என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய பெண்கள் அணி மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.
    • அடுத்த ஐந்து பத்தாண்டுகளில் தோற்கடிக்க மிகவும் கடினமான அணியாக இருக்கப் போகிறது.

    இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவையும், இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இந்தியா முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    ஆஸ்திரேலியா அணியில் ஆஷ்லே கார்ட்னெர் இடம் பிடித்திருந்தார். இவர் வருகிற 9-ந்தேதி தொடங்கும் பெண்கள் பிரீமியர் லீக்கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறது.

    இவர் இந்திய பெண்கள் அணியை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்திய அணி குறித்து ஆஷ்லே கார்ட்னெர் கூறியதாவது:-

    இந்திய பெண்கள் அணி மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த ஐந்து பத்தாண்டுகளில் தோற்கடிக்க மிகவும் கடினமான அணியாக இருக்கப் போகிறது.

    இது ஒரு உற்சாகமான வாய்ப்பு. ஒரு ஆஸ்திரேலியராக இது சற்று பயமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இந்த விளையாட்டு இவ்வளவு விரைவாகவும் வேகமாகவும் வளர்ந்து வருகிறது என்பதை அறிவது பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது.

    உலகக் கோப்பைக்குப் பிறகு ஊடகங்களில் நான் கூறியிருக்கிறேன். மேலும் நாங்கள் இன்னும் உலகின் சிறந்த அணி என்று நான் கருதுவதை நான் மறுக்கவில்லை. உலக கோப்பைகள் உயர் நெருக்கடி தருணங்களில் உங்கள் வெற்றியை வெளிப்படுத்துகின்றன.

    இவ்வாறு ஆஷ்லே கார்ட்னெர் தெரிவித்தார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்தத் தொடரில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள்.

    சிட்னி:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ். இந்த டென்னிஸ் தொடரானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரில் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.

    நடப்பு ஆண்டிற்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. இறுதிப் போட்டி பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறுகிறது.

    கடும் சவால் அளிக்கும் இந்தத் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் யார் சாம்பியன் பட்டத்தை வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கான பரிசுத்தொகையானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஒட்டுமொத்த பரிசுத்தொகை 111.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.675 கோடியாகும்.

    இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 16 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒட்டுமொத்த பரிசுத்தொகை 96.15 மில்லயன் ஆஸ்திரேலிய டாலராக இருந்தது.

    • நியூசிலாந்து கிளென் பிலிப்ஸ் தலைசிறந்த பீல்டர் ஆவார்.
    • இவர் வலது கை பேட்டிங் பழக்கம் கொண்டனர்.

    நியூசிலாந்து அணியின் தலைசிறந்த பீல்டராகவும், பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்து வருபவர் கிளென் பிலிப்ஸ். இவர் வலது கை பேட்டிங் பழக்கம் கொண்டவர். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்த மாதம் கடைசியில் இந்தியாவில் தொடங்குகிறது.

    இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். வலது கை பேட்ஸ்மேன்கள் லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திணறுவார்கள். இதனால் வலது கை பேட்ஸ்மேனான பிலிப்ஸ், இடது கை பேட்ஸ்மேனாக முயற்சி மேற்கொண்டு வருகிறார். லெஃப் ஆர்ம் ஸ்பின்னர் பந்து வீசும்போது இடது கை பேட்ஸ்மேனாக விளையாட முடிவு செய்துள்ளார்.

    இது தொடர்பாக கிளென் பிலிப்ஸ் கூறியதாவது:-

    எனது இடது கை பேட்டிங் பயிற்சியை மகிழ்ச்சியாக செய்து வருகிறேன். உண்மையிலே, அதை பல காரத்திற்காக செய்கிறேன். முதலில் இரண்டு கைகளும், மூளையின் இரண்டு பக்கங்களும் வேலை செய்வதற்காக. ஆனால், ஒருவேளை ஏதேனும் ஒரு கட்டத்தில் இடது கை சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான வாய்ப்பிற்காகவும் கூட.

    வலது, இடது என இரண்டு பக்கமும் பேட்டிங் செய்வதற்கு இரண்டு ஆண்டு காலம் எடுத்துக் கொண்டது. இது எதிர்காலத்திற்கான ஒரு விசயம்.

    ஆனால், நிறைய இடது கை பந்துவீச்சு இருக்கப்போகும் ஒரு போட்டியில் அந்த வாய்ப்பு கிடைத்ததால், அதை முயற்சி செய்து பார்க்க, அந்தப் போட்டிக்கு முந்தைய பயிற்சி ஓரளவிற்குப் பொருத்தமாக இருந்தது என்று நினைக்கிறேன். மேலும், அந்தப் போட்டியின்போது அதை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது மிகவும் சிறப்பாக இருந்தது.

    பந்தை முடிந்தவரை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். அதை நான் முடிந்தவரை செய்துள்ளேன். அதற்கான தயார்படுத்துதலை செய்துள்ளேன். அதனால் பலனளிக்காமல் இருக்க எந்தக் காரணமும் இல்லை.

