என் மலர்
விளையாட்டு
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது.
ராவல்பிண்டி:
கருணாரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டி விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது.
இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ராவல் பிண்டியில் இன்று தொடங்கியது. இலங்கை அணி கேப்டன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் திமுத் கருணரத்னே, ஒஷாடா பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இருவரும் இணைந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். பொறுப்புடன் ஆடிய திமுத் கருணரத்னே அரை சதமடித்தார்.
அணியின் எண்ணிக்கை 96 ஆக இருக்கும்போது திமுத் கருணரத்னே 59 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து, பெர்னாண்டோ 40 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 10 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 31 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 2 ரன்னிலும் வெளியேறினர்.
இறுதியில், இலங்கை அணி முதல் நாள் முடிவில் 68.1 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. தனஞ்செயா டி சில்வா 38 ரன்னும், நிரோஷன் டிக்வெலா 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
பாகிஸ்தான் மண்ணில் 10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக அஸ்கர் ஆப்கன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம் பிடித்த அணிகளில் ஒன்று ஆப்கானிஸ்தான். அந்தத் தொடரில் ஏதாவது ஒரு அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 9 லீக் ஆட்டத்திலும் தோல்வியடைந்து ஒரு புள்ளி கூட இல்லாமல் பரிதாபமாக வெளியேறியது.
ஆனால், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன் யாரும் எதிர்பார்க்காத வகையில் அஸ்கர் ஆப்கன் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, குல்பதின் நைப் கேப்டனாக நியமிக்கப்பட்டார். சில சர்ச்சைகளால் குல்பதின் நைப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவரை தொடர்ந்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகை கிரிக்கெட் அணிக்கும் ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் மோசமான பார்ம் காரணமாக அந்த அணி ஒருநாள் மற்ற்ம் டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக அஸ்கர் ஆப்கன் மீண்டும் நியமனம் செய்யப் பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மதுரையில் இருந்து அதிக அளவில் வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு வர வேண்டும் என்று சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பேசினார்.
மதுரை:
மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 60-வது ஆண்டு விழா மற்றும் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள், நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மதுரை பாண்டியன் ஓட்டலில் நடந்தது.
மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும், முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரருமான வெங்கடரமணா தலைமை தாங்கினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுரவ செயலாளர் ராமசாமி, உதவி இணைச் செயலாளர் வெங்கட்ராமன், முன்னாள் துணைச் செயலாளர் ஆர்.ஐ.பழனி, பி.சி.சி.ஐ. நடுவர் பரத்குமார், தேர்வு கமிட்டி உறுப்பினர் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் பேசினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் கலந்து கொண்டு கிரிக்கெட் அணி வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பரிசுகள் வழங்கினார்.
மதுரை தொன்மை கால நகரமாக இன்றும் விளங்கி வருகிறது. மதுரை எனக்கு விருப்பமான நகரம் ஆகும். மதுரையில் நான் விளையாடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட, மதுரை எனக்கு பிடித்த ஊராக உள்ளது.
மதுரையில் கிரிக்கெட் விளையாட்டுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மதுரையைப் போன்ற பாரம்பரியமிக்க நகரில் இருந்து இந்திய அணிக்கு அதிக வீரர்கள் வர வேண்டும்.
இளைஞர்கள் தோல்வியை கண்டு சோர்ந்து விடாமல், விடாமுயற்சியுடன், தொடர் முயற்சியும் இருந்தால் சாதிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கங்காராம்சிங் என்ற அல்வா அருண், காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் மகேந்திரன், மன்னர் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ராகவன், மதுரை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ரங்கராஜன் மற்றும் மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க அணி செயலாளர்கள், நிர்வாகிகள், வீரர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 60-வது ஆண்டு விழா மற்றும் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள், நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மதுரை பாண்டியன் ஓட்டலில் நடந்தது.
மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும், முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரருமான வெங்கடரமணா தலைமை தாங்கினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுரவ செயலாளர் ராமசாமி, உதவி இணைச் செயலாளர் வெங்கட்ராமன், முன்னாள் துணைச் செயலாளர் ஆர்.ஐ.பழனி, பி.சி.சி.ஐ. நடுவர் பரத்குமார், தேர்வு கமிட்டி உறுப்பினர் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் பேசினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் கலந்து கொண்டு கிரிக்கெட் அணி வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பரிசுகள் வழங்கினார்.
