என் மலர்
விளையாட்டு
- டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் 203 ரன்கள் குவித்தது.
லக்னோ:
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்துள்ளது. மிட்செல் மார்ஷ் 60 ரன்னும், மார்க்ரம் 53 ரன்னும் அடித்தனர்.
மும்பை அணி சார்பில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. வில் ஜாக்ஸ் 5 ரன்னிலும், ரிக்கல்டன் 10 ரன்னிலும் அவுட்டாகினர்.
நமன் தீர் அதிரடியாக ஆடி 24 பந்தில் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 67 ரன்னில் வெளியேறினார். திலக் வர்மா 25 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா 28 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது. மும்பை அணி பெற்ற 3-வது தோல்வி இதுவாகும்.
- முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் 203 ரன்கள் குவித்தது.
- லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட் வீழ்த்தினார்.
லக்னோ:
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்துள்ளது. மிட்செல் மார்ஷ் 60 ரன்னும், மார்க்ரம் 53 ரன்னும் அடித்தனர்.
மும்பை அணி சார்பில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில், ஐ.பி.எல். வரலாற்றில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் கேப்டன் என்ற புதிய சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.
- மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- இதற்கு முன் விளையாடிய மூன்று போட்டிகளில் ரிஷப் பண்ட் மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
2025 ஐபிஎல் தொடரில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 203 ரன்கள் எடுத்தது. என்ன தான் லக்னோ அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தாலும் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் அவரது தடுமாற்றம் தொடர்கிறது. இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் ரிஷப் பண்ட் மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இதனால் தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பண்டுக்கு இந்த போட்டி முடிந்தபிறகும் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா சில அறிவுரைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு போட்டி முடிந்தவுடனும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே பன்மொழிக் உடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபடுகிறார். மிகவும் கோபமாக பேசுகிறார். இதுபோன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியாகி வருகின்றன.
இந்த சம்பவத்தை வைத்து ரிஷப் பண்டை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இன்றைக்கு என்ன பன்ன காத்திருக்கானோ தெரியல என்ற வடிவேலு கமெடி டயலாக்கை வைத்தும் சிவாஜி படத்தில் ஆபீஸ் ரூமுக்கு வாங்க என்ற டயலாக்கை வைத்து பண்டை கலாய்த்து வருகின்றனர்.
- மிட்செல் மார்ஷ், மார்கிராம் அரைசதம் அடித்தனர்.
- ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட் வீழ்த்தினார்.
ஐபிஎல் 2025 தொடரின் 16ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீ்ச்சை தேர்வு செய்தார்.
அதன்படி லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்கிராம் நிதானமாக விளையாட மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்தில் அரைசதம் விளாசினார். 5.3 ஓவருக்குள் அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 31 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 6 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்ட்யா பந்தில் வெளியேறினார். ரிஷப் பண்ட்-ஐ 2 ரன்னில் வெளியேற்றினார்.
மார்கிராம் மெல்லமெல்ல ஆட்டத்தில் வேகத்தை கூட்டி 38 பந்தில் 53 ரன்கள் சேர்த்தார். இவரது விக்கெட்டையும் ஹர்திக் பாண்ட்யாதான் கைப்பற்றினார். ஆயுஷ் படோனி 19 பந்தில் 30 ரன்கள் அடித்தார்.
கடைசி ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். முதல் மூன்று பந்துகளில் 12 ரன்கள் அடித்த டேவிட் மில்லர் 14 பந்தில் 27 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ 19.3 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது.
4ஆவது பந்தில் டேவிட் மில்லரும், 5ஆவது பந்தில் ஆகாஷ் தீப்பும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட் வீழ்த்தினார். கடைசி பந்தில் வைடு உடன் 3 ரன்கள் விட்டுக்கொடுக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 203 ரன்கள் குவித்தது.
- மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது 100-வது போட்டியில் சூர்யகுமார் களமிறங்கி சாதனை படைத்துள்ளார்.
