என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • நிடா தருக்கு பதிலாக பாத்திமா சனா புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கராச்சி:

    9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் பாகிஸ்தான் கேப்டன் நிடா தர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதிலாக பாத்திமா சனா புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிடா தர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

    டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் விவரம் பின்வருமாறு:

    பாத்திமா சனா (கேப்டன்), அலியா ரியாஸ், டயானா பெய்க், குல் பெரோசா, இராம் ஜாவேத், முனீபா அலி, நஷ்ரா சுந்து, நிடா தர், ஒமைமா சோஹைல், சதாப் ஷமாஸ், சாடியா இக்பால், சித்ரா அமின், சையதா அரூப் ஷா, தஸ்மியா ரூபாப் மற்றும் துபா ஹாசன்

    ரிசர்வ் வீராங்கனைகள்: நஜிஹா அலி, ரமீன் ஷமிம் மற்றும் உம்மி ஹனி

    • வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களைக் குவித்தது.
    • பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சவுத் ஷகீல் 141 ரன்னில் அவுட்டானார். சயீம் அயூப் அரை சதம் அடித்து 56 ரன்னில் அவுட்டானார்.

    வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து அடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்னில் அவுட்டானார். ஷட்மன் இஸ்லாம் 93 ரன்னிலும், மெஹிதி ஹசன் 77 ரன்னிலும், லிட்டன் தாஸ் 56 ரன்னிலும், மொமினுல் ஹக் 50 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா 3 விக்கெட்டும், குர்ரம் ஷசாத், முகமது அலிம் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    117 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. வங்கதேச வீரர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முகமது ரிஸ்வான் 51 ரன் எடுத்தார்.

    வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் விக்கெட் இழப்பின்றி எளிதில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • ஜோகோவிச் 24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
    • பெண்கள் பிரிவில் இகா ஸ்வியாடெக் சபலென்கா, ரைபகினா, கோகோ கவூப் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    நியூயார்க்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் பட்டத்தை அல் காரஸ் (ஸ்பெயின்) வென்றார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை சின்னர் (இத்தாலி) கைப்பற்றினார். பெண்கள் பிரிவில் சபலென்கா (பெலாரஸ்) ஆஸ்திரேலிய ஓபனையும், இகா ஸ்வியாடெக் (போலந்து) பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், பார்பரா கிரஜ்கோவா (செக் குடியரசு) விம்பிள்டன் பட்டத்தையும் வென்றார்கள்.

    ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நாளை (26-ந்தேதி) தொடங்குகிறது. செப்டம்பர் 8-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜோ கோவிச் (செர்பியா), சின்னர் அல்காரஸ், அலெக் சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), மெட்வதேவ், ரூப லெவ் (ரஷியா) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

    ஜோகோவிச் 24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளார். 25-வது பட்டத்துக்காக அவர் காத்திருக்கிறார்.

    பெண்கள் பிரிவில் இகா ஸ்வியாடெக் சபலென்கா, ரைபகினா, கோகோ கவூப் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    • ஷிகர் தவான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்
    • ஷிகர் தவானுக்கு கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தினேஷ் கார்த்தி, பும்ரா வாழ்த்து

    இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஷிகர் தவான். இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.11 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும்.

    38 வயதாகும் ஷிகர் தவான் 2010-ம் ஆண்டு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2022 ஒருநாள் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.

    டெஸ்ட் போட்டியில் 2018- ம் ஆண்டுக்குப்பின் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2021-க்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.

    இந்நிலையில், ஷிகர் தவானுக்கு அவரது நெருங்கிய நண்பர் விராட் கோலி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவரது பதிவில், "ஷிகர் தவான், நீங்கள் இந்தியாவின் மிகவும் நம்பகமான தொடக்க வீரர்களில் ஒருவராக இருந்தீர்கள். நீங்கள் எண்ணற்ற நினைவுகளை எங்களுக்கு கொடுத்துள்ளீர்கள். விளையாட்டின் மீதான உங்கள் ஆர்வம், உங்கள் விளையாட்டுத்திறன் மற்றும் உங்களது அற்புதமான புன்னகையை நாங்கள் தவற விடுவோம். ஆனால் உங்கள் கிரிக்கெட் பாரம்பரியம் எப்போதும் வாழும்.

    நீங்கள் கொடுத்த நினைவுகள், மறக்க முடியாத நிகழ்ச்சிகள் மற்றும் எப்போதும் உங்கள் இதயத்திடம் இருந்து வழிநடத்தியதற்காக நன்றி. மைதானத்திற்கு வெளியே உங்களது அடுத்த இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும், ஷிகர் தவானுக்கு கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தினேஷ் கார்த்தி, பும்ரா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • ஹர்திக் பாண்ட்யாவும் நடாஷாவும் பிரிந்து வாழ முடிவு எடுத்துள்ளனர்.
    • இருவரும் பிரிந்தற்கான காரணம் குறித்து டைம்ஸ் நவ் செய்தித்தாளில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

    செர்பியா நாட்டைச் சேர்ந்த நடாஷாவை இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யா கடந்த நான்கு வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    அண்மையில் ஹர்திக் பாண்ட்யாவும் நடாஷாவும் பிரிந்து வாழ முடிவு எடுத்தனர். இந்த தகவலை ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    எதற்காக ஹர்திக் பாண்ட்யாவும் நடாஷாவும் பிரிந்தார்கள் என்பது புரியாத புதிராகவே இருந்தது.

