என் மலர்
விளையாட்டு
- டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.
- முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே 363 ரன்கள் குவித்தது.
புலவாயோ:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் புலவாயோவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜாய்லார்டு கம்பே 9 ரன்னில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பென் கர்ரன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 74 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கைடனோ 46 ரன்னில் அவுட்டானார். டயான் மையர்ஸ் 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சீன் வில்லியம்ஸ் சிறப்பாக ஆடி சதமடித்தார். கேப்டன் கிரெய்க் எர்வின் அரை சதம் கடந்தார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் எடுத்தது. சீன் வில்லியம்ஸ் 145 ரன்னும், எர்வின் 56 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் பாட்னா பைரேட்ஸ் அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது. புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்தது.
இதற்கிடையே, பிளே ஆப் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. முதல் பிளே ஆப் ஆட்டத்தில் உபி யோதாஸ் அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் மோதின. இதில் சிறப்பாக ஆடிய பாட்னா அணி 31-23 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், உபி யோதாஸ் அணிகளும், 2வது அரையிறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லி, பாட்னா பைரேட்ஸ் அணிகளும் மோத உள்ளன.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- கம்ரான் குலாம் அரை சதமடித்து 54 ரன்னில் அவுட் ஆனார்.
செஞ்சுரியன்:
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கம்ரான் குலாம் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். அமீர் ஜமால் 28 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 27 ரன்னிலும் அவுட்டாகினர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும், கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் 47 ரன்னுடனும், பவுமா 4 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் உ.பி.யோதாஸ் அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது. புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்தது.
இந்நிலையில், பிளே ஆப் ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.
முதல் ஆட்டத்தில் உ.பி.யோதாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் சிறப்பாக ஆடிய உ.பி. அணி 46-18 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
- ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 311 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
- இந்திய தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. பிரிஸ்பேனில் நடந்த 3-வது டெஸ்ட் மழையின் பாதிப்பால் 'டிரா' ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 311 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது சில்லி பாயிண்டில் பீல்டிங் செய்யும் போது, யஷஸ்வி ஜெய்ஸ்வாலை இந்திய கேப்டன் ரோகித் சர்மா திட்டினார்.
ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ஷாட்டை ஆடினார். அப்போது சில்லி பாயிண்டில் இருந்த ஜெய்ஸ்வால் குதித்தார். இதனை ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ரோகித், ஜெய்ஸ்வாலிடம், "நீ கல்லி கிரிக்கெட் விளையாடுகிறாயா? பேட்டர் ஷாட் ஆடும் வரை உட்கார்ந்து இரு" என்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சாம் கோன்ஸ்டாஸ்-க்கு 19 வயது மட்டுமே ஆகிறது.
- கிரிக்கெட் களத்தில் எந்த சூழலிலும் எதிரணி வீரர்களை தொடவே கூடாது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமான சாம் கான்ஸ்டாஸ்- விராட் கோலி நேருக்கு நேராக இடித்துக் கொண்டார்கள். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது. உடனடியாக அருகில் இருந்த உஸ்மான் கவாஜா மற்றும் நடுவர்கள் உள்ளே புகுந்து நிறுத்தினார்கள்.
இந்த சம்பவத்தில் விராட் கோலி மீதுதான் தவறு உள்ளதாக இந்திய முன்னாள் வீரர்களாக இர்பான் பதான், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியதாவது:-
கிரிக்கெட் களத்தில் எந்த சூழலிலும் எதிரணி வீரர்களை தொடவே கூடாது. களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு, சக வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம். சாம் கோன்ஸ்டாஸ்-க்கு 19 வயது மட்டுமே ஆகிறது.
ஹெய்டன், கில்கிறிஸ்ட் உள்ளிட்டோர் எங்களுக்கு 19 வயதாகிய போது, பின்னால் இருந்து கொண்டு வார்த்தைகளால் ஸ்லெட்ஜிங் செய்வார்கள். ஆனால் ஒருநாளும் எங்களை தொட்டதில்லை. அதனால் விராட் கோலி சாம் கோன்ஸ்டாஸ்-ன் தோளில் உரசியதை தவிர்த்திருக்க வேண்டும்.
