என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கடைசி போட்டி அவரது சொந்த மண்ணிலேயே நடைபெற்றது.
    • உங்கள் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

    வியன்னா ஓபன் 2024 தொடரின் முதல் போட்டியில் இத்தாலியை சேர்ந்த லூசியானோ டார்டெரியை டொமினிக் தீம் எதிர்கொண்டு விளையாடினார். இந்தப் போட்டியில் டார்டெரி 7-6 (6), 6-2 என்ற கணக்கில் டொமினிக்-ஐ வீழ்த்தினார். 91 நிமிடங்கள் நீடித்த போட்டியில் தோல்வியை தழுவியதை அடுத்து தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டொமினிக் தீம் அறிவித்தார்.

    முன்னாள் உலகின் நம்பர் 1 வீரராக இருந்த டொமினிக் தீம் 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டம் வென்று அசத்தினார். அதன்பிறகு மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனோடு ஓய்வு பெறும் கட்டாயத்திற்கு டொமினிக் தள்ளப்பட்டார். அந்த வகையில், அவர் விளையாடிய கடைசி போட்டி அவரது சொந்த மண்ணிலேயே நடைபெற்றது.

    ஓய்வு பெற்ற டொமினிக் தீம்-க்கு ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இந்த போட்டி வியன்னாவில் உள்ள ஸ்டட்ஹாலே அரீனாவில் நடைபெற்றது. போட்டிக்கு பிறகு பேசிய டொமினிக் தீம், "கடந்த சில மாதங்களில் பல அருமையான குட்-பைக்களை கடந்து வந்துள்ளேன், ஆனால் இன்று உங்கள் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்," என்று தெரிவித்தார்.

    • இரு அணிகளும் நாளை மோதுவது 64-வது டெஸ்டாகும்.
    • இதுவரை நடந்த 63 போட்டியில் இந்தியா 22-ல் நியூசிலாந்து 14-ல் வெற்றி பெற்றுள்ளன.

    புனே:

    டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் பெங்களுரூவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இந்த தோல்வியால் 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

    இந்தியா-நியூசிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் நாளை (24-ந் தேதி) தொடங்குகிறது.

    பெங்களுரூ டெஸ்டில் இந்திய அணி 46 ரன்னில் சுருண்டது மிகவும் மோசமான நிலையாகும். முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து டெஸ்ட் தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளைய இந்திய அணியில் மாற்றம் இருக்கும். சுப்மன்கில் உடல் தகுதி பெற்றதால் இடம் பெறுகிறார். இதனால் கே.எல். ராகுல் அல்லது சர்பராஸ் கான் நீக்கப்படலாம். முதல் டெஸ்டில் கே.எல். ராகுல் பேட்டிங் சிறப்பாக இல்லை. அதே நேரத்தில் சர்பராஸ் கான் சதம் (150 ரன்) அடித்து முத்திரை பதித்தார்.

    முதல் டெஸ்டில் ரிஷப் பண்ட்டுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் கீப்பிங் செய்யவில்லை. அதே நேரத்தில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். அவர் முழு உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே விளையாடுவார். ரிஷப்பண்ட் ஆட முடியாமல் போனால் துருவ் ஜூரலுக்கு வாய்ப்பு கிடைக்கும். முகமது சிராஜ் பந்து வீச்சு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் அவர் இடத்தில் ஆகாஷ் தீப் இடம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டிக்கு நுழைய இந்த டெஸ்டில் இந்திய அணி வெல்ல வேண்டும். இதனால் வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும்.

    நியூசிலாந்து அணி இந்த டெஸ்டிலும் இந்திய அணியை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. அந்த அணி இந்திய மண்ணில் 36 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்டில் வெற்றியை பெற்று சாதித்தது. முன்னாள் கேப்டன் வில்லியம்சன் காயத்தில் இருந்து குணமடையாததால் 2-வது டெஸ்டிலும் ஆடவில்லை.

    பெங்களூரு டெஸ்டில் நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் ரச்சின் ரவீந்தரா, கான்வே, வில்யங் ஆகியோரும் பந்து வீச்சில் வில்லியம் ஓ ரூர்க், சவுத்தி, ஹென்றி, அஜாஸ் படேல் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 64-வது டெஸ்டாகும். இதுவரை நடந்த 63 போட்டியில் இந்தியா 22-ல் நியூசிலாந்து 14-ல் வெற்றி பெற்றுள்ளன. 27 டெஸ்ட் டிரா ஆனது.

