என் மலர்
விளையாட்டு
- வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களைக் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
- அந்த அணியின் முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சவுத் ஷகீல் 141 ரன்னில் அவுட்டானார். சயீம் அயூப் அரை சதம் அடித்து 56 ரன்னில் அவுட்டானார்.
வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, வங்கதேச அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷட்மன் இஸ்லாம் பொறுப்புடன் ஆடினார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 93 ரன்னில் அவுட்டானார். மொமினுல் ஹக் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மூன்றாம் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 55 ரன்னும், லிட்டன் தாஸ் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. லிட்டன் தாஸ் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். 7வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிமுடன், மெஹிதி ஹசன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர்.
சிறப்பாக ஆடிஅய் முஷ்பிகுர் ரஹிம் சதமடித்து அசத்தினார். மெஹிதி ஹசன் அரை சதம் கடந்தார்.
7-வது விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்த நிலையில், முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்னில் அவுட்டாகி இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மெஹிதி ஹசன் 77 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தானை விட 117 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா 3 விக்கெட்டும், குர்ரம் ஷசாத், முகமது அலிம் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது.
- நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி 6 நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறுகிறது.
கொழும்பு:
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.
அதன்படி, நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி 6 நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் கண்டிப்பாக ஓய்வு நாள் ஒன்று உண்டு. இதனால் டெஸ்ட் போட்டி 6 நாட்கள் நடைபெற்று வந்தது.
சமீபத்தில் 2008-ம் ஆண்டு டாக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 நாட்கள் விளையாடியது. அவர்கள் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதால் அந்த குறிப்பிட்ட நாள் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது.
23 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் இதுபோன்ற அரிய நிகழ்வு நடைபெற உள்ளது.
இலங்கை அணி கடந்த 2001-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 6 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடியது.
இந்நிலையில், நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் செப்டம்பர் 18 முதல் 23-ம் தேதி வரை என 6 நாட்கள் நடக்கிறது.
செப்டம்பர் 21-ம் தேதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடப்பதால் அந்த நாள் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி அதே மைதானத்தில் செப்டம்பர் 26-30 வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.
- இந்தியாவின் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் தக்ஷிணேஸ்வர் சுரேஷ்-இங்கிலாந்தின் லூகா பவ் ஜோடி, அமெரிக்காவின் ஜாக்சன் வித்ரோ-நாதனியல் லேமன்ஸ் ஜோடி உடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் தக்ஷிணேஸ்வர் சுரேஷ் ஜோடி 4-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
- ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா.
- கடந்த சீசனில் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் அணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது.
இந்திய டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் கேப்டனான ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
கடந்த சீசனின்போது திடீரென கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஹர்திக் பாண்ட்யா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி சோபிக்கவில்லை. இதற்கிடையே அணியில் பிளவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
அத்துடன் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ரோகித் சர்மா எதுவும் தெரிவிக்கவில்லை. அதேபோல் அணி நிர்வாகமும் ரோகித் சர்மாவை விடுவிக்கும் எண்ணம் உள்ளது என்பது போன்ற கருத்தை தெரிவிக்கவில்லை.

ஆனால் டெல்லி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட அணிகள் ரோகித் சர்மாவை வாங்க தயாராக இருக்கின்றன. 2025-ம் ஆண்டுக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தின்போது எவ்வளவு தொகை கொடுத்தாவது அவரை ஏலம் எடுக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான இரு அணிகளும் தலா 50 கோடி ரூபாய் ஒதுக்கி வைத்துள்ளதாம்.
ரோகித் சர்மா உறுதிப்படுத்துதலுக்கான இரு அணிகளும் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தலா 100 முதல் 125 கோடி வரை செலவழித்து வீரர்களை ஏலத்தில் எடுக்க பிசிசிஐ அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடப் போகிறேன் என அறிவிப்பு.
- ஓய்வு முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்பவர் கே.எல். ராகுல். இவர் தனது சமூக வலைப்பக்கத்தில் விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடப் போகிறேன். காத்திருங்கள் எனத் தெரிவித்திருந்தார்.