    இந்நிலையில் அவர்கள் இருவரும் பிரிந்தற்கான காரணம் குறித்து டைம்ஸ் நவ் செய்தித்தாளில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

    அதில், "பிரபல மாடலான நடாஷாவின் வாழ்க்கை முறையும் கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யாவின் வாழ்க்கை முறையும் வித்தியாசமானதாக இருந்துள்ளது. திருமணத்திற்கு பின்பு தான் பாண்ட்யாவும் நானும் வித்தியாசமான குணாதிசயம் கொண்டவர்கள் என்பதை நடாஷா உணர்ந்துள்ளார்.

    பாண்ட்யா ஆடம்பரமாகவும் தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கும் நபராக இருந்தது நடாஷாவிற்கு பிடிக்கவில்லை. இந்த பிரச்சனை இருவருக்கும் இடையே இடைவெளியை உருவாக்கியுள்ளது. இந்த இடைவெளி காலப்போக்கில் பெரிதாகி பிரிந்து வாழும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜோ ரூட் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 64 அரைசதங்களை விளாசியுள்ளார்.
    • சச்சின் 68 அரைசதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்துள்ளவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். டெண்டுல்கர் 200 போட்டிகளில் விளையாடி 53.78 சராசரியுடன் 15,921 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளார். அவர் 144 போட்டிகளில் விளையாடி 12131 ரன்கள் குவித்துள்ளார்.

    33 வயதான ஜோ ரூட் இன்னும் சில வருடங்கள் டெஸ்ட்ட் கிரிக்கெட் விளையாடினால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2 ஆவது இன்னிங்சில் 62 ரன்கள் அடித்து புதிய சாதனை ஒன்றை ஜோ ரூட் படைத்துள்ளார். இந்த அரைசதத்தோடு ஜோ ரூட் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 64 அரைசதங்களை விளாசியுள்ளார்.

    இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக அரைசதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட், ஆலன் பார்டரை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    சச்சின் 68 அரைசதங்களுடன் முதல் இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்தர்பால் 66 அரைசதங்களுடன் 2-ம் இடத்திலும் உள்ளார்.

    • முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது.
    • இலங்கை முதல் இன்னிங்சில் 236 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

    இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 358 ரன் குவித்தது.

    122 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை எடுத்து இருந்தது. நேற்று 4 ஆம் நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 326 ரன் எடுத்தது. இதனால் இங்கிலாந்துக்கு 205 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இலங்கை சார்பில் காமிந்து மெண்டீஸ் 113 ரன்னும், தினேஷ் சன்டிமால் 79 ரன்னும், மேத்யூஸ் 65 ரன்னும் எடுத்தனர். கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் தலா 3 விக்கெட்டுகளையும், அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    205 ரன்கள் எனும் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 57.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சார்பில் ஜோ ரூட் 62 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைபெற்றுள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 29 ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருக்கிறது.

    • ஷிகர் தவான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.
    • ஷிகர் தவானுக்கு கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தினேஷ் கார்த்தி, பும்ரா வாழ்த்து.

    இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஷிகர் தவான். இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.11 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும்.

    38 வயதாகும் ஷிகர் தவான் 2010-ம் ஆண்டு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2022 ஒருநாள் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.

    டெஸ்ட் போட்டியில் 2018- ம் ஆண்டுக்குப்பின் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2021-க்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.

    ஷிகர் தவானுக்கு கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தினேஷ் கார்த்தி, பும்ரா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    சச்சின் தனது எக்ஸ் பதிவில், "கிரிக்கெட் ஆடுகளம் நிச்சயம் உங்களது ஆரவாரத்தை இழக்கும். உங்கள் புன்னகை, உங்கள் ஸ்டைல் மற்றும் விளையாட்டின் மீதான உங்கள் அன்பு எப்போதும் மற்றவர்களை ஈர்க்க கூடியது. உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் பக்கங்களை நீங்கள் புரட்டி பார்த்தால் அதில் உங்கள் பாரம்பரியம் ரசிகர்கள் மற்றும் சக வீரர்களின் இதயங்களில் என்றென்றும் பொறிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் இனி நடக்கப்போவது அனைத்தும் சிறந்ததாக இருக்கும் என்று வாழ்த்துகிறேன். எப்போதும் சிறிது கொண்டே இருங்கள் ஷிகர் தவான்" என்று பதிவிட்டுள்ளார்.

    • 2025 ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
    • ரோகித் சர்மா மும்பை அணியில் இருந்து விலகி வேறு அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2025 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட இந்திய டி20 அணியின் கேப்டனாக உள்ள சூர்யகுமார் யாதவ்க்கு அழைப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.