    நாளைய டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • புஜாரா அணிக்கு தேர்வு செய்யப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
    • அவர் கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆடினார்.

    புதுடெல்லி:

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த பார்டர்- கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி வருகிற 28-ந்தேதி அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தொடரில் 103 டெஸ்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்த புஜாரா அணிக்கு தேர்வு செய்யப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகமகா உள்ளது. அவர் கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆடினார்.

    • இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • மிட்ச் ஹே மற்றும் நாதன் ஸ்மித் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    நியூசிலாந்து அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.

    இதனையடுத்து நியூசிலாந்து அணி தற்சமயம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இத்தொடருக்கு பிறகு நியூசிலாந்து அணியானது மீண்டும் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. அதன்படி நியூசிலாந்து அணி எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.

    இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்த அணியில் கிளென் பிலீப்ஸ், லோக்கி ஃபெர்குசன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், இஷ் சோதி, ஹென்றி நிக்கோலஸ், வில் யங் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    மேற்கொண்டு இந்த அணியில் மிட்ச் ஹே மற்றும் நாதன் ஸ்மித் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும் கேன் வில்லியம்சன், மேட் ஹென்றி, டாம் லேதம், டேரில் மிட்செல் மற்றும் ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டோருக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டஃபி, லோக்கி ஃபெர்குசன், சாக் ஃபோல்க்ஸ், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், மிட்ச் ஹே, ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், டிம் ராபின்சன், நாதன் ஸ்மித், இஷ் சோதி, வில் யங்.

    • இரவு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் குஜராத்- மும்பை அணிகள் மோதுகின்றன.
    • புனே அணி தான் மோதிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருந்தது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி 'லீக்' போட்டி ஐதராபாத்தில் கடந்த 18-ந்தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்று உள்ள இந்தப் போட்டியில் சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 44-29 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது.

    தமிழ் தலைவாஸ் அணி 2-வது ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடப்பு சாம்பியன் புனேரி பல்தானை சந்திக்கிறது. புனேயை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி 2-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. புனே அணி தான் மோதிய 2 ஆட்டங்களிலும் (அரியானா, பாட்னா) வெற்றி பெற்று இருந்தது. அந்த அணி ஹாட்ரிக் வெற்றி வேட்கையுடன் இருக்கிறது.

    இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் குஜராத்-மும்பை அணிகள் மோதுகின்றன. குஜராத் 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. மும்பை அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    • கடந்த 4 ஆண்டுகளாக மும்பை அணியின் ஸ்கவுட்டிங் குழுவில் இடம்பெற்றிருந்தார்.
    • சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி உள்ளிட்ட ஏராளமான அணிகளுடன் பார்த்திவ் படேல் பணியாற்றி உள்ளார்.

    மும்பை:

    ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக ஏராளமான அணிகளில் பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். லக்னோ, கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகள் பயிற்சியாளர்கள் குழுவில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளது.

    அந்த வகையில் 2022-ம் ஆண்டு அறிமுகமான முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக இருந்த கேரி கிர்ஸ்டன், தற்போது பாகிஸ்தான் அணியின் ஒயிட் பால் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இதனால் அவரது இடத்திற்கு இந்திய முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் கொண்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பார்த்திவ் படேல், கடந்த 4 ஆண்டுகளாக மும்பை அணியின் ஸ்கவுட்டிங் குழுவில் இடம்பெற்றிருந்தார். மும்பை அணியில் இளம் வீரர்களை அடையாளம் காண, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை தீவிரமாக கண்காணித்து வந்தார்.

    தற்போது குஜராத் அணியில் பார்த்திவ் படேல் இணையவுள்ளதால், மும்பை அணியுடனான 4 ஆண்டு கால பயணம் முடிவுக்கு வரவுள்ளது. சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி உள்ளிட்ட ஏராளமான அணிகளுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட பார்த்திவ் படேல், குஜராத் அணியில் இளம் வீரர்களை அடையாளம் காண்பதில் முக்கிய நபராக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.

    • ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ளது.
    • கடந்த 3 சீசன்களாக லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டு வந்தார்.

    ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ளது. அதற்காக 10 அணிகளின் நிர்வாகங்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்த மெகா ஏலத்திற்கு முன்பு எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறோம் என்பதை வரும் அக்டோபர் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும்.

