என் மலர்
விளையாட்டு
- இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி 105 ரன்கள் குவித்தார்.
- சர்வதேச கிரிக்கெட்டில் எல்லிஸ் பெர்ரி 7080 ரன்களும் 330 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி வெற்றி பெற்ற நிலையில் 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 105 ரன்களும் ஜார்ஜியா வோல் 101 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் சைமா தாக்கூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 372 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 44.5 ஓவர்களில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியடைந்தது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 54 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இந்த போட்டியில் 105ரன்கள் அடித்தான் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 7,000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்கள் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையை எல்லிஸ் பெர்ரி படைத்தார்.
இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் எல்லிஸ் பெர்ரி 7080 ரன்களும் 330 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். பெர்ரி 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 928 ரன்கள் மற்றும் 39 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 149 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4064 ரன்களும், 165 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 2088 ரன்கள் மற்றும் 126 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
- முதல் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வங்கதேசம் தகுதி பெற்றது
- 2 ஆவது அரையிறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
லீக் சுற்றுகள் முடிவில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை , வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
முதல் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வங்கதேசம் தகுதி பெற்றது. 2 ஆவது அரையிறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 49.1 ஓவர்கள் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக ரிசான் ஹொசைன் 47 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் யுதாஜித் குஹா, சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ் ஆகியோர் தலா 2விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 199 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 139 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. இதன்மூலம் 2 ஆவது முறையாக ஜூனியர் ஆசிய கோப்பையை வங்கதேசம் கைப்பற்றியது.
கடந்த ஆண்டு ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றிய வங்கதேச அணி தொடர்ச்சியாக இந்தாண்டும் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.
- "XXI Chennai District Masters Athletic Championship 2024" தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினர்களாக SJ சூர்யா, சூரி, சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "XXI Chennai District Masters Athletic Championship 2024" தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium) நடைபெற்றது
இப்போட்டியை சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திருமதி ருக்மணி, பொருளாளர் திருமதி சசிகலா மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது

திரு மேகநாத ரெட்டி IAS இந்த போட்டியின் முதல் நாளை துவக்கி வைக்க (டிசம்பர் 8, 2024) சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் இயக்குனருமான SJ சூர்யா, நடிகர் சூரி, நடிகர் சித்தார்த், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் R.அர்ஜூன் துரை, லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ்குமரன், Dr. R ஆனந்த் குமார் IAS , தயாரிப்பாளர் சாமுவேல் மேத்தியு, தொழிலதிபர் சூர்யபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.

விருதுகள் விவரம்
60+ வயதினருக்கான 100 மீட்டர் ஆண்களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் திரு M.செண்பகமூர்த்தி 13.2 நொடிகளில் முதலாவதாக வந்து வெற்றி பெற்றார்
John Devasir Memorial Award - Life time Achievement Award - திரு.விஸ்வாம்பரன் PU (National Master Athlete)
Daisy Victor Memorial Award - Life Time Achievement Award - திருமதி கிருஷ்ணவேனி N (Longing Standing National Athlete)

Appreciation Awards to Master Athletes பரிசு வென்றவர்கள் விவரம்:
ஆண்கள் பிரிவில் பரிசு வென்றவர்கள் - கலாநிதி N, ஆறுமுகம் K, வரதன் V
பெண்கள் பிரிவில் பரிசு வென்றவர்கள் - எஸ்தர் பிரேம பாக்கியதாய், சாந்தா சுந்தர், சியமந்தகம் MK
சுவீடனில் ஆக்ஸ்ட் மாதம் 2024ல் நடைபெற்ற World Masters Meet போட்டியில் வென்றவர்களுக்கு சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பாக ரொக்க பரிசு வழங்கப்பட்டது

பரிசு வென்றவர்கள் விவரம்:
20000 ருபாய் பரிசு - ஜான்சன் ரத்தினராஜ் - 45+ Silver Medalist, Pole Vault
20000 ருபாய் பரிசு - சாந்தி சந்தோஷ் - 45+ Hammer Throw
20000 ருபாய் பரிசு - VS சின்னசாமி - 85+ - Gold 4x400 Relay, Bronze 4x100 ரிலே

சுவீடனில் ஆக்ஸ்ட் மாதம் 2023ல் நடைபெற்ற Asian Masters Meet போட்டியில் வென்றவர்களுக்கு சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் ரொக்க பரிசு வழங்கினார்
இன்றும், நாளையும் நடைபெறும் இந்த போட்டியில் மேலும் பல தடகள வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.


- ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது.
- ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி 105 ரன்களும் ஜார்ஜியா வோல் 101 ரங்களும் அடித்தனர்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி வெற்றி பெற்ற நிலையில் 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 105 ரன்களும் ஜார்ஜியா வோல் 101 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் சைமா தாக்கூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 372 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 44.5 ஓவர்களில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியடைந்தது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 54 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் 11ம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது.
- இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா அணி 175 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
- ஆஸ்திரேலியா அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக அடிலெய்டில் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 337 ரன் குவித்தது.
ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் 140 ரன்களையும், லபுஷேன் 64 ரன்களையும் எடுத்தனர். பும்ரா, முகமது சிராஜ் தலா நான்கு விக்கெட் கைப்பற்றினர். நிதிஷ் குமார் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா அணி 175 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்ததோடு, ஆஸ்திரேலிய அணிக்கு 19 எனும் எளிய இலக்கை நிர்ணயித்தது. அதன்படி 2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை தொடர் தோல்விகளை சந்தித்த இந்திய கேப்டன்கள் என்ற மோசமான பட்டியலில் ரோகித் சர்மா இடம்பிடித்தார்.
1967 - 68 ஆண்டுகளின் இந்திய அணியில் கேப்டனாக இருந்த மேக் படவுடி தொடர்ந்து 6 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். 1999 ஆம் ஆண்டில் தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி சச்சின் டெண்டுல்கர் இப்பட்டியலில் 2-ம் இடத்தை பிடித்துள்ளார்.
தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி தத்தா கெய்க்வாட் (1959), எம்.எஸ்.தோனி (2011) (2014), விராட் கோலி (2020-21) ஆகியோரை சமன் செய்து ரோகித் சர்மா (2024) இப்பட்டியலில் 3-ம் இடத்தை பகிர்ந்துள்ளார்
- டிராவிஸ் ஹெட்டை நோக்கி சிராஜ் ஆக்ரோஷமாக கத்தினார்.
- சிராஜ் என்னை தவறாக புரிந்து கொண்டார் என்று டிராவிஸ் ஹெட் தெரிவித்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது . இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட்டின் சதம் (140 ரன்கள்) மற்றும் லபுஸ்சேனின் அரைசதத்தின் (64 ரன்கள்) உதவியுடன் 337 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் முகமது சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 157 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் 19 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சின்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் வீசிய 82-வது ஓவரின் 3-வது பந்தை டிராவிஸ் ஹெட் சிக்சருக்கு பறக்க விட்டார். அதற்கு அடுத்த பந்திலேயே சிராஜ் அவரை கிளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்தார்.
அப்போது டிராவிஸ் ஹெட்டை நோக்கி சிராஜ் ஆக்ரோஷமாக கத்தியதுடன் 'போ' என்ற வகையில் சைகையும் காண்பித்தார். இதனால் இருவருக்குமிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டிராவிஸ் ஹெட், "நான் நன்றாக பந்து வீசினாய் என்றுதான் கூறினேன். ஆனால் சிராஜ் என்னை தவறாக புரிந்துகொண்டார்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், டிராவிஸ் ஹெட் பொய் சொல்கிறார் என்று சிராஜ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய சிராஜ், "டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்திய பிறகு நான் கொண்டாடினேன். பின்னர் அவர் என்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டார். இதை தொலைக்காட்சியிலும் நீங்கள் பார்க்கலாம். அப்போது நன்றாக பந்து வீசினாய் என்று டிராவிஸ் ஹெட் சொல்லவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பொய் சொன்னார். நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். அவர் பேசும் விதம் தவறானது. அது எனக்கு பிடிக்காததால் கோபப்பட்டேன்" என்று தெரிவித்தார்.
- முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணியின் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 337 ரன் குவித்தது.
ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் 140 ரன்களையும், லபுஷேன் 64 ரன்களையும் எடுத்தனர். பும்ரா, முகமது சிராஜ் தலா நான்கு விக்கெட் கைப்பற்றினர். நிதிஷ் குமார் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்து தடுமாறிய நிலையில் இருந்தது. ரிஷப் பண்ட் 28 ரன்னும், நிதிஷ்குமார் ரெட்டி 15 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்தியா தரப்பில் கே.எல். ராகுல் ( 7 ரன்), ஜெய்ஸ்வால் (24), வீராட் கோலி (11), சுப்மன் கில் (28), ரோகித் சர்மா (6) ஆகியோர் பெவிலியன் திரும்பினர்.
இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 29 ரன் தேவை என்ற நிலையில் கைவசம் 5 விக்கெட் இருந்த நிலையில் தொடர்ந்து ஆடியது. துவக்கம் முதலே அபார பந்துவீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு கடும் சவாலை ஏற்படுத்தினர்.
இதன் காரணமாக இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் தனது விக்கெட்டை பறிக்கொடுத்து பெவிலியன் திரும்பினார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் தொடர்ந்து அவுட் ஆகி வெளியேறினர். எனினும், நிதிஷ் குமார் நிதானமாக ஆடி ரன் சேர்த்து வந்தார். அவரும் 42 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 175 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்ததோடு, ஆஸ்திரேலிய அணிக்கு 19 எனும் எளிய இலக்கை நிர்ணயித்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை துரத்தி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முன்னதாக பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றதன் மூலம் ஐந்து போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்றுசம நிலையை பெற்றது.
இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற 14 ஆம் தேதி பிரிஸ்பேனில் தொடங்க இருக்கிறது.
- முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- நியூசிலாந்து அணிக்கு 583 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 280 ரன்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட் செய்த நியூசிலாந்து அணி 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
155 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 378 ரன் எடுத்து இருந்தது. ஜோ ரூட் 73 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 35 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.
முன்னதாக பென் டக்கெட் 92, ஜேக்கப் பெத்தெல் 96 ரன்களை எடுத்தனர். இன்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ஜோ ரூட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 127 பந்தில் 10 பவுண்டரியுடன் அவர் 100 ரன்களை தொட்டார். 151-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜோ ரூட்-க்கு இது 36-வது சதம் ஆகும்.
அவர் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்த போது இங்கிலாந்து அணி ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 427 ரன்களை குவித்த போது டிக்ளேர் செய்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 583 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் நியூசிலாந்து அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 141 ரன்களில் 6 விக்கெட்டுகளை பறி கொடுத்தது. நியூசிலாந்து தரப்பில் டாம்புளுன்டல் மட்டுமே போராடினார். அவர் சதம் அடித்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 54.2 ஓவரில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 14 ஆம் தேதி ஹேமில்டனில் தொடங்குகிறது.
- கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 4-2 என பெங்களூரு எப்.சி அணி வென்றது.
- பெங்களூரு எப்.சி. அணியின் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார்.
பெங்களூரு:
13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் பெங்களூருவில் நேற்று நடந்த லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, பெங்களூரு எப்.சி அணியுடன் மோதியது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், பெங்களூரு எப்.சி. அணியின் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி ஐ.எஸ்.எல். தொடரில் ஹாட்ரிக் கோல் அடித்த வயதான வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.
இதன்மூலம் ஐதராபாத் எப்.சி. அணிக்காக 38 வயதில் ஹாட்ரிக் கோல் அடித்த நைஜீரிய வீரர் பார்தோலோமிவ் ஓக்பெச்சேவின் சாதனையை சுனில் சேத்ரி முறியடித்துள்ளார்.
சுனில் சேத்ரியின் சமீபத்திய ஹாட்ரிக் ஐஎஸ்எல்லில் அவரது மூன்றாவது ஹாட்ரிக் ஆகும். இதற்கு முன் 2015ல் மும்பை சிட்டி எப்.சி.க்காகவும், 2018ல் பெங்களூரு எப்.சி.க்காகவும் ஹாட்ரிக் அடித்துள்ளார்.
- இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
- அந்த அணியின் ஜோ ரூட் சதமடித்து அசத்தினார். இது அவரது 36வது சதமாகும்.
வெல்லிங்டன்:
நியூசிலாந்து- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து ஹாரி ப்ரூக் (123) சதத்தால் 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 125 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து, 155 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. பென் டக்கெட் 92 ரன்னும், பெத்தேல் 96 ரன்னும் எடுத்தனர். ஹாரி புரூக் 55 ரன்னில் வெளியேறினார்.
சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து அசத்தினார். இது இவரது 36வது சதமாகும். ஜோ ரூட் 106 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பென் ஸ்டோக்ஸ் 49 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளானர்.
இதையடுத்து, 583 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.
- ஐசிசி முன்னாள் தலைவர் கிரேக் பார்க்லே பதவிக்காலம் நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவந்தது.
- இதையடுத்து, ஐசிசி புதிய தலைவராக ஜெய் ஷா சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுடெல்லி:
ஐ.சி.சி. முன்னாள் தலைவரான கிரேக் பார்க்லேயின் பதவிக் காலம் நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவந்தது. இதையடுத்து, புதிய தலைவராக ஜெய் ஷா கடந்த ஒன்றாம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஐ.சி.சி. தலைவரான ஜெய்ஷா தனது முதல் அறிக்கையில், ஐசிசி இயக்குநர்கள் மற்றும் வாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. உலகளவில் கிரிக்கெட்டை மிகவும் பிரபலமாக்குவதையும், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதை தயார் செய்வதையும் வலியுறுத்தினார். பெண்கள் விளையாட்டின் வளர்ச்சியை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, அடுத்த பி.சி.சி.ஐ. செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த 45 நாட்களுக்குள் புதிய செயலாளரை நியமிக்க வேண்டிய காலக்கெடுவில் பிசிசிஐ உள்ளது.
இந்நிலையில், பி.சி.சி.ஐ.யின் இணை செயலாளரான தேவஜித் சைகியா தற்காலிக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி அறிவித்துள்ளார்.
- கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை அன்மோல் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.
கவுகாத்தி:
கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் அன்மோல் கர்ப், சக வீராங்கனை மான்சி சிங்குடன் மோதினார்.
இதில் அன்மோல் கர்ப் 21-19, 21-17 என்ற புள்ளிக்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி வெறும் 40 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சதீஷ்குமார் 13-21, 21-14, 21-16 என்ற புள்ளிக்கணக்கில் சீன வீரரை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி, சீனாவின் கெங் ஷு லியாங்-வாங் டிங் கெ ஜோடியை 21-14, 21-14 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.






