என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது உ.பி.யோதாஸ்
    X

    புரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது உ.பி.யோதாஸ்

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் உ.பி.யோதாஸ் அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது. புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்தது.

    இந்நிலையில், பிளே ஆப் ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.

    முதல் ஆட்டத்தில் உ.பி.யோதாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் சிறப்பாக ஆடிய உ.பி. அணி 46-18 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    Next Story
    ×