    இந்நிலையில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 சீசன்களாக கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில் அவரது ஆட்டம் அணியின் நிர்வாகத்துக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் இந்திய அணியில் இடம் பிடித்த வேகபந்து வீச்சாளர் மயங்க் யாதவ், பூரன், ரவி பிஷ்னோய் ஆகியோரை ரீடெய்ன் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • டெஸ்ட் போட்டிகளில் ராகுல் மிகவும் முக்கியம் என தலைமை பயிற்சியாளர் கம்பீர் நினைக்கிறார்.
    • எது அணிக்கு சிறந்ததோ அதன் அடிப்படையில் ஆடும் 11 பேரை தேர்வு செய்வோம்.

    புனே:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். கழுத்து பிடிப்பால் கடந்த டெஸ்டில் ஆடாத இந்திய வீரர் சுப்மன் கில்லும் பயிற்சி செய்தார். கில் அணிக்கு திரும்பும் போது சர்ப்ராஸ்கான் அல்லது லோகேஷ் ராகுல் ஆகியோரில் ஒருவர் வெளியே உட்கார வேண்டி இருக்கும்.

    இது குறித்து இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரையான் டென் டஸ்சாட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆடும் லெவனில் இடம் பெறுவதற்கான போட்டியில் சர்ப்ராஸ்கானும், லோகேஷ் ராகுலும் இருக்கிறார்கள். இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. கடந்த டெஸ்டில் சர்ப்ராஸ்கான் அற்புதமாக விளையாடி சதம் விளாசினார். அதற்கு முன்பாக இரானி கோப்பை கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்திருந்தார்.

    லோகேஷ் ராகுல் பெரிய அளவில் ரன் எடுக்காவிட்டாலும் அவரது பேட்டிங் பார்ம் குறித்து கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார். மனதளவிலும் வலுவாக இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் ராகுல் மிகவும் முக்கியம் என தலைமை பயிற்சியாளர் கம்பீர் நினைக்கிறார். அவர் மீது எங்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. எனவே இந்த டெஸ்டில் மொத்தம் 6 இடத்திற்கு 7 பேர் போட்டியில் உள்ளனர். ஆடுகளத்தை பார்த்த பிறகு எது அணிக்கு சிறந்ததோ அதன் அடிப்படையில் ஆடும் 11 பேரை தேர்வு செய்வோம்.

    விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இப்போது நன்றாக இருக்கிறார். பெங்களூரு டெஸ்டில் அவர் தன்னுடைய முழங்காலை அசைப்பதில் கொஞ்சம் அசவுகரியத்தை உணர்ந்தார். அதனால் கேப்டன் ரோகித் சர்மா முன்னெச்சரிக்கையாக கீப்பிங் செய்வதில் ஓய்வு கொடுத்தார். ஆனால் 2-வது டெஸ்டில் அவர் கீப்பிங் பணியை செய்வார் என்று நம்புகிறேன். சுப்மன் கில்லை பார்க்கும் போது 2-வது டெஸ்டுக்கான அணித் தேர்வுக்கு தயாராக இருப்பார் என்றே தெரிகிறது' என்றார்.

    • பெங்களூரு டெஸ்டில் சர்பாராஸ் கான் 150 ரன் விளாசினார்.
    • சுப்மன் கில் அணிக்கு திரும்புவதால் 2-வது டெஸ்டில் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த போட்டியில் கழுத்து வலி காரணமாக சுப்மன் கில் விளையாடவில்லை. சர்பராஸ் கான் அணியில் இடம் பிடித்தார். முதல் இன்னிங்சில் இந்தியா 46 ரன்னில் சுருண்டது. 2-வது இன்னிங்சில் 462 ரன்கள் குவித்தது. இதற்கு சர்பாராஸ் கான் விளாசிய 150 ரன்கள் முக்கியமானதாகும்.

    2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாட சுப்மன் கில் தயாராகிவிட்டார். இதனால் சர்பராஸ் கான் நீக்கப்படலாம். அதேவேளையில் கே.எல். ராகுல் இரண்டு இன்னிங்சிலும் சரியாக விளையாடவில்லை. இதனால் சர்பராஸ் கான் அல்லது கே.எல். ராகுல் ஆகியோரில் ஒருவர் நீக்கப்படலாம்.

