என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டிராவிஸ் ஹெட் 40 பந்தில் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
    • கவாஜா 147 ரன்களுடன், ஸ்மித் 104 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    காலே:

    இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கவாஜா , டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். குறிப்பாக டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அசத்தினர். அவர் 40 பந்தில் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த லெபுசென் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து கவாஜாவுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். தொடர்ந்து விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

    இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்தது. கவாஜா 147 ரன்களுடன், ஸ்மித் 104 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, ஜெஃப்ரி வேண்டர்சே தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • முதலில் விளையாடிய இலங்கை அணி 99 ரன்கள் எடுத்தது.
    • ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 88 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சனா கவிந்தி 19 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் லில்லி பாசிங்த்வைட் 3 விக்கெட்டுகளை விழ்த்தினார்.

    இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மந்தமாக விளையாடினார். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கவோம்ஹே பிரே 24 ரன்கள் எடுத்தார்.

    இதன்மூலம் இலங்கை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறி விட்டது. இருந்தாலும் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை அணி நாடு திரும்பும்.

    • ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றிய மேடிசன் கீஸ் 7 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மனி) 8,135 புள்ளியுடன் அதே 2-வது வரிசையில் உள்ளார்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் சமீபத்தில் முடிவடைந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னரும் (இத்தாலி), பெண்கள் ஒற்றையர் பிரிவில் மேடிசன் கீசும் (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    இந்த நிலையில் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தக்க வைத்த சின்னர் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். அவர் 11,830 புள்ளிகள் பெற்று உள்ளார். அவரிடம் இறுதிப் போட்டியில் தோற்ற அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மனி) 8,135 புள்ளியுடன் அதே 2-வது வரிசையில் உள்ளார்.

    கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 7010 புள்ளியுடன் 3-வது இடத்திலும், டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) 4-வது இடத்திலும், கேஸ்பர் ரூட் (நார்வே) 5-வது இடத்திலும், அதிக கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்ற சாதனையாளராக ஜோகோவிச் (செர்பியா) 6-வது இடத்திலும், மெட்வதேவ் (ரஷியா) 7-வது இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா (பெலாரஸ்) 8,956 புள்ளியுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். அவர் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் தோற்றாலும் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றிய மேடிசன் கீஸ் 7 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். இகா ஸ்வியாடெக் (போலந்து) 8,770 புள்ளியுடன் 2-வது இடத்திலும் , கோகோ கவூப் (அமெரிக்கா) 6,538 புள்ளியுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    பாலினி (இத்தாலி), ரைபகினா (கஜகஸ்தான்), பெகுலா (அமெரிக்கா) ஆகியோர் முறையே 4 முதல் 6-வது இடத்தில் உள்ளனர்.

    • ஐ.சி.சி. டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
    • இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் திலக் வர்மா 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    துபாய்:

    டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

    இதில் இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 25 இடங்கள் முன்னேறி 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் அவர் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    நேற்று நடந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகில் ஹொசைன் 2வது இடத்திலும், இலங்கை வீரர் ஹசாரங்கா 3வது இடத்திலும் உள்ளனர்.

    பேட்ஸ்மேன்களில் இந்தியாவின் திலக் வர்மா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டிராவிஸ் ஹெட் முதலிடத்திலும், பிலிப் சால்ட் 3-வது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்திலும் உள்ளார்.

    • இலங்கைக்கு எதிராக விளையாடி வரும் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை எட்டினார்.
    • தொடர்ந்து விளையாடிய ஸ்மித் சதம் விளாசி அசத்தினார்.

    கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரராக திகழ்பவர் ஸ்டீவ் ஸ்மித். இவர் இந்தியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரிலே 10 ஆயிரம் ரன்களை எட்டும் வாய்ப்பு கிட்டியது. ஆனால், 1 ரன்னில் அந்த சாதனையை படைக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

    இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகியதால், ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணிக்காக முதல் விக்கெட்டிற்கு டிராவிஸ் ஹெட் அதிரடியாக 57 ரன்கள் எடுத்து அவுட்டாகிய நிலையில், அடுத்து வந்த லபுசென் 20 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 1 ரன் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை எட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய ஸ்டீவ் ஸ்மித்திற்கு மைதானத்தில் இருந்த ரசிகர்களும், இரு அணி வீரர்களும் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். கேப்டனாக இருக்கும்போது இந்த சாதனையை அவர் எட்டியிருப்பது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.

    தொடர்ந்து விளையாடிய ஸ்மித் சதம் விளாசி அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 115 போட்டிகளில் விளையாடிய ஸ்மித் 35-வது சதத்தை பதிவு செய்துள்ளார்.

    இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 சதங்கள் விளாசிய 4 முன்னாள் ஜாம்பவான்களான யூனிஸ்கான் (பாகிஸ்தான்), சுனில் கவாஸ்கர் (இந்தியா), பிரைன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்), ஜெயவர்தனே (இலங்கை) ஆகியோரது சாதனையை ஸ்மித் முறியடித்துள்ளார்.

    • சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை ஜின்யு வாங் வெற்றி பெற்றார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் சீன வீராங்கனை ஜின்யு வாங், கனடா வீராங்கனை ரிபேகா மரினோ உடன் மோதினார்.

    இதில் ஜின்யு வாங் 6-4, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

    அடுத்த சுற்றில் ஜின்யு வாங் ஆஸ்திரேலிய வீராங்கனை மாயா ஜாயிண்டை சந்திக்க உள்ளார்.

    • இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 1 ரன் எடுத்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை ஸ்மித் கடந்தார்.
    • 10 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது ஆஸ்திரேலிய வீரராக ஸ்மித் சாதனை படைத்துள்ளார்.

    காலே:

    இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

    அதன்படி இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் (57) அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்து அவுட் ஆனார். அடுத்து வந்த லபுசென் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கவாஜா -ஸ்மித் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    இந்த போட்டியில் ஸ்மித் 1 ரன் எடுத்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். இதன்மூலம் பல சாதனைகளை ஸ்மித் படைத்துள்ளார்.

    10 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது ஆஸ்திரேலிய வீரராக ஸ்மித் சாதனை படைத்தார். முதல் 3 இடங்களில் ரிக்கி பாண்டிங் (13,378), ஆலன் பார்டர் (11,174), ஸ்டீவ் வாக் (10927) ஆகியோர் உள்ளனர். மேலும் ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் 15-வது இடத்தில் உள்ளார்.

    அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் ஸ்மித் 5-வது இடத்தில் உள்ளார். இவர் 205 போட்டிகளில் விளையாடி 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

    அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் விவரம்:-

    195 - பிரையன் லாரா (மேற்கிந்திய தீவுகள்) vs இங்கிலாந்து, மான்செஸ்டர் (2004)

    195 - சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) vs பாகிஸ்தான், ஈடன் கார்டன்ஸ் (2005)

    195 - குமார் சங்கக்காரா (இலங்கை) vs ஆஸ்திரேலியா, எம்சிஜி (2012)

    196 - ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) vs மேற்கிந்திய தீவுகள், நார்த் சவுண்ட் (2008)

    205 - ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) vs இலங்கை, காலே (2025)

    206 - ராகுல் டிராவிட் (இந்தியா) vs தென்னாப்பிரிக்கா, சென்னை (2008)

    10 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர்கள் விவரம்

    சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 15,921 ரன்கள்

    ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 13,378 ரன்கள்

    ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) - 13289 ரன்கள்

    ராகுல் டிராவிட் (இந்தியா) - 13,288 ரன்கள்

    ஜோ ரூட் (இங்கிலாந்து) - 12,972 ரன்கள்

    அலஸ்டர் குக் (இங்கிலாந்து) - 12,472 ரன்கள்

    குமார் சங்கக்கார (இலங்கை) - 12,400 ரன்கள்

    பிரையன் லாரா (மேற்கிந்திய தீவுகள்) - 11,953 ரன்கள்

    ஷிவ்நரேன் சந்தர்பால் (மேற்கிந்திய தீவுகள்) - 11,867 ரன்கள்

    மஹேல ஜெயவர்த்தனே (இலங்கை) - 11,814 ரன்கள்

    ஆலன் பார்டர் (ஆஸ்திரேலியா) - 11,174 ரன்கள்

    ஸ்டீவ் வாக் (ஆஸ்திரேலியா) - 10,927 ரன்கள்

    சுனில் கவாஸ்கர் (இந்தியா) - 10,122 ரன்கள்

    யூனிஸ் கான் (பாகிஸ்தான்) - 10,099 ரன்கள்

    ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) -10,000* ரன்கள் (தற்போது)

    • வருண் சக்கரவர்த்தி ஒருவரே பந்து வீச்சில் மிகவும் கடினமாக உழைத்துள்ளார்.
    • இனிவரும் போட்டியில் ஷமி சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.

    3- வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து முதல் வெற்றியை பதிவு செய்தது

    குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 51 ரன்களும் லிவிங்ஸ்டன் 43 ரன்களும் எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி 24 ரன் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 26 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 40 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட்டும், மார்க் வுட், ஆதில் ரஷீத் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 127 ரன்னில் 8 விக்கெட்டை இழந்தது. இதை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம். 171 ரன்கள் வரை சென்றது மிகையானது. வருண் சக்கரவர்த்தி ஒருவரே பந்து வீச்சில் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். அவர் நேர்த்தியுடன் பந்து வீசுவது நல்ல பலனை கொடுக்கிறது. இனிவரும் போட்டியில் ஷமி சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்

    இங்கிலாந்து அணியில் ஆதில் ரஷீத் மிக சிறப்பாக பந்துவீசினார். எங்களை ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யவே ஆதில் ரஷீத் அனுமதிக்கவில்லை. அதனால்தான் அவர் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளராக இருக்கிறார் என்று தெரிவித்தார்.

    • வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • மொத்தத்தில் இவர் 29 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், வருண் சக்கரவர்த்தி தொடர்ச்சியான டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்த சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான வருண் சக்கவர்த்தி சிறிய இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு மீண்டும் அணியில் இடம்பிடித்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

    இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி வெறும் 24 ரன்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் உள்பட ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்சே மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரின் விக்கெட்டுகள் அடங்கும்.

    கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் ரீ-எண்ட்ரி கொடுத்ததில் இருந்து வருண் சக்கரவர்த்தி பத்து போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரது சராசரி 10.96 ஆகும். இதில் சிறந்த பந்துவீச்சாக 17 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை எடுத்தது இடம்பெற்றுள்ளது. மொத்தத்தில் 16 போட்டிகளில் இவர் 29 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் வருண் சக்கரவர்த்தி இந்தத் தொடரில் மட்டும் பத்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அந்த வகையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒற்றை டி20 தொடரில் பத்து விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை வருண் சக்கரவர்த்தி பெற்றுள்ளார்.

    இதன் மூலம், தொடர்ச்சியாக பத்து டி20 போட்டிகளில் விளையாடி இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை வருண் சக்கரவர்த்தி படைத்துள்ளார். முன்னதாக இந்திய வீரர் குல்தீப் யாதவ் பத்து டி20 போட்டிகள் முடிவில் 25 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராக இருந்தார்.

    • இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டும், பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    • டி20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.

    ராஜ்கோட்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக ஷமி இடம்பிடித்துள்ளார்.

    அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது.

    இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டும், பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. திலக் வர்மா 18 ரன்கள், சுந்தர் 10 ரன்கள், அக்சர் படேல் 15 ரன்கள், துருவ் ஜுரெல் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், இந்தியா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டு இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

    இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 40 ரன்கள் அடித்தார்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
    • முதலில் ஆடிய இங்கிலாந்து 171 ரன்களை எடுத்துள்ளது.

    ராஜ்கோட்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக ஷமி இடம்பிடித்துள்ளார்.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. பிலிப் சால்ட் 5 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஜாஸ் பட்லர் பென் டக்கெட்டுடன் இணைந்தார். இந்த ஜோடி அதிரடியில் மிரட்டியது. குறிப்பாக பென் டக்கெட் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 28 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 51 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    ஜாஸ் பட்லர் 24 ரன்னில் அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 76 ரன்கள் சேர்த்தது.

    கடைசி கட்டத்தில் லிவிங்ஸ்டன் அதிரடியாக ஆடி 5 சிக்சர் உள்பட 43 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 171 ரன்களை எடுத்துள்ளது.

    இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டும், பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • ஜூலையில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட் தொடரில் விளையாட உள்ளேன் என்றார் டிவில்லியர்ஸ்.
    • டி வில்லியர்சின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    டர்பன்:

    தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் ஏ.பி.டிவில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பப் போவதாக அறிவித்துள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் டிவில்லியர்ஸ் கிரிக்கெட் போட்டிக்குத் திரும்ப வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தார்.

    முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்ற உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட் (WCL) என்ற தொடர் மிகவும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக டிவில்லியர்ஸ் பங்கேற்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இந்நிலையில், வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட் தொடரில் விளையாட உள்ளேன் என டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பேட்டியளித்த டிவில்லியர்ஸ், 4 ஆண்டுக்கு முன் நான் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றேன். மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற நினைப்பு இல்லாமல் இருந்தேன். காலம் செல்ல மீண்டும் எனக்கு கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்ப வேண்டும் என்ற நினைப்பு தோன்றுகிறது.

    அதற்கு காரணம் நான் என்னுடைய மகன்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுகிறேன். அப்போது எனக்குள் இன்னும் கிரிக்கெட் வேட்கை இருந்ததை உணர முடிந்தது. எனவே தற்போது ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அது மட்டுமின்றி பேட்டிங் பயிற்சியும் செய்து வருகிறேன்.

    இதன்மூலம் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட் தொடரில் நான் விளையாட தயாராகி விடுவேன் என தெரிவித்துள்ளார்.

    இந்த தென் ஆப்பிரிக்க அணியில் காலிஸ், கிப்ஸ், ஸ்டெயின், இம்ரான் தாகிர் போன்ற வீரர்களும் விளையாட உள்ளனர்.

    டி வில்லியர்சின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    ×