எனக்கு ஒரு கேள்வியும் இருக்கிறது. ஒருவேளை விராட் கோலியின் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் இருந்து, சாம் கோன்ஸ்டான் இடத்தில் இந்திய அணியைச் சேர்ந்த 19 வயதான வீரரின் அறிமுகப் போட்டியில் இப்படியான சம்பவம் நிகழ்ந்திருந்தால் நாம் ஏற்போமா.. அப்படிதான் இதனை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கூறுகையில்:-
விராட் கோலி நிச்சயம் இதை செய்திருக்கக் கூடாது. கூட்ட நெரிசல் உள்ள தெருவில் ஒருவர் நடந்து சென்றால் கூட ஒருவர் எதிரில் வரும்போது நாம் வழிவிடலாம். வழி விடுவதால் நாம் யாருக்கும் குறைந்தவர் கிடையாது. கிரிக்கெட் களத்தில் இது போன்ற சம்பவங்களை யாரும் பார்க்க விரும்ப மாட்டார்கள். என்னை பொறுத்தவரை கோலி இதை செய்திருக்கக் கூடாது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி கூறியதாவது:-
தேவையில்லாத ஒரு விஷயத்தை விராட் கோலி செய்துவிட்டார். இப்படி நடந்திருக்க வேண்டியது இல்லை. இது போன்ற சம்பவங்களை பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் விராட் கோலி ஏன் இவ்வாறு செய்தேன் என்று ஒரு விளக்கத்தை அவர் வைத்திருப்பார். ஆனால் இது போன்ற விஷயங்களை யாருமே எதிர்பார்க்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
- ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது.
- ஸ்டீவ் சுமித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
மெல்போர்ன்:
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டீவ் சுமித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இந்த இன்னிங்சில் ஆஸ்திரேலியா தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன உஸ்மான் கவாஜா, அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ், மார்னஸ் லபுஸ்சேன் மற்றும் ஸ்டீவ் சுமித் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்து அசத்தியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக 19 வயதே ஆன அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கான்ஸ்டாஸ், நடப்பு தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அவர் பும்ராவின் பந்துவீச்சை எளிதாக அடித்தார். அவரது பந்துவீச்சில் 2 சிக்சர்கள் விளாசிய அவர் 60 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த 2-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற மாபெரும் சாதனையை கான்ஸ்டாஸ் படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. இயன் கிரெய்க் - 17 வயது 240 நாட்கள்
2. சாம் கான்ஸ்டாஸ் - 19 வயது 85 நாட்கள்
3. நீல் ஹார்வி - 19 வயது 121 நாட்கள்
4. ஆர்ச்சி ஜாக்சன் - 19 வயது 150 நாட்கள்
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கம்ரான் குலாம் 54 ரன்னில் அவுட் ஆனார்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும் கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஷான் மசூத்- சைம் அயூப் களமிறங்கினர். மசூத் 17 ரன்களிலும் சைம் அயூப் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த பாபர் அசாம் மீண்டும் அணியில் இடம் பெற்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் களமிறங்கிய பாபர் அசாம் 4 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த சவுத் ஷகீல் 14, ரிஸ்வான் 27, சல்மான் 18, ஆமீர் ஜமால் 28 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுப்பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கம்ரான் குலாம் அரை சதம் விளாசினார். அவர் 54 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 211 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும் கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- உலகத்தரம் வாய்ந்த பும்ரா, மீது அழுத்தத்தை போட முயற்சித்தேன்.
- அவருடைய திட்டங்களை மாற்ற வைப்பதே முக்கியமான விஷயம்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங்கை செய்த ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கான்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் பயந்து விளையாடும் பும்ரா ஓவரில் இவர் 2 சிக்சர்களை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில் பும்ராவை தொடர்ந்து டார்கெட் செய்து கொண்டே இருப்பேன் என இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது கனவு நிஜமான தருணம். ஏனெனில் ரசிகர்களால் நிறைந்திருக்கும் மைதானத்தை பாருங்கள். பட் கமின்ஸ் உட்பட அனைவரும் என்னை அணிக்குள் வரவேற்றார்கள். பயமின்றி விளையாடுமாறு கேப்டன் கமின்ஸ் என்னிடம் சொன்னார்.
