search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சென்னை ஓபன் கோல்ப் பந்தயம் இன்று தொடக்கம்- முரளி விஜய் பங்கேற்பு
    X

    சென்னை ஓபன் கோல்ப் பந்தயம் இன்று தொடக்கம்- முரளி விஜய் பங்கேற்பு

    • 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை ஓபன் கோல்ப் பந்தயம் இன்று தொடங்குகிறது.
    • கிரிக்கெட் வீரர்கள் முரளிவிஜய், எஸ்.அணிருதா அமெச்சூர் வீரர்களாக கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை ஓபன் கோல்ப் பந்தயம் இன்று தொடங்குகிறது. 26-ந்தேதி வரை 4 நாட்கள் இந்த போட்டி நடக்கிறது. இதில் 3 அமெச்சூர் வீரர்கள் உள்பட மொத்தம் 123 பேர் கலந்து கொள்கிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் முரளிவிஜய், எஸ்.அணிருதா அமெச்சூர் வீரர்களாக கலந்து கொள்கிறார்கள்.

    கரண்தீப் கோச்சார், அமன்ராஜ் உள்ளிட்ட தொழில் ரீதியான வீரர்கள் 123 பேர் பங்கேற்கிறார்கள். இந்தப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.4 லட்சம் ஆகும். கிண்டியில் உள்ள கோல்ப் மைானத்தில் போட்டி நடக்கிறது.

    Next Story
    ×