search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முரளி விஜய்"

    • பிசிசிஐ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ரசிகர்களுக்கு முரளி விஜய் நன்றி தெரிவித்தார்.
    • கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார்.

    கிரிக்கெட் விளையாட்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடுபவர் இந்திய வீரர் முரளி விஜய். இவர் இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகள், 17 ஒருநாள் போட்டிகள், 9 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 38 வயதான முரளி விஜய், கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார்.

    அதன்பின்னர் ரஞ்சிக்கோப்பையில் கவனம் செலுத்திய அவர் 2019-ம் ஆண்டு முதல் அதற்கும் முடிவு கட்டினார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக முரளி விஜய் அறிவித்தார். மேலும் பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    • 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை ஓபன் கோல்ப் பந்தயம் இன்று தொடங்குகிறது.
    • கிரிக்கெட் வீரர்கள் முரளிவிஜய், எஸ்.அணிருதா அமெச்சூர் வீரர்களாக கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை ஓபன் கோல்ப் பந்தயம் இன்று தொடங்குகிறது. 26-ந்தேதி வரை 4 நாட்கள் இந்த போட்டி நடக்கிறது. இதில் 3 அமெச்சூர் வீரர்கள் உள்பட மொத்தம் 123 பேர் கலந்து கொள்கிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் முரளிவிஜய், எஸ்.அணிருதா அமெச்சூர் வீரர்களாக கலந்து கொள்கிறார்கள்.

    கரண்தீப் கோச்சார், அமன்ராஜ் உள்ளிட்ட தொழில் ரீதியான வீரர்கள் 123 பேர் பங்கேற்கிறார்கள். இந்தப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.4 லட்சம் ஆகும். கிண்டியில் உள்ள கோல்ப் மைானத்தில் போட்டி நடக்கிறது.

    ×