பும்ராவுக்கு எதிராக ரேம்ப் ஷாட் அடிப்பது பற்றி நேற்று திட்டமிடவில்லை. அவர் உலகத்தரம் வாய்ந்த பவுலர். இருப்பினும் அவர் மீது அழுத்தத்தை போட முயற்சித்தேன்.
அவருடைய திட்டங்களை மாற்ற வைப்பதே முக்கியமான விஷயம். இந்த வகையில் அவரைத் தொடர்ந்து நான் டார்கெட் செய்து கொண்டே இருப்பேன். அவரும் கம்பேக் கொடுக்கலாம். அப்போது என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.
என்று சாம் கான்ஸ்டாஸ் கூறினார்.
- இது மிகவும் தந்திரமான ஒன்றாக உள்ளது.
- சிறந்த வீரர்களில் ஒருவருமான விராட் எதிரணியில் உள்ள இளம் வீரரிடம் இவ்வாறு நடந்து கொண்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கொன்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
இப்போட்டியில் 52 பந்துகளில் அரைசதம் கடந்த கொன்ஸ்டாஸ், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.
இப்போட்டியில் கொன்ஸ்டாஸ் மற்றும் விராட் கோலி இடையேயான மோதல் பெரும் பரபரப்பை கிளப்பியது. சாம் கொன்ஸ்டாஸை இந்திய வீரர் விராட் கோலி வேண்டுமென்றே இடித்தார். இதனால் இருவருக்கும் இடையே களத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் உஸ்மான் கவாஜா மற்றும் கள நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர். இதனையடுத்து விராட் கோலிக்கு ஐசிசி அபராதம் விதித்தது.
இந்நிலையில் அனுபவ வீரரான விராட் கோலி அறிமுக வீரரிடம் இதுபோல் நடந்து கொண்ட சம்பவம் கண்டனங்களுக்கு வழி வகுத்துள்ளது.
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-
இந்த நிகழ்வின் போது விராட் எங்கு நடக்கிறார் என்று பாருங்கள். விராட் வலது பக்கமாக நடந்து அந்த மோதலை ஏற்படுத்தினார். அதனால் இதில் அவர் மீது தான் தவறு என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.
அதேசமயம் இந்நிகழ்வு குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலீசா ஹீலி, "இது மிகவும் தந்திரமான ஒன்றாக உள்ளது. உங்கள் அனுபவமிக்க வீரர், நாட்டின் சிறந்த வீரர்களில் ஒருவருமான விராட் எதிரணியில் உள்ள இளம் வீரரிடம் இவ்வாறு நடந்து கொண்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
இது உண்மையில் ஒரு அணியின் சிறந்த செயல் அல்ல. ஆனால் இந்திய அணி அதை அணுக விரும்பும் ஒரு வழி என்றால், அப்படியே ஆகட்டும். ஆனால் அது கொன்ஸ்டாஸை சிறிதும் தடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
- முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 311 ரன்கள் குவித்தது.
- ஸ்மித் 68 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை குவித்தது. நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த ஸ்மித் 68 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும் ஜடேஜா, ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ரசிகர்கள் வருகை தந்துள்ளனர்.

அதன்படி 87 ஆயிரத்து 242 ரசிகர்கள் இந்த போட்டியை நேரில் கண்டு களித்துள்ளனர்.
- முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 68 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
- இதனையடுத்து ஷாருக்கான் - முகமது அலி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
விஜய் ஹசாரே கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் உத்தர பிரதேசம்- தமிழ்நாடு அணிகள் மோதி வருகிறது.
இதில் டாஸ் வென்ற உத்தர பிரதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய தமிழ்நாடு அணி 68 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து ஷாருக்கான் - முகமது அலி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரை சதம் கடந்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷாருக்கான் சதம் விளாசி அசத்தினார்.
இறுதியில் தமிழ்நாடு அணி 47 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்கள் எடுத்தது. ஷாருக்கான் 132 ரன்களும் முகமது அலி 76 ரன்களும் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.