மதுரை தொன்மை கால நகரமாக இன்றும் விளங்கி வருகிறது. மதுரை எனக்கு விருப்பமான நகரம் ஆகும். மதுரையில் நான் விளையாடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட, மதுரை எனக்கு பிடித்த ஊராக உள்ளது.
மதுரையில் கிரிக்கெட் விளையாட்டுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மதுரையைப் போன்ற பாரம்பரியமிக்க நகரில் இருந்து இந்திய அணிக்கு அதிக வீரர்கள் வர வேண்டும்.
இளைஞர்கள் தோல்வியை கண்டு சோர்ந்து விடாமல், விடாமுயற்சியுடன், தொடர் முயற்சியும் இருந்தால் சாதிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கங்காராம்சிங் என்ற அல்வா அருண், காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் மகேந்திரன், மன்னர் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ராகவன், மதுரை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ரங்கராஜன் மற்றும் மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க அணி செயலாளர்கள், நிர்வாகிகள், வீரர்கள் கலந்து கொண்டனர்.
ரஞ்சி டிராபியில் கர்நாடகாவுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் ஆடி சதமடிக்க, தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 307 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
திண்டுக்கல்:
ரஞ்சி டிராபி 2019-2020 சீசனில் முதல் சுற்று ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற கர்நாடகா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 43 ரன்கள் சேர்த்தார். தேவ்தத் படிக்கல் 75 ரன்கள் சேர்த்தார். தேஷ்பாண்டே 65 ரன்கள் அடிக்க கர்நாடகா முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுடுக்கு 259 ரன்கள் எடுத்திருந்தது. கே.கவுதம் 51 ரன்கள் எடுக்க கர்நாடகா 336 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆனது.
தமிழ்நாடு அணி சார்பில் ஆர். அஸ்வின் 4 விக்கெட்டும், விக்னேஷ் மற்றும் சித்தார்த் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபினவ் முகுந்த், முரளி விஜய் களமிறங்கினர்.
அபினவ் முகுந்த 47 ரன், முரளி விஜய் 32 ரன், பாபா அபராஜித் 37 ரன், விஜய் சங்கர் 12 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
சீரான இடைவெளியில் ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், தினேஷ் கார்த்திக் பொறுப்புடன், நிதானமாக ஆடினார். அவர் சதமடிக்க 113 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தபடி இறங்கிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், தமிழ்நாடு அணி 109.3 ஓவரில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கர்நாடகா அணி சார்பில் கிருஷ்ணப்பா கவுதம் சிறப்பாக பந்து வீச் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து, கர்நாடகா அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது.
பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முற்றிலும் மாறுபட்ட அணியாக திகழ்கிறது என இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
மும்பை:
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் மும்பையில் இன்று நடக்கிறது.
இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன.
இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை வெல்லப்போவது யார்? என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை வெல்ல கடுமையாக போராட வேண்டும்.
இந்த ஆட்டம் குறித்து இந்திய வீரர் ரோகித்சர்மா கூறியதாவது:-
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இன்னும் நீண்ட நாட்கள் இருக்கிறது. அதற்கான இந்திய அணியை பலப்படுத்த முயற்சித்து வருகிறோம். தற்போது அதைவிட வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வெல்வதே முக்கியமாகும்.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலம் உலக கோப்பைக்கு அதிக நம்பிக்கை ஏற்படும். ஒவ்வொரு போட்டியில் ஏற்படும் தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்று வருகிறோம்.
பொல்லார்ட் தலைமையில் வெஸ்ட்இண்டீஸ் அணி முற்றிலும் மாறுபட்ட அணியாக திகழ்கிறது. அந்த அணியில் சிறந்த அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள்.
ஐ.பி.எல். போட்டியில் நாங்கள் இருவரும் ஒரே அணியில் விளையாடி இருக்கிறோம். அவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும். கிரிக்கெட் பற்றி அதிக நுணுக்கங்களை அறிந்தவர் பொல்லார்ட் புத்திசாலித்தனமான வீரர் மட்டுமல்ல. சிறந்த கேப்டனும் ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோகித்சர்மா கடந்த 2 ஆட்டத்திலும் சிறப்பாக ஆடவில்லை. ஒரு சிக்சர் கூட அடிக்காமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இன்று சொந்த மண்ணில் விளையாடுவதால் ரோகித்சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் மும்பையில் இன்று நடக்கிறது.
இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன.
இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை வெல்லப்போவது யார்? என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை வெல்ல கடுமையாக போராட வேண்டும்.
இந்த ஆட்டம் குறித்து இந்திய வீரர் ரோகித்சர்மா கூறியதாவது:-
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இன்னும் நீண்ட நாட்கள் இருக்கிறது. அதற்கான இந்திய அணியை பலப்படுத்த முயற்சித்து வருகிறோம். தற்போது அதைவிட வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வெல்வதே முக்கியமாகும்.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலம் உலக கோப்பைக்கு அதிக நம்பிக்கை ஏற்படும். ஒவ்வொரு போட்டியில் ஏற்படும் தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்று வருகிறோம்.
பொல்லார்ட் தலைமையில் வெஸ்ட்இண்டீஸ் அணி முற்றிலும் மாறுபட்ட அணியாக திகழ்கிறது. அந்த அணியில் சிறந்த அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள்.
ஐ.பி.எல். போட்டியில் நாங்கள் இருவரும் ஒரே அணியில் விளையாடி இருக்கிறோம். அவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும். கிரிக்கெட் பற்றி அதிக நுணுக்கங்களை அறிந்தவர் பொல்லார்ட் புத்திசாலித்தனமான வீரர் மட்டுமல்ல. சிறந்த கேப்டனும் ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோகித்சர்மா கடந்த 2 ஆட்டத்திலும் சிறப்பாக ஆடவில்லை. ஒரு சிக்சர் கூட அடிக்காமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இன்று சொந்த மண்ணில் விளையாடுவதால் ரோகித்சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
பாகிஸ்தானில் 10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ராவல்பிண்டி:
கருணாரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டி விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது.
இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ராவல் பிண்டியில் இன்று தொடங்கியது.
இலங்கை அணி கேப்டன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி அந்த அணி பேட்டிங் செய்து வருகிறது.
பாகிஸ்தான் மண்ணில் 10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
2009-ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாடிய போது லாகூரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சிலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடைபெறவில்லை. அந்த அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் விளையாடி வந்தது.
இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மட்டும் பாகிஸ்தான் சென்று ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாடின. ஆனால் டெஸ்ட் போட்டி நடைபெறாமல் இருந்தது.
பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் டெஸ்டில் விளையாடி வந்தது. தற்போதுதான் பாகிஸ்தான் அணி 10 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆடியது.
இந்த டெஸ்ட் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. எந்தவித அசம்பாவிதமும் நடைபெற்று விடாமல் இருக்க ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன.
உணர்ச்சிபூர்வமான இந்த டெஸ்ட் போட்டியை பார்க்க பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். அவர்கள் பெருமளவில் திரண்டு ஸ்டேடியத்திற்கு வந்தனர்.
கருணாரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டி விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது.
இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ராவல் பிண்டியில் இன்று தொடங்கியது.
இலங்கை அணி கேப்டன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி அந்த அணி பேட்டிங் செய்து வருகிறது.
பாகிஸ்தான் மண்ணில் 10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
2009-ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாடிய போது லாகூரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சிலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடைபெறவில்லை. அந்த அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் விளையாடி வந்தது.
இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மட்டும் பாகிஸ்தான் சென்று ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாடின. ஆனால் டெஸ்ட் போட்டி நடைபெறாமல் இருந்தது.
பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் டெஸ்டில் விளையாடி வந்தது. தற்போதுதான் பாகிஸ்தான் அணி 10 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆடியது.
இந்த டெஸ்ட் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. எந்தவித அசம்பாவிதமும் நடைபெற்று விடாமல் இருக்க ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன.
உணர்ச்சிபூர்வமான இந்த டெஸ்ட் போட்டியை பார்க்க பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். அவர்கள் பெருமளவில் திரண்டு ஸ்டேடியத்திற்கு வந்தனர்.
தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 312 பதக்கங்கள் குவித்து புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்திருக்கிறது.
