என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Archery Championships"

    • ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா அரை இறுதியில் தோற்றது.
    • ரீகா்வ் கலப்பு அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, நீரஜ் சவுகான் ஆகியோர் 1,347 புள்ளிகளுடன் 7-வது இடம் பிடித்தது.

    தென் கொரியாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டது.

    தீபிகா குமாரி, அங்கிதா பகத், கதா கடாகே ஆகியோா் அடங்கிய அணி அரை இறுதியில் தோற்று வெண்கலப் பதக்கத்துக்கு விளையாடியது. அதில் 5-3 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வியைத் தழுவியது.

    ரீகா்வ் கலப்பு அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, நீரஜ் சவுகான் ஆகியோர் 1,347 புள்ளிகளுடன் 7-வது இடம் பிடித்தது.

    • 4வது செட் கணக்கின் முடிவில், இந்தியாவிற்கு 59 புள்ளிகளும், பிரான்ஸ் அணிக்கு 57 புள்ளிகளும் கிடைத்தது.
    • கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது.

    உலக சாம்பியன்ஷிப் ஆடவர் இரட்டையர் பிரிவு வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

    தென் கொரியாவில், உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில், ஆண்கள் அணிகளுக்கான காம்பவுண்டு பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில், மூன்று செட்களின் முடிவில் 179-179 என சமநிலையில் இருந்தது.

    4வது செட் கணக்கின் முடிவில், இந்தியாவிற்கு 59 புள்ளிகளும், பிரான்ஸ் அணிக்கு 57 புள்ளிகளும் கிடைத்தது.

    இதன்மூலம், ரிஷப், பிரதமேஷ், அமன் மூவரும் பிரெஞ்சு ஜோடியை 235-233 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    மேலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது.

    • உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை அதிதி தங்கம் வென்று சாதனை படைத்தார்.
    • நடப்பு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அதிதி வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

    பெர்லின்:

    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவின் இறுதிச்சுற்றில் 17 வயது இந்திய வீராங்கனை அதிதி ஸ்வாமி 149-147 என்ற புள்ளிக்கணக்கில் மெக்சிகோவின் ஆன்ட்ரியா பிசெர்ராவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

    இதன் மூலம் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அதிதி உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியின் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். அத்துடன் சீனியர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இளம் வீராங்கனை என்ற பெருமையையும் சொந்தமாக்கினார்.

    நடப்பு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அதிதி வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். காம்பவுண்ட் அணிகள் பிரிவிலும் அவருக்கு தங்கம் கிடைத்து இருந்தது.

    இதுதொடர்பாக அதிதி கூறுகையில், நமது நாட்டுக்காக முதல் தங்கப்பதக்கத்தை வெல்ல வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். மற்றவை எல்லாம் எனது வழியில் அமைந்தது. இது தொடக்கம்தான். அடுத்து ஆசிய விளையாட்டு போட்டி வருகிறது. அதிலும் நாட்டுக்காக பதக்கம் வெல்ல விரும்புகிறேன் என தெரிவித்தார்.

    ×