என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தி வெற்றி பெற்றது.
    • 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி இமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.

    இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை உள்ளது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்திலும், நியூ சண்டிகரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    நாளைய போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை பெறப் போவது இந்தியாவா? தென் ஆப்பிரிக்காவா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து முன்னிலை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதலாவதாக பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதனால், 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிஎஸ்கே அணி பந்து மாற்றியதாக நடந்த சம்பவம் சர்ச்சையானது.
    • நடுவர் அவுட் கொடுக்காமலே இஷான் கிஷன் வெளியேறியது சர்ச்சையானது.

    2025-ம் ஆண்டு ஐபிஎல் (IPL 18) தொடரில் பல சர்ச்சைகள் நடந்தன. இந்தத் தொடர் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கி, மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் காரணமாக ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் நடத்தப்பட்டது.

    இந்த தொடரில் முக்கிய சர்ச்சைகளில் முதலாவதாக சிஎஸ்கே அணியின் பந்து மாற்றம் (Ball-Tampering)குற்றச்சாட்டு:

    சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கலீல் அகமது ஆகியோர் பந்து மாற்றியதாக சர்ச்சைகள் எழுந்தது. இது தொடர்புடைய வீடியோ ஒன்று வைரலாகி, பந்தை மாற்றியதாக சந்தேகம் எழுந்தது. இது தொடரின் தொடக்க வாரத்திலேயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அம்பயர் முடிவுகள் மற்றும் சர்ச்சைக்குரிய அவுட்டுகள்:

    பல போட்டிகளில் அம்பயர்களின் முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. உதாரணமாக, சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் இஷான் கிஷன் அம்பயர் அவுட் கொடுப்பதற்கு முன்பே வெளியேறியது. அதுவரை அவுட் கொடுக்காமல் இருந்த அம்பயர் அவர் வெளியேறுவதை பார்த்ததும் அவுட் கொடுக்கலாமா வேண்டாமா என்பது போல அவுட் கொடுத்தார். இது மற்ற அணி ரசிகர்கள் அம்பானி காசு கொடுத்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    பிட்ச் மற்றும் ஹோம் அட்வான்டேஜ் சர்ச்சை:

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்யா ரகானே, ஈடன் கார்டன்ஸ் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டதாக புகார் கூறினார். இது ஹோம் அட்வான்டேஜ் குறித்த விவாதத்தை தூண்டியது.

    இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக தொடர் இடைநிறுத்தம்:

    மே 9-ஆம் தேதி, எல்லைப் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தொடர் ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டது. தர்மசாலாவில் ஒரு போட்டி நடுவில் கைவிடப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    டெல்லி கேபிடல்ஸ் அணியின் முஸ்தபிஸுர் ரஹ்மான் ஒப்பந்தம்:

    பங்களாதேஷ் வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை ரிப்ளேஸ்மெண்ட் வீரராக ஒப்பந்தம் செய்ததற்கு சமூக வலைதளங்களில் #BoycottDelhiCapitals என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி, அரசியல் பதற்றம் காரணமாக விமர்சனங்கள் எழுந்தன.

    கொண்டாட்ட சோகம்:

    RCB வெற்றிக்குப் பிறகு பெங்களூரு ஸ்டேடியம் வெளியே கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்புகள் நடந்தது – இது ஆண்டின் மிக மோசமான சம்பவமாக கருதப்பட்டது.

    இவை தவிர, வீரர்கள் இடையே சண்டைகள், அம்பயர் கொண்டாட்டங்கள் போன்றவையும் சர்ச்சைகளை அதிகரித்தன. இந்தத் தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகத்துடன் சர்ச்சைகளையும் தந்தது.

    • சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா சாதனை.
    • ஹாங்காங் அணியை 3-0 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது.

    சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    ஹாங்காங் அணியை 3-0 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தி ஸ்குவாஷ் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது.

    ஸ்குவாஷ் உலகக்கோப்பையில முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

    • கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தி வெற்றி பெற்றது.
    • 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி இமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை உள்ளது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்திலும், நியூ சண்டிகரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    நாளைய போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை பெறப் போவது இந்தியாவா? தென் ஆப்பிரிக்காவா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து முன்னிலை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால், இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதலாவதாக பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது.

    • இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர் கொண்டது.
    • பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

    19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ்மாத்ரே தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 234 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை தோற்கடித்தது.

    இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர் கொண்டது. மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 16 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து இருந்தது. ஆயுஸ்மாத்ரே 38 ரன்னிலும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யவன்ஷி 5 ரன்னிலும், மல்கோத்ரா 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    தொடர்ந்து இந்த ஆட்டத்தின் முடிவில், 46.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 240 ரன்களை எடுத்தது. இதனால், 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக ஹூசைபா அஹ்சான் 70 ரன்கள் குவித்தார். தொடர்ந்து, ஃபர்ஹான் யூசப் 23 ரன்களிலும், உஸ்மான் கான் 16 ரன்களிலும் ஆட்டத்தை இழந்தனர். தொடர்ந்து, அலி ராசா, சமீர் மின்ஹாஸ், அகமது ஹூசைன், ஹம்சா சாஹூர், அப்துல் சுபன், முகமது சய்யம், நிக்கப் சாஃபிக் உள்ளிட்டோர ஒற்றை இலக்கில் ஆவுட் ஆகினர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் அணி 41.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது. இதன்மூலம், பாகிஸ்தான் அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

    • மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
    • இந்திய அணி 16 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து இருந்தது.

    19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ்மாத்ரே தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 234 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை தோற்கடித்தது.

    இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர் கொண்டது. மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 16 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து இருந்தது. ஆயுஸ்மாத்ரே 38 ரன்னிலும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யவன்ஷி 5 ரன்னிலும், மல்கோத்ரா 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    தொடர்ந்து இந்த ஆட்டத்தின் முடிவில், 46.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 240 ரன்களை எடுத்தது. இதனால், 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கைவசம் 63.4 கோடி ரூபாய் உள்ளது.
    • சி.எஸ்.கே. தன் கைவசம் 43.40 கோடி ரூபாய் வைத்துள்ளது

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக வரும் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. கடந்த மாதம் தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் வெளியிட்டது.

    சில அணிகள் சில வீரர்களை Trade முறையில் விடுவித்துள்ளது. மற்ற வீரர்களை முழுமையாக விடுவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 வீரர்களை விடுவித்துள்ளது. அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 9 வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் ரச்சின் ரவீந்திரா, அஸ்வின், தீபக் ஹூடா, சாம் கர்ரன், பதிரனா போன்ற பெரிய வீரர்களை விடுவித்துள்ளது. இதனால் சி.எஸ்.கே. தன் கைவசம் 43.40 கோடி ரூபாய் வைத்துள்ளது. இதனால் மினி ஏலத்தில் முக்கிய வீரர்களுக்காக பெரிய தொகை வரும் செல்லும்.

    அதேவேளையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கைவசம் 63.4 கோடி ரூபாய் உள்ளது. இதனால் மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஆதிக்கம் செலுத்தும்.

    இதனால் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலம் எடுக்க சிஎஸ்கே- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்று ஏற்படுகிறது.

    இதனிடையே மினி ஏலத்தில் கேமரூன் கிரீன் மீது சென்னை அணி கண்வைத்துள்ளது என்று தகவல் வெளியானது.

    மினி ஏலத்தில் பேட்டர் என்று கேமரூன் கிரீன் பதிவு செய்துள்ளதால் அவர் பந்துவீசுவாரா? என்று கேள்வி எழுந்தது.

    இந்நிலையில், 2026 ஐபிஎல் தொடரில் பந்துவீச தயாராக உள்ளதாக கேமரூன் கிரீன் அறிவித்துள்ளார். ஏல பட்டியலில் பேட்டர் என தனது மேலாளர் தவறாக தேர்வு செய்து விட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    காயத்தில் இருந்து மீண்ட கேமரூன் கிரீன் அண்மைகாலமாக பந்துவீசுவதை தவிர்த்து வந்த நிலையில், மினி ஏலம் நெருங்கும் நிலையில் இந்த விளக்கம் அளித்துள்ளார்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது போட்டியில் நடந்தது போன்று ஏற்கனவே நடந்து இருக்கிறது.
    • சூழ்நிலையை பொறுத்து எந்த வரிசையிலும் களம் இறங்கி விளையாட வீரர்கள் தயாராக இருக்கிறார்கள்

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி இமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை உள்ளது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்திலும், நியூ சண்டிகரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    நாளைய போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை பெறப் போவது இந்தியாவா? தென் ஆப்பிரிக்காவா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து முன்னிலை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    இந்தப் போட்டியையொட்டி இந்திய வீரர் திலக் வர்மா பேட்டி அளித்தார். அப்போது போட்டியின் சூழ்நிலையை பொறுத்து எந்த வரிசையிலும் களம் இறங்கி விளையாட வீரர்கள் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக திலக் வர்மா கூறியதாவது:-

    அணியில் உள்ள தொடக்க ஆட்டக்காரர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் எந்தவரிசையிலும் களம் இறங்கி விளையாட தயாராக இருக்கிறார்கள். நான் 3, 4, 5, அல்லது 6-வது வீரராகவும் களமிறங்கி ஆட தயாராக இருக்கிறேன். வெற்றி பெறுவதற்கு ஒரு முடிவு சிறந்ததாக இருக்கும் என அணி நிர்வாகம் உணரும் போது அனைவரும் அணி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவேண்டும்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது போட்டியில் நடந்தது போன்று ஏற்கனவே நடந்து இருக்கிறது. அக்ஷர் படேல் இதற்கு முன்பு முன்னதாக களம் இறக்கப்பட்டு சிறப்பாக விளையாடி இருக்கிறார். ஆட்டத்தின் சூழலைப் பொறுத்தே அணி நிர்வாகத்தின் முடிவுகள் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஆட்டத்தில் அக்ஷர் படேல் 3-வது வீரராக ஆடியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்தே திலக் வர்மா இந்த விளக்கத்தை அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார்.
    • தனது கடைசி போட்டியில் கன்தரை எதிர்கொண்ட ஜான் சீனா Tap out முறையில் தோல்வியடைந்தார்.

    WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டவர் ஜான்சீனா. இவரின் பெயரை கேட்டாலே, 90-ஸ் கிட்ஸ் மனங்களில் மகிழ்ச்சி ஏற்படும் என்றே கூறலாம். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம் ஆகும்.

    16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜான் சீனா WWE போட்டிகளால் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்தாண்டு அறிவித்தார்.

    இந்நிலையில், தனது கடைசி போட்டியில் கன்தரை எதிர்கொண்ட ஜான் சீனா Tap out முறையில் தோல்வியடைந்தார். இதன்மூலம் 90's கிட்ஸின் Hero ஜான் சீனா தோல்வியுடன் WWE மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

    மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார்.

    அண்மையில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க ஆடை இல்லாமல் ஜான் சீனா மேடை ஏறியது பெரும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

    • ரோகித் சர்மா 2015 ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி ரித்திகாவை திருமணம் செய்து கொண்டார்.
    • இந்த தம்பதிக்கு சமைரா என்ற பெண் குழந்தையும் ஆஹான் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 2015 ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி ரித்திகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2018 ஆண்டு சமைரா என்ற பெண் குழந்தையும் 2024 இல் ஆஹான் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது.

    நேற்று ரோகித் சர்மா - ரித்திகா தம்பதி தங்களது 10 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். இந்நிலையில், தங்களது திருமண நாளை இருவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை ரோகித் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

    • இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
    • இரு போட்டிகளின் முடிவில் டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    தர்மசாலா:

    இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வென்றன. இதனால் டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற உள்ளது.

    கேப்டன் சூர்யகுமார் கடந்த 17 சர்வதேச டி20 போட்டியில் 201 ரன்கள் எடுத்துள்ளார். கேப்டன் என்பதால் நீக்க முடியாது. மீண்டும் 3வது இடத்தில் களமிறங்கி விளாச வேண்டும்.

    துணை கேப்டன் சுப்மன் கில் இடம் தான் கேள்விக்குறியாக உள்ளது. கடந்த 14 போட்டியில் 263 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    சஞ்சு சாம்சனை பின்வரிசைக்கு அனுப்பிவிட்டு, தொடக்க வீரர் வாய்ப்பை சுப்மன் கில்லுக்கு கொடுத்தனர். தற்போது இவரும் சோபிக்கவில்லை.

    அபிஷேக் சர்மா அவசரப்படக் கூடாது. கடந்த போட்டியில் அரைசதம் விளாசிய திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா நல்ல பார்மில் இருப்பது பலம். கடைசி கட்டத்தில் ஷிவம் துபே கைகொடுக்க வேண்டும்.

    வேகப்பந்து வீச்சில் பும்ரா தடுமாறுகிறார். அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக பாண்ட்யாவை பயன்படுத்தலாம். குல்தீப் யாதவை சேர்க்கலாம்.

    தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் மார்க்ரம், குயின்டன் டி காக், பிரேவிஸ், பெரேரா, மில்லர், யான்சென் என அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    நோர்ஜியா, யான்சென், லுங்கி நிகிடி, பார்ட்மென், சிபாம்லா போன்ற வேகங்களுக்கு சாதகம். சுழலில் கைகொடுக்க மகராஜ் உள்ளார்.

    இரு அணிகளும் வெல்ல போட்டி போடும் என்பதால் ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்தனர்.

    • இறுதிப்போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதின.
    • முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவரில் 137 ரன்கள் எடுத்தது.

    ஹோபர்ட்:

    11-வது மகளிர் பிக்பாஷ் லீக் டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டி ஹோபர்ட்டில் நடந்தது.

    இதில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்தது. சோபி டிவைன் 34 ரன்னும், பெத் மூனி 33 ரன்னும் எடுத்தனர்.

    ஹோபர்ட் ஹரிகேன்ஸ் சார்பில் லின்சே ஸ்மித், ஹீதர் கிரஹாம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் களமிறங்கியது. தொடக்க வீராங்கனையான லிசெல் லீ அதிரடியாக ஆடி வெற்றியை உறுதி செய்தார்.

    இறுதியில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 15 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 141 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    லிசெல் லீ 77 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்ததால், அவர் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

    ×