காத்மண்டு:
13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தின் காத்மண்டு மற்றும் போக்ஹரா ஆகிய நகரங்களில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்காளதேசம், பூடான், மாலத்தீவு ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த 2,715 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 487 பேர் கொண்ட குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர்.
பதக்கவேட்டையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியது. நாள்தோறும் இந்தியர்கள் பதக்க அறுவடை நடத்தினர். இதே நிலைமை கடைசி நாளான நேற்றும் காணப்பட்டது.
நேற்றைய தினம் இந்தியா 10 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. பெண்கள் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி (51 கிலோ உடல் எடைப்பிரிவு) நேபாளத்தின் ராய் மலாவை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்திய முன்னணி வீரர் விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ) பாகிஸ்தானின் குல் ஜாயிப்பை 5-0 என்ற கணக்கில் சாய்த்து தங்கப்பதக்கத்தை உறுதி செய்தார். சோனியா லாதர் (57 கிலோ), மஞ்சு பாம்ப்போரியா (64 கிலோ), ஸ்பார்ஷ் குமார் (61 கிலோ), நரேந்திரா (91 கிலோ) ஆகிய இந்தியர்களும் குத்துச்சண்டையில் தங்கமாய் ஜொலித்தனர்.
ஸ்குவாஷ் பந்தயத்தில் பெண்கள் அணிகள் பிரிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. ஆண்கள் பிரிவில் அதே பாகிஸ்தானுக்கு எதிராக 1-2 என்ற கணக்கில் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் 101-62 என்ற புள்ளி கணக்கில் இலங்கையையும், பெண்கள் பிரிவில் 127-46 என்ற புள்ளி கணக்கில் நேபாளத்தையும் துவம்சம் செய்து இந்தியா இரட்டை தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இதே போல் ஜூடோ கலப்பு பிரிவிலும் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.
10 நாட்கள் நடந்த இந்த விளையாட்டு திருவிழா நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக நேபாள துணை பிரதமர் ஈஸ்வர் பொக்ரால் கலந்து கொண்டார்.
பதக்கப்பட்டியலில் இந்தியா 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலம் என்று மொத்தம் 312 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. தெற்காசிய விளையாட்டு ஒன்றில் இந்தியாவின் அதிகபட்ச பதக்கங்கள் இது தான். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த போட்டியில் 309 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் சிறந்த செயல்பாடாக இருந்தது. இந்த விளையாட்டு தொடங்கிய 1984-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு முறையும் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து வருவது நினைவு கூரத்தக்கது.
நடப்பு தொடரில் நேபாளம் 51 தங்கம், 60 வெள்ளி, 95 வெண்கலம் என்று 206 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், இலங்கை 40 தங்கம், 83 வெள்ளி, 128 வெண்கலம் என்று 251 பதக்கத்துடன் 3-வது இடத்தையும், பாகிஸ்தான் 131 பதக்கத்துடன் (31 தங்கம், 41 வெள்ளி, 59 வெண்கலம்) 4-வது இடத்தையும் பிடித்தன.
13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தின் காத்மண்டு மற்றும் போக்ஹரா ஆகிய நகரங்களில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்காளதேசம், பூடான், மாலத்தீவு ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த 2,715 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 487 பேர் கொண்ட குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர்.
பதக்கவேட்டையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியது. நாள்தோறும் இந்தியர்கள் பதக்க அறுவடை நடத்தினர். இதே நிலைமை கடைசி நாளான நேற்றும் காணப்பட்டது.
நேற்றைய தினம் இந்தியா 10 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. பெண்கள் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி (51 கிலோ உடல் எடைப்பிரிவு) நேபாளத்தின் ராய் மலாவை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்திய முன்னணி வீரர் விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ) பாகிஸ்தானின் குல் ஜாயிப்பை 5-0 என்ற கணக்கில் சாய்த்து தங்கப்பதக்கத்தை உறுதி செய்தார். சோனியா லாதர் (57 கிலோ), மஞ்சு பாம்ப்போரியா (64 கிலோ), ஸ்பார்ஷ் குமார் (61 கிலோ), நரேந்திரா (91 கிலோ) ஆகிய இந்தியர்களும் குத்துச்சண்டையில் தங்கமாய் ஜொலித்தனர்.
