (Supre Sub) விதி உள்ளது. 11 வீரர்கள் களத்தில் விளையாடுவதை என்னுடைய மைய கிரிக்கெட் எனக்கு சொன்னது. நான் அதிகமான ஆல்-ரவுண்டர்களை பார்க்க விரும்புகிறேன். 11 பேருக்கு 11 பேர் என்பதை பார்க்க விரும்புகிறேன். இம்பேக்ட் பிளேயர் இரண்டு பந்துகளை சந்திக்கலாம். பீல்டிங் செய்ய இயலாது. அதில் மதிப்பு எங்கே இருக்கிறது? கிரிக்கெட் பாரம்பரிய அம்சங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    இவ்வாறு சைடன் டபெல் தெரிவித்துள்ளார்.

    2004 முதல் 2008 வரை ஐந்து முறை தொடர்ந்து ஐசிசி-யின் சிறந்த நடுவர் விருதை சைமன் டபெல் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியால் 120 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
    • எம்.ஐ. எமிரேட்ஸ் 16.1 ஓவரில் இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்றது.

    சர்வதேச லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற குவாலிபையர்-2 போட்டியில் மும்பை எம்.ஐ. எமிரேட்ஸ்- அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் களம் இறங்கிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அந்த அணியின் அலிஷன் ஷராஃபு 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எம்.ஐ. எமிரேட்ஸ் அணி சார்பில் கசான்ஃபர் 3 விக்கெட்டும், முகமது ரோகித் கான் மற்றும் பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் எம்.ஐ. எமிரேட்ஸ் களம் இறங்கியது. அந்த அணியின் டாம் பாண்டன் 53 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலும், ஷாகிப் அல் ஹசன் 24 பந்தில் 38 ரன்களும் அடிக்க 16.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் எம்.ஐ. எமிரேட்ஸ் இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் டெசர்ட் வைபர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.

    • பரோடா அணி 71 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது திணறியது.
    • ஹர்திக் பாண்ட்யா 11 சிக்ஸ், 8 பவுண்டரிகள் மூலம் 133 ரன்கள் விளாசினார்.

    விஜய் ஹசாரே தொடரில் பரோடா- விதர்பா அணிகள் மோதும் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. விதர்பாவிற்கு எதிராக பரோடா முதலில் பேட்டிங் செய்தது.

    பரோடா ஒரு கட்டத்தில் 71 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஹர்திக் பாண்ட்யா 7-வது வீரராக களம் இறங்கினார். ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி 11 சிக்ஸ், 8 பவுண்டரிகளுடன் 133 ரன்கள் விளாசினார்.

    "லிஸ்ட் ஏ" போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவின் முதல் சதம் இதுவாகும். இவர் இதுவரை 119 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போதுதான் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

    39-வது ஓவரை விதர்பா அணியின் பார்த் ரெகாடே வீசினார். இந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளையும் சிக்சருக்கு விரட்டினார். கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார். இதன் மூலம் ஒரே ஓவரில் 34 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்ட்யா அடித்த 133 ரன்களில் 31 ரன்கள் மட்டுமே சிங்கிள் ஆகும்.

    • முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
    • ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப் பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

    வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட் டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

    வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியுள்ளது.

    இது தொடர்பாக பேசிய BCCI செயலாளர் தேவஜித் சைகியா, " சமீபத்தில் நாடு முழுவதும் நடந்து வரும் சம்பவங்கள் காரணமாக, வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிக்குமாறு கேகேஆர் அணிக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவருக்கு பதிலாக மாற்று வீரர் யாரையாவது கேட்டால், அதை அனுமதிக்கும்" என்று தெரிவித்தார்.

    முஷ்தபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் 60 ஆட்டத்தில் 65 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அவர் கடந்த காலங்களில் ஐதராபாத், மும்பை, ராஜஸ்தான், சென்னை அணிகளுக்காக ஆடி இருந்தார்.

    ×