    இவ்வாறு கிளென் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.

    • பந்துவீச்சில் தீப்தி சர்மா தரவரிசைக்கான 735 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.
    • பேட்டிங்கில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 இடங்கள் முன்னேறியுள்ளார்.

    துபாய்:

    ஐ.சி.சி. சிறந்த வீராங்கனைகள், அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.

    இதில் பெண்களுக்கான டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்டிங் வரிசையில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் 2 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தில் உள்ளார்.

    இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக அரை சதம் கடந்தார்.

    இந்தப் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா 3-வது இடத்தை தக்கவைத்துள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை பெத் மூனி முதல் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹெய்லே மேத்யூஸ் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஷபாலி வர்மா 6வது இடத்தில் உள்ளார்.

    பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீராங்கனை சுதர்லேண்டு 736 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார். இந்தியாவின் தீப்தி சர்மா ஒரு புள்ளி குறைந்து 2வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்தார். ஹாரி புரூக் 84 ரன்கள் எடுத்தார்.

    சிட்னி:

    ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 97.3 ஓவரில் 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்தார். ஹாரி புரூக் 84 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி பொறுப்புடன் விளையாடியது. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 518 ரன்களை குவித்து 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்து 129 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளார்.

    இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்களை அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேனை ஸ்மித் முந்தினார்.

    இங்கிலாந்துக்கு எதிராக பிராட்மேன் 5,028 ரன்களை எடுத்துள்ள நிலையில், ஸ்டீவன் ஸ்மித் 5,085 ரன்களை எடுத்துள்ளார்.

    • முகம்மது ஷமி மற்றும் அவரது சகோதரர் சமர்ப்பித்த விண்ணப்பப் படிவங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது
    • விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருவதால், குறிப்பிட்ட தேதியில் ஆஜராக இயலாது

    இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமி மற்றும் அவரது சகோதரர் முகம்மது கைப் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறையின் ஒரு பகுதியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

    மேற்குவங்கத்தில் டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வரும் 'வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியின்' போது, முகம்மது ஷமி மற்றும் அவரது சகோதரர் சமர்ப்பித்த விண்ணப்பப் படிவங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, 'புரோஜனி மேப்பிங்' மற்றும் 'செல்ஃப் மேப்பிங்' விவரங்களில் தவறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    கொல்கத்தாவின் ராஷ்பெஹாரி தொகுதியின் கீழ் வரும் வார்டு எண் 93-ல் ஷமி ஒரு வாக்காளராகப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பான விசாரணைக்காக, ஜனவரி 5, 2026 அன்று ஆஜராகுமாறு அவருக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் ராஜ்கோட்டில் நடைபெறும் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருவதால், குறிப்பிட்ட தேதியில் ஆஜராக இயலாது என ஷமி தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்துள்ளார்.

    ஷமியின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் ஆணையம் இந்த விசாரணையை வரும் ஜனவரி 9 முதல் 11 வரையிலான தேதிகளுக்கு மாற்றியமைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவில் பிறந்த போதிலும், ஷமி பல ஆண்டுகளாக கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

    • டாஸ் வென்ற வங்காளம் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஐதராபாத் அணி 50 ஓவரில் 352 ரன்கள் குவித்தது.

    ராஜ்கோட்:

    விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பி பிரிவில் நடந்த லீக் போட்டியில் ஐதராபாத், வங்காளம் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளம் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமன்ராவ் பெரலா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார்.

    முதல் விக்கெட்டுக்கு ராகுல் சிங், அமன்ராவ் பெரலா ஜோடி 104 ரன்கள் சேர்த்தது. ராகுல் சிங் 65 ரன்னில் அவுட்டானார்.

    கேப்டன் திலக் வர்மா 34 ரன்னிலும், அபிராத் ரெட்டி 5 ரன்னிலும், பிரக்ஞய் ரெட்டி 22 ரன்னிலும், பிரணவ் வர்மா 7 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடிய அமன்ராவ் பெரெலா இரட்டை சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. அமன்ராவ் பெரலா 200 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
    • நேபாளம் அணி தனது டி20 உலக கோப்பை போட்டிக்கான ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

    20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது.

    இந்நிலையில், 'சி' பிரிவில் இடம்பெற்றுள்ள நேபாளம் அணி தனது டி20 உலக கோப்பை போட்டிக்கான ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

    நேபாளம் இடம்பெற்றுள்ள 'சி' பிரிவில் , இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், இத்தாலி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 166 பந்துகளில் 163 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 97.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்து அவுட்டானார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக மைக்கேல் நெசர் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

    இதையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 166 பந்துகளில் 163 ரன்கள் குவித்து அவுட்டானார். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஸ்மித் சதமடித்து அசத்தினார்.

