என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா சாம்பியன்ஸ்"

    • 4வது செட் கணக்கின் முடிவில், இந்தியாவிற்கு 59 புள்ளிகளும், பிரான்ஸ் அணிக்கு 57 புள்ளிகளும் கிடைத்தது.
    • கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது.

    உலக சாம்பியன்ஷிப் ஆடவர் இரட்டையர் பிரிவு வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

    தென் கொரியாவில், உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில், ஆண்கள் அணிகளுக்கான காம்பவுண்டு பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில், மூன்று செட்களின் முடிவில் 179-179 என சமநிலையில் இருந்தது.

    4வது செட் கணக்கின் முடிவில், இந்தியாவிற்கு 59 புள்ளிகளும், பிரான்ஸ் அணிக்கு 57 புள்ளிகளும் கிடைத்தது.

    இதன்மூலம், ரிஷப், பிரதமேஷ், அமன் மூவரும் பிரெஞ்சு ஜோடியை 235-233 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    மேலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது.

    • வேர்ல்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின.
    • இதில் இர்பான் பதான் மற்றும் யூசப் பதான் 6-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது.

    நார்த்தாம்ப்டன் :

    முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கான வேர்ல்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியின் முன்னாள் வீரர்களும் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர். இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் மற்றும் இந்திய சாம்பியன்ஸ் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 210 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இக்கட்டான சூழலில் இர்பான் பதான் மற்றும் யூசப் பதான் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் குவித்தது.

    இந்நிலையில் ஸ்டேய்ன் ஓவரில் இர்பான் பதான் சிக்ஸ் அடிக்க முயற்சிக்க பந்து பேட்டின் விளிம்பில் பட்டு மேல்நோக்கி சென்றது. இதனை பிடிக்க வந்த கிப்ஸ் கேட்சை தவறவிடுவார். இதனை பார்த்த பதான் 2-வது ரன்னுக்கு முயற்சிப்பார். இதற்கு யூசப் வேண்டாம் என சைகை காட்டுவார். ஆனால் இர்பான் பாதி வரை வந்துவிடுவார். இதனால் அவர் ரன் அவுட் ஆகிவிடுவார்.

    உடனே யூசப் பதானை பார்த்து கோபத்துடன் ஏதோ கூறுவார். பதிலுக்கு அவரும் கோபத்தில் பேசுவார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

    ×