என் மலர்
விளையாட்டு
- ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விருது வழங்கப்படுகிறது.
- 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கும் இவர் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.
அதன்படி 2024-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கு வழங்கப்படும் சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விருது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்படுகிறது என ஐசிசி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பும்ரா இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆவார்.
சோபர்ஸ் விருதை ராகுல் டிராவிட் (2004), சச்சின் டெண்டுல்கர் (2010), அஸ்வின் (2016), விராட் கோலி (2017) ஆகியோர் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கும் இவர் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னையில் நடந்த 2வது டி20 போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
- இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
சென்னை:
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், சென்னையில் நடந்த 2வது டி20 போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி குஜராத்தின் ராஜ்கோட் நகரில் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்தியாவின் பிரபல சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இங்கிலாந்து முழுமையற்ற கிரிக்கெட்டை விளையாடியது. அவர்கள் தொடர் தவறுகளைச் செய்தார்கள். இந்தியாவில் விளையாடும்போது ஒரே டெம்போவில் விளையாட முடியாது.
பெங்களூரு டிராபிக்கில் ஓட்டினால் எப்போதும் நான்காவது கியரில் இருக்க முடியாது. இங்கேயும் அதே லாஜிக் தான். சில நேரங்களில் பெங்களூரில் நான்காவது கியரில் கூட செல்ல முடியாது. இதேதான் நீங்கள் இந்தியாவில் விளையாடும் பொழுதும் அதிரடியாக நான்காவது கியரில் விளையாட முடியாது.
இதைத்தான் நான் கடந்த முறையும் சொல்லி இருந்தேன். இந்தியாவில் பயமற்ற கிரிக்கெட் முறை தேவையானது. ஆனால் அது பவர் பிளேவில் மட்டும் இருக்க வேண்டும்.
எல்லா சூழ்நிலைகளும் ஆக்ரோஷமான பேட்டிங்கிற்கு பொருந்தாது. கிரிக்கெட்டில் நிபந்தனைகளே ராஜா என சொல்வார்கள் என தெரிவித்தார்.
- முதலில் ஆடிய இந்தியா 208 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய ஸ்காட்லாந்து 58 ரன்களில் ஆல் அவுட்டானது.
கோலாலம்பூர்:
ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சூப்பர் 6 சுற்றிn 2வது ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் இன்று மோதியது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை கமாலினி அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க வீராங்கனை கோங்கடி திரிஷா அதிரடியில் மிரட்டினார். இவர் 59 பந்துகளில் 4 சிக்சர், 13 பவுண்டரி உள்பா 110 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 147 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஸ்காட்லாந்து களமிறங்கியது. இந்திய வீராங்கனைகள் துல்லியமாக பந்துவீசி அசத்தினர்.
இறுதியில் ஸ்காட்லாந்து அணி 14 ஓவரில் 58 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ஆயுஷி சுக்லா 4 விக்கெட்டும், வைஷ்ணவி சர்மா, கோங்கடி திரிஷா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகி விருதை கோங்கடி திரிஷா வென்றார்.
- வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
- ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியுடன் சேர்த்து மொத்தம் 6 புள்ளிகளை (லீக் சுற்றில் 4 புள்ளிகள்) பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. இதையடுத்து இந்திய அணி தனது 2-வது மற்றும் கடைசி சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் இன்று ஸ்காலாந்தை எதிர்கொண்டு விளையாடுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்தியா சார்பில் கமாலினி 42 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். மற்றொரு துவக்க வீராங்கனையாக களமிறங்கிய கொங்கடி திரிஷா 59 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய திரிஷா 110 ரன்களை விளாசினார். இதில் 13 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். சனிகா சால்கே தன் பங்கிற்கு 20 பந்துகளில் 29 ரன்களை குவித்தார். இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை குவித்துள்ளது.
இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 209 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்தியது.
- இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
- ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட் களமிறங்க உள்ளார்.