- சூர்யகுமாருக்கு அவர் பெயர் மற்றும் 100 என்ற நம்பர் பொறித்த டிசர்ட்டை கொடுத்து பொல்லார்ட் வாழ்த்து தெரிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா காயம் காரணமாக இடம் பெறவில்லை.
இந்நிலையில் இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம் சூர்யகுமார் யாதவ் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது 100-வது போட்டியில் சூர்யகுமார் களமிறங்கி சாதனை படைத்துள்ளார்.
மும்பை அணிக்காக 100-வது போட்டியில் களமிறங்கிய 8-வது வீரர் சூர்யகுமார். அவருக்கு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் அவர் பெயர் மற்றும் 100 என்ற நம்பர் பொறித்த டிசர்ட் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதற்குமுன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 100-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடிய வீரர்களில் ரோகித் சர்மா, பொல்லார்ட், ஹர்பஜன் சிங், லசித் மலிங்கா, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அம்பதி ராயுடு ஆகியோர் உள்ளனர்.
- நாளை மதியம் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
- அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஏப்ரல் 05, 2025 ஆம் தேதி) நடைபெற உள்ள "IPL 2025" கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
IPL போட்டிகான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் (both Digital & Physical) தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.
எந்த மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரெயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.
அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி செல்லும் கடைசி மெட்ரோ ரெயில் 23:27 மணிக்கு புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்லும் கடைசி இணைப்பு ரெயில் 22:59 மணிக்கும் மற்றும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்லும் கடைசி இணைப்பு ரெயில் 22:44 மணிக்கும் புறப்படும்.
புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். IPL 2025 போட்டியை காண செல்பவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- 2015ஆம் ஆண்டு 71 மில்லியன் டாலருக்கு மான்செஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்தது.
- 6 முறை இங்கிலீஷ் பிரீமியர் லீக், ஒரு முறை சாம்பியன் லீக் ஆகியவற்றை வெல்ல காரணமாக இருந்துள்ளார்.
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் முன்னணி கால்பந்து அணியான மான்செஸ்டர் சிட்டிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடி வரும் பெல்ஜியத்தை சேர்ந்த கெவின் டி ப்ரூயின் (வயது 33), அந்த அணியில் இருந்து விடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
குட் பை சொல்வதற்கான நேரம், சாம்பியன் அணியுடன் இறுதி மாதங்களில் விளையாடுவதாக தெரிவித்துள்ளார். இதை சொல்வது எளிதல்ல. ஆனால் கால்பந்து வீரர்களான எங்களுக்கு, இறுதியாக ஒரு நாள் வரும் என்பது எங்களுக்கு தெரியும். அந்த நாள் இங்கே எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நகரம். இந்த கிளப். இந்த மக்கள்... எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தார்கள். எல்லாவற்றையும் திருப்பிக் கொடுப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை! என்னவென்று யூகிக்கவும் - நாங்கள் எல்லாவற்றையும் வென்றோம். நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், விடைபெற வேண்டிய நேரம் இது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ப்ரூயின் 2015ஆம் ஆண்டு வோல்ஸ்பர்க் அணியில் இருந்து மான்செஸ்டர் சிட்டிக்கு 71 மில்லியன் டாலருக்கு டிரான்ஸ்பர் ஆனார். 6 முறை இங்கிலீஷ் பிரீமியர் லீக், ஒரு முறை சாம்பியன் லீக் ஆகியவற்றை வெல்ல காரணமாக இருந்துள்ளார்.
பிரீமியர் லீக்கில் 280 போட்டிகளில் விளையாடி 118 கோல்கள் அடிப்பதற்கு துணை புரிந்துள்ளார். மொத்தமாக சிட்டி அணிக்காக 413 போட்டிகளில் விளையாடியுள்ளார். 106 கோல் அடித்துள்ளார். இரண்டு முறை இங்கிலாந்தின் PFA வீரர் விருதை வென்றுள்ளார்.