கே.எல். ராகுலுக்கு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அதன்பின் நடைபெற்ற இலங்கை தொடரில் அவர் விளையாடவில்லை. இதனால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கலாம் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் தீயாகப் பரவியது.
இந்த நிலையில் மனநிலை குன்றிய குழைந்தைகளின் வாழ்க்கை மேம்படுவதற்காக நானும் எனது மனைவி அதியா ஷெட்டி ஆகியோர் இணைந்து வீரர்களின் கிரிக்கெட் பொருட்களை ஏலம் விடுவதற்கான ஒரு ஏலம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த ஏலத்தில் விராட் கோலியின் ஜெர்சி 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. கோலியின் கையுறை (gloves) 28 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. ரோகித் சர்மா மற்றும் எம்.எஸ். டோனி ஆகியோர் பேட் முறையே 24 லட்சம் ரூபாய்க்கும், 13 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போனது. ராகுல் டிராவிட்டின் பேட் 11 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் மூலம் 1.26 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
இதன்மூலம் ஓய்வு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
- இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் 2010-ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.
- 2022-க்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஷிகர் தவான். இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.11 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும்.
38 வயதாகும் ஷிகர் தவான் 2010-ம் ஆண்டு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2022 ஒருநாள் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். டெஸ்ட் போட்டியில் 2018-ம் ஆண்டுக்குப்பின் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2021-க்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.
- இரு அணிகளும் 164 ரன்னில் ஆல்அவுட் ஆனதால் சூப்பர் ஓவர்.
- முதன்முறை இரு அணிகளும் தலா 10 ரன்களும், 2-வது முறை தலா 8 ரன்களும் அடித்தன.
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மகாராஜா டிராபி என்ற பெயரில் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹூப்ளி டைகர்ஸ்- பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய ஹூப்ளி டைகர்ஸ் அணி 20 ஓவரில் 164 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் அந்த அணி திணறியபோது மணிஷ் பாண்டே 33 ரன்களும், அனீஷ்வர் கவுதம் 30 ரன்களும் சேர்த்தனர். பெங்களூரு டைகர்ஸ் அணி சார்பில் லாவிஷ் கவுசல் சிறப்பாக பந்து வீசி 17 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. மயங்க் அகர்வால் 34 பந்தில் 54 ரன்கள் விளாசினார். என்ற போதிலும் போட்டியை வெற்றிகரமாக முடிக்கவில்லை. பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியும் 164 ரன்னில் ஆல்அவுட் ஆனதால் போட்டி "டை"யில் முடிந்தது.
இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் இரண்டு அணிகளும் தலா 10 ரன்கள் அடித்தன. இதனால் 2-வது முறை சூப்பர் ஓவரை கடைபிடிக்கப்பட்டது. 2-வது முறை இரு அணிகளும் தலா 8 ரன்கள் அடித்தன. இதனால் 3-வது முறை ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
இந்த முறை பெங்களூரு பிளாஸ்டர்ஸ் 12 ரன்கள் அடித்தது. ஆனால் ஹூப்ளி அணி இதை சேஸிங் செய்து வெற்றி பெற்றது. டி20 கிரிக்கெட்டில் இதுவரை மூன்று முறை சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டதா? எனத் தெரியவில்லை. இதனால் இநத் போட்டி வரலாற்றில் இடம் பெறும் ஒரு போட்டியாக அமைந்துள்ளது.
+2
- தென்ஆப்பிரிக்காவின் ஸ்டப்ஸ் 42 பந்தில் 76 ரன்கள் விளாசினர்.
- நிக்கோலஸ் பூரன் 7 சிக்சர்கள் விளாசி தென்ஆப்பிரிக்கா பவுலர்களை திணறடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது.
தொடக்க வீரர்கள் ரிக்கெல்டன் (4), ரீஸா ஹென்ட்ரிக்ஸ் (4) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த கேப்டன் மார்கிராமுமம் 14 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.
டிரஸ்டன் ஸ்டப்ஸ் 42 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 76 ரன்கள் விளாசினார். பாட்ரிக் க்ருகர் 32 பந்தில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 44 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் மேத்யூ ஃபோர்டு 3 விக்கெட்டும், ஷமர் ஜோசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. அலிக் அதானஸ், ஷாய் ஹோப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அதானஸ் 30 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன்களும், ஷாய் ஹோப் 36 பந்தில் 51 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்.

விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழக்காமல் 26 பந்தில் 2 பவுண்டரி, 7 சிக்சருடன் 65 ரன்கள் விளாச வெஸ்ட் இண்டீஸ் 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நிக்கோலஸ் பூரன் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது போட்டியில் நாளை நள்ளிரவும், 3-வது போட்டி 27-ந்தேி நள்ளிரவும் நடைபெறுகிறது.
முன்னதாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா 1-0 என வெற்றி பெற்றது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 26-ம் தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது.
- இதன் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் நெதர்லாந்து வீரரை சந்திக்க உள்ளார்.
நியூயார்க்:
ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் பிரபலமானவை. அதில் ஒன்று யு.எஸ். ஓபன் தொடராகும்.
ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 26-ம் தேதி நியூயார்க்கில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் முறை மூலம் முடிவு செய்யப்பட்டது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் முதல் சுற்றில் 93-ம்நிலை வீரரான அமெரிக்காவின் மெக்டொனால்டை எதிர்கொள்கிறார்.
ஒலிம்பிக் சாம்பியனும், நடப்பு அமெரிக்க ஓபன் சாம்பியனுமான முன்னணி வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதல் ரவுண்டில் தகுதி நிலை வீரரை சந்திக்கிறார்.
இந்நிலையில், தரவரிசையில் 72 வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகல், தரவரிசையில் 40வது இடத்தில் உள்ள நெதர்லாந்து வீரர் டாலன் கிரீஸ்க்பூர் உடன் மோதுகிறார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், முதல் சுற்றில் தகுதிச்சுற்று மூலம் பிரதான சுற்றை எட்டும் வீராங்கனையை எதிர்கொள்கிறார்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 448 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
- அந்த அணியின் முகமது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. சயீம் அயூப் அரை சதம் அடித்து 56 ரன்னில் அவுட்டானார். சவுத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினர்.
4-வது விக்கெட்டுக்கு இணைந்த சேர்ந்த சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் ஜோடி 240 ரன்கள் எடுத்தது. சவுத் ஷகீல் 141 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, வங்கதேச அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷட்மன் இஸ்லாம் பொறுப்புடன் ஆடினார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 93 ரன்னில் அவுட்டானார். மொமினுல் ஹக் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மூன்றாம் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 55 ரன்னும், லிட்டன் தாஸ் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
வங்கதேசம் முதல் இன்னிங்சில் இன்னும் 132 ரன்கள் பின்தங்கியுள்ளது.
- முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்துள்ளது.
லண்டன்:
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ஆல் அவுட்டானது. தனஞ்ஜெயா டி சில்வா 74 ரன்னும், மிலன் ரத்னாயகே 72 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், சோயிப் பஷீர் தலா 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்று இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 61 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. ஜேமி ஸ்மித் 72 ரன்னும், அட்கின்சன் 4 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். ஹாரி ப்ரூக்56 ரன்னும், ஜோ ரூட் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 111 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 122 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் அஷிதா பெர்னாண்டோ 4 விக்கெட்ம், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
- இந்தக் கொலை வழக்கில் 147 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- அதில் ஷகிப் அல் ஹசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.
டாக்கா:
வங்கதேசத்தில் கடந்த இரு மாதமாக நடைபெற்ற கலவரங்களில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகினர்.
இந்தக் கலவரத்தின்போது ரபிகுல் இஸ்லாம் என்பவரின் மகன் ஆகஸ்ட் 5-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கு அடாபூர் காவல்நிலையத்தில் நடந்து வருகிறது.
இந்தக் கொலை வழக்கில் சுமார் 150-க்கு மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஷகிப் அல் ஹசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.
முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, வங்கதேச கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் தலைவர் நஜ்முல் ஹுசைன் என பல முக்கிய நபர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. கலவரத்துக்கு முன்பு வரை வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார் ஷகிப் அல் ஹசன்.
தற்போது 37 வயதாகும் ஷகிப் அல் ஹசன் வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த வீரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