கொழும்பு:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை காலே மைதானத்தில் தொடங்க உள்ளது.
இந்த தொடருக்கான இரு அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு தனஞ்சயா டி சில்வா கேப்டனாகவும் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக கவாஜாவுடன் சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினார். இந்த தொடக்க வீரர்களில் மாற்றத்தை அந்த அணி கொண்டுவந்துள்ளது.
அதன்படி தொடக்க வீரராக இருந்த சாம் கான்ஸ்டாஸ்-க்கு பதிலாக அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் களமிறங்க உள்ளார். இதனால் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடக்கம் முதலே அதிரடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மகா கும்பமேளாவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் புனித நீராடினார்.
- பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததைக் குறிக்கும் விதமாகக் கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 12-ம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை நடைபெறும்.
இந்நிலையில் மகா கும்பமேளாவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்ட மேரி கோம், தண்ணீரில் ஓடி பாக்சிங்கும் செய்துகாண்பித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இது குறித்து அவர் கூறியதாவது:-
இது ஒரு நல்ல அனுபவம். ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் இதை உலகத்தரம் வாய்ந்த யாத்திரையாக மாற்றியுள்ளனர். நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்தாலும், இந்த நிகழ்விற்கு ஆதரவளிக்க வந்தேன்.
என மேரிகோம் கூறினார்.
- 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாட உள்ளார்.
- ஆயோஷ் பதோனி தலைமையில் டெல்லி அணி களமிறங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. கடந்த சில தொடர்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனர். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரே மாதிரியாக தொடர்ச்சியாக ஆட்டம் இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்திய அணியின் பேட்டிங் சொதப்பிய நிலையில், அனைத்து இந்திய வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என கட்டுப்பாடு விதித்தது. அதன்படி அனைத்து வீரர்களும் ரஞ்சி டிராபியில் விளையாடி வருகின்றனர்.
அந்த வகையில் கழுத்து வலி காரணமாக ஓய்வு இருந்து வந்த விராட் கோலி, தற்போது ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக களமிறங்க உள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாட உள்ளார். சீனியர் வீரரான விராட் கோலிக்கு கேப்டன் பதவு கொடுக்க டெல்லி அணி நிர்வாகம் முன்வந்த நிலையில் அதனை கோலி நிகாரித்தார்.
இதனால் ஆயோஷ் பதோனி தலைமையில் டெல்லி அணி களமிறங்குகிறது. வருகிற 30-ந் தேதி ரெயில்வே அணியுடன் டெல்லி அணி மோதுகிறது.
இந்நிலையில் டெல்லி அணியுடன் விராட் கோலி பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் பீல்டிங் செய்யும் வீடியோ என கோலி குறித்து பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த பயிற்சியின் போது அவரது ரசிகருக்கு தனது கையுறையை பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.
- பேட்மிண்டன், ஹாக்கி, டென்னிஸ், கபடி, உள்பட 32 வகையான போட்டிகள் இடம் பெறுகிறது.
- இந்த போட்டியில் 393 வீரர், வீராங்கனைகளை கொண்ட தமிழக அணி 31 விளையாட்டுகளில் களம் காணுகிறது.
டேராடூன்:
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பிப்ரவரி 14-ந் தேதி வரை நடக்கிறது. டேராடூன், ஹரித்வார், நைனிடால், ஹல்த்வானி, ருத்ராபூர், ஷிவ்புரி, நியூதெக்ரி ஆகிய 7 நகரங்களில் 18 நாட்கள் அரங்கேறும் இந்த போட்டியில் 38 அணிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இதில் தடகளம், நீச்சல், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பேட்மிண்டன், ஆக்கி, குத்துச்சண்டை, பளுதூக்குதல், கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கபடி, கோ-கோ உள்பட 32 வகையான போட்டிகள் இடம் பெறுகிறது. களரிப்பட்டு, யோகாசனம், மல்லர்கம்பம், ரேப்டிங் ஆகியவை காட்சி போட்டியாக நடைபெறுகிறது.