வேறு அணிக்கு செல்வது குறித்து ப்ரூயின் இன்னும் முடிவு செய்யவில்லை.
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
- இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் இம்பேக்ட் பிளேயராக இடம்பெறவில்லை.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- மும்பை இந்தியன்சை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. தொடர்ந்து 3 போட்டிகளாக இம்பெக்ட் பிளேயராக விளையாடி வந்த ரோகித் இந்த போட்டியில் இம்பேக்ட் பிளேயராக கூட இல்லாதது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடந்த முடிந்த 3 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் இந்த முடிவை மும்பை அணி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் அவருக்கு முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
- 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகிறது.
- இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டங்களில் லக்னோவும், ஒன்றில் மட்டும் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா இடம் பெறவில்லை. இம்பெக்ட் பிளேயராக கூட அவர் இடம்பெறவில்லை. இது ரோகித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.
- கடந்த போட்டியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமாகி ருதுராஜ் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
- எங்கள் அணியின் இளமையான விக்கெட் கீப்பர் கேப்டன்ஷிப் செய்வார்.
ஐபிஎல் தொடரின் நாளைய 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் நாளைய போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என சிஎஸ்கே அணி பேட்டிங் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த போட்டியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமாகி ருதுராஜ் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒருவேளை அவர் நாளைய போட்டியில் விளையாடாவிட்டால், வழிநடத்த ஸ்டம்புகளுக்கு பின்னே ஒருவர் உள்ளார். எங்கள் அணியின் இளமையான விக்கெட் கீப்பர் கேப்டன்ஷிப் செய்வார். ஆனால் இது குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை.
ஓப்பனிங் விளையாடும் த்ரிபாதி கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். விரைவில் மிகப்பெரிய ஸ்கோரை அடிப்பார்.
என சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கூறினார்.
- சென்னையுடன் மோதும் நாளைய போட்டியில் நடராஜன் விளையாட மாட்டார்.
- அவர் முழுமையாக உடற்தகுதி பெற்றபிறகு, அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
ஐபிஎல் தொடரின் நாளைய 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி அணி வீரர் குல்தீப் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது இந்த போட்டியில் டெல்லி அணிக்காக தமிழக வீரர் நடராஜன் விளையாடுவரா என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு விளையாடமாட்டார் என்று சக அணி வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் காயம் காரணமாக சென்னையுடன் மோதும் நாளைய போட்டியில் நடராஜன் விளையாட மாட்டார். அவர் முழுமையாக உடற்தகுதி பெற்றபிறகு, அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என நம்புகிறேன் என குல்தீப் யாதவ் கூறினார்.
- லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானை லெவனில் இருந்து நீக்கியுள்ளார்.
- மும்பை - லக்னோ அணிகள் இன்று மோதுகிறது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் இன்று நடைபெறும் 16-வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இரு அணிகளும் விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியையும், இரண்டு தோல்வியையும் பதிவுசெய்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கணித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் குறித்து விரிவான முன்னோட்டத்தை வழங்கினார். இதற்கிடையில், அவர் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் லெவனையும் தேர்ந்தெடுத்தார்.
இதில் அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானை லெவனில் இருந்து நீக்கியுள்ளார். அதேசமயம் காயம் காரணமாக முதல் சில போட்டிகளாக விளையாடாமல் இருந்த ஆகாஷ் தீப் தற்சமயம் முழு உடற்தகுதியை எட்டியுள்ளதன் காரணமாக அவருக்கு லெவனில் வாய்ப்பு கிடைக்கும்.
என்று பதான் கூறினார்.
கடந்த சீசன் வரை ஆகாஷ் தீப் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இர்பான் பதான் தேர்வு செய்த எல்எஸ்ஜி லெவன்:
ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் மில்லர், ஆயுஷ் பதோனி, அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய், ஆகாஷ் தீப். இம்பேக்ட் வீரர் - பிரின்ஸ் யாதவ்.