    கடந்த ஐபிஎல் சீசனின்போது மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்குப் பதில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஹர்திக் பாண்ட்யா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி சோபிக்கவில்லை. இதற்கிடையே அணியில் பிளவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

    வரும் ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அந்த அணியில் இருந்து விலகி வேறு அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மும்பை அணியில் நீண்ட நாட்களாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ்க்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படாததால் அவரும் மும்பை அணியில் நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    சூர்யகுமார் யாதவ் 2014 முதல் 2017 வரை கொல்கத்தா அணிக்காக விளையாடி உள்ளார். அதன் பிறகு தான் மும்பை அணி அவரை ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
    • நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 26 பந்தில் 7 சிக்சர்கள் உள்பட 65 ரன்கள் குவித்தார்.

    டிரினிடாட்:

    வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய ஸ்டப்ஸ் 76 ரன்கள் எடுத்தார்.

    175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 26 பந்தில் 7 சிக்சர்கள் உள்பட 65 ரன்கள் குவித்தார்.

    ஷாய் ஹோப் அரைசதம் அடித்த நிலையில் 51 ரன்னிலும், அலிக் அத்தானஸ் 40 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இந்நிலையில், நிக்கோலஸ் பூரன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவை முந்தி 3-வது இடம்பிடித்தார்.

    இந்தப் பட்டியலில் முதலிடத்தில் 205 சிக்சர்களுடன் ரோகித் சர்மாவும், 173 சிக்சர்களுடன் மார்ட்டின் கப்தில் 2வது இடத்திலும் உள்ளனர். நிக்கோலஸ் பூரன் 139 சிக்சருடன் 3வது இடம் பிடித்துள்ளார்.

    137 சிக்சருடன் ஜோஸ் பட்லர் 4வது இடமும், 136 சிக்சருடன் சூர்யகுமார் யாதவ் 5வது இடத்திலும் உள்ளனர்.

    • கடந்த சில வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியால் நான் பாதிக்கப்பட்டேன்.
    • உண்மையில் நான் பள்ளியில் கூட சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை என்றார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல். இவரும், ஹர்திக் பாண்ட்யாவும் கடந்த 2019-ம் ஆண்டு பெரிய சர்ச்சையில் சிக்கினர்.

    காபி வித் கரன் ஜோகர் எனும் டி.வி. நிகழ்ச்சியில் பாண்ட்யா மற்றும் ராகுல் ஆகியோர் ஜோடியாக பங்கேற்றனர். அங்கு கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா பதிலளித்தனர். அதனால் ரசிகர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் அவர்களை கடுமையாக விமர்சித்தனர். மேலும், ஹர்பஜன், சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களும் கடுமையாக சாடினர்.

    பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் ஆஸ்திரேலியாவில் விளையாடிக் கொண்டிருந்த அவர்களுக்கு பி.சி.சி.ஐ. அதிரடி தடை விதித்தது.

    இந்நிலையில், சர்ச்சைக்குரிய பேட்டி குறித்து கே.எல்.ராகுல் சமீபத்தில் மனம் திறந்தார். அந்தப் பேட்டியில் அவர் பேசியதாவது:

    நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிண்டலடிப்பதில் சிறந்தவனாக இருந்தேன்.

    கடந்த சில வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியால் நான் பாதிக்கப்பட்டேன்.

    அந்தப் பேட்டி முற்றிலும் வித்தியாசமான உலகமாக இருந்தது. அது என்னை மாற்றியது.

    அந்தப் பேட்டி என்னிடம் பெரிய வடுவை ஏற்படுத்தியது. அதனால் நான் அணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டேன்.

    உண்மையில் நான் பள்ளியில் கூட சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை. தண்டனை பெற்றதில்லை.

    அந்தச் சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பதுகூட எனக்கு தெரியவில்லை. பள்ளியிலும் எனது பெற்றோர் வந்து பதில் சொல்லும் அளவுக்கு நான் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதில்லை என தெரிவித்தார்.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்துள்ளது.
    • இலங்கை 2வது இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    லண்டன்:

    இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ஆல் அவுட்டானது. தனஞ்ஜெயா டி சில்வா 74 ரன்னும், மிலன் ரத்னாயகே 72 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், சோயிப் பஷீர் தலா 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 122 ரன்கள் முன்னிலை பெற்றது.

    ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 111 ரன்னில் அவுட்டானார். ஹாரி ப்ரூக் 56 ரன்னும், ஜோ ரூட் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இலங்கை அணி சார்பில் அஷிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2வது இன்னிங்சை ஆடியது. தொடக்கத்தில் முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். ஏஞ்சலோ மேத்யூஸ் 65 ரன்னில் அவுட்டானார்.

    கமிந்து மெண்டிஸ் தனி ஆளாகப் போராடி சதமடித்து அசத்தினார். அவர் 113 ரன்களில் ஆட்டமிழந்தார். தினேஷ் சண்டிமால் 79 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், மேத்யூ பாட்ஸ் 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

    ×