இந்த போட்டியில் 393 வீரர், வீராங்கனைகளை கொண்ட தமிழக அணி 31 விளையாட்டுகளில் களம் காணுகிறது. பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கர், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஆகியோர் இந்த போட்டியை தவறவிடுபவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெறும் கோலாகல தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். போட்டியை தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
கடந்த தேசிய விளையாட்டு 2023-ம் ஆண்டு கோவாவில் 5 நகரங்களில் நடந்தது. இதில் மராட்டியம் 82 தங்கம் உள்பட 230 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
- பிக்பாஷ் லீக் தொடரில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
- ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மிட்செல் ஓவன் சதம் அடித்து அசத்தினார்.
பிக்பாஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்யில் வார்னர் தலைமையிலான சிட்னி தண்டரும் நாதன் எல்லீஸ் தலைமையிலான ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்த போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மிட்செல் ஓவன், அதிரடியாக விளையாடிய 39 பந்தில் சதம் அடித்து அசத்தினார். குறிப்பாக ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல இவர் முக்கிய பங்காற்றினார்.
இந்நிலையில் 2015-ல் ரசிகனாக ஹரிகேன்ஸ் அணியின் வெற்றியை ரசித்த ஓவன், 10 ஆண்டுகளுப் பிறகு (2025) ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல ஒரு வீரனாக களத்தில் ஆடியுள்ளார். இந்த இரு புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ராஜ்கோட் மைதானம் பொதுவாக பேட்டிங்குக்கு சாதகமானது.
- இங்கு இதுவரை நடந்துள்ள 5 ஆட்டங்களில் 4-ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
ராஜ்கோட்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன்ஷா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
முதல் இரு ஆட்டங்களில் கிடைத்த வெற்றி உற்சாகத்துடன் களம் இறங்கும் இந்திய அணி தொடரை வசப்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறது. இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா ஆகியோர் பேட்டிங்கிலும், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், அக்ஷர் பட்டேல் உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் அட்டகாசமாக செயல்பட்டு வெற்றிக்கு உதவினர். ேகப்டன் சூர்யகுமார் யாதவ் இரு ஆட்டத்திலும் (0, 12 ரன்) சோபிக்கவில்லை. அதனால் இன்றைய ஆட்டத்திலாவது ரன் மழை பொழிவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு முதல் இரு ஆட்டத்திலும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் உடல்தகுதியுடன் இருக்கிறார். ஆனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடும் லெவனில் இடம் பிடிப்பாரா? இல்லையா? என்பதை பயிற்சியாளர் கம்பீரும், கேப்டன் சூர்யகுமாரும் தான் முடிவு செய்வார்கள் என இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோட்டாக் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை கேப்டன் ஜோஸ் பட்லர் (68 மற்றும் 45 ரன்) தவிர மற்றவர்களின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்கள் பென் டக்கெட்டும், பில் சால்ட்டும் இரு ஆட்டத்திலும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மிரளுகிறார்கள். இதே போல் பந்து வீச்சும் சீராக இல்லை. முந்தைய ஆட்டத்தில் அந்த அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 60 ரன்களை வாரி வழங்கினார்.
இது குறித்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் கூறுகையில், 'நாங்கள் விக்கெட்டுகளை கைப்பற்றவே முயற்சிக்கிறோம். அதனால் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது குறித்து கவலையில்லை. ஆட்டத்தில் நாங்கள் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்பதே முக்கியம். அதைத் தான் பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லமும் விரும்புகிறார்' என்று குறிப்பிட்டார். தொடரில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் இங்கிலாந்து வீரர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என்று நம்பலாம்.