    3 ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்களை குவித்து 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஸ்மித் 129 ரன்களுடனும் வெப்ஸ்டர் 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஏற்கனவே கைப்பற்றி விட்டது குறிப்பிடத்தக்கது.

    • இதுவரை கேப்டனாக இருந்த ஷர்துல் தாக்குர் காயம் காரணமாக விலகல்.
    • எஞ்சிய இரு லீக் ஆட்டங்களுக்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக இருப்பார் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்தது.

    33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 'சி' பிரிவில் அங்கம் வகிக்கும் மும்பை அணி இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடத்தில் உள்ளது. மும்பை அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் இன்று இமாசலபிரதேசத்தையும், நாளை மறுநாள் பஞ்சாப்பையும் சந்திக்கிறது.

    இந்த நிலையில் மும்பை அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கேப்டனாக இருந்த ஷர்துல் தாக்குர் காயம் காரணமாக விலகி இருப்பதால் எஞ்சிய இரு லீக் ஆட்டங்களுக்கு ஸ்ரேயாஸ் கேப்டனாக இருப்பார் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்தது.

    கடந்த அக்டோபர் 25-ந்தேதி சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பந்தை பிடிக்கும் போது கீழே விழுந்து காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஸ்ரேயாஸ் அய்யர் அதன் பிறகு எந்தவித போட்டியிலும் ஆடவில்லை. வருகிற 11-ந்தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யரை, விஜய் ஹசாரே போட்டியில் ஆடி உடல் தகுதியை நிரூபிக்கும் படி இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் அவர் உடல் தகுதியை நிரூபிப்பதை பொறுத்தே அவரது இடம் அணியில் உறுதியாகும்.

    • சென்னையில் நடந்த 64-வது தேசிய தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டத்தில் 11.36 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கம் வென்று கவனத்தை ஈர்த்தார்.
    • தேசிய ஊக்கமருந்துதடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரித்தது.

    தமிழகத்தின் முன்னணி ஓட்டப்பந்தய வீராங்கனை எஸ்.தனலட்சுமி ஏற்கனவே ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 3 ஆண்டு தடையை அனுபவித்தார். கடந்த ஆண்டு மறுபிரவேசம் செய்த அவர் ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்த 64-வது தேசிய தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டத்தில் 11.36 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கம் வென்று கவனத்தை ஈர்த்தார்.

    அதற்கு முன்பாக அவரிடம் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஊக்கமருந்து சோதனை நடத்திய போது டிரோஸ்டானோலான் என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    இது குறித்து தேசிய ஊக்கமருந்துதடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரித்தது. 2-வது முறையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் அவருக்கு 8 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதியில் இருந்து கணக்கிடப்பட்டுள்ளது. 27 வயதான தனலட்சுமி திருச்சியை சேர்ந்தவர் ஆவார்.

    • கிளப் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் அணியில் போதிய முன்னேற்றம் இல்லாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
    • பர்ன்லி அணிக்கு எதிரான போட்டியில் டேரன் பிளெட்சர் அணியின் தலைமை பொறுப்பை ஏற்பார்

    மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரூபன் அமோரிம் இன்று நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிளப் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் அணியில் போதிய முன்னேற்றம் இல்லாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

    இதுதொடர்பாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், 

    "ரூபன் நவம்பர் 2024-இல் நியமிக்கப்பட்டார், மேலும் மே மாதம் பில்பாவோவில் நடந்த யுஇஎஃப்ஏ (UEFA) யூரோப்பா லீக் இறுதிப்போட்டிக்கு அணியை வழிநடத்திச் சென்றார். 

    பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் ஆறாவது இடத்தில் இருக்கும்நிலையில், இந்த மாற்றம் தேவை என அணியின் தலைமை முடிவு செய்துள்ளது. இது அணி பிரீமியர் லீக் தரவரிசையில் மிக உயர்ந்த இடத்தைப் பிடிப்பதற்கான சிறந்த வாய்ப்பை வழங்கும்.

    கிளப்பிற்கு ரூபன் ஆற்றிய பங்களிப்பிற்கு கிளப் நிர்வாகம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறது. புதன்கிழமை (ஜன.7) பர்ன்லி அணிக்கு எதிரான போட்டியில் டேரன் பிளெட்சர் அணியின் தலைமை பொறுப்பை ஏற்பார்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ரூபன் அமோரிம் ஒரு போர்ச்சுகீசிய கால்பந்து பயிற்சியாளர் மற்றும் முன்னாள் வீரர் ஆவார். முன்னதாக ஸ்போர்டிங் சிபி அணியின் பயிற்சியாளராக இவர் இருந்தபோது, 19 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணிக்கு லீக் பட்டத்தை வென்று கொடுத்தார். அதற்கு முன்பு பிராகா (Braga) அணியிலும் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். நவம்பர் 2024-ல் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார். இவரது தலைமையின் கீழ் அந்த அணி 2025-ஆம் ஆண்டு யுஇஎஃப்ஏ யூரோப்பா லீக்கில் (UEFA Europa League) இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

    ×