    ஆனால் ரோகித் சர்மா மற்றும் அணி நிர்வாகம் கே.எல். ராகுலை நீக்காது எனத் தெரிகிறது. இதனால் சர்பராஸ் கான் வெளியே இருக்க வாய்ப்புள்ளது.

    இதற்கு முன்னதாக 2016-ல் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் கருண் நாயர் முச்சதம் விளாசினார். ஆனால் அதன்பிறகு டெஸ்ட் போட்டியில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    கருண் நாயர் அந்த போட்டியில் ரகானேவிற்குப் பதிலாக களம் இறக்கப்பட்டார். அடுத்த போட்டிக்கு ரகானே தயாரானதால் கருண் நாயருக்கு இடம் கிடைக்கவில்லை.

    சேவாக்கிற்குப் பிறகு டெஸ்ட் போட்டியில முச்சதம் அடித்த ஒரே வீரர் கருண் நாயர்தான். இருந்தபோதிலும் அதன்பிறகு அவரது டெஸ்ட் வாழ்க்கை மங்கிப்போனது.

    அதேபோல் சர்பராஸ் கானை வெளியில் வைக்கும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது. அவர் ஆடும் லெவனில் இடம்பெற வேண்டும் என இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா கூறுகையில் "அங்கு ஒரு கோட்பாடு உள்ளது. கருண் நாயர் 300 ரன்கள் அடித்தார். ஆனால் அடுத்த போட்டியில் அவர் நீக்கப்பட்டார். ஏன்?. ஏன் என்றால் அவர் ரகானோ இடத்தில் களம் இறங்கினார். ரகானே மீண்டும் அணிக்கு திரும்பியதும், கருண் நாயர் வெளியில் உட்கார வைக்கப்பட்டார். அதனோடு அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.

    இந்த கோட்பாட்டின்படி, சர்பராஸ் கான் வெளியில் உட்கார வைக்கப்படுவார். அது நடக்கக் கூடாது என நான் நினைக்கிறேன். இந்திய கிரிக்கெட்டிற்கு தற்போது முக்கியமான விசயம், வெளிப்புறத்தில் இருந்து சர்பராஸ் கானுக்கு சாதகமான ஆதரவு வெளிப்புறத்தில் இருக்கிறது" என்றார்.

    • 11-வது புரோ கபடி லீக் போட்டி சமீபத்தில் தொடங்கியது.
    • இதில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    11-வது புரோ கபடி லீக் போட்டி சமீபத்தில் தொடங்கியது.

    இந்நிலையில் , இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே ஜெய்ப்பூர் அணி அதிரடியாக ஆடியது. இறுதியில் இந்தப் போட்டியில் 52-22 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைடன்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அபார வெற்றி பெற்றது.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், சீனாவின் வாங் ஜின்யு உடன் மோதினார்.

    இதில் சோபியா கெனின் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் 2வது சுற்றில் டென்மார்க்கின் கிளாரா டாசன் உடன் மோதுகிறார்.

    • ஷெஃபீல்டு ஷீல்ட் போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    • தொலைபேசியை மட்டும் தான் எடுக்க வேண்டும்.

    பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக ஓய்வு முடிவை திரும்ப பெற தயாராக இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற்றார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 112 போட்டிகளில் விளையாடி இருக்கும் டேவிட் வார்னர் 26 சதங்கள், 37 அரைசதங்களை விளாசியுள்ளார். இதில் மொத்தம் 8786 ரன்களை அடித்துள்ளார்.

    ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தான் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா விரும்பினால் ஷெஃபீல்டு ஷீல்ட் போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய டேவிட் வார்னர், "நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். தொலைபேசியை மட்டும் தான் எடுக்க வேண்டும். உண்மையைச் சொல்வதானால், பிப்ரவரியில் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து என் நண்பர்கள் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் தான் விளையாடியுள்ளனர்."

    "எனவே உண்மையாகச் சொன்னால், இந்த தொடருக்கு நான் உண்மையிலேயே தேவைப்பட்டால், அடுத்த ஷீல்ட் போட்டியில் விளையாடி, தொடரில் பங்கேற்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். சரியான காரணங்களுக்காக நான் ஓய்வு பெற்றேன். அவர்களுக்கு யாரேனும் தேவைப்பட்டால் என் கையை உயர்த்துகிறேன். நான் அதிலிருந்து விலகி செல்லப் போவதில்லை," என்று கூறினார்.

    ×