ராஜ்கோட் மைதானம் பொதுவாக பேட்டிங்குக்கு சாதகமானது. இங்கு இதுவரை நடந்துள்ள 5 ஆட்டங்களில் 4-ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2023-ம் ஆண்டு ஜனவரியில் இங்கு நடந்த ஆட்டத்தில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக சூர்யகுமார் யாதவின் சதத்தால் 228 ரன்கள் குவித்து எளிதில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் நடப்பு தொடரில் 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கிறது. இரவில் பனிப்பொழிவில் பந்து வீசுவது சிரமம் என்பதால் 'டாஸ்' வெல்லும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும்.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- ரிஷப் பண்டை, முட்டாள் என மூன்று முறை நேரலையில் கூறியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
- விமர்சனம் வரம்பு மீறி செல்வதால் அது வீரர்களுக்கான நற்பெயரை கெடுக்கும் விதத்தில் இருந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முன்னாள் கேப்டன் கவாஸ்கர் மீது பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர். இவர் கிரிக்கெட்டின் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். அண்மை காலமாக கவாஸ்கர் விமர்சனம் செய்யும் போது கடும் கோபத்தை வெளிப்படுத்துகிறார். அண்மையில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட கவாஸ்கர் ரிஷப் பண்டை, முட்டாள் என மூன்று முறை நேரலையில் கூறியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
ஆனால் கவாஸ்கர் ஒரு கிரிக்கெட் ஜாம்பவான் என்பதால் அதை பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் விமர்சனம் வரம்பு மீறி செல்வதால் அது வீரர்களுக்கான நற்பெயரை கெடுக்கும் விதத்தில் இருந்தது.
மேலும் ரோகித் சர்மாவின் ஆட்டம் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். அதற்கும் மேலாக ரோகித்தை ஓய்வு பெறுமாறு கூறியிருந்தார்.
இந்த நிலையில் அந்தத் தொடரின் போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்த கவாஸ்கர் தொடர்ந்து இந்திய அணி மீதும் தன் மீதும் முறையற்ற விமர்சனத்தை வைத்ததாகவும் இது எங்களுடைய மனதை பாதிக்க வைத்திருக்கிறது என்றும் கேப்டன் ரோகித் சர்மா பிசிசிஐ நிர்வாகிகளிடம் புகார் கடிதம் ஒன்றை அளித்திருப்பதாக பி.சி.சி.ஐ. வட்டார தகவல் தெரிவிக்கின்றது. இதனால் கவாஸ்கரை பிசிசிஐ நிர்வாகிகள் கண்டிக்கும் வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தி இருப்பதாக தெரிகிறது.
எனினும் ரோகித் சர்மா இந்த புகாரை அவரே முன்வந்து அளிக்க வாய்ப்பு இல்லை என்றும் பயிற்சியாளராக இருந்த கம்பீர்தான் இதனை தூண்டி விட்டிருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கவாஸ்கர் எல்லை மீறி வீரர்களை விமர்சனம் செய்தது மட்டுமல்லாமல் பயிற்சியாளரையும் அவர்களிடம் இருக்கும் குழுவையும் சேர்த்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்து கேலி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி தனது 2-வது மற்றும் கடைசி சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் ஸ்காலாந்துடன் இன்று மோதுகிறது.
- இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.
கோலாலம்பூர்:
2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் வீதம் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. 12 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், குரூப் 2-ல் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா, நைஜீரியா, அயர்லாந்து, நியூசிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த சுற்றில் ஒரு அணி தங்கள் பிரிவில் உள்ள குறிப்பிட்ட இரு அணிகளுடன் மட்டும் மோதும். இந்த சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இதில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி தனது முதலாவது சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் சேர்த்து மொத்தம் 6 புள்ளிகளை (லீக் சுற்றில் 4 புள்ளிகள்) பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.
இதனையடுத்து இந்திய அணி தனது 2-வது மற்றும் கடைசி சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் ஸ்காலாந்துடன் இன்று மோதுகிறது. இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.