ஸ்குவாஷ் பந்தயத்தில் பெண்கள் அணிகள் பிரிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. ஆண்கள் பிரிவில் அதே பாகிஸ்தானுக்கு எதிராக 1-2 என்ற கணக்கில் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் 101-62 என்ற புள்ளி கணக்கில் இலங்கையையும், பெண்கள் பிரிவில் 127-46 என்ற புள்ளி கணக்கில் நேபாளத்தையும் துவம்சம் செய்து இந்தியா இரட்டை தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இதே போல் ஜூடோ கலப்பு பிரிவிலும் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.
10 நாட்கள் நடந்த இந்த விளையாட்டு திருவிழா நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக நேபாள துணை பிரதமர் ஈஸ்வர் பொக்ரால் கலந்து கொண்டார்.
பதக்கப்பட்டியலில் இந்தியா 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலம் என்று மொத்தம் 312 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. தெற்காசிய விளையாட்டு ஒன்றில் இந்தியாவின் அதிகபட்ச பதக்கங்கள் இது தான். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த போட்டியில் 309 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் சிறந்த செயல்பாடாக இருந்தது. இந்த விளையாட்டு தொடங்கிய 1984-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு முறையும் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து வருவது நினைவு கூரத்தக்கது.
நடப்பு தொடரில் நேபாளம் 51 தங்கம், 60 வெள்ளி, 95 வெண்கலம் என்று 206 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், இலங்கை 40 தங்கம், 83 வெள்ளி, 128 வெண்கலம் என்று 251 பதக்கத்துடன் 3-வது இடத்தையும், பாகிஸ்தான் 131 பதக்கத்துடன் (31 தங்கம், 41 வெள்ளி, 59 வெண்கலம்) 4-வது இடத்தையும் பிடித்தன.
திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் கர்நாடகாவுக்கு எதிரான போட்டியில் நடுவரிடம் வாக்குவாதம் செய்த முரளி விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டள்ளது.
ரஞ்சி டிராபி தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன.
நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் கர்நாடகா அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது, அந்த அணியின் பவண் தேஷ்பாண்டே அடித்த பந்து விக்கெட் கீப்பரான என் ஜெகதீசன் கையில் தஞ்சம் அடைந்தது.
பந்து வீச்சாளர் அஸ்வின் உள்பட தமிழக வீரர்கள் அனைவரும் அப்பீல் கேட்டனர். ஆனால், நடுவர் விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த தமிழ்நாடு வீரர்கள் ஆடுகளத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முரளி விஜய்-ஐ லெக்-அம்பயர் சமாதானம் செய்தார்.
இந்நிலையில் வீரர்களின் நன்னடத்தையை மீறும் வகையில் செயல்பட்ட முரளி விஜய்க்கு 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் கர்நாடகா அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது, அந்த அணியின் பவண் தேஷ்பாண்டே அடித்த பந்து விக்கெட் கீப்பரான என் ஜெகதீசன் கையில் தஞ்சம் அடைந்தது.
பந்து வீச்சாளர் அஸ்வின் உள்பட தமிழக வீரர்கள் அனைவரும் அப்பீல் கேட்டனர். ஆனால், நடுவர் விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த தமிழ்நாடு வீரர்கள் ஆடுகளத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முரளி விஜய்-ஐ லெக்-அம்பயர் சமாதானம் செய்தார்.
இந்நிலையில் வீரர்களின் நன்னடத்தையை மீறும் வகையில் செயல்பட்ட முரளி விஜய்க்கு 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டியில் பொல்லார்டின் ஐபிஎல் அனுபவம் வான்கடேயில் பந்து வீச்சாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தை மும்பை இந்தியன்ஸ் அணி பயன்படுத்தி வருகிறது. அந்த அணியில் பொல்லார்டு நீண்ட காலமாக விளையாடி வருகிறார். அந்த அனுபவம் பந்து வீச்சாளர்களுக்கு பலனை கொடுக்கும் என வெஸ்ட் இண்டீஸ் அணி பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பொல்லார்டு கூறுகையில் ‘‘மும்பை வான்கடே மைதானத்தில் பொல்லார்டு அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளார். மற்ற வீரர்கள் அந்த அளவிற்கு விளையாடவில்லை.
அந்த அனுபவத்தை மற்ற வீரர்கள் பெற்றுக்கொள்வது விலைமதிப்பற்றதாகும். குறிப்பாக கேப்டன் பொல்லார்டிம் இருந்து. அவர் வான்கடேயில் 10 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்’’ என்றார்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தை மும்பை இந்தியன்ஸ் அணி பயன்படுத்தி வருகிறது. அந்த அணியில் பொல்லார்டு நீண்ட காலமாக விளையாடி வருகிறார். அந்த அனுபவம் பந்து வீச்சாளர்களுக்கு பலனை கொடுக்கும் என வெஸ்ட் இண்டீஸ் அணி பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பொல்லார்டு கூறுகையில் ‘‘மும்பை வான்கடே மைதானத்தில் பொல்லார்டு அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளார். மற்ற வீரர்கள் அந்த அளவிற்கு விளையாடவில்லை.
அந்த அனுபவத்தை மற்ற வீரர்கள் பெற்றுக்கொள்வது விலைமதிப்பற்றதாகும். குறிப்பாக கேப்டன் பொல்லார்டிம் இருந்து. அவர் வான்கடேயில் 10 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்’’ என்றார்.
காயம் முற்றிலும் குணமடையாததால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலும் ஷிகர் தவான் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான். இவர் வெஸ்ட் இண்டீஸ் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
டி20 தொடர் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன் சையத் முஷ்டாக் அலி டி20 லீக்கில் தவான் டெல்லி அணிக்காக விளையாடினார். அப்போது திடீரென அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடித்தார்.
தற்போது அவரது காயம் முழுமையாக குணம் அடையாததால் ஒருநாள் தொடரில் இருந்தும் நீக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை தவான் நீக்கப்பட்டால், சஞ்சு சாம்சன், ஷுப்மான் கில் அல்லது மயங்க் அகர்வால் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டி20 தொடர் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன் சையத் முஷ்டாக் அலி டி20 லீக்கில் தவான் டெல்லி அணிக்காக விளையாடினார். அப்போது திடீரென அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடித்தார்.
தற்போது அவரது காயம் முழுமையாக குணம் அடையாததால் ஒருநாள் தொடரில் இருந்தும் நீக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை தவான் நீக்கப்பட்டால், சஞ்சு சாம்சன், ஷுப்மான் கில் அல்லது மயங்க் அகர்வால் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
யூரோ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இன்டர் மிலான் அணியை எதிர்த்து விளையாடும் போட்டியில் மெஸ்சிக்கு ஓய்வு கொடுத்துள்ளது பார்சிலோனா.
யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் பார்சிலோனா ‘எஃப்’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. பார்சிலோனா ஏற்கனவே லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டது.
கடைசி லீக் ஆட்டத்தில் இன்டர் மிலானை எதிர்கொள்கிறது. இத்தாலியில் நடைபெறும் இந்த போட்டியில் மெஸ்சிக்கு ஓய்வு வழங்கியுள்ளது பார்சிலோனா. மேலும், ஜெரார்டு பிக்காய், செர்ஜி ரொபெர்ட்டோ ஆகியோருக்கும் ஓய்வு அளித்துள்ளது.
லூயிஸ் சுவாரஸ், கிரிஸ்மான், அன்சு ஃபட்டி ஆகியோர் விளையாடுகிறார்கள். ‘எஃப்’ பிரிவில் பார்சிலோனா ஐந்து போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 டிராவுடன் 11 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இன்டர் மிலான், டாட்ர்மண்ட் அணிகள் தலா 7 புள்ளிகள் பெற்றுள்ளன.
கடைசி லீக் ஆட்டத்தில் இன்டர் மிலானை எதிர்கொள்கிறது. இத்தாலியில் நடைபெறும் இந்த போட்டியில் மெஸ்சிக்கு ஓய்வு வழங்கியுள்ளது பார்சிலோனா. மேலும், ஜெரார்டு பிக்காய், செர்ஜி ரொபெர்ட்டோ ஆகியோருக்கும் ஓய்வு அளித்துள்ளது.
லூயிஸ் சுவாரஸ், கிரிஸ்மான், அன்சு ஃபட்டி ஆகியோர் விளையாடுகிறார்கள். ‘எஃப்’ பிரிவில் பார்சிலோனா ஐந்து போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 டிராவுடன் 11 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இன்டர் மிலான், டாட்ர்மண்ட் அணிகள் தலா 7 புள்ளிகள் பெற்றுள்ளன.
அறுவை சிகிச்சைக்குப்பின் சிறப்பாக இருப்பதாக உணர்கிறேன், என்றாலும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்ப அவசரம் காட்டமாட்டேன் என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. முகுது வலியால் அவதிப்பட்ட அவர் லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
தற்போது உடல் நலம் தேறி வருகிறார். விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அறுவை சிகிச்சைக்குப்பின் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். ஆனால், உடனடியாக கிரிக்கெட் விளையாட அவசரம் காட்டமாட்டேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் ‘‘உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தற்போது மிகவும் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். காயத்தில் இருந்து மீண்டும் வருவதற்கான வேலை மிகவும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன.
அறுவை சிகிச்சைக்குப்பின் அணிக்கு திரும்புவது எளிதாக காரியம் அல்லை. அனைத்து வகையிலும் சரியாகி விட்டதா? என்பதை உறுதி செய்ய முயற்சி செய்கிறேன்.
உடல் அளவில் நான் எப்போது வேண்டுமென்றாலும் திரும்பலாம். ஆனால், மனதளவில் வலிமை பெறுவது முக்கியமானது. என்னுடைய வாழ்க்கையில் ஏராளமான விஷயங்கள் நடந்துள்ளன. மனதளவில் நான் வலுவானவனாக மாறியுள்ளேன்.
அணிக்கு உடனடியாக திரும்புவதில் அவசரம் காட்டக்கூடாது. உங்களது உடல் தயாராகவில்லை என்றால், எந்தவித தயார் நிலையின்றி தற்போது நீங்களே உங்களை வலுக்கட்டாயமாக தள்ளினால், மீண்டும் இடைவெளி ஏற்பட வாய்ப்புள்ளது.
காயம் எளிதானதல்ல ஆனால், பொறுமை முக்கியமானது. பேட் கம்மின்ஸ் காயத்திற்குப் பிறகு மிகவும் வலிமையான வீரராக திரும்பியுள்ளதை பார்த்துள்ளேன். மூட்டு காயத்தில் இருந்து திரும்பிய பும்ரா தற்போது எப்படி விளையாடி வருகிறார் என்று பார்கிறோம்’’ என்றார்.
தற்போது உடல் நலம் தேறி வருகிறார். விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அறுவை சிகிச்சைக்குப்பின் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். ஆனால், உடனடியாக கிரிக்கெட் விளையாட அவசரம் காட்டமாட்டேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் ‘‘உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தற்போது மிகவும் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். காயத்தில் இருந்து மீண்டும் வருவதற்கான வேலை மிகவும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன.
அறுவை சிகிச்சைக்குப்பின் அணிக்கு திரும்புவது எளிதாக காரியம் அல்லை. அனைத்து வகையிலும் சரியாகி விட்டதா? என்பதை உறுதி செய்ய முயற்சி செய்கிறேன்.
உடல் அளவில் நான் எப்போது வேண்டுமென்றாலும் திரும்பலாம். ஆனால், மனதளவில் வலிமை பெறுவது முக்கியமானது. என்னுடைய வாழ்க்கையில் ஏராளமான விஷயங்கள் நடந்துள்ளன. மனதளவில் நான் வலுவானவனாக மாறியுள்ளேன்.
அணிக்கு உடனடியாக திரும்புவதில் அவசரம் காட்டக்கூடாது. உங்களது உடல் தயாராகவில்லை என்றால், எந்தவித தயார் நிலையின்றி தற்போது நீங்களே உங்களை வலுக்கட்டாயமாக தள்ளினால், மீண்டும் இடைவெளி ஏற்பட வாய்ப்புள்ளது.
காயம் எளிதானதல்ல ஆனால், பொறுமை முக்கியமானது. பேட் கம்மின்ஸ் காயத்திற்குப் பிறகு மிகவும் வலிமையான வீரராக திரும்பியுள்ளதை பார்த்துள்ளேன். மூட்டு காயத்தில் இருந்து திரும்பிய பும்ரா தற்போது எப்படி விளையாடி வருகிறார் என்று பார்கிறோம்’’